Jump to content

இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே ’டெசோ’ கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பரபரப்புத் தகவல்


Recommended Posts

[size=4]தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டுக்கு இந்திய மத்திய அரசு தனது முழுமையான ஆதரவை வழங்கவில்லை என அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில், அந்த மாநாடு இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே நடைபெற்றது என மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையிலிருந்து சென்ற நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று பரபரப்புக் கருத்தை வெளியிட்டார்.[/size]

[size=4]"புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி மஹிந்த அரசு மாபெரும் குற்றங்களைப் புரிந்துள்ளது. இந்நிலையிலும், அதன் போலித்தனமானதும், நம்பகத் தன்மையற்றதுமான நிலைப்பாடுகளி னால்தான் இந்திய ஆட்சியாளர்கள் அரசுமீது கடும் அதிருப்தி கொண்டுள்ள னர். இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலும், கசப்பும் ஏற்படுவதற்கு இலங்கை அரசே காரணம்'' என்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டார்.[/size]

[size=4]எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற [/size]

[size=4]பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size]

[size=4]இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:[/size]

[size=4]தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டிற்கு இந்திய மத்திய அரசு தனது ஆதரவை வழங்கியது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி இலங்கை அரசு மாபெரும் குற்றச்செயல்களைப் புரிந்துள்ளது. இந்நிலையில், யுத்தம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் நிலைநாட்ட இந்த அரசு முன்வரவில்லை.[/size]

[size=4]நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டுமெனக் கூறப்படுகிறது.[/size]

[size=4]இதுதான் "டெசோ' மாநாட்டிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமன்றி, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து சிபாரிசுகளையும் இலங்கை அரசு அமுல்படுத்தவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.[/size]

[size=4]வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டாது நம்பகத்தன்மையற்ற விதத்தில் இலங்கை அரசு செயற்படுவதனால்தான் இந்திய அரசும் ஆட்சியாளர்களும் அதன்மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். இலங்கை அரசின் இதுபோன்ற நிலைப்பாடுகள்தான் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலும் கசப்பும் ஏற்படக்காரணம்.[/size]

[size=4]தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டில் ஏன் நீங்கள் கலந்துகொண்டீர்கள் என என்னிடம் பலர் கேள்வி கேட்டனர். இந்த மாநாட்டை இந்திய அமைச்சரவையில் உள்ள ஓர் அரசியல் கட்சிதான் நடத்தியது. அதனால் நான் அதில் கலந்துகொண்டேன்.[/size]

[size=4]அத்துடன், மக்களை சர்வதேசத்திடம் அடகுவைத்துக் கடன்வாங்கி அராஜக ஆட்சி நடத்தும் இந்தத் தேசத்துரோக அரசைப்பற்றிக் கூறுவதற்கு நான் தயாராகவே உள்ளேன். எனது நிலைப்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்.[/size]

[size=4]வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதில் இலங்கை அரசின் நிலைப்பாட்டையும், அக்கறையையும் அறிந்துகொள்வதற்காக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு தடவை இங்கு வருகின்றனர்.[/size]

[size=4]ஒரு வருடத்திற்கு சுமார் 150 நாடுகளின் பிரதிநிதிகளை நான் சந்திப்பேன். அவர்களிடமும் அரசின் செயற்பாடுகள் குறித்து தெரியப்படுத்துவேன். அதுமட்டுமல்ல, தேவையேற்படின் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று இதுபற்றிக் கூற நான் தயாராகவுள்ளேன். இந்த அரசுக்கு எதிராக சர்வதேச சமூகத்தினரையும் ஒன்றுதிரட்ட நான் தயாராக உள்ளேன் என்றார்.[/size]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?id=321351338120426782[/size]

Link to comment
Share on other sites

என் கண்ணிற்கு இப்போதெல்லாம் இவரும் மனோ கணேசனும் தான் மனிதர்களாக தெரிகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கில்லை

Link to comment
Share on other sites

[size=4]இவ்வாறானவர்கள் சிங்களவர்கள் மத்தியில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மகிந்தர் ஆட்சியும் பொருளாதாரமும். [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.