Jump to content

தமிழகத்தில் எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்


Recommended Posts

தமிழகத்தில் எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்

தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமது நோக்கமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை நேற்று சென்னையில் வெளியிட்டு அவர் உரையாற்றினார்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார்.

மாநில மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்கச் செய்யப்படுமெனவும், திறந்த வெளியில் மலம் கழித்தல் தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றப்படுமெனவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

25 லட்சம் வீடுகளைக் கட்டிக் கொடுத்து தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றவுள்ளதாகவும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி, கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது போன்ற திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுமென அவர் கூறினார்.

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்க கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுமெனவும், இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 15 லட்சம் கோடி ரூபா தேவையெனவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11481

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

தமிழகம் உயரணும்

Link to comment
Share on other sites

தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமது நோக்கமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கொள்ளையர்கள் ஆட்சியை தமிழ் நாட்டு மக்கள் கண்டும் கேட்டும் உள்ளார்கள்.நீங்கள் அதற்கு விதிவிலக்காக இருந்தாலே போதுமானது.

Link to comment
Share on other sites


முதல்வரின் தொலைநோக்கு திட்டம்: 'வஞ்சிக்கப்படும்' விவசாயம்

தமிழக அரசின் 'தொலைநோக்கு திட்டம் 2023' என்கிற ஆவணத்தை சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், "இந்த நிகழ்வு, மாநிலப் பொருளாதார வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்தேன்" என்று சொன்னார்.

ஆனால், அந்தத் தொலைநோக்குத் திட்டத்தில், வேளாண்மைக்கு குறைவாகவும், தொழில்துறைக்கு அதிகமாகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

தொலைநோக்குத் திட்டம் 2023-ல் வேளாண்மைத் துறையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ரூ.40 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் முக்கிய துறைகளில் தனியாரின் பங்களிப்புடன் பிரதான திட்டங்களில் முதலீடுகளைச் செய்வது குறித்து தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிடப்பிட்டுள்ளது.

10 ஆண்டுகளில் கூடுதலாக 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய எரிசக்தித் துறையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு தேவையென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வணிகத் துறையில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தவுடன், "வேளாண்மைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்," என்று முழங்கினார். அதே வேகத்தில் பல அறிவிப்புக்களையும் வெளியிட்டார். ஆனால், அவை ஒன்று கூட உருப்படியாக செயல்படவில்லை என்பதுதான் உண்மை.

மின்வெட்டால் பயிர் செய்ய முடியாமல், விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். விவசாயம் வளர்ந்தால், அத்தனை துறைகளுக்கும் மூலப் பொருட்கள் கிடைக்கும் என்று தெரியாத பொருளாதராப் புலிகளும், எலிகளும் அரசுக்கு ஆலோசனை இப்படித்தான் இருக்கும்.

தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்க இன்னும் எத்தனைப் பேர்தான் காத்திருக்காறர்களோ..!

http://news.vikatan.com/?nid=7182

Link to comment
Share on other sites

பொருளாதார ரீதியில் நிச்சயம் முன்னேறவேண்டும், அந்த வளர்ச்சியில் சகல மக்களும் பயன்பெற வேண்டும். அத்துடன் நிச்சயம் ஊழல் ஒழிப்பு திட்டமும் இருக்கவேண்டும். விவசாயமும் நவீனமயப்படுத்தப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல, உழைச்சு வடக்கை வளம் படுத்துங்கள்!

இதைத் தானே, சிங்களமும் எங்களிடம் எதிர் பார்க்கின்றது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.