Jump to content

தமிழ் மக்களது அபிலாசைகளுக்கு கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்காது -இரா.சம்பந்தன்


Recommended Posts

தமிழ் மக்களது ஆணைக்கும் அவர்களது அபிலாசைகளுக்கும் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துரோகம் இழைக்கமாட்டாதென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடைபெற்ற கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் தலைவர்களுக்கான இருநாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசு தெரிவுக்குழுவிற்கு வருமாறு பல தடவைகளாக தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. அவர்கள் அழைப்பதற்காக நாங்கள் தெரிவுக்குழுவிற்கு சென்றுவிடமுடியாது. எம்முடனான பேச்சுக்களில் அரசு முதலில் தீர்வொன்றை முன்வைக்கட்டும்.

அவ்வாறு வைக்காவிட்டால் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவுக்குழுவிற்கு செல்ல மாட்டோம். கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். வதந்திகளையோ பொய்களை பரப்புவர்களையோ நம்பவேண்டாம்.

அபிவிருத்தி என்ற போர்வையினில் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை மறுப்பதென்பது ஏற்றுக்கொள்ள கூடியதொன்றல்ல. தமிழ் மக்கள் வேண்டுவது நிரந்தர அரசியல் தீர்வொன்றையே. இந்த அரசு அபிவிருத்தி நடவடிக்கைகளினில் கூட தமிழ் மக்களை ஓரங்கட்டியே செயற்பட்டு வருகின்றது. கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள அனைவரும் காலத்தின் தேவை கருதி ஒற்றுமையை மதித்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டிய காலமிதுவாகும்.

தமிழ் பேசும் மக்களும் அவர்களின் தலைவர்களும் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர் எனவும் இனிமேலும் ஏமாற்ற முடியாது. இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வா, வா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு விட்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு நடத்தலாம். ஆனால் குழுவில் எடுக்கப்படும் எந்த முடிவும் பிரயோசனம் அற்றதாகிவிடும் என்பதால் தான் வா,வா என்று கூட்டமைப்பை அழைக்கின்றார்கள்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வரமாட்டோம் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் அரசாங்கம் விசுவாசமாகப் பேச வேண்டும். பேச்சுக்கு வா வா என்று அழைக்கின்றீர்கள். ஆனால் பேச்சுக்கு வந்தால் என்ன நடக்கிறது என்றார்.

என தெரிவித்தார்.

இப்பயிற்சி பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,விநோதகரலிங்கம், யோகேஸ்வரன், சுமந்திரன், சிறீதரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.