Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்  3

 வாக்கியங்கள் எழுதும் முறைகளுள் மிகவும் கவனித்தற்பாலன இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும்.

 பொருள் உணர்வுக்கு ஏற்ப, வரிக்குவரி இடம்விட்டு எழுதுதல் வேண்டும். பத்திக்குப் பத்தி இடைவெளிவிட்டுத் தொடங்குதல் வேண்டும்.

சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க.

 பாரதியார் என்று சேர்த்து எழுத வேண்டியதைப் பாரதி யார் என இடம்விட்டு எழுதின் ஏற்படும் பொருள் மாற்றத்தை நீங்கள் அறிவீர்கள்!

“அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் “அவள், அக்காள்வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் (இடம் விட்டு எழுதுவதால் ஏற்பட்டுள்ள) பொருள் வேறுபாட்டை அறிந்து கொள்க.

“மூலநட்சத்திரத்தில் பிறந்தான்” என்பதை “மூல நட்சத்திரத்தில் பிறந்தான்” - என இடம்விட்டு எழுதுவதால் தோன்றும், நகைச்சுவைப் பொருளை யாவரும் அறிவோம்.

எனவே, இடம்விட்டு எழுத வேண்டியதை இடம்விட்டு எழுதவும், சேர்த்து எழுத வேண்டியதைச் சேர்த்தும் எழுதிடவும் வேண்டும் என்பதையும் அறிந்து நினைவில் கொள்க.

எழுதும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முறைகள்:-

1. பண்புத்தொகை, வினைத்தொகை முதலானவை ஒருசொல் நீர்மைத்து. எனவே, அவற்றைப் பிரித்து எழுதுதல் கூடாது.

எடுத்துக்காட்டு:
செந்தமிழ்     (சரி)     
செந் தமிழ்     (தவறு)
பண்புத்தொகை
        
சுடுசோறு     (சரி)     
சுடு சோறு     (தவறு)     
 வினைத்தொகை

2. வேற்றுமை உருபுகளைப் பிரித்து எழுதல் கூடாது.

எடுத்துக்காட்டு:
தாயோடு அறுசுவைபோம்     (சரி)     
தாய் ஓடு அறுசுவைபோம்     (தவறு)
ஓடு வேற்றுமையுருபு

3. இடைச்சொற்களைச் சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
சான்றோரும் உண்டுகொல்?     (சரி)     
சான்றோரும் உண்டு கொல்     (தவறு)
கொல் இடைச்சொல்

4. “துணை வினையைச்” சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
சென்றுவிடு     (சரி)     
சென்று விடு     (தவறு)
‘விடு’ - துணைவினை
          
மறந்துவிட்டாள்     (சரி)     
மறந்து விட்டாள்     (தவறு)
‘விட்டாள்’ - துணைவினை

5. உடம்படு மெய்களைச்’ சேர்த்து எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
காண + இல்லை     = காணவில்லை     (சரி)     
காண இல்லை     (தவறு)
‘வ்’ - உடம்படுமெய்
              
நிலா + ஒளி     = நிலாவொளி     (சரி)     
நிலா ஒளி     (தவறு)
‘வ்’ உடம்படுமெய்

6. ‘கள்’ விகுதியைப் பிரிக்காமல் எழுதுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:
மரங்கள் நட்டார்     (சரி)     
மரங் கள் நட்டார்.     (தவறு)
‘கள்’ விகுதி
          
பூனைகள் குடித்தன.     (சரி)     
பூனை கள் குடித்தன.     (தவறு)
‘கள்’ விகுதி



 மேற்கூறியவை தவிர, எழுதும்பொழுது கவனத்திற் கொள்ள வேண்டிய சில பொது முறைகளையும் அறிந்து கொள்க. அவையாவன:

தாளின் தலைப்புறம், அடிப்புறம், இடப்புறம் ஆகியவற்றில் குறைந்தது ஓர் அங்குலம் இடம் விட்டு எழுதுக.

பத்தி தொடங்கும்பொழுது, மற்ற வரிகளைக் காட்டிலும் சிறிது தள்ளிப் பத்தியைத் தொடங்குக.



முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்புக் குறிகள் வரும்போது  சிறிது இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தைத் தொடங்குக.

செய்யுள்களை எழுதும்பொழுது, சீரும் அடியும் பிறழாமல் எழுதுதல் வேண்டும். ஒரு சீருக்கும் அடுத்த சீருக்கும் இடைவெளிவிட்டு எழுதுதல் வேண்டும்.

 தமிழ் மொழியில் ல-ள-ழ; ர-ற; ன-ண-ந; முதலான வரிவடிவங்களை ஒலிக்கும் பொழுது முறையாக ஒலிக்க வேண்டும். அவ்வாறு ஒலிக்காவிடில் பொருள் தடுமாற்றமும் ஏற்படும்.

இவை, இதுவோ அதுவோ என்ற மயக்கம் தரும் ஒலிகள். ஆதலால், இவற்றை மயங்கொலிகள் என வழங்குவர்.

 முதலில் ல-ள-ழ ஆகியவற்றின் ஒலிவேறுபாடு அறிந்து ஒலிக்க. அவ்வாறு ஒலிக்காவிடில் எழுதுவதிலும் தடுமாற்றம் வரும்; பொருளும் வேறுபடும் என்பதைக் கீழ்க்காணுமாறு அறிந்து பயன்படுத்துக.

அலகு     - பறவையின் மூக்கு
அளகு     - பெண் மயில்
அழகு     - எழில், வனப்பு, கவின்

அலை     - கடல் அலை
அளை    - புற்று
அழை     - கூப்பிடு

இலை     - மரம், செடி, கொடிகளின் இலை
இளை     - (உடல்) இளைத்தல்
இழை     - நூல்

கலை     - 64 கவின் கலைகள்
களை     - பயிர்களுக்கு இடையில் தோன்றும் களை
கழை     - மூங்கில்

தலை     - ஓர் உறுப்பு
தளை     - விலங்கு
தழை     - தழைத்தல்

வலி     - வலிமை
வளி     - காற்று
வழி     - பாதை

 அடுத்து, ர-ற ஒலிவேறுபாடு அறிந்து ஒலிக்கவும். பொருள் வேறுபாடு அறிந்து பயன்படுத்தவும். கீழ்க்காணும் முறையில் அறிந்து கொள்க:-

அரி   - திருமால், அரிமா (சிங்கம்)
அறி  - அறிந்து கொள், தெரிந்துகொள்

அலரி     - அலரிப்பூ
அலறி     - அழுது

இரத்தல்   - பிச்சையெடுத்தல்
இறத்தல்   - சாதல்

உரவு     - வலிமை
உறவு     - சுற்றம்

உரை     - சொல்
உறை     - தலையணை உறை

எரி   - தீ
எறி  - வீசு

கரி         - யானை
கறி     - மிளகு, காய்கறி

குரங்கு     - வானரம் (ஒரு விலங்கு)
குறங்கு     - தொடை (ஓர் உறுப்பு)

கூரை     - வீட்டுக் கூரை
கூறை     - துணி

சீரிய     - சிறந்த
சீறிய     - சினந்த

பரவை  - கடல்
பறவை     - பறப்பனவாகிய உயிரினம்

மரை     - தாமரை, மான்
மறை     - வேதம்

இவை போல்வனவற்றையும் கண்டறிந்து பயன்படுத்துக.

 ந-ண-ன ஒலி வேறுபாடு அறிந்து முறையாக ஒலிக்கவும், பொருள் வேறுபாடு உணர்ந்து பயன்படுத்தவும் கீழ்க்காணும் முறையில் அறிந்து கொள்க.

அணல்     - தாடி
அனல்     - நெருப்பு

ஆணி  - இரும்பால் ஆன ஆணி
ஆனி   - தமிழ் மாதங்களுள் ஒன்று


ஊண்     - உணவு
ஊன்     - இறைச்சி

கணம்     - கூட்டம்
கனம்     - பளு, பாரம்

பேண்     - காப்பாற்று
பேன்     - தலையில் வாழும் (ஓர் உயிரி) பேன்

மணம்  - நறுமணம்
மனம்   - உள்ளம்

மணை     - உட்காரும் பலகை
மனை     - வீடு

மாண்     - பெருமை
மான்     - புள்ளிமான் (ஒருவகை விலங்கு)

முந்நாள்     - மூன்று நாள்
முன்னாள்     - முந்தைய நாள்

தேநீர்     - தேயிலை நீர்
தேனீர்     - தேன்போலும் இனிய நீர்

திணை     - நிலம், ஒழுக்கம்
தினை     - தானிய வகையுள் ஒன்று, சிறிய

கணை   - அம்பு
கனை    - குதிரை கனைத்தல்

இவை போன்றனவற்றைக்  கண்டறிந்து பயன்படுத்துக.



நம் முன்னோர்கள், எப்பொருளை, எச்சொல்லால் இயம்பினரோ, அப்பொருளை அச்சொல்லால் இயம்புதல் அல்லது வழங்குதல்' மரபு எனப்படும்.

அம்மரபுகள் சிலவற்றைத் தெரிந்து கொள்க.

 பறவை - விலங்குகளின் ஒலி மரபுகள்
    
சேவல் கூவும்     
நாய் குரைக்கும்
          
கூகை குழறும்     
பன்றி உறுமும்
          
மயில் அகவும்     
குதிரை கனைக்கும்
          
கிளி பேசும்
எருது எக்காளமிடும்
          
வண்டு முரலும்     
சிங்கம் முழங்கும் (கர்ஜிக்கும்)
          
யானை பிளிறும்
எலி கீச்சிடும்

பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்

கோழிக் குஞ்சு     
நாய்க் குட்டி
          
கிளிக் குஞ்சு     
புலிப் பறழ்
          
அணிற்பிள்ளை     
சிங்கக் குருளை
          
கீரிப்பிள்ளை     
யானைக் கன்று
பசுவின் கன்று

 தாவர உறுப்புகள் பற்றிய மரபுகள் :

 

வேப்பந்தழை
தாழை மடல்
          
ஆவரங் குழை     
முருங்கைக் கீரை
          
நெல்தாள்     
தென்னங் கீற்று
          
வாழைத் தண்டு
கம்பந்தட்டு (தட்டை)
          
கீரைத் தண்டு
சோளத் தட்டு
கரும்புத் தோகை

பறவை - விலங்குகளின் உறைவிட மரபுகள் :

 

கோழிப் பண்ணை     
ஆட்டுப் பட்டி
          
குருவிக் கூடு     
நண்டு வளை
          
சிலந்திவலை     
கறையான் புற்று
          
எலிவளை
(எலிப் பொந்து)     
மாட்டுத் தொழுவம்
          
குதிரைக் கொட்டில்

 
பெயருக்கு ஏற்ற வினை

வீடு கட்டினார்
சுவர்எழுப்பினார்
கூரைவேய்ந்தார்

குடம்வனைந்தார்
கூடை முடைந்தார்

செய்யுள் இயற்றினார்
நூல் எழுதினார்
    
    

சிற்பம் செதுக்கினார்
ஓவியம் வரைந்தார்
வண்ணம் தீட்டினார்
    
பாட்டுப் பாடினார்
நாடகம் நடித்தார்
நாட்டியம் ஆடினார்
    
தண்ணீர் குடித்தார்
பால் பருகினார்
உணவு உண்டார்
முறுக்குத் தின்றார்

மீண்டும் சந்திப்போம்

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply
'தமிழ் படிப்போம்'
 
தமிழ் படிப்போ ம்..... நடக்கட்டும்!!.
 
 
வரவுக்கு நன்றி. வாத்தி யார்...??????
 
 
Link to comment
Share on other sites

நன்றி வாத்தியார் தமிழ்படிக்க வந்திட்டன். பாடத்தை துவங்குங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கும்.... "இடம்விட்டு எழுதுதலும், சேர்த்து எழுதுதலும்" சரிவரத் தெரியாமல்.. பிரச்சினை உள்ளது.
 

அத்துடன்.... ஆச்சரியக்குறி, கொமா, (......) அடைப்புக் குறிக்குள் உள்ள நீண்ட புள்ளி எங்கு போடவேண்டும் என்ற பாடத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன் வாத்தியார். :)

Link to comment
Share on other sites

தமிழ்ச் சாரல் பொழியட்டும்...

 

தலைப்புக்கு சம்பந்தமில்லையென்றாலும் வாத்தியாரை தவிர வேறு யாரிடமும் கேட்கத் தோனவில்லை. கேள்வி இதுதான்..
சாரலுக்கும் தூறலுக்கும் என்ன வித்தியாசம் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய ஊக்கங்களுக்கும் வரவுகளுக்கும் நன்றிகள்
இன்று வாக்கியங்கள் பற்றித்  தொடர்ந்து படிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சாரல் பொழியட்டும்...

 

தலைப்புக்கு சம்பந்தமில்லையென்றாலும் வாத்தியாரை தவிர வேறு யாரிடமும் கேட்கத் தோனவில்லை. கேள்வி இதுதான்..

சாரலுக்கும் தூறலுக்கும் என்ன வித்தியாசம் ?

 

 

மழைத்துளிகளின் சிதறல்களைச் சாரல் எனவும்

மழை ஓய்ந்து குறைந்து பெய்வதை தூறல் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன்.

தூறல் என்றால் சிறிய துளிகளாக ஆரம்பிக்கும் சிறுமழை எனவும் கூறலாம்.

இதைவிட வேறு பொருள் கூட இருக்கலாம் தெரிந்தவர்கள் கூறுங்கள்   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கிய வகை
 

தமிழ் மொழியில் வாக்கியங்கள் மிக முக்கியமானவை.
நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு அறியத்தர வாக்கியங்கள் உதவுகின்றன.

ஒரு சம்பவத்தை விவரிப்பதற்கோ அல்லது
பல சம்பவங்களை விவரித்து ஒரு கதை எழுதுவதற்கோ வாக்கியங்கள் இன்றியமையாதவை.

ஒரு கட்டுரையை எழுதும்போது பல வாக்கியங்கள் அமைக்கப்படுகின்றன.
வாக்கியங்கள் பிழைகள் இன்றித் தூய தமிழ்ச் சொற்களால் அமைக்கப்படல் வேண்டும்.நீங்கள் நினைக்கும் கருப்பொருளை இலகுவாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வாக்கியங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
நீங்கள் கூற வரும் பொருளுக்கேற்ப சொற்றொடர்களையும் மரபுச் சொற்களையும் பயன்படுத்தி வாக்கியங்கள் எழுதப்பட்டால், அவை சிறப்படையும். பேச்சு நடையில் வழங்கப்படும் சொற்களைச் செம்மைப்படுத்தித் தெளிவான நடையில் வாக்கியங்களை  எழுத வேண்டும். பலவகையான வாக்கியங்களைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் பயன்படுத்தல் வேண்டும்.

சொற்கள் பல சேர்ந்து நின்று ஒரு பொருளைத் தருமாயின் அது சொற்றொடர் அல்லது வாக்கியம் எனப்படும்.

வாக்கியம் என்பது இருவகைப்படும்

1.கருத்து வாக்கியம்
2. அமைப்பு வாக்கியம்

கருத்து வாக்கியங்கள் கருத்திற்கேற்ப நான்கு வகைப்படும்.

செய்தி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாக எடுத்துரைப்பது செய்தி வாக்கியம் எனப்படும்.கண்ணன் பரிசு பெற்றான்.   "கண்ணன் பரிசு பெற்றான்"  என்ற  இந்த வாக்கியத்தில் ஒரு செய்தி உணர்த்தப்படுகின்றது.

அடுத்தது வினா வாக்கியம்

வாத்தியாரின்  பெயர் என்ன?
வாத்தியார் எங்கே ஆசிரியராகக் கடமையாற்றினார்?
இந்த இரு வாக்கியங்களும் ஒரு வினாப் பொருளை உணர்த்தி நிற்கின்றன. எனவே அவை வினா வாக்கியங்கள் எனப்படும்.

கருத்து வாக்கியங்களில் இன்னொரு வகை உணர்ச்சி வாக்கியம் எனப்படும். இது உணர்ர்ச்சிகளை உணர்த்தும் விதமாக அமையும்.
உவகை,அவலம், அச்சம்,இழிவு,வெகுளி,வியப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் வாக்கியங்கள் இவையாகும். இந்த வாக்கியங்கள் உணர்த்தும்  பொருளுக்கேற்ப ஆச்சரியக் குறிகளைப் பெறுகின்றன்.

தோட்டத்தில் அழகான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன!

 

ஜெனீலியாவின் அழகுதான் என்னே! :wub: 

 

இது வியப்பு

ஐயகோ! அன்னாரின் இழப்பு ஈடு செய்யவியலுமோ!

 

இது இரக்கம்

இன்னொரு கருத்து வாக்கியமுறை  ஏவல் வாக்கியம் அல்லது கட்டளை வாக்கியம்  எனப்படும். எதிரே இருப்பவரைப்பார்த்து ஏதாவது செய்யும்படி ஏவுதல் அல்லது கட்டளையிடல் என்ற பொருளை உணர்த்தி இந்த வாக்கியம் அமைக்கப்படும்.

தமிழைப் படி.
உணவை உண்.
நீரை அருந்து.
பாலைப் பருகு.   
என்பன ஏவல் அல்லது கட்டளை வாக்கியத்திற்கு உதாரணங்களாகும்.

அமைப்பு வாக்கியத்துடன் மீண்டும் சந்திப்போம்

 

Link to comment
Share on other sites

மழைத்துளிகளின் சிதறல்களைச் சாரல் எனவும்

மழை ஓய்ந்து குறைந்து பெய்வதை தூறல் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன்.

தூறல் என்றால் சிறிய துளிகளாக ஆரம்பிக்கும் சிறுமழை எனவும் கூறலாம்.

இதைவிட வேறு பொருள் கூட இருக்கலாம் தெரிந்தவர்கள் கூறுங்கள்   

 

 

நன்றி வாத்தியார் 

 

இணையத்தில் தேடிய போது கிடைத்தது. சரியா எனத்  தெரியவில்லை ??

தூறல் -> சிறுமழை 
சாரல் -> மலைப் பகுதிகளில் மேகங் கட்டிய தூறல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைப்பு வாக்கியம்

 

இது மூன்று வகைப்படும்

1.தனி வாக்கியம்

மன்னன் புலவருக்குப் பரிசளித்தான்.
மன்னனும் இளவரசனும் போரில் இறந்தனர்  

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களில்  முதலாவது வாக்கியத்தில் மன்னன்
எழுவாய் ஆகவும் பரிசளித்தான் என்பது பயனிலையாகவும் இருக்கின்றது.
இரண்டாவது வாக்கியத்தில் மன்னனும் இளவரசனும் என்ற இரண்டு எழுவாய்களும் இறந்தனர் என்ற ஒரு பயனிலையும் இருக்கின்றது.
இரண்டாவது வாக்கியத்தை இரண்டு வாக்கியங்களாக எழுதலாம் மன்னன் போரில் இறந்தான்
இளவரன் போரில் இறந்தான் என இரண்டு  தடவை எழுதாமல்  ஒரே
வாக்கியமாக சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதுவதே சிறந்தது.
இப்படிச் சொற்களைக் கோர்வையாக்கி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களுக்கு ஒரு பயனிலை என்ற அடிப்படையில்  அமைக்கப்படும் இந்த அமைப்பு வாக்கியத்தை தனி வாக்கியம் என்பர்.

2.தொடர் வாக்கியம்  

திருநெல்வேலிச் சந்தை ஒருகாலத்தில் வியாபாரத்தில் முதன்னிலையில் இருந்தது; இன்று அழிந்து போயிருக்கின்றது.

சோழ மன்னன் வீரன் மட்டும் அல்லன்; நீதிமானாகவும் இருந்தான்;
ஏழைகளுக்கு உதவி நின்றான்.

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களில் உள்ள எழுவாய் பலமுறை வராமல் ஒரேமுறை வந்திருக்கின்றது. ஆனால் அந்த வாக்கியங்களில்  பல பயனிலைகள் உள்ளன. இவ்வாறு எழுவாயைப் பலமுறை எழுதாமல்
சுருக்கமாகவும் தெளிவாகவும் பொருளுக்கேற்றவாறு ஒருமுறை மட்டும் எழுதி வெவ்வேறு  பயனிலைகளைப் பொருள் தகுந்து    இணைத்து எழுதும் முறையைத் தொடர் வாக்கியம் என்பர்.


3.கலவை வாக்கியம்

1.மக்களிடையே தீண்டாமைத் தீ பரவியிருக்கின்றது.
2.மக்களிடையே பரவியிருக்கும் தீண்டாமைத் தீயை அகற்றுவது நம் கடமை


3.தீண்டாமைத்  தீயை மக்களிடமிருந்து அகற்றுவது நம் கடமை  

முதல் இரண்டு  வாக்கியங்களையும்  பொருள் குன்றாமல் கலந்து  மூன்றாவது வாக்கியம் எழுதப்பட்டுள்ளது.

"தீண்டாமைத் தீ" என்பது ஒரு துணை வாக்கியமாகவும்  "மக்களிடமிருந்து அகற்றுவது நம் கடமை"  என்பது முதன்மை வாக்கியமாகவும் கலந்திருக்கின்றன. இப்படியான வாக்கியங்களை கலவை வாக்கியம் என்பர்.
 
மீண்டும் சந்திப்போம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வகுப்பு தொடங்கிட்டுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு, வந்த ஆக்கள் கன பேரை காணவில்லை.
எல்லாரும்... பெயில் விட்டிட்டனம் போலை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

 

பாஞ்ச்... பாஸ் பண்ணின படியால், இந்த வகுப்புக்கு வருகிறார்.

சுமே... பெயில் விட்ட படியால், வருவதில்லை.

அதோடை... படிச்சது காணும்  என்று, வீட்டில் மறித்து விட்டார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன்  ஐயா ...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வகுப்பிற்கு வருகை தந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும்  வந்தனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தற் குறிகள்

வாக்கியங்களில் அங்கு அங்கு புள்ளிகள் குறிகள் இடப்பட்டிருக்கும். அப்படியான அடையாளங்களை நிறுத்தற் குறிகள் என அழைப்பர்.
நிறுத்தற் குறிகள் பல வகைப்படும்.

1. காற் புள்ளி  (,)
2. அரை புள்ளி (;)
3. முக்காற் புள்ளி (: )
4.முற்றுப்  புள்ளி (.)
5. உணர்ச்சிக்  குறி (!)
6. வினாக் குறி (?)
7. இரட்டை மேற்கோள் குறி  (" ")
8. ஒற்றை மேற்கோள் குறி (``)   

 

காற்புள்ளி

பொருள்களை எண்ணுமிடங்களிலும் விளி முன்னும், வினையெச்சங்களுக்குப் பின்னும், மேற்கோள் குறிக்கு முன்னும், ஆதலால், ஆகவே, ஆயினும் முதலிய சொற்களுக்குப் பின்னும், முகவரியில் இறுதி வரிக்கு முன்னைய வரிகளின் இறுதியிலும் இடப்படுகின்றது.

காற்புள்ளி இடுதல் தொடர்பான சில முதன்மையான விடயங்கள்  

 சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ

பிரிக்கும் போது காற்புள்ளி இடவேண்டும்

உதாரணம்

 தனித்தனியாகப் பிரித்தல்

அறம், பொருள், இன்பம், வீடு என்பன உறுதிப் பொருள்களாகும்.

 அடுக்கு அடுக்காகப் பிரித்தல்:

நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பொருஞ் சோழனும்,

உதயணனும் யூகியும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

 சொற்றொடரில், எழுவாய், ஒன்றாக நின்று. பல பயனிலைகளைப் பெற்று வரும் போது, இறுதிப் பயனிலை தவிர பிறவற்றிற்குப் பின் காற்புள்ளி இட வேண்டும்.

உதாரணம்
கணவன் கொலை செய்யப்பட்டான் என்று கேட்ட கண்ணகி பொங்கி எழுந்தாள் , விம்மினாள், அரற்றினாள், ஏங்கினாள், கலங்கினாள், மயங்கினாள், விழுந்தாள்.


பொருள் மயக்கம் நீக்கித் தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் காற்புள்ளி இட வேண்டும்.

உதாரணம்
 அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றதால் நான் பார்க்கவில்லை.


கல்வி, அறமும் பொருளும் இன்பமும் வீடும் நல்கும் - என்னும் சொற்றொடரில் எண்ணும் மைகளுக்குப் பின் காற்புள்ளி இடுதல் தவறு.

பெரிய சொற்றொடர்கள் இணைக்கப்படும் பொழுது எண்ணும்மை இருப்பினும் தெளிவுக்காகக் காற்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்
 குறிஞ்சிக் காட்சிகளைக் கூறுவதில் வல்லவராகிய கபிலரும், வரலாற் றுக் குறிப்புக்களை வழங்குவதில் சிறந்தவராகிய பரணரும், பத்துப் பாட்டில் இரண்டு பாடல்களை இயற்றியவராகிய நக்கீரரும் கடைக் கழகப் புலவர்கள்.



 

அரைப்புள்ளி

 ஒரே எழுவாயில் பல பயனிலைகள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்

 பலர் வயிற்றளவை மீறி உண்பர்; பசியாலும் உண்பர்; கிடைத்த போதெல்லாம் உண்பர்; நாவிற்காக உண்பர்; வயிறு கெட்டும் உண்பர்.

 கண்ணன் தேர்வு எழுதினான்; ஆனால் அதில் தேறவில்லை.

 காரணம் காட்டும் ஏனென்றால் என்பதற்கு முன் அரை புள்ளி இட வேண்டும்.


உதாரணம்
 நான் இன்று பேச மாட்டேன்; ஏனென்றால், என் தொண்டை நோயுற்றிருக்கிறது.
 

 

 

முற்காற்புள்ளி

 உள் தலைப்பு அமைக்கும் போதும், ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும், சொற்றொடரில் கூறியதொன்றை விரித்துக் கூறும் போதும் முக்காற்புள்ளி இடப்படுகின்றது.

உதாரணம்
வாழ்வு இரு திறத்தது: ஒன்று உயிர் வாழ்வு; மற்றொன்று உடல் வாழ்வு

 
முற்றுப்புள்ளி

 சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படுகின்றது.

உதாரணம்
 நீ உள்ளே வா.

சுருக்கச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும்.

 

உதாரணம்
 திரு. மணி. திருநாவுக்கரசு.

 திரு. திரு. வி. க.

 பட்டப் பெயர்களுக்குப் பின் முற்றுப்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்
 திரு. இ. செழியன், க. மு.

வினாக்குறி

வினாச் சொற்றொடர்களின் இறுதியில் இடப்படுகின்றது.

உதாரணம்
 பாடுபட்டால் பயன் இல்லாமல் போகுமா?

சொற்றொடருக்கு நடுவில் கேள்விக்குறி வரக்கூடாது. நீங்கள் யார் என்று அவர் கேட்டார். என்னும் சொற்றொடரில் யார் என்ற சொல்லுக்குப் பின்னால் வினாக்குறி கண்டிப்பாக இருக்கக் கூடாது.

உணர்ச்சிக் குறி

வியத்தல், வரவேற்றல், வாழ்த்தல், வைத்தலின் போது பயன்படுத்தப்படு கின்றது. நம்ப முடியாது என்பதையும் இகழ்ச்சியுடையது என்பதையும் காட்டுமிடங்களிலும் உணர்ச்சிக் குறியிடுதல் உண்டு.

உதாரணம்

அந்தோ! பல பழந்தமிழ் நூல்கள் அழிந்தனவே.

வாழி! வாழி! தமிழ் நாடு வாழியவே!

கண்டவாறு உணர்ச்சிக் குறியை!, !!, !!! இவ்வாறெல்லாம் இடுதல் விரும்பத் தக்கதன்று.

 

ஒற்றை மேற்கோள் குறி

சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் ஒற்றை மேற்கொள் இடப்படுகின்றது.

உதாரணம்

 பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீ போ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்து விட்டேன்” பிரித்துக் காட்டுவதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்ததற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்

 ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா.

 ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.

இரட்டை மேற்கோள் குறி

 

தன்கூற்றை வலியுறுத்தத் தன்னினும் சிறந்தோர் கூறியவற்றைக் எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.

உதாரணம்

 “அறம் தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர்.

 மன்னன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங் கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்குக் குகனும் பரதனும், பிசிராந்தையாரும் கோப்பொருஞ் சோழனும், உதயணனும் யூகியும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும்  ஊக்கத்திற்கும்  பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேற்றுமை

 

வேற்றுமை என்ற  சொல்லை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வேற்றுமை என்றால் வேறுபடுத்துதல் என்று அர்த்தம்.
இலக்கணத்தில் வேற்றுமை என்றால் என்ன என்பதை இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

ஒரு பெயர்ச் சொல்லுடன் ஒரு எழுத்தோ அல்லது ஒரு சொல்லோ சேர்ந்து அந்தப் பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவதை வேற்றுமை என்பர்.

குமார் அடித்தான்  (குமார்  பெயர்ச்சொல்)
குமாரை அடித்தான் (அடித்தான் வினைச்சொல்)

என்ற இரண்டு வாக்கியங்களையும் எடுத்துக்கொண்டால் முதல் வாக்கியத்தில் குமார் எழுவாய் ஆகவும் அடித்தான் என்பது பயநிலையாகவும் அமைந்திருக்கின்றது. குமார் யாரையோ அடித்தான் என்ற பொருளில் அந்த வாக்கியம் அமைந்துள்ளது.

இரண்டாவது வாக்கியத்தில் குமார் என்ற சொல்லுடன் ஐ என்ற ஒரு எழுத்துச் சேர்ந்து முதலாவது வாக்கியத்தின் கருத்தை வேற்படுத்துகின்றது. அதாவது குமாரை யாரோ ஒருவன் அடித்தான் என்ற பொருளை உணர்த்துகின்றது.
முதல் வாக்கியத்தில் அடித்தவன் இரண்டாவது வாக்கியத்தில் அடி வாங்கியவன் ஆகின்றான்.
இப்படிப் பெயர்ச் சொல்லின்  பொருள் வேறுபடுதலே  வேற்றுமை எனப்படும். பொருள் வேற்றுமையை உருவாக்கும்`ஐ` போன்றவை வேற்றுமை உருபுகள் எனப்படும்.

வேற்றுமை எட்டு வகைப்படும். அவை முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தா, ஆறாம், ஏழாம், எட்டாம் வேற்றுமை என அழைக்கப்படும்.

சரி இப்போது முதலாம் வேற்றுமையைப் பற்றிப் பார்ப்போம்

முதலாம் வேற்றுமை

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
ஒரு பெயர்ச் சொல் எழுவாயாக வந்து  ஒரு வினைச் சொல்லைப் பயனிலையாகப் பெற்று இயல்பான பொருளை உணர்த்தி வேறுபாடுகள் எதையும் காட்டாது  நிற்பதை முதலாம் வேற்றுமை என்பர்.

முதல் வேற்றுமை எப்போதும் வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகியவற்றுள் ஒன்றைக் கொண்டே முடியும்.

குமார் அடித்தான். ( வினைமுற்று)
குமார் என் நண்பன்.(பெயர்ச்சொல்)
குமார் என்பவன் யார்? (வினாச்சொல்)

இவ்வாறு பெயர்ச்சொல் எழுவாயாக வந்து இயல்பான பொருளைத் தருவதால் அவை முதலாம் வேற்றுமையாகின்றன.
முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை எனவும் அழைப்பர்.

 

Link to comment
Share on other sites

போன வகுப்புக்கு நான் வரேல்லை பாஞ்சும் சுமேயும் இப்பவும் வருகிறவர்களோ?...... :blink: :blink:

 

 

சுமே மதிலுக்கு மேலாலை சென்றல் boys யை எட்டிப் பார்த்தது எண்டு சொல்லி வகுப்பாலை கலைத்து விட்டினம்.  :blink:  :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டம் வேற்றுமை

 

ஒரு வாக்கியத்தில் இருக்கும் ஒரு பெயர்ச்சொல்லுடன் ´ஐ´ என்ற உருபு சேர்ந்து  அந்தப் பெயர்ச் சொல்லை செயப்படு பொருளாக மாற்றுவதை இரண்டாம் வேற்றுமை என்பர். இரண்டாம் வேற்றுமைக்குச் செயற்படு பொருள் வேற்றுமை எனவும் பெயர் உண்டு.

"குமார் பந்தை அடித்தான்"  என்ற வாக்கியத்தில் இயல்பான எழுவாயாக வரும் குமார்  ஒரு பெயர்ச்சொல். அதே போல பந்து என்பதும் பெயர்ச்சொல்லே. ஆனால் இந்த வாக்கியத்தில் பந்து என்னும் பெயர்ச்சொல் என்ற உருபை ஏற்றுப் பந்தை என வருகின்றது. பந்தை என்ற சொல்  இந்த வாக்கியத்தில் செயற்படு பொருளாக இருக்கின்றது.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயற்படுபொருளாக வேறுபடுத்துவதை இரண்டாம் வேற்றுமை என்பர்.

இந்த  ஐ உருபு பெயர்ச்சொல்லுடன் சேரும்போது  ஆறு வகைப்பட்ட செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
ஆக்கல், அழித்தல், அடைதல், அகற்றல், ஒப்பிடுதல் மற்றும் உடமை
என்பவையே அவையாகும்-
உதாரணங்கள் முறையே
செய்தான், உடைத்தான், அடைந்தான், நீக்கினான், போன்றவன், உடையவன் என்பனவாகும் .

மீண்டும் சந்திப்போம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க ஐயா இது, தமிழ் படிக்கலாமே என்று வந்தால் வகுப்பில் ஒருவரையும் காணோம்..?

தமிழ் வகுப்பு, அறையிலா இல்லை மரத்தடியிலா?

தேறிய பழைய மாணாக்கர்கள்(பாஞ்ச் பாஞ்ச், மேரியம்மே போன்றோர்) எங்கே? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தற் குறிகள்

வாக்கியங்களில் அங்கு அங்கு புள்ளிகள் குறிகள் இடப்பட்டிருக்கும். அப்படியான அடையாளங்களை நிறுத்தற் குறிகள் என அழைப்பர்.

நிறுத்தற் குறிகள் பல வகைப்படும்.

1. காற் புள்ளி  (,)

2. அரை புள்ளி (;)

3. முக்காற் புள்ளி (: )

4.முற்றுப்  புள்ளி (.)

5. உணர்ச்சிக்  குறி (!)

6. வினாக் குறி (?)

7. இரட்டை மேற்கோள் குறி  (" ")

8. ஒற்றை மேற்கோள் குறி (``)   

------

 

நன்றி வாத்தியார், இதனை நிச்சயம் நேரம் ஒதுக்கி.... ஆறுதலாக படிக்கப் போறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.