Jump to content

புலிகளுடன் தொடர்பென வைத்தியர்களை போட்டுக் கொடுத்த பணிப்பாளர் பவானி: சிக்கிய கடிதங்கள்


Recommended Posts

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவின் ஊழல் மோசடிகள் தொடர்பில் வெளிக்கொணர்ந்த சில வைத்தியர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என போட்டுக் கொடுத்து பணிப்பாளர் எழுதிய இரகசியக் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தாய் சங்கத்தினருக்கே இக்கடிதத்தை பணிப்பாளர் பவானி பசுபதிராசா எழுதி இரகசியமாக அனுப்பி வைத்துள்ளார்.

அவர் எழுதிய இக்கடிதமானது,

யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் என். ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் இடம்பெற்று சில தினங்களில் எழுதப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அபிவிருத்திகள் நடைபெற்றுவருவதாகவும் இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பெயரில் ஒரு சிலர் குழப்பி, அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்தி இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சிற்கும் யாழ். வைத்தியர்களை புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என பணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்தோடு புலனாய்வாளர்களுக்கும் தவறான தகவல்களை வழங்கி, வைத்தியர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் பணிப்பாளரும் அவருடன் இணைந்த குழுவினரும் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

bavani_letter_001.jpgbavani_letter_002.jpg

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.