Jump to content

வீரவெவ பகுதி விமான விபத்துக்கு புலிகளே காரணம்; பதினொரு வருடங்களின் பின் கண்டுபிடித்தது படைத்தரப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

plane-crash1-100x100.jpg

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அநுராதபுரம் – வீரவெவ பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தமை தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் இரு ரஷ்ய பிரஜைகளை ஏற்றிச் சென்றபோதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப சிக்கலே விபத்துக்கான காரணம் என விசாரணைகள் மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விமான விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வில்பத்து வனப் பகுதியில் பதுங்கியிருந்து மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாகவே விழுந்து விபத்துக்குள்ளானதாக கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையின் பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமான விபத்து தொடர்பான வழக்கு இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.saritham.com/?p=55283

Link to comment
Share on other sites

ஜெனீவாவில் கூட மக்களுக்காக நம்பிக்கை தரும் செய்திக்கு காரணமானவர்கள் இவர்கள் - உயிர்க்கொடை தந்து இன்றும் வரலாறு படைப்பவர்கள் இவர்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவெவ பகுதி விமான விபத்துக்கு புலிகளே காரணம்; பதினொரு வருடங்களின் பின் கண்டுபிடித்தது படைத்தரப்பு!

1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட்டு போருக்கு புலிகள் தான் காரணம் சிங்கள ஆராய்ச்சியாளர் டிசில்வா பெராரெ கண்டு பிடிப்பு :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.