Jump to content

பார்த்தீனியச் செடிகளை உரமாக மாற்றலாம் வாங்க...


Recommended Posts

partheeniyam.jpg?width=350
 
வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு பரவிய பார்த்தீனியம் களை, முதன்முதலாக 1956-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த பார்த்தீனியம், திரும்பும் இடமெல்லாம் பெருகியுள்ளது.
 
11.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த களைச்செடியின் இலைகள் பார்ப்பதற்கு காரட் இலைகளைப் போன்று காணப்படுவதுடன் இவை கிளைவிட்டு பூக்கும் இனத்தைச் சார்ந்தவையாகும். மேலும், நமது சாகுபடி பயிருடன் ஒப்பிடுகையில் இவை ஒவ்வொன்றும் 15,000 முதல் 25,000 விதைகளை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது.
 
மேலும், இவ்விதைகளின் எடை மிகக் குறைவாக இருப்பதால் இவை எளிதில் காற்றின் மூலமாகவும், மனித மற்றும் விலங்குகள் செயல்பாட்டின் மூலமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவிச் செல்கிறது. இந்த களைச்செடியின் வெட்டப்பட்ட மற்றும் உடைந்த பாகங்கள் மீண்டும் துளிர்விடும் தன்மை கொண்டதாக இருப்பதால் இவை எளிதில் பரவி விடுகின்றன. இவ்வாறு பரவும் இவ்வகை களைச் செடிகள் மனிதன் மற்றும் விலங்கினங்களுக்கு ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்துவதால் இதனை முழுமையாக கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் இந்தச் சூழ்நிலையிலும் இந்த களைக் கட்டுப்பாடானது உலகளவில் பெரும் சவாலாக இருப்பதுடன் தனிப்பட்ட மேலாண்மை முறைகள் மூலமாக இக்களைகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல. எனவே, பல்வேறு மேலாண்மை முறைகளை ஒருங்கிணைத்து கடைப்பிடிப்பதால் இக் களையின் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இயந்திரவியல் களைக்கட்டுப்பாடு: பெரும்பாலும் இந்த களைச் செடியானது விதைகளின் மூலமாக பரவுவதால், அந்தந்தப் பருவகாலங்களில் இச்செடிகள் பூப்பதற்கு முன் வேருடன் களைய வேண்டும். மேலும் இவை மனிதனுக்கு உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் தகுந்த பாதுகாப்பு முறைகள் மூலமாக (கையுறைகள், முகக் கவசங்கள்) அகற்றப்பட வேண்டும். மேலும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இச் செடிகளை பூப்பதற்கு முன் நீக்குவதால் இவை மேலும் பரவாமல் தடுக்கலாம்.
 
உழவியல் முறைகள்: பார்த்தீனிய களைகள் அதிகமாக உள்ள விளை நிலங்களில், அதனைவிட வேகமாக வளரும் பயிர்களான சோளம், கம்பு, சணம்பு, தக்கைப் பூண்டு போன்றவற்றை பயிரிடுவதால் இதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இச் செடிகள் பூப்பதற்கு முன், விளைநிலங்களில் நீரைப் பாய்ச்சி மடக்கி உழுவதன் மூலமாக இதனைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணிற்கு உரமாகவும் மாற்றிவிடுகிறது.
ரசாயன முறை: தரிசு நிலங்களில் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்த கிளைப்போசேட் 11.5 சதவீதம் அல்லது மெட்ரிப்யூசின் 0.30.5 சதவீதம் என்ற களைக்கொல்லியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். வாழை, தக்காளி மற்றும் பயிறு வகைப் பயிரிகளில் அலக்லார் என்ற களைக்கொல்லியை ஹெக்டேருக்கு 2 கிலோ வீதம் பயன்படுத்துவதன் மூலமாக இந்தப் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்.
உயிரியல் முறைக் கட்டுப்பாடு: இந்த களைச் செடியானது இயற்கை எதிரிகள், பூஞ்சாணங்கள், நூற்புழுக்கள் மற்றும் நத்தைகள் மூலமாக எளிதில் கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மெக்சிகன் பொறி வண்டுகளின் (சைக்கோகரம்மா பைகாலரேட்டா) மூலமாக இந்த களைச் செடிகளை முழுமையாக கட்டுப்படுத்தலாம். இவ்வகை பொறி வண்டின் ஆயுள் காலம் 22-32 நாள்களாகும். இவை நிலங்களில் 5-6 முறை இனப்பெருக்கம் அடையும் தன்மை கொண்டவை.
பொறி வண்டு மற்றும் இதன் இளம்பருவ புழுக்கள் பார்த்தீனியச் செடிகளை விரும்பி உண்ணும் தன்மை கொண்டவை. புதிதாக மற்றும் இளம் செடிகளின் மேலிருந்து கீழ்நோக்கி முழுச் செடியையும் இவை உண்பதால் நாளடைவில் எளிதில் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
கம்போஸ்ட் உரமாக மாற்றுதல்: பார்த்தீனியமானது பல்வேறு வகைளில் பல உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்தாலும், இதனை திறன்பட உபயோகிப்பதால், மக்கிய உரங்கள் மற்றும் மண்புழு உரம் போன்றவை தயாரிக்கலாம். குழிமுறை உரம் தயாரிப்பில் சேகரிக்கப்பட்ட பார்த்தீனியச் செடிகளை சிறு துண்டுகளாக வெட்டி, குழிக்குள் இட்டு அதன்மேல் சாணக் கரைசல் மற்றும் யூரியாவைத் தெளித்து பின்னர் அந்தக் குவியலை மண் கரைசல் கொண்டு மூடிவிட வேண்டும்.
50-60 நாள்களில் மக்கிய உரங்கள் தயாராகிவிடும். இவ்வாறு செய்வதன் மூலமாக தீங்கு விளைவிக்கும் களைச் செடியையும் நன்மை தரும் உரமாக மாற்றலாம்.
மேற்காணும் முறைகளை கையாண்டு பார்த்தீனிய களைகளைக் கட்டுப்படுத்துவதோடு அதனை நல்வழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
Link to comment
Share on other sites

பார்த்தீனியச் செடிகளை உரமாக மாற்றுவதே காலத்தின் தேவை.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.