Jump to content

திமுகவின் சிறை நிரப்புப் போராட்டம் - சில கேள்விகள்


Recommended Posts

இன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக நடத்திய போராட்டம் ஆச்சரிய அலைகளை தோற்றுவித்திருக்கிறது. இத்தனை தோல்விகளுக்குப் பின்பு திமுகவின் தொண்டர்கள் போர்க்குணம் மாறாதவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டின் காவல்துறையினர் ஏறக்குறைய எழுபதினாயிரம் பேர் கைதாகியிருப்பதாகக் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் சிறை நிரப்புப் போராட்டத்தில் கைதாகியிருக்கிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கின்றது.

திமுக இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தையும் இழந்து போய் நிற்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் அது தவிர்க்க முடியாத கட்சி. ஜெயலலிதாவை விட அதிகமாக இன்றைக்கும் கலைஞரே ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றார்.

இன்றைய போராட்டத்திற்கு திமுகவின் தொண்டர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பதற்கு தயாராகவே வந்திருந்தார்கள். உடைகள் போன்ற தேவையான பொருட்களையும் பையில் எடுத்து வந்திருந்தார்கள்.

சில ஆயிரம் பேர் மட்டும் போராட்டத்திற்கு வந்திருந்தால், ஜெயலலிதா அத்தனை பேரையும் சிறையில் போட்டு வாட்டி எடுத்திருப்பார். அப்படித்தான் அவரும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் வந்தவர்களோ இலட்சக்கணக்கில் இருக்க, சிறையில் இடம் இல்லை என்று மண்டபங்களில் வைக்கப்பட்டு, மாலையே அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.

யார் என்ன சொன்னாலும், திமுக தன்னுடைய பலத்தையும் போர்க்குணத்தையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

இப்பொழுது சில கேள்விகள் எழுகின்றன. இந்த இலட்சக் கணக்கான திமுக தொண்டர்களை நாம் எப்படி அணுகப் போகிறோம்? அவர்களுடன் உறவினை எப்படி பலப்படுத்தப் போகிறோம்?

கலைஞரை தொடர்ந்தும் திட்டியபடியா? ஜெயலலிதாவோடு, அமெரிக்காவோடு, சரத்பென்சேகாவோடு உறவாடத் தயாராக இருக்கின்ற நாம் கலைஞரை தொடர்ந்தும் எதிர்தரப்பில்தான் வைத்திருக்கப் போகின்றோமா?

தமிழ் நாட்டில் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழ ஆதரவுப் போராட்டத்தை நடத்துகின்ற பலம் திமுகவுக்கு மட்டுமே இருக்கின்றது என்பதை நாம் எப்படி இலகுவில் புறந்தள்ளப் போகின்றோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக தொண்டர்களை எவரும் குறைத்து மதிப்பிடவில்லை

ஆனால் அந்த தொண்டர்களுக்கே தெரியும் கலைஞரின் ஈழம் சம்பந்தமான முடிவுகள் தப்பென.

அதனால்தான் கலைஞர் தற்போது விரும்பாவிட்டாலும் சில ஈழத்தவர் சம்பபந்தமான நகர்வுகளை மாற்றி வருகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அண்ணா

திமுக வில் பலர் போராட்டத்துக்கு வந்து போட்டோக்கு போஸ் குடுத்ததும்வீட்டுக்கு போய் விட்டதாகவும்,

அழகிரி,பரிதி இளம்வழுதி உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் போராட்டத்தில் பங்குபற்றவில்லை என்பதையும் செய்திகளில் படித்திருப்பீர்கள். அதை விட,

அடுத்துவரும் தேர்தல்களில் சிறை சென்றவர்களுக்குத்தான் தேர்தலில் சீட்டு என்ற கருணாநிதியின் மிரட்டலுக்கு பயந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தான் அதிகம். பதவிக்காக என்னவும் செய்பவர்களைப்போய் போர்க்குணம் மாறாதவர்கள் என்னும் போது இதே இவர்கள் ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்?

கருணாநிதி,ஜெயலலிதா,வைகோ,சீமான் வந்து தான் ஈழத்தமிழருக்கு விடிவுகிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

நாம் போராடாதவரைக்கும் யார் வந்தும் எதுவும் நடக்கப்போவதில்லை.

சும்மா இருந்து சுகம் காணும் வரைக்கும் கலைஞர் என்ன கடவுள் வந்தும் எதுவும் ஆகாது. ^_^:icon_idea:

Link to comment
Share on other sites

போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் பதவிகள் பறிக்கபடும் என மிரட்டல்கள் விடபட்டதாகவும் எல்லா இடம்களிலும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு பணம்(5000-10,000 இடதிற்கு இடம் வேறுபட) கொடுக்கபட்டதாகவும் அத்துடன் 10kg அரிசி இலவசமாக வழங்கபட்டதாகவும் அப்பிடி பணம் இலவசம்கள் கொடுக்கபட்டதால் தான் இவ்வளவு கூட்டத்தினை சேர்க்க முடிந்ததாகவும் சொல்கிறார்கள்

Link to comment
Share on other sites

[size=4]தி.மு.க கட்சியை பொறுத்தவரையில் அதை மறுசீரமைக்க அதன் தலைவர் முயன்றுவருகிறார். ஆனால், அடுத்த தலைமை(குடும்ப பிரச்சனை), தமிழக மக்களின் உண்மையான ஆதரவு, ஒரு மூன்றாம் தமிழக கட்சியின் வளர்ச்சி என்ற பல காரணிகளின் தெளிவில்லாத நிலையில் சற்று பொறுத்து இருப்பதே மேல் என எண்ணத்தோன்றுகின்றது.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நடந்தபோது உதாவாத தொண்டர்கள்... கருணாநிதி... எனி எங்களுக்குப் பாலும் தேனும் வார்க்கப் போகின்றார்.

ஊழல் காரணமாகக் குடும்பத்தினர் சிறை செல்வதுஇ எதிர்க்கட்சி அந்தஸ்தினை இழந்தது போன்ற காரணங்களால் 3ம் நிலைக்குத் தள்ளப்பட்ட திமுக தன் நிலையை உயர்த்தவும்இ குடும்ப ஊழலை மறைக்கவும் போட்ட நாடகம் தான் இது... இதன் மூலம் அடிமட்ட மக்களும் எனிக் கனிமொழியும் திகாருக்குச் சிறைநிரப்பும் போராட்டத்துக்காகச் சென்றதாகவே உணரவைக்கப்படலாம்.

கட்டுரையாளருக்கு இந்த அதீன ஏற்பாடுகள் பற்றி விளக்கம் புரியவில்லை போலிருக்கின்றது. எந்தச் சிறைச்சாலையில் வெளியில் இருந்து கொண்டு வரும் பொருட்களைப் பாவிக்க அனுமதி வழங்கப்படுகின்றது எனச் சொல்ல முடியுமா?

நான் அறிந்தவரை அனுமதி இன்றி வெளியில் இருந்து கொண்டு வரும் பொருட்கள் சிறையினுள் பாவிக்க அனுமதிக்கப்படமாட்டாது. இவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் ஏதாவது மண்டபத்தில் ஒரு சிலநாட்கள் தங்க வைக்கப்படலாம் என்று சொல்லிக் கூட்டிவரப்பட்டிருக்கலாம். அதன் காரணமாகத் தான் இந்த ஏற்பாடுகளோடு வந்திருப்பார்கள். சிறைக்கு என்றால் இப்படி வந்திருப்பார்களோ தெரியாது.

உண்மையில் இவர்களைக் கைது செய்து உள்ளே போட வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு நிறையவே திட்டங்கள் இருக்கின்றன. இருக்கவே இருக்கின்றது நில ஆக்கிரமிப்பு...

உண்மையில் நில ஆக்கிரமிப்பு என்ற குற்றாச்சாட்டு இவர்கள் மறைப்பதற்குத் தானே இப்படி ஆர்ப்பாட்டாம் செய்தார்கள்... அதை ஜெயலலிதா தன்னுடைய அரசியல் தேவைகளுக்கு பாவிப்பதால் தான் முழுமையான குற்றமாக அது வெளியில் தெரியவில்லை...

6 கோடிப் பேரில் வெறும் 70 000 பேர்... இதை விட தமிழரசுக்கட்சி செய்த ஆர்ப்பாட்டாட்டத்தில் துப்பாக்கிகளுக்குப் பயப்படாமல் வந்த நுாற்றுக்கணக்கானவர்கள் மேலானவர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கள் திரிக்கு சம்மந்தம் இல்லாத கேள்வி தான் என்டாலும் வெறேதில் கேட்கிறது என்று தெரியவில்லை எதற்காக அவாட்டரில் உள்ள உங்கள் படத்தை மாத்தினீர்கள் கோயிலுக்குப் போனால் எல்லோரும் கண்டு பிடிக்கிறாங்கள் என்டா :D

Link to comment
Share on other sites

பணத்துக்காகவோ, மிரட்டலுக்காகவோ இத்தனை இலட்சம் பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. பேராட்டத்தில் கலந்து கொள்ளாது விட்டால், கட்சிப் பதவி பறிக்கப்படும் என்று இரகசியமான மிரட்டல் இருந்ததாக சில ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் இதைக் கொண்டு சாதரண தொண்டனை வீதிக்கு வரவைக்க முடியாது என்றே நினைக்கின்றேன்.

நாங்கள் போரடாது விட்டால் எப்பொழுதுமே வெற்றி பெற முடியாது என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். மற்றவர்கள் போராடுவார்கள் என்று நான் காத்திருக்கவில்லை.

ஆனால் நாங்கள் போராடுகின்ற பொழுது எமக்கு நண்பர்கள் வேண்டாமா?

இன்றைக்கு ஆட்சியில் இல்லாத கலைஞரை திட்டித் தீர்த்து கட்டுரைகள் எழுதி எதைக் காணப் போகிறோம்? திமுக தொண்டர்களை நாம் வென்றெடுப்பதற்கு என்ன செய்யப் போகிறோம்?

80களில் டெசோ நடத்திய எழுச்சி மிக்க பேரணிகளே ஈழப் போராட்டத்தை பொதுவான மக்களிடம் கொண்டு சென்றன என்பதை நாம் மறக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

காட்டூனிஸ்ட் பாலாவின் ... திமுகவின் இக்கூத்து தொடர்பாக ..

ஹிஹி..

ஏ.. நான் ஜெயிலுக்குப்போறேன்.. ஜெயிலுக்குப்போறேன்..

(இனிமே திருடர்கள் முன்னேற்றக்கழக கம்பெனி எந்த போராட்டம் நடத்துனாலும் அது சிரிப்பு போராட்டம் தான்... `பாளையங்கோட்டை சிறையினிலே..’னு சீன் போட்டா நம்புறதுக்கு பழைய தலைமுறை இல்ல.. )

540801_3387268926842_2068315477_n.jpg

527914_3383384349730_1170021650_n.jpg

394642_3368162849202_357089479_n.jpg

428908_3359848921359_1746672535_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சியைப்பிடிக்க.... வேடம்போடுகின்றவர்களுடன் சேர்ந்து நான் தலையாட்ட விரும்பவில்லை. கருணாநிதியின் உண்மை முகம் நாம் அறிந்து பல காலம் சென்று விட்டது.

ஆச்சிக்காக... கருணாநிதி எதுவும் செய்வார் அல்லது செய்ய வைக்கப்படுவார்.

ஜீவாவின் கருத்துடன் நானும் சேர்ந்து கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.