Jump to content

கரும்பாலை ஏரியா குழந்தைகளை கரை சேர்க்கும் ‘ஸீட்’ அமைப்பு


Recommended Posts

கரும்பாலை ஏரியா குழந்தைகளை கரை சேர்க்கும் ‘ஸீட்’ அமைப்பு

 

368xNx1_2022460g.jpg.pagespeed.ic.JYHWF9

 

Nx197xkarthick_bharati_2022461g.jpg.page

கார்த்திக் பாரதி

 

‘எங்களுக்கான அதிகபட்ச ஆசை எதுவும் கிடையாது. இயலாதவர்களுக்கு எங்களின் உதவி தேவைப்படும் வரை இந்த நிறுவனம் இருக்கும். அதன் பிறகு கலைத்து விடுவோம்’ என்கிறார் ‘ஸீட்’ (SEED) நிறுவனத்தின் கார்த்திக் பாரதி.

நிறுவனம் சிறியதாக இருந்தாலும் இவர்களின் சேவை பெரியது. மதுரை கரும்பாலை ஏரியா என்பது, கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வீட்டு வேலையாட்கள் என உடல் உழைப் பாளிகளை உள்ளடக்கிய பகுதி. இங்கு வசிப்பவர்களின் குழந்தை களை பள்ளிக்கு படிக்க அனுப்பு வதே பெரிய காரியம் என்ற நிலையை மாற்றி, இப்போது இங்கே பிஹெச்.டி. மாணவர்கள் வரை உருவாகி இருக்கிறார்கள். இதற்கு மூலகாரணம் கார்த்திக் பாரதி.

இவரும் ஒரு கட்டிடத் தொழிலாளியின் மகன்தான். பகுதி நேரமாய் வேலை பார்த்துக் கொண்டே பள்ளிப் படிப்பை முடித்தவர், 1989-களில் அறிவொளி இயக்கத் தொண்டராக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பட்டப் படிப்புக்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அடி எடுத்து வைத்ததும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 40 பேரை சேர்த்துக் கொண்டு கரும்பாலை ஏரியாவில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை நேர பயிற்சி வகுப்பு நடத்த ஆரம்பித்தார் கார்த்திக் பாரதி. கல்லூரிப் படிப்பை முடித்தபோது ‘சிறந்த என்.எஸ்.எஸ். தன்னார் வலர்’என்ற விருதை இவருக்கு வழங்கியது தமிழக அரசு.

கல்லூரிப் படிப்பை கார்த்திக் முடித்துவிட்டதால், தொடர்ந்து மாலை நேரப் பயிற்சி வகுப்பு நடக்குமா என்ற கேள்வி குழந்தை களிடையே எழுந்தது. அப்புறம் என்ன நடந்தது? அதை கார்த்திக் பாரதியே விவரிக்கிறார்..

பல வருடங்களாக இந்தக் குழந் தைகளோடு இருந்ததால், படிப்பை முடித்ததும் அவர்களை அப்படியே விட்டுவிட்டுப் போக மனமில்லை. இந்தக் குழந்தைகள் எல்லாருமே அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். இவர்களுக்கு தகுந்த கல்விச் சூழலை உருவாக்குவதற்காகவும் படிப்புடன் வாழ்வியல் கல்வியை கொடுப்பதற்காகவும் ‘ஸீட்’ என்ற அமைப்பை தொடங்கினோம்.

ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்காக ‘வாண்டுகள் அரங்கம்’, 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்காக ‘வேர்கள் அரங்கம்’, 9 முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்காக ‘கனவுகள் அரங்கம்’, கல்லூரி மாணவர் களுக்காக ‘தேடல் அரங்கம்’ என கரும்பாலையில் நான்கு மையங்களை உருவாக்கினோம். இந்த மையங்களில் இப்போது 200 பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக 25 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.

இங்கே படிப்பவர்கள் பிளஸ் 2 முடித்ததும் அவர்களும் தன்னார் வலர்களாக மாறிவிடுவர். இவர் களுக்குள் ‘குழந்தைகள் பேரவை’ என்ற அமைப்பு இருக்கிறது. வார இறுதியில் பேரவைக் குழந்தைகள் கூடிப் பேசி விவாதம் நடத்துவர். முடிவில், நாங்கள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என அறிக்கை தருவார்கள். மேலும் தங்களது எண்ணங்களை பிரதிபலிப்பதற்காக ‘புதுயுகம்’ என்ற ஆண்டு இதழையும் நடத்துகிறார்கள்.

இவர்களிடம் சேமிப்புப் பழக் கத்தை ஊக்குவிப்பதற்காக ’தேன் கூடு குழந்தைகள் வங்கி’ என்ற வங்கியை வைத்திருக்கிறோம். தங்களுக்குக் கிடைக்கும் பாக்கெட் மணியை இந்த வங்கியில் செலுத்து வார்கள். வருடக் கடைசியில் 20 சதவீத வட்டியுடன் அதை அவர்களுக்கு திருப்பிக் கொடுப் போம். அதைக் கொண்டு அடுத்த ஆண்டுக்கான படிப்புச் செலவுகளை பார்த்துக் கொள்வார்கள். இது மட்டுமல்லாமல் கலை, மருத்துவம், விளையாட்டு என்று தனித்தனியாக கிளப்களையும் வைத்திருக்கிறோம்.

இவற்றின் மூலம் தனியார் பள்ளிகளில் கொடுக்கப்படும் அத்தனை பயிற்சிகளையும் இந்தக் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் இந்தப் பணிகளுக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. எங்கள் கரும்பாலை பகுதியிலிருந்து 25 ஆசிரியர்கள், 3 வக்கீல்கள், 20 பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். நிறைய பேர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த ஆண்டு முதல் முறையாக 2 பேர் பிஹெச்.டி. பண்ணுகிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே முதல் தலை முறை பட்டதாரிகள் என்பது முக்கிய மான விஷயம்.. பெருமிதத்துடன் சொன்னார் கார்த்திக் பாரதி.

 

http://tamil.thehind...e?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.