Jump to content

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

மீனா தேவராஜன்

vegan.jpg

மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன.

பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. மேலும் அப்படி வந்தவர்களில் சிலர் இங்கேயே தங்கி நம் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டவர்களுமுண்டு. எனவே உணவுப் பழக்க வழக்கங்கள் பல கலந்து விட்டன என்றே கூறலாம்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரீஸ் நாட்டு அலெக்ஸாண்டர் வந்தவர், நம் நாட்டுச் சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லவில்லையா?

பின் வந்த முகமதியர்களின் தாக்கத்தால் தென்னிந்தியாவைவிட வட இந்தியாவின் பழக்க வழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன என்று வரலாற்றின் வழி நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்திய உணவாகக் கருதப்படும் பிரியாணி எங்கிருந்து வந்தது? பூண்டின் பயன்பாட்டை நாம் கற்றுக் கொண்டது எப்படி? அதே போன்று சைவ அசைவ உணவுப் பழக்கங்கள் வந்திருக்கக்கூடும் அல்லவா?.

ஆங்கில நாட்டுப் பழக்கங்களை நம்மில் பலர் இந்தியாவில் கைகொண்டுள்ளனர். அதுதான் சிறந்த நாகரீகம் என்று கருதுவோரும் உண்டு. அவர்கள் போல் உணவு உண்பது. அதாவது முள் கரண்டி, கரண்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது. தட்டுகளில் சாப்பிடுவது, தண்ணீருக்குப் பதில் கோக்கொலா குடிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவர்கள் நாடு குளிர் மிகுந்த நாடு. கைகளில் அணியப்பட்டிருக்கும் கையுறையைக் கழற்றினால் குளிர் தாங்காது, கையால் சாப்பிட்டால் கை கழுவ முடியாது. அது அந்த நாட்டுச் சூழல். இப்போது நம் நாட்டிலிருந்து அங்கு போய் வாழும் மக்கள் அந்தப் பழக்கங்களைப் பினபற்றினால் தப்பில்லை, ஏனென்றால் ரோம் நகரில் வாழ்ந்தால் ரோமாபுரியனைப் போல்தான் வாழ வேண்டும். இல்லையென்றால் அந்நாட்டு இயற்கைச் சூழல் நம்மைப் பாதிக்கும் அல்லவா?

மேலை நாட்டில் உள்ளவர்கள் உணவில் அதிக வெண்ணெய் பாலாடைக்கட்டி ஆகியவற்றை உண்பார்கள். அவை அவர்களை குளிரிலிருந்து காக்கும். அது அவர்களுக்கு மது பானமும் தேவை. ஆனால் நம் இந்தியா வெப்பமுடைய நாடு இத்தகைய சூழலுக்கு அவை தேவையா?

ஒவ்வொரு நாட்டில் கிடைப்பவைதான் அந்நாட்டு மக்களுக்குரிய உணவாக இருந்து வந்திருக்கின்றன. அக்காலத்தில் சார்ஸ் நோயும் எச்1எம்1 நோயும் ஏற்படவில்லை. கோழிக் கறி கிடைக்காவிட்டாலும் பிற நாடுக்களிலிருந்து இறக்குமதி செய்து உலகளாவிய வணிப முறை இப்போது வந்துவிட்டது? மேலும் அபரிதமான செல்வச் செழிப்பும் வளர்ந்து விட்டது. அதாவது பணத்தைக் கொண்டு வாங்கும் திறன் (purchasing power of money) வளர்ந்து விட்டது. எனவே எனக்கு விருப்பமுள்ளவற்றை நான் விரும்பிச் சாப்பிடுகிறேன் என்ற நிலை உருவாகி விட்டது.

இந்துக்களும்பன்றிக்கறியைதவிர்க்கக்காரணம் அவர்கள் இந்துகள் அவர்கள் இந்து மதக் கொள்கையைப் பின் பற்றுகிறார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பன்றிக்கறியைச் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் பின்பற்றும் மதக் கொள்கை. இது தனி மனித சுதந்திரம்.

அன்று கண்ணப்பர் சிவனுக்கு மாமிசம் படைத்தார் என்றால் அன்று கண்ணப்பர் வேட்டுவத் தொழிலைச் செய்தார். எனவே தான் உண்ணும் உணவை அன்பினால் ஆண்டவனுக்குக் கொடுத்தார். சிவச்சாரியார் பழங்கள் பூக்கள் ஆகியவற்றைப் படைத்து மகிழ்ந்தார்.

கோயில்களில் சைவ உணவு படைக்கப்படுகிறது ஏன் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு ஏற்பட்டு உள்ளது. கோயில் என்பது வழிபாட்டு இடம் எந்த மதத்தவருக்கும் இது பொருந்தும். மேலும் அது பலர் கூடும் இடம் . அவ்விடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. அசைவ உணவுகளை அவ்விடங்களில் பயன்படுத்தினால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு. ஆடு, மாடு, கோழி ஆகியவற்றிலிருந்தும் தொற்ற நோய் பரவ வாய்ப்பு உண்டு என்பதால் பொது இடங்களில் அசைவ உணவு பயன்படுத்தப்படாமலிருந்திருக்கலாம். அவ்விடங்களில் தூர்நாற்றமும் ஏற்படக்கூடும். அவ்விடங்களைச் சுத்தம் செய்வதும் சிரமம்.

இங்கு நான் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். நாம் ஆடைகள் அணியும் முறை மேலைநாட்டுப் பாணியில்தான். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வேட்டி அணிவோருக்குத் தடை என்ற அறிவுப்புதான். இதில் பண்பாட்டுச் சிக்கலுள்ளதா?

அன்று பழைய பாடல் ஒன்று சொல்கிறது, “ உண்பவை நாழி உடுப்பவை இரண்டே!” என்று . இது இன்றும் எல்லா நாட்டிற்கும் பொருந்தும். ஒரு கால் சட்டை, ஒரு மேல் சட்டை, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் சில இடங்களில் நாம் ஏன் மேலைநாட்டவரின் உடைகளைக் கட்டாயப்படுத்த வேண்டும்? இது நாம் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

உதாரணமாக பள்ளிச் சீருடையை எடுத்துக் கொள்வோம். அல்லது அலுவலகத்திற்குப் போகும் அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். பாண்ட், சட்டை சரி ! அதற்கு மேலாக பூட்ஸ் தினப்படி தேவையா? அது கூட காலணி என்பது கல்லும் முள்ளும் குத்தாமலிருக்க பாதுகாப்பு, அதற்குள் ஒரு காலுறை (ஸாக்ஸ்?) ஏன்? சிக்கெனப் பிடித்த காலணிக்குள் காலுறை வேறு. காற்றே புகாமல் காலணியையும் காலுறையும் மாற்றும் போது ஏற்படும் நாற்றம் தேவையா? கழுத்தைப் பிடிக்கும் டையும் நம் நாட்டிற்குத் தேவையா? வியர்வையால் சீருடை அணியும் சிறுவர்கள் தவிப்பதை நான் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். நான் முன் கூறியதைப் போல் மேலைநாட்டு வானிலைக்கு அவை அவசியம். இவை நமக்குத் தேவையா? சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். நாம் வாழும் இயற்கைச் சுழலுக்கும் நம் உடம்புக்கும் ஏற்ற பழக்கங்களைப் பின்பற்றுவதே நல்லது.

சைவமா? அசைவமா? என்பது பண்பாட்டுச் சிக்கல் அல்ல? பழக்கங்கள் மாறுவதால் ஏற்படும் சிக்கல்தான். “நீ சைவனாக இருக்க விரும்பினால் நீ இரு. நீ எவ்வழியால் இறைவனை அடைய விரும்புகிறயோ அவ்வழியில் நீ இறைவனை அடை “ என்ற முழு சுதந்திரம் உள்ளது. நமக்கு வேண்டியவற்றை நாம் அறிந்து நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவற்றை, நம் உடலுக்கு ஏற்புடையதை நாம் உண்டால் சிக்கல் ஏற்படுவதற்கு வழியில்லை. நீ வாழும் ஊரில் கிடைப்பதை நீ உன் விருப்பம் போல் உண்.” என்ற கொள்கை நமக்கு ஏற்புடையது. அவன் சாப்பிடுகிறான், நான் சாப்பிடக் கூடாதா? யாகத்தில் போடலாம், போடக் கூடாது என்பது உன் வீட்டு யாகத்தையும் உன் விருப்பத்தையும் பொருத்து”. என்ற எண்ணினால் பிரச்சினை என்பது கிடையாது. சைவஉணவுமுறைஅசைவஉணவுமுறையைவிடஎவ்விதத்திலும்உயர்ந்ததுஅல்ல, அசைவம்எவ்விதத்திலும்மக்களைதாழ்த்துவதில்லைஎனும்சூழல்சமூகத்தில்நிலவவேண்டும் என்பது நம் கைகளில்தான் உள்ளது. ஒரு தனி மனிதன் மாறினால் ஒரு குடும்பம் மாறும், ஒரு குடும்பம் மாறினால் ஒரு சமுதாயம் மாறும். ஒரு சமுதாயம் மாறினால் ஒரு நாடு மாறும்.

http://puthu.thinnai.com/?p=26069

Link to comment
Share on other sites

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

மீனா தேவராஜன்

vegan.jpg

மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன.

பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. மேலும் அப்படி வந்தவர்களில் சிலர் இங்கேயே தங்கி நம் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டவர்களுமுண்டு. எனவே உணவுப் பழக்க வழக்கங்கள் பல கலந்து விட்டன என்றே கூறலாம்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரீஸ் நாட்டு அலெக்ஸாண்டர் வந்தவர், நம் நாட்டுச் சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லவில்லையா?

பின் வந்த முகமதியர்களின் தாக்கத்தால் தென்னிந்தியாவைவிட வட இந்தியாவின் பழக்க வழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன என்று வரலாற்றின் வழி நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்திய உணவாகக் கருதப்படும் பிரியாணி எங்கிருந்து வந்தது? பூண்டின் பயன்பாட்டை நாம் கற்றுக் கொண்டது எப்படி? அதே போன்று சைவ அசைவ உணவுப் பழக்கங்கள் வந்திருக்கக்கூடும் அல்லவா?.

ஆங்கில நாட்டுப் பழக்கங்களை நம்மில் பலர் இந்தியாவில் கைகொண்டுள்ளனர். அதுதான் சிறந்த நாகரீகம் என்று கருதுவோரும் உண்டு. அவர்கள் போல் உணவு உண்பது. அதாவது முள் கரண்டி, கரண்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது. தட்டுகளில் சாப்பிடுவது, தண்ணீருக்குப் பதில் கோக்கொலா குடிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவர்கள் நாடு குளிர் மிகுந்த நாடு. கைகளில் அணியப்பட்டிருக்கும் கையுறையைக் கழற்றினால் குளிர் தாங்காது, கையால் சாப்பிட்டால் கை கழுவ முடியாது. அது அந்த நாட்டுச் சூழல். இப்போது நம் நாட்டிலிருந்து அங்கு போய் வாழும் மக்கள் அந்தப் பழக்கங்களைப் பினபற்றினால் தப்பில்லை, ஏனென்றால் ரோம் நகரில் வாழ்ந்தால் ரோமாபுரியனைப் போல்தான் வாழ வேண்டும். இல்லையென்றால் அந்நாட்டு இயற்கைச் சூழல் நம்மைப் பாதிக்கும் அல்லவா?

மேலை நாட்டில் உள்ளவர்கள் உணவில் அதிக வெண்ணெய் பாலாடைக்கட்டி ஆகியவற்றை உண்பார்கள். அவை அவர்களை குளிரிலிருந்து காக்கும். அது அவர்களுக்கு மது பானமும் தேவை. ஆனால் நம் இந்தியா வெப்பமுடைய நாடு இத்தகைய சூழலுக்கு அவை தேவையா?

ஒவ்வொரு நாட்டில் கிடைப்பவைதான் அந்நாட்டு மக்களுக்குரிய உணவாக இருந்து வந்திருக்கின்றன. அக்காலத்தில் சார்ஸ் நோயும் எச்1எம்1 நோயும் ஏற்படவில்லை. கோழிக் கறி கிடைக்காவிட்டாலும் பிற நாடுக்களிலிருந்து இறக்குமதி செய்து உலகளாவிய வணிப முறை இப்போது வந்துவிட்டது? மேலும் அபரிதமான செல்வச் செழிப்பும் வளர்ந்து விட்டது. அதாவது பணத்தைக் கொண்டு வாங்கும் திறன் (purchasing power of money) வளர்ந்து விட்டது. எனவே எனக்கு விருப்பமுள்ளவற்றை நான் விரும்பிச் சாப்பிடுகிறேன் என்ற நிலை உருவாகி விட்டது.

இந்துக்களும்பன்றிக்கறியைதவிர்க்கக்காரணம் அவர்கள் இந்துகள் அவர்கள் இந்து மதக் கொள்கையைப் பின் பற்றுகிறார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பன்றிக்கறியைச் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் பின்பற்றும் மதக் கொள்கை. இது தனி மனித சுதந்திரம்.

அன்று கண்ணப்பர் சிவனுக்கு மாமிசம் படைத்தார் என்றால் அன்று கண்ணப்பர் வேட்டுவத் தொழிலைச் செய்தார். எனவே தான் உண்ணும் உணவை அன்பினால் ஆண்டவனுக்குக் கொடுத்தார். சிவச்சாரியார் பழங்கள் பூக்கள் ஆகியவற்றைப் படைத்து மகிழ்ந்தார்.

கோயில்களில் சைவ உணவு படைக்கப்படுகிறது ஏன் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு ஏற்பட்டு உள்ளது. கோயில் என்பது வழிபாட்டு இடம் எந்த மதத்தவருக்கும் இது பொருந்தும். மேலும் அது பலர் கூடும் இடம் . அவ்விடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. அசைவ உணவுகளை அவ்விடங்களில் பயன்படுத்தினால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு. ஆடு, மாடு, கோழி ஆகியவற்றிலிருந்தும் தொற்ற நோய் பரவ வாய்ப்பு உண்டு என்பதால் பொது இடங்களில் அசைவ உணவு பயன்படுத்தப்படாமலிருந்திருக்கலாம். அவ்விடங்களில் தூர்நாற்றமும் ஏற்படக்கூடும். அவ்விடங்களைச் சுத்தம் செய்வதும் சிரமம்.

இங்கு நான் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். நாம் ஆடைகள் அணியும் முறை மேலைநாட்டுப் பாணியில்தான். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வேட்டி அணிவோருக்குத் தடை என்ற அறிவுப்புதான். இதில் பண்பாட்டுச் சிக்கலுள்ளதா?

அன்று பழைய பாடல் ஒன்று சொல்கிறது, “ உண்பவை நாழி உடுப்பவை இரண்டே!” என்று . இது இன்றும் எல்லா நாட்டிற்கும் பொருந்தும். ஒரு கால் சட்டை, ஒரு மேல் சட்டை, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் சில இடங்களில் நாம் ஏன் மேலைநாட்டவரின் உடைகளைக் கட்டாயப்படுத்த வேண்டும்? இது நாம் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

உதாரணமாக பள்ளிச் சீருடையை எடுத்துக் கொள்வோம். அல்லது அலுவலகத்திற்குப் போகும் அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். பாண்ட், சட்டை சரி ! அதற்கு மேலாக பூட்ஸ் தினப்படி தேவையா? அது கூட காலணி என்பது கல்லும் முள்ளும் குத்தாமலிருக்க பாதுகாப்பு, அதற்குள் ஒரு காலுறை (ஸாக்ஸ்?) ஏன்? சிக்கெனப் பிடித்த காலணிக்குள் காலுறை வேறு. காற்றே புகாமல் காலணியையும் காலுறையும் மாற்றும் போது ஏற்படும் நாற்றம் தேவையா? கழுத்தைப் பிடிக்கும் டையும் நம் நாட்டிற்குத் தேவையா? வியர்வையால் சீருடை அணியும் சிறுவர்கள் தவிப்பதை நான் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். நான் முன் கூறியதைப் போல் மேலைநாட்டு வானிலைக்கு அவை அவசியம். இவை நமக்குத் தேவையா? சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். நாம் வாழும் இயற்கைச் சுழலுக்கும் நம் உடம்புக்கும் ஏற்ற பழக்கங்களைப் பின்பற்றுவதே நல்லது.

சைவமா? அசைவமா? என்பது பண்பாட்டுச் சிக்கல் அல்ல? பழக்கங்கள் மாறுவதால் ஏற்படும் சிக்கல்தான். “நீ சைவனாக இருக்க விரும்பினால் நீ இரு. நீ எவ்வழியால் இறைவனை அடைய விரும்புகிறயோ அவ்வழியில் நீ இறைவனை அடை “ என்ற முழு சுதந்திரம் உள்ளது. நமக்கு வேண்டியவற்றை நாம் அறிந்து நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவற்றை, நம் உடலுக்கு ஏற்புடையதை நாம் உண்டால் சிக்கல் ஏற்படுவதற்கு வழியில்லை. நீ வாழும் ஊரில் கிடைப்பதை நீ உன் விருப்பம் போல் உண்.” என்ற கொள்கை நமக்கு ஏற்புடையது. அவன் சாப்பிடுகிறான், நான் சாப்பிடக் கூடாதா? யாகத்தில் போடலாம், போடக் கூடாது என்பது உன் வீட்டு யாகத்தையும் உன் விருப்பத்தையும் பொருத்து”. என்ற எண்ணினால் பிரச்சினை என்பது கிடையாது. சைவஉணவுமுறைஅசைவஉணவுமுறையைவிடஎவ்விதத்திலும்உயர்ந்ததுஅல்ல, அசைவம்எவ்விதத்திலும்மக்களைதாழ்த்துவதில்லைஎனும்சூழல்சமூகத்தில்நிலவவேண்டும் என்பது நம் கைகளில்தான் உள்ளது. ஒரு தனி மனிதன் மாறினால் ஒரு குடும்பம் மாறும், ஒரு குடும்பம் மாறினால் ஒரு சமுதாயம் மாறும். ஒரு சமுதாயம் மாறினால் ஒரு நாடு மாறும்.

http://puthu.thinnai.com/?p=26069

இதை கொஞ்சம் கேளுங்களேன்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சைவர்களின் உணவும் பழக்கவழக்கங்களும்,பண்பாடுகளும் அந்த நாடுகளின் இயற்கையோடு ஒன்றிப்பிணைந்தது. அது போல் மேலைத்தேயவர்களின் உணவும் பழக்கவழங்கங்களும் காலசூழ்நிலகளுக்கேற்ப ஒன்றிணைந்துள்ளது.
 
கையால் சாப்பிடுவதை கேவலமாக  இங்கேயும்.......கோட் சூட் போட்டால் உயர்வாக அங்கேயும் பார்க்கும் கண்களில் தான் வித்தியாசங்கள்....
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.