Jump to content

கம்பன் விழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் விழா

 

IMG_1974.JPG

 

உரையரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் என மூன்று நிகழ்வுகளாக நடைபெற்ற கம்பன் விழாவில் கம்பன் காப்பியத்தில் தனிப் புலமை பெற்ற இலங்கையின் கம்பவாரிதி ஜெயராஜ் ‘கம்பன் கண்ட மானுடம்’ எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். தலைமைப் பண்புகள் சிறு வயதிலிருந்தே வளர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இராமனின் சிறுவயது நடவடிக்கைகளை கம்பன் விவரிப்பதை எடுத்துக் காட்டினார்.தமிழகத்தின் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ‘மும்மடங்கு பொலிந்தன’ எனும் தலைப்பில் இராவணன் பற்றி உரையாற்றினார். இராவணன் மிகச் சிறந்த தலைவன் என்றும் அவன் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டதால் வீழ்ந்தான் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மை வேண்டும் என்றும் அவர் பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டிக் கூறினார்.

மலேசியாவில் கம்பன் விழா நடத்திப் புகழ்பெற்ற கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் ‘கம்பனும் கண்ணதாசனும்’ எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். உரையரங்கத்திற்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் தலைமையேற்றார். பிற்பகலில் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமையில் ‘பாத்திரங்கள் பேசினால்’ எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. அதில் உள்ளூர்க் கவிஞர்கள் பங்கேற்றனர்.

‘தம்பியரில் சிறந்தவன் பரதனா? இலக்குவனா?’ எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் உள்ளூரின் பிரபல பேச்சாளர்கள் பங்கேற்றனர். இறுதியில் தீர்ப்பளித்த கம்பவாரிதி திரு. ஜெயராஜ், இராமனே, பரதன் இலக்குவனைவிடச் சிறந்தவன் என்று கூறி தீர்ப்பு வழங்கினார். சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட சுமார் 250 பார்வையாளர்கள் விழாவைப் பாராட்டினர்.

 

தமிழ் முரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகையில் இனத்தைவிற்றுப் பிழைக்கும் கேவலமான பிழைப்புத்தான்.

 

அங்க ஒண்டும் இராவணன் பிறன்மனை விழையவில்லை, சொந்த மனைவியை சந்தேகிக்கும் இராமன் சீதையைத் தனித்துவிட்டுப் போக இல்க்குவனும் போக இராவணனிடம் அடைக்கலம் புகுகின்றாள் சீதை. அதைவிட சீதை இராவணனுக்கு மகள் முறைவேணும் என்பதை இந்த கேவலம் கெட்ட இழிபிறவிகள் இலகுவில் மறைத்துவிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

இதுவும் ஒருவகையில் இனத்தைவிற்றுப் பிழைக்கும் கேவலமான பிழைப்புத்தான்.

 

அங்க ஒண்டும் இராவணன் பிறன்மனை விழையவில்லை, சொந்த மனைவியை சந்தேகிக்கும் இராமன் சீதையைத் தனித்துவிட்டுப் போக இல்க்குவனும் போக இராவணனிடம் அடைக்கலம் புகுகின்றாள் சீதை. அதைவிட சீதை இராவணனுக்கு மகள் முறைவேணும் என்பதை இந்த கேவலம் கெட்ட இழிபிறவிகள் இலகுவில் மறைத்துவிடுகிறார்கள்.

 

இதற்கு ஏதாவது நம்ப தகுந்த ஆவணமிருக்கா?

Link to comment
Share on other sites

இதற்கு ஏதாவது நம்ப தகுந்த ஆவணமிருக்கா?

Indonesia Jakarta Ramayana says sita is daughter of ravana but written after valmiki ramayana
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பனை.. இராமனை.. சீதையைப் புகழ்ந்தமா.. காசை வாங்கி பையில போட்டமா.. கொஞ்சம் பெரிய தலைகளை கைக்குள்ள போட்டமா.. கொலரை இழுத்து விட்டுக் கொண்டு போனமா.. இதுதான் குடுமியரின்.. கம்பன் கழக அரசியல் சூத்திரமே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சனைக்குள் இது ரொம்ப அவசியம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரம்

தியாகம்

நட்பு

தேசப்பற்று............  இவை  அனைத்துமே 

எம் கண்முன்னே நடந்தன

 

அவை  பற்றி  பேசாமல்

புனைகதைகளையும்

கேள்விப்பட்ட வாசித்த விடயங்களையும் பெருமை பேசி

அதை வியாபாரமாக்கும் இவர்கள்

 

வாயிருந்தும் ஊமைகள்

காதிருந்தும் செவிடர்கள்

கண்ணிருந்தும் குருடர்கள்.......... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாயிருந்தும் ஊமைகள்

காதிருந்தும் செவிடர்கள்

கண்ணிருந்தும் குருடர்கள்.......... :(  :(  :(

 

இவை எதுவும் இல்லை அண்ணா.. பழுத்த சுயநல சந்தர்ப்பவாதிகள். அவ்வளவே..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகையில் இனத்தைவிற்றுப் பிழைக்கும் கேவலமான பிழைப்புத்தான்.

 

அங்க ஒண்டும் இராவணன் பிறன்மனை விழையவில்லை, சொந்த மனைவியை சந்தேகிக்கும் இராமன் சீதையைத் தனித்துவிட்டுப் போக இல்க்குவனும் போக இராவணனிடம் அடைக்கலம் புகுகின்றாள் சீதை. அதைவிட சீதை இராவணனுக்கு மகள் முறைவேணும் என்பதை இந்த கேவலம் கெட்ட இழிபிறவிகள் இலகுவில் மறைத்துவிடுகிறார்கள்.

 

இலங்கை இந்திய உறவு அண்ணன் தம்பி உறவு என அரசியல்வாதிகள் இதை வைத்துதான் சொல்கின்றார்களோ :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.