Jump to content

இது குடும்பப்பிரச்சினை - நீ ததலையீடாதே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி, நீங்களும் கேள்விப் பட்டுத்தான் இருக்கிறீங்கள், ஆனால் உண்மையா என்பது தெரியாமல் இப்படிச் சொல்வது ஒரு குற்றச் செயலைக் காணும் எம்மவர் முன்வந்து சாட்சி சொல்லப் பயப்படும் நிலையை உருவாக்கி விடும். காவல் துறையில் பெயர் பதிந்தாலே உங்கள் முன்னேற்றம் தடைப்படும் என்பது முற்றிலும் தவறான தகவல். உங்கள் பின்னணி பரிசீலிக்கப் படும் போது குற்றம் என்ன என்று தான் பார்க்கப் போகிறார்கள்-பெயரைக் கண்டவுடனே சிவப்புக் கொடி காட்டி உங்களைத் தண்டிப்பார்கள் என்பது அரை மூளை உள்ள ஒருவனுக்கே நம்பக் கஷ்டமான விடயம். அப்படி ஏதும் தவறான தரவுகள் காவல் துறையிடம் இருந்தால் ஒரு வழக்கறிஞரை வைத்து அது என்ன என்று அறியவும் அந்தத் தகவலை உங்கள் கோப்பில் இருந்து இல்லாமல் செய்யவும் கூடிய வசதி அமெரிக்காவில் உண்டு. கனடாவிலும் கட்டாயம் இருக்கும். இது போன்ற தவறான தகவல்களை சமூகத்தில் கசிய விட்டால், கடந்த மாதம் சீனாவில் ஒரு சிறு பாலகிக்கு நடந்தது போன்ற கொடுமைகள் நடக்க நீங்களும் காரணமாகி விடுவீர்கள்!

Link to comment
Share on other sites

நீலப்பறவை,

அந்தப் பிள்ளைகள் முதலில் ஒழுங்காகப் படித்து முன்னுக்கு வரமுடியுமா? பிறகு மருத்துவத்தைப் பற்றிப் பார்க்கலாம்..!

இவரைப் பற்றிக் காவல்துறைக்கு அறிவித்தால், எடுத்த மாத்திரத்தில் இவர் சிறைக்குப் போகமாட்டார்..! இவருக்கு வழங்கப்படும் எச்சரிக்கையே இவரை வழிக்குக் கொண்டு வரலாம்..!

என்னை பொறுத்தவரை ஒரு பிள்ளைக்கு அம்மாவும் அப்பாவும் தேவை என்று தான் நான் நினைக்கிறேன். நான் சில வேளைகளில் இவர்கள் சம்பந்தமாக மொழிபெயர்பு செய்திருக்கிறேன்.எல்லாத்தையும் சொல்ல முடியாது.மொத்ததில் பிள்ளைகள் தான் பாவம்.தெருவழிய திரிகிற பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் மறுபக்கம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.தாயையோ தந்தையையோ குறை சொல்லமுடியாமல் தவிப்பவர்கள் தான் ஏராளம்.சில பிள்ளைகள் வேறு விதம் அவர்களுக்கும் மறுபக்கமுண்டு.பெண்சினேகிதர்கள்,தவறான நண்பர்கள்,அதைவிட கொடுமை தங்கள் வயதிற்கு மூத்தவர்களின் பழக்கம்.இப்படிப்பல ஆகவே பிள்ளைகள் மீதுதான் என் கரிசனை,இதை எல்லாரும் புரிந்துகொண்டால் சரி

Link to comment
Share on other sites

நிலாமதி, நீங்களும் கேள்விப் பட்டுத்தான் இருக்கிறீங்கள், ஆனால் உண்மையா என்பது தெரியாமல் இப்படிச் சொல்வது ஒரு குற்றச் செயலைக் காணும் எம்மவர் முன்வந்து சாட்சி சொல்லப் பயப்படும் நிலையை உருவாக்கி விடும். காவல் துறையில் பெயர் பதிந்தாலே உங்கள் முன்னேற்றம் தடைப்படும் என்பது முற்றிலும் தவறான தகவல். உங்கள் பின்னணி பரிசீலிக்கப் படும் போது குற்றம் என்ன என்று தான் பார்க்கப் போகிறார்கள்-பெயரைக் கண்டவுடனே சிவப்புக் கொடி காட்டி உங்களைத் தண்டிப்பார்கள் என்பது அரை மூளை உள்ள ஒருவனுக்கே நம்பக் கஷ்டமான விடயம். அப்படி ஏதும் தவறான தரவுகள் காவல் துறையிடம் இருந்தால் ஒரு வழக்கறிஞரை வைத்து அது என்ன என்று அறியவும் அந்தத் தகவலை உங்கள் கோப்பில் இருந்து இல்லாமல் செய்யவும் கூடிய வசதி அமெரிக்காவில் உண்டு. கனடாவிலும் கட்டாயம் இருக்கும். இது போன்ற தவறான தகவல்களை சமூகத்தில் கசிய விட்டால், கடந்த மாதம் சீனாவில் ஒரு சிறு பாலகிக்கு நடந்தது போன்ற கொடுமைகள் நடக்க நீங்களும் காரணமாகி விடுவீர்கள்!

மொன்றியலில் சில வருடங்களுக்கு முன்பு இரு தமிழர்கள் அதிலொருவர் மற்றவரை கத்தியால் குத்தி விட்டார்.இதை என்னுடன் வேலை செய்பவர் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்.அவர் லெபனான் நாட்டை சேர்ந்த மாணவன்:பொலீசுக்கு தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.இவர் சாட்சி சொன்னார். நாலு வருடங்களாக நீதி மன்றில் வழக்கு நடந்தது.எத்தனைமுறை விரிவுரைக்கு போகாமல் இருந்திருப்பார்?எத்தனை நாள் வேலைக்கு வராமல் இருந்திருப்பார். படிப்பையும் பணத்தையும் கடைசியாக வேலையையும் இழந்து விட்டார்.கடைசி தருணத்தில் இரு தமிழர்களும் ஒற்றுமையாகிவிட்டனர்.குத்து வேண்டியவர் என்னை குத்தியவர் இவர் இல்லை என்று பல்டி அடித்துவிட்டார்.கடைசியில் பாதிக்கபட்டது அந்த மாணவன் தான். நீதிபதி அந்த மாணவனை பொய் சாட்சி சொல்லி பொலீசாரினதும் நீதிமன்றினதும் நேரங்களை வீணடித்ததாக எச்சரிக்கை செய்து அனுப்பினார். நீங்கள் எல்லாரும் இவ் உலகில் தானே இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடுதலாக எங்கட தமிழ் ஆட்கள் இப்படித் தான்...விலக்குப் பிடிக்கப் போறவர்களும்,சாட்சி சொல்லப் போறவர்களும் தான் பாவம்

Link to comment
Share on other sites

மொன்றியலில் சில வருடங்களுக்கு முன்பு இரு தமிழர்கள் அதிலொருவர் மற்றவரை கத்தியால் குத்தி விட்டார்.இதை என்னுடன் வேலை செய்பவர் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்.அவர் லெபனான் நாட்டை சேர்ந்த மாணவன்:பொலீசுக்கு தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.இவர் சாட்சி சொன்னார். நாலு வருடங்களாக நீதி மன்றில் வழக்கு நடந்தது.எத்தனைமுறை விரிவுரைக்கு போகாமல் இருந்திருப்பார்?எத்தனை நாள் வேலைக்கு வராமல் இருந்திருப்பார். படிப்பையும் பணத்தையும் கடைசியாக வேலையையும் இழந்து விட்டார்.கடைசி தருணத்தில் இரு தமிழர்களும் ஒற்றுமையாகிவிட்டனர்.குத்து வேண்டியவர் என்னை குத்தியவர் இவர் இல்லை என்று பல்டி அடித்துவிட்டார்.கடைசியில் பாதிக்கபட்டது அந்த மாணவன் தான். நீதிபதி அந்த மாணவனை பொய் சாட்சி சொல்லி பொலீசாரினதும் நீதிமன்றினதும் நேரங்களை வீணடித்ததாக எச்சரிக்கை செய்து அனுப்பினார். நீங்கள் எல்லாரும் இவ் உலகில் தானே இருக்கிறீர்கள்?

நீலப்பறவை..

இந்த விடயத்தில் தமிழர்கள் யார் என்பதை லெபனான் மாணவர் புரிந்து கொண்டிருப்பார்..! :lol:

சரி விடயத்திற்கு வருவோம்..! கத்திக்குத்து என்பது கிரிமினல் வழக்கு..! அதற்கு கண்கண்ட சாட்சியை நம்பியது காவல்துறையின் பொறுப்பற்ற செயல்..! விஞ்ஞானத்தை நம்பியிருக்க வேண்டும்..!

இந்த மாணவனும் தேவையில்லாமல் அகப்பட்டுக் கொண்டார்..! வழக்கு இழுபடுகிறது என்று தெரிந்ததுமே, ஒரு வழக்கறிஞரை நியமித்திருக்கலாம் (செலவு) அல்லது எழுதிக்கொடுத்துவிட்டு ஒதுங்கியிருக்கலாம்..!

ஆனால் உங்களுக்கு இந்த விவகாரங்களில் அனுபவம் அதிகம் போல் தெரிகிறது..! அவற்றையும் உள்வாங்கிக் கொள்கிறேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொன்றியலில் சில வருடங்களுக்கு முன்பு இரு தமிழர்கள் அதிலொருவர் மற்றவரை கத்தியால் குத்தி விட்டார்.இதை என்னுடன் வேலை செய்பவர் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்.அவர் லெபனான் நாட்டை சேர்ந்த மாணவன்:பொலீசுக்கு தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.இவர் சாட்சி சொன்னார். நாலு வருடங்களாக நீதி மன்றில் வழக்கு நடந்தது.எத்தனைமுறை விரிவுரைக்கு போகாமல் இருந்திருப்பார்?எத்தனை நாள் வேலைக்கு வராமல் இருந்திருப்பார். படிப்பையும் பணத்தையும் கடைசியாக வேலையையும் இழந்து விட்டார்.கடைசி தருணத்தில் இரு தமிழர்களும் ஒற்றுமையாகிவிட்டனர்.குத்து வேண்டியவர் என்னை குத்தியவர் இவர் இல்லை என்று பல்டி அடித்துவிட்டார்.கடைசியில் பாதிக்கபட்டது அந்த மாணவன் தான். நீதிபதி அந்த மாணவனை பொய் சாட்சி சொல்லி பொலீசாரினதும் நீதிமன்றினதும் நேரங்களை வீணடித்ததாக எச்சரிக்கை செய்து அனுப்பினார். நீங்கள் எல்லாரும் இவ் உலகில் தானே இருக்கிறீர்கள்?

நாங்கள் இருக்கிற உலகம் இருக்கட்டும். இப்ப உங்கள் அறிவுரை என்ன? ஒருவன் கொலை செய்யப் படுவதை பார்க்கும் ஒருவர் தடுக்கவும் போகக் கூடாது (இது பல சமயம் காவல் துறையே சொல்லும் நியாயமான அறிவுரை தான்!-ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்). காவல் துறைக்கும் தகவல் சொல்லக் கூடாது, தகவல் சொன்னால் தொழில், படிப்பு நேரம் வழக்கில் விரயமாகும் என்பதால் பேசாமல் திரும்பிக் கொண்டு போய் விட வேண்டும். ஒரு உயிரைக் காப்பாற்றக் கூடிய வாய்ப்பை இழந்து விட்டு நிம்மதியாக உண்டு உறங்கி மிகுதி நாட்களைக் களிக்க வேண்டும். இதுவா நீங்கள் உங்கள் அடுத்த சந்ததிக்கும் சொல்லி வளர்க்கும் அறிவுரை? நீங்கள் மொழிபெயர்ப்பாளராக இருக்கலாம், ஆனால் உங்கள் கருத்துக்கள் ஒரு பொறுப்புள்ள பிரஜையின் கருத்துகள் போல இல்லை.அப்பாவும் அம்மாவும் பிள்ளைக்கு அவசியம் என்ற கருத்தும் ஒரு சாரமும் அற்றது. "நல்ல" அப்பாவும் அம்மாவும் குழந்தைக்குத் தேவை என்பது தான் சரியான கருத்து என நான் நினைக்கிறேன். அனேகமாக எல்லா ஆண்களுக்கும் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்ய முடியும். ஆனால் எல்லா ஆண்களுக்கும் நல்ல தகப்பனாக இருக்க முடிவதில்லை (விசுகு கண்ட அந்த ஆண் போல). இப்படியான நிலைகளில் அந்த தகப்பனால் என்ன தான் பிள்ளைக்கு நல்லது செய்ய இயலும் என்கிறீர்கள்? இப்படியான தறுதலைகளை குடும்பத்திலிருந்து சட்ட ரீதியாக அகற்றி விட்டால் பிள்ளைகளுக்கும் பெண்ணுக்கும் நல்லது என்பது பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட ஒரு உண்மை.

Link to comment
Share on other sites

நாங்கள் இருக்கிற உலகம் இருக்கட்டும். இப்ப உங்கள் அறிவுரை என்ன? ஒருவன் கொலை செய்யப் படுவதை பார்க்கும் ஒருவர் தடுக்கவும் போகக் கூடாது (இது பல சமயம் காவல் துறையே சொல்லும் நியாயமான அறிவுரை தான்!-ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்). காவல் துறைக்கும் தகவல் சொல்லக் கூடாது, தகவல் சொன்னால் தொழில், படிப்பு நேரம் வழக்கில் விரயமாகும் என்பதால் பேசாமல் திரும்பிக் கொண்டு போய் விட வேண்டும். ஒரு உயிரைக் காப்பாற்றக் கூடிய வாய்ப்பை இழந்து விட்டு நிம்மதியாக உண்டு உறங்கி மிகுதி நாட்களைக் களிக்க வேண்டும். இதுவா நீங்கள் உங்கள் அடுத்த சந்ததிக்கும் சொல்லி வளர்க்கும் அறிவுரை? நீங்கள் மொழிபெயர்ப்பாளராக இருக்கலாம், ஆனால் உங்கள் கருத்துக்கள் ஒரு பொறுப்புள்ள பிரஜையின் கருத்துகள் போல இல்லை.அப்பாவும் அம்மாவும் பிள்ளைக்கு அவசியம் என்ற கருத்தும் ஒரு சாரமும் அற்றது. "நல்ல" அப்பாவும் அம்மாவும் குழந்தைக்குத் தேவை என்பது தான் சரியான கருத்து என நான் நினைக்கிறேன். அனேகமாக எல்லா ஆண்களுக்கும் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்ய முடியும். ஆனால் எல்லா ஆண்களுக்கும் நல்ல தகப்பனாக இருக்க முடிவதில்லை (விசுகு கண்ட அந்த ஆண் போல). இப்படியான நிலைகளில் அந்த தகப்பனால் என்ன தான் பிள்ளைக்கு நல்லது செய்ய இயலும் என்கிறீர்கள்? இப்படியான தறுதலைகளை குடும்பத்திலிருந்து சட்ட ரீதியாக அகற்றி விட்டால் பிள்ளைகளுக்கும் பெண்ணுக்கும் நல்லது என்பது பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட ஒரு உண்மை.

ஜஸ்ரின்,

லெபனான் மாணவர் என்று எழுதியிருருக்கிறார்..! மாணவர் விசாவில் வந்து படிப்பவராக இருக்கலாம்..! காவல்துறையின் கண்டிப்பான அழைப்புகளுக்கெல்லாம் வளைந்து கொடுத்திருப்பார்..! படிப்பும் பணமும் வீணாகியிருக்கும்..! :unsure:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அவரும் அவரது மனைவியும் 3 பிள்ளைகளும் ஒன்றாக சந்தோசமாக செல்வதை சில நாட்களுக்கு முன் என் மக்கள் கண்டு

அதை உடன் எனக்கு அறிவித்தனர்.

சந்தோசமாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் தானே.

Link to comment
Share on other sites

இன்று தான் கவனித்தேன் விசுகு அண்ணா. உங்கள் தலையீடு இல்லாவிட்டால் ஒரு குடும்பத்தின் வழி தடுமாறிப்போயிருக்கலாம். உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

போன கிழமை நடந்த ஒரு விடயம். அதையும் இங்கு பதிகின்றேன்.

எனது 2வது மகனுடன் (வயது 17) இரவு 11 க்கு பின் வேலை முடிந்து வீடு நோக்கி காரில் போய்க்கெகாண்டிருந்தேன். நாங்கள் நண்பர்கள்போல் சிரித்து பகிடிவிட்டு பழகுவோம். அதேபோல் அன்றும் சிரித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தபோது அவனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறும் செய்தி வந்தது. அதைப்பார்த்ததும் அவனது முகம் மாறியதை அவதானித்தேன். நான் தொடர்ந்து பகிடி விட்டபோதும் அவரால் அதற்கு பதிலோ சிரிப்பையோ தரமுடிடியவில்லை. என்னடா என்று கேட்டேன். ஒன்றுமில்லையப்பா என்றான். சிறிது நேரம் கழித்து மீண்டும் நான் என்னப்பு ஏதாவது பிரச்சினை?. இல்லையப்பா. தொலைபேசியில் ஏதாவது கெட்ட தகவல் உனது நண்பிகள் எவராவது ஏதாவது எழுதினார்களா? என மீண்டும் நான் பகிடிவிட. அவரது முகம் இறுகுவதைக்கண்டேன்.

கொஞ்சம் நானும் மாறி குறும் செய்தியில் என்ன வந்தது? என்றேன். எனது நண்பன்(பிரெஞ்சுக்காறன்) ஒருவன் தாய் தகப்பனுடன் கோவித்துக்கொண்டு வெளியில் வந்து றோட்டில் நிற்கிறார் என்றான். எங்கே அவரது வீடு? என்று நான் கேட்க எங்களது வீட்டுக்கு பக்கத்தில் தான் என்றான்.

சரி அவருக்கும் பெற்றோருக்கும் என்ன பிரச்சினை? என்று கேட்டேன்

அவரை 3 வருடங்களுக்கு முன் அவரது பெற்றோர் அவரை கத்தோலிக்க பாடசாலையில் சேர்த்துவிட்டனர். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. அன்றிலிருந்து அவர்களுக்குள் பிரச்சினை.

சரியடாப்பா. பெற்றவர்கள் பிள்ளையின் நன்மைக்குத்தானே எதையும் செய்வர். அவர் படிப்பை முடித்துக்கெகாண்டு வெளியில் வரவேண்டியதுதானே? இது நான்.

இல்லையப்பா

அந்தப்பாடசாலையில் படிப்பைவிட மதத்துக்கும் அதனுடைய போதனைகளுக்குமே இ முதலிடமும் நேரமும் ஒதுக்கப்படுகிறது.

சரி

அவர் பல்லைக்கடித்துக்கொண்டு படிப்பை முடிக்கலாம்தானே. இது நான்.

அப்பா அது அவனால்முடியாது. அவன் சாத்தானை வணங்குபவன்.

என்னடா இது. ஏன் அவன் சாத்தானை இந்த வயதில் வணங்கணும். பெற்றோர் கண்டிப்பதிலும் அர்த்தம் இருக்குத்தானே. இது நான்.

இங்கு இவனைப்போல் பலபேர் இருக்கினம் சாத்தானை வணங்குவோர்.

சரி

சாத்தானை வணங்குபவர்களின் பழக்கவழக்கம் என்ன?

இவனது பழக்கவழக்கம் எப்படி? இது நான்.

திறமான பிள்ளையப்பா. நல்லவன். என்னுடன் 3 வருடத்துக்கு முன்பு படித்தும் இன்றுவரை எங்கள் நட்பைத்தொடரவிரும்பும் ஒரு நல்லல நண்பனப்பா.. அத்துடன் எனக்கு மட்டும்தான் குறும் செய்தி அனுப்பியுள்ளதாக எழுதியுள்ளானப்பா.

சரி

அவனுக்கு 18 வயது கூட இன்னும்ஆகவில்லை. இது பெற்றோர் பிள்ளை பிரச்சினை. நாளைக்கு அவர்கள் ஒன்றாகிவிடுவார்கள். அவனை நான் பேசினால் அவனது பெற்றோருக்கு பிடிக்காது. பெற்றோரை நான் பேசினாலும்அவனுக்கு அது பிடிக்காது. பெற்றோர் பிள்ளை உறவு என்பதுஅப்படித்தான்.

ஆனால் இரவு மழையும் பெய்கிறது. அதனால் அவன் எங்கு போகவேணும் என்று நினைக்கின்றானோ அங்கு கொண்டு போய்விடுகின்றேன். அவனைக்கேள் இது நான்.

தயங்கியபடி

அப்பா என்னை கொஞ்ச நேரம் அவனோடு பொழுதைக்கழிக்க விடுவீர்களா?

நான் கொஞ்ச நேரம் அவனோடு பேசிவிட்டு அதன்பின்னர் அவனது முடிவை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.

சரி போ.

ஆனால் இரவு அதிகநேரம் வெளியில் மினக்கெடக்கூடாது.

சாப்பிட்டாரோ தெரியாது அவருக்கு சாப்பாடு வாங்கிக்கொடு என பொக்கற்றுக்குள் கை வைக்கின்றேன். என்னிடம் காசு இருக்கப்பா.

வீட்டுக்கு ஒரு கிலோமீற்றர் இருக்குமிடத்தில் இறக்கிவிட்டு வீடடுக்கு வருகின்றேன். ஒரு மணித்தியாலத்தால் வீடு வருகின்றார்.

என்ன நடந்தது? இது நான்

அவர் பெற்றோரிடமே போய்விட்டார்.

நான் நல்ல முடிவு நன்றியடா.

Link to comment
Share on other sites

சரியான நேரத்தில் சரியான வேலை செய்துள்ளீர்கள். அந்தப் பையனுக்கு உரிய நேரத்தில் தனது பிரச்னையை பகிர ஒரு நண்பன் கிடைத்திரா விட்டால் வழி தவறிப் போயிருக்கக் கூடும். அத்துடன் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மனக்கசப்புக் கூடியிருக்கும். மகனை நல்லபடியாக வளர்த்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தபபிலி

உண்மைதான் எனக்கும் அப்படியோரு சந்தோசம் வந்தது அப்போது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.