Jump to content

மன்னார்க் கடற்களப்பில் ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் நிறுவனம் கடற்பாசி செய்கை


Recommended Posts

இலங்­கையின் வறிய மீனவக் குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்தத் தொழில் வாய்ப்­புக்­களை ஹேலீஸ்­அக்­ரி­கல்ச்சர் நிறு­வனம் வழங்கி வரு­கின்­றது.
 
ஹேலீஸ் கூட்­டு­நி­று­வ­னங்­களின் வேளாண் ­வ­ணிக அங்­க­மான ஹேலீஸ் அக்­ரி­கல்ச்சர் நிறு­வனம் (Hayleys Agriculture Holdings Limited) அண்­மையில் மன்னார்க் கடற்­க­ளப்பில் கடற்­பாசி வளர்ப்பை தொடங்­கி­யுள்­ளது.  
 
இலங்­கையின் வட­மேற்குக் கரை­யோ­ரத்தில் தொடங்­கி­யுள்ள இச்­செற்­திட்­டத்­தினால் மீனவ குடும்­பங்­க­ளுக்கு நன்மை கிடைக்கும்.
 
ஏனெனில் உல­க­ளவில் கடற்­பா­சி­யி­லி­ருந்து உற்­பத்­தி­யாகும் உண­வுப்­பொ­ருள்­க­ளுக்கு விலை­ம­திப்பு ஏறு­மு­க­மாக உள்­ளது.
 
283Image-1.jpg
குறிப்­பிட்­ட­வகைக் கடற்­பா­சியை இயற்­கை­யா­க­ வ­ளர்த்து அறு­வடை செய்­வதால் வட­மேற்­குக் ­க­ரை­யோ­ரத்தில் உள்ள மீனவ குடும்­பங்­களின் வாழ்க்­கைத்­தரம் உயரும்.
இச்­செ­யற்­றிட்­டத்தில் இணையும் மீன­வர்­க­ளுக்குப் பாசி விதைகள், வளர்ப்பு மித­வைகள், உலர்த்தல் தட்­டுகள் ஆகி­யன வழங்­கப்­படும். வளர்ப்பு, அறு­வடை, உலர்த்தல் ஆகி­ய­வற்றில் முழு­மை­யான பயிற்­சியும் வழங்­கப்­படும். 
 
இத்­திட்­டத்தின் மூலம் பூந­க­ரியில் வலைப்­பாடு, நாச்­சிக்­குடா ஆகிய பிர­தேங்­க­ளி­லுள்ள வறிய மீனவ குடும்­பங்ளைச்  சார்ந்­த­வர்­க­ளுக்குத் தொழில்­வாய்ப்பு உண்­டாகும். அவர்கள் மேல­திக வரு­வாயை ஈட்டி குடும்ப வரு­வாயைப் பெருக்­கலாம்.
கடற்­பா­சியை இயற்­கை­யாக வளர்த்து அறு­வ­டை­செய்­யலாம். வெயிலில் உலர்த்­தலாம். 
 
அவற்­றுக்கு ஏற்ற பொருத்­த­மான கால­நிலை மன்னார்க் கடற்­க­ளப்பில் உண்டு. 
எனவே மன்னார்க் கடற்­க­ளப்பு மீனவர் வளம் பெருக்­குவர். கடற்­பா­சியில் இருந்து Carrageenan (கூழி­றுக்கி) பிரித்­தெ­டுக்­கலாம். 
 
இள­கி­ய­கூழை இறுக்கும் பண்பு கடற்­பாசி தரும் Carrageenan இற்கு (கூழி­றுக்கி) உண்டு. எனவே உணவு பத­னி­டு­வோ­ருக்குக் கடற்­பாசி தரும கூழி­றுக்­கி­யா­னது பயன்­படும். பூந­க­ரியில் வளர்த்த கடற்­பா­சியை அறு­வடை செய்து, உலர்த்தி, அந்த உலர்ந்த பாசியின் முதற்­றொ­கு­தியை ஏற்­று­மதி செய்யும் நிகழ்வு கொழும்பில் அண்­மையில் நடை­பெற்­றது. 
 
இந்­நி­கழ்வில் கடற்­றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்­ச­ரா­ன ­டாக்டர் ராஜித சேனா­ரத்ன கலந்­து­கொண்டு, உரை­யாற்­று­கையில் “இந்தத் தொழிற்­பா­டு­களின் தொடக்­கமே இலங்­கையின் மீன்­வளத் தொழிற்­று­றையில் புதி­ய­தொரு அத்­தி­யா­ய­மாகும். 
 
மீன­வர்கள் மீன்­களைப் பிடிப்­ப­தி­லேயே தங்­கி­யி­ரு­க­காமல் நீர்­வளம் சார்ந்த புதிய முயற்­சி­க­ளில் ­கா­ல­டி­ எ­டுத்­துப்­ பு­தி­ய­ யு­கத்­துள்­ பு­க ­இம்­மு­யற்­சி­ வ­ழி­கோ­லி­யுள்­ளது. 
 
“நீர்­வ­ளம்­பெ­ருக்­கும்­மு­யற்­சி­யில்­ஹே­லீஸ்­ அக்­ரி­கல்ச்­சர்­ நி­று­வ­னத்­தார்­மு­த­லிட்­டுள்­ளனர். 
 
30 ஆண்­டு­க­ளா­கப்­ போ­ரி­னால்­ சீ­ர­ழிந்­த­ வ­டக்­கு ­மக்­க­ளுக்கும், தேசத்­திற்கும் கைகொ­டுக்க முன்­வந்­த­மைக்­காக ஹேலீஸ் நிறு­வ­னத்­துக்கு இத்­தேசம் நன்­றி­ பா­ராட்­டு­கி­றது.
 
“இத்­த­கைய புதிய வளர்ச்சித் துறைகள் இலங்­கைக்கு மதிப்­பற்ற அந்­நியச் செல­வா­ணியைப் பெரு­ம­ளவில் ஈட்­டித்­த­ரு­கின்­றன. இத்­தே­சத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் கணி­ச­மான பங்­க­ளிப்பை வழங்­கு­கின்­றன” என்று குறிப்­பிட்டார். 
283Image-2.jpg
 
இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய ஹேலீ­ஸ்­கூட்­டு­நி­று­வ­னங்­களின் பணிப்­பாளர் அவைத்­த­லைவர் மொஹான் பண்­டி­தகே “இலங்­கையின் கரை­யோ­ர­மெங்கும் பரந்­து­வாழும் கடற்­றொ­ழி­லா­ளரின் வாழ்­வா­தா­ரங்­களை உயர்த்தும் திட்­ட­மிது. 
 
இலங்­கையின் அந்­நி­யச்­செ­லா­வ­ணியை ஈட்டும் திட்­ட­மிது. இலங்­கையை வணி­கத்தில் மேம்­ப­டுத்தும் திட்­ட­மிது. இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை ஏற்றும் திட்­ட­மிது.
 
“இதுவே ஹேலீஸ் அக்­ரி­கல்ச்சர் நிறு­வ­னத்தின் திட்ட இலக்கு.
“ஹேலீஸ் அக்­ரி­கல்ச்சர் நிறு­வ­னத்தின் இந்­தி­யப் ­பங்­கா­ள­ரான அக்­குவா அக்ரி நிறு­வனம் (AquAgri Private Limited) இதற்­கான தொழில்­நுட்ப உத­வியை வழங்­கு­கி­றது. 
ஏற்­று­மதிச் சந்­தைப்­ப­டுத்­த­லுக்கு வழி­காட்­டு­கி­றது, உலர்ப்­பா­சியின் தர­ம­திப்பை உயர்த்­தவும் உத­வு­கின்­றது” என்று குறிப்­பிட்டார். 
 
இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய ஹேலீஸ் அக்­ரி­கல்ச்சர் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் றிஸ்வி ஸஹீட், 
“உலர்ப்­பா­சிக்கு சர்­வ­தேச சந்­தையில் பற்­றாக்­குறை உள்­ளது. உலர்ப்­பா­சியின் தேவை கூடி­வ­ரு­கி­றது. “எனவே, இலங்­கையில் கடற்­பாசி அறு­வ­டைக்கு மிகவும் பொருத்­த­மான சூழலைக் கண்­ட­றிந்தோம். தேசி­ய­ நீ­ரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி முகவர் அமைப்­புடன் (NARA) இணைந்தோம். தேசிய நீர்­ உ­யி­ரின வளர்ப்பு அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யுடன் (NAQDA) இணைந்தோம். இச்­செ­யற்­றிட்­டத்தை முன்­னெ­டுக்­கின்றோம்” என்று குறிப்­பிட்டார். 
 
அறு­வ­டைக்குப் பின்னர் உலர்த்தி பத­மாக்­கப்­பட்ட கடற்­பாசி, உணவுப் ­ப­த­னிடல், வேளாண்மை, மருத்­துவம் போன்ற பல்­வேறு தொழிற்­து­றை­களில் தர­ம­திப்­பு­யர்த்தும் உற்­பத்­தி­களைத் தரும்.
 
ஹேலீஸ் கூட்டு நிறு­வ­னங்­களின் வேளாண்­வ­ணிக அங்­க­மான ஹேலீஸ் அக்­ரி­கல்ச்சர் நிறு­வனம் வேளாண்­மைக்குத் தேவை­யான அனைத்து உள்­ளீ­டு­க­ளையும் சந்­தைப்­ப­டுத்­து­கி­றது.
 
பழங்கள் மற்றும் மரக்­கறிப் பண்­ணை­களை அமைத்து வரு­கி­றது. 
அப்­பண்­ணை­களின் உற்­பத்­தி­களைப் பதனிடுகிறது. கலப்பு மலர் விதைகளைத் தயாரிக்கிறது. ஏற்றுமதிச் சந்தைக்காக இழையவளர்ப்பு நாற்றுக்களை உற்பத்திசெய்கிறது.
 
இவ்­வா­றான பல்­வேறு வகை­யான வேளாண் வணி­கத்தில் இந்­நி­று­வனம் வெற்­றி­கண்­டுள்­ளது. பழங்கள் ஏற்­று­ம­தி­யிலும் மரக்­க­றி­வகை ஏற்­று­ம­தி­யிலும் இலங்­கையின் முன்­னணி நிறு­வ­ன­மாகத் திகழ்­கின்­றது. 
 
 McDonalds, Burger King, Hungry Jack’s, Subway, Greendale, Unilever, Heinz என்­பன உலகின் புகழ்­பெற்ற உண­வு­வ­ணிகப் பெயர்கள். இந்­த­நி­று­வ­னங்­க­ளுக்கு இலங்­கை­யி­லி­ருந்து உணவுப் பொருள்­களைப் பெரிய அளவில் ஏற்­று­ம­தி­களை மேற்­கொள்ளும் பாரி­ய­தொழிற் பாட்­டா­ள­ராக ஹேலீஸ் அக்­ரி­கல்ச்சர் நிறு­வனம் திகழ்­கி­றது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ இருக்கிற ஒரு நிறுவனத்துக்கு எங்கள் வளத்தின் அருமை பெருமை தெரியுது. ஊரில உள்ள பல்கலைக்கழகத்துக்கு தெரியல்ல...! என்ன பட்டப்படிப்பு படிக்கினமோ..???! :rolleyes::lol::o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.