Jump to content

மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரியாதை.. அடி உதை எல்லாம் நடந்து கொள்ளுற மாதிரில தான் இருக்குது.

 

யாரும்.. சும்மா ஆக்களுக்கு அடிக்கமாட்டார்கள். பள்ளியில்.. வீட்டில் யாராவது சும்மா தண்டிக்கனமா..??! இல்லை இல்ல.

 

ஆணோ.. பெண்ணோ.. சரியான நடத்தையை சரியான இடத்தில் காண்பிக்கும் போது.. எதுக்கு கை கால் நீளப் போகுது...??!

 

வீட்டு வன்முறை என்பது வெறுமனவே பெண்கள் மீது என்ற பிலிம் காட்டல் இப்போது அவ்வளவாக எடுபடுவதில்லை. இரு பாலாரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கணவர்கள் மீது பல்வேறு வடிவங்களிலும் தாக்கும் மனைவியர் குறித்தும்.. நாம் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம்..! :icon_idea::)

 

உங்களைக் கொண்டுபோய் எங்கள் ஊர் மார்க்கண்டு வாத்தியிடம் விடவேண்டும் சும்மா அடிப்பது எது என்பதைக் காட்ட. எத்தனை படித்ததாகக் கூறும் நீங்கள் ஆண்களின் சைக்கோத்தனம் பற்றி மட்டும் அறியவில்லை என்பதைப் பார்க்க நீங்கள் இன்னும் நிறையப் படிக்க வேண்டி உள்ளது என்று தெரிகிறது நெடுக்ஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கடல் அலைக்கு கரை என்று ஆனபின் ..... அடிக்காதே என்றால் எப்படி?
அதற்காக கை  நீட்டி எல்லாம் அடிக்க கூடாது .

 

 

பெண்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற துணிவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் கணவனை ஏவுகிறாள் என்றால் அந்தக் கணவன் ஒன்றில் பேயனாக இருப்பான் அல்லது பெண்ணின் சிற்றின்பத்தில் மூழ்கி வெளிவர முடியாதவனாக இருப்பான். அப்படியானவனுக்குத் தண்டனைதான் ஆண்குலங்கள் கூறிக்கொள்வது. ஆண் ஆனாய் இருந்து ஆளுமையுடன் ஆரம்பத்திலிருந்தே செயல்ப்பட்டால் ஏன் இத்தனையும். பெண்ணின் பெற்றோரைக் கூப்பிடும்படி வற்புறுத்தினால் நீ வேலைக்குச் சென்று கூப்பிடு என்று சொல்வதற்கும் செயற்படுத்துவதற்கும் துணிவு இல்லை எனில் அவன் என்ன ஆண் ????ரதி கூறுவது போல தம்மை மனைவிமுன் பெரிய ஆளாகக் காட்ட சில மடையர்கள் கடன் வாங்கி ஆலவட்டம் பிடிப்பார்கள். அவர்களை மீட்ட்கக் கடவுளே வந்தாலும் முடியாது. என்ன தான் சொன்னாலும் கை நீட்டிப் பெண்ணை அடிப்பவன் பேடிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இல்லை,
 
ஆனால் மனைவியும் கணவனின் மனசிற்கு ஏற்றவாறு அனுசரித்து நடக்கவேண்டும்.   
 
பி;கு: சண்டை போடும் குடும்பங்களுக்குத்தான் குழந்தைகள் அதிகம்.  :D
Link to comment
Share on other sites

ஒரு பெண் கணவனை ஏவுகிறாள் என்றால் அந்தக் கணவன் ஒன்றில் பேயனாக இருப்பான் அல்லது பெண்ணின் சிற்றின்பத்தில் மூழ்கி வெளிவர முடியாதவனாக இருப்பான். அப்படியானவனுக்குத் தண்டனைதான் ஆண்குலங்கள் கூறிக்கொள்வது. ஆண் ஆனாய் இருந்து ஆளுமையுடன் ஆரம்பத்திலிருந்தே செயல்ப்பட்டால் ஏன் இத்தனையும். பெண்ணின் பெற்றோரைக் கூப்பிடும்படி வற்புறுத்தினால் நீ வேலைக்குச் சென்று கூப்பிடு என்று சொல்வதற்கும் செயற்படுத்துவதற்கும் துணிவு இல்லை எனில் அவன் என்ன ஆண் ????ரதி கூறுவது போல தம்மை மனைவிமுன் பெரிய ஆளாகக் காட்ட சில மடையர்கள் கடன் வாங்கி ஆலவட்டம் பிடிப்பார்கள். அவர்களை மீட்ட்கக் கடவுளே வந்தாலும் முடியாது. என்ன தான் சொன்னாலும் கை நீட்டிப் பெண்ணை அடிப்பவன் பேடிதான்.

 

இக்கருத்து ஒருவிதத்தில் ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கின்றது.

 

ஆண் என்றால் ஒருவித ஆழுமையுடன் கம்பீரத்துடன் பெண்ணை ஆழத்தெரிந்தவனாக இருக்வேணும் என்று இக்கருத்து உள்ளது.

 

மேலும் கருத்தளவில் இவ்வாறு எழுதலாம். ஆனால் நடைமுறையில் குடும்பங்களுக்குள் இது ஒரு உளவியல் போராட்டமாகவே இருக்கின்றது. மனைவி முகதை தூக்கிவைத்திருக்கும் பேதே வீட்டுக்குள் சாதாரண இயல்புநிலை குழம்பிவிடுகின்றது. குழந்தைகள் இயல்பு பாதிக்கப்படுகின்றது.  

 

அதே நேரம் மனைவியன் குடும்பம் வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும் போது மனைவியாலும் சந்தோசமாக இருக்க முடியாது. மனைவி கவலைப்படும் போது அதை இருவரும் சரிசெய்வதும் இயற்கையானது. இவைகள் அந்தந்த குடும்ங்களின் உள்ளகமான உளவியல் பிரச்சனை. 

 

எமது சமுதாயத்தில் எமக்காக நாம் வாழுதல் என்ற புரிதல் மிக அவசியமாக உள்ளது. குடும்பத்துக்குள் பிறரின் தலையீடுகள் மிக மோசமாக உள்ளது. பிறரின் தலையீடுகளுக்குப் பலியாகுதல் மோசமாக உள்ளது. வழக்கங்கள் பழக்கவழக்கங்கள் கலாச்சாரங்கள் என்ற போர்வையில் பல பிரச்சனைகள் உருவாகின்றது. எனவேதான் இவை ஆண்பெண் என்ற பேதங்களுக்க அப்பால் அணுகப்படவேணும் என்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

சுகன் நான் ஆண்கள் மட்டும் தான் குற்றவாளிகள்.பெண்கள் எல்லோரும் சுத்த தங்கம் என சொல்ல வரவில்லை. உங்களைப் பொறுத்த பெண்கள் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து தாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்டு ஆசைப்படினம்.மனைவி ஆசைப்பட்டு விட்டார் என்பதற்காக கணவர் இரு வேலைக்கு போகிறார்.அதுவும் உண்மை தான்.அப்படியும் நடக்குது தான். இல்லை என சொல்லவில்லை.ஆனால் என் கேள்வி என்ன என்டால் மனைவி தான் பக்கத்து வீட்டைப் பார்த்து அது,இது என ஆசைப்பட்டால் அந்த கணவருக்கு எங்கே போச்சுது அறிவு?...ஏன் மனைவிக்கு எடுத்து சொல்ல அவரால் முடியவில்லை?...மனைவி சொல்லி விட்டார் என்பதற்காக கணவர் கண்ணை மூடிக் கொண்டு செய்ய வேண்டும் என்று இல்லைத் தானே!

இதற்கெல்லாம் ஆரம்பம் எங்கே தெரியுமா?...ஒரு ஆண் தனது திருமணத்திற்கு முன் தனது தகுதிக்கும் மீறி உழைச்சு,கடன் பட்டு பெற்றோருக்கும்,சகோதரங்களுக்கும் கொடுக்கிறது.பின்னர் தான் திருமணம் செய்யும் போது தன்னுடைய உண்மை நிலையைச் சொல்லி கட்டாமல்,பொய் சொல்லுறது.பின்னர் அதற்காக மாடாய் உழைக்கிறது.அதை விட முதலிலே எல்லோருக்கும் உண்மை நிலையை சொல்லி,அவருடைய தகுதிக்கு இவ்வளவு தான் உழைக்க முடியும் என சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சனை குடும்பத்தில் வராது அல்லவா.ஆண்கள் எப்போதும் தங்களை மற்றவர் புகழ வேண்டும் என ஆசை.இப்படியான ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மை என நினைக்கிறேன்.தாங்கள் மற்றவனை காட்டில் அதிகமாக உழைக்க வேண்டும்.இல்ல்லா விட்டால் மதிக்க மாட்டார்கள் என தாயிலிருந்து,மனைவி,மகளுக்கும் பயப்படுவது.அதே நேரத்தில் பெண்களும் ஆண்கள் உழைக்கா விட்டால் மட்டம் தட்டுவதும் நடக்கின்றது. இதே நேரத்தில் ஆண்கள் ஒரே வேலை,வேலை எனத் திரிவதால் தனியே குழந்தைகளை கவனிக்க முடியாமல் பிள்ளைகளைக் கொண்டு விட்டு தாங்களும் தற்கொலை செய்யும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

திருமணம் செய்யேக்குள்ளேய்யே இருவரும் கதைத்துப் உண்மை பேசி,உண்மையாய் குடும்பம் நடத்தினால் ஒரு பிரச்சனையும் இருக்காது

 

நீங்கள் சொல்லும் பிரச்சனையும் மறுப்பதற்கில்லை. பல பிரச்சனைகள் அவ்வாறும் இருக்கின்றது.

 

இரண்டு மூன்று பெண் சகோதரங்களை கொண்ட ஒரு ஆண் அவர்களை கரையேற்றவென சீதணத்துக்காக உழைக்கின்றான் பின்னர் அவனின் உழைப்பு என்னுமொரு ஆணுக்கு சீதனமாகப் போகின்றது. தந்தையின் உழைப்பு என்னுமொரு ஆணுக்கு சீதனமாகப்போகின்றது. இதில் பெரும்பான்மை ஆண் உழைப்பை ஆணே சுரண்டும் நிலைதான். இதை பெண்ணியத்தால் அணுகுவது எவ்வளவு தூரம் தீர்வு என்பது எப்போதும் கேள்விக்குறியே. மேலும் பேரம் பேசும் தரப்பில் ஆணைப்பெற்ற தாயே முன்னணியில் பலவிடங்களில் முன்னணியில் நிற்கின்றார். இவைள் எல்லாம் ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் என்பதைக் கடந்து அறிவுபூர்வமாக அணுகப்படவேண்டியது.

 

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் எதுவும் மறுப்பதற்கில்லை. பெண்களும் பதிக்கப்படுகின்றார்கள். அதே நேரம் ஆண்களும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே ஆண் பெண் என்ற பேதங்களை கடந்து இவற்றை அணுகும் அறிவுசார் தன்மையே அவசியமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் கணவனை ஏவுகிறாள் என்றால் அந்தக் கணவன் ஒன்றில் பேயனாக இருப்பான் அல்லது பெண்ணின் சிற்றின்பத்தில் மூழ்கி வெளிவர முடியாதவனாக இருப்பான். அப்படியானவனுக்குத் தண்டனைதான் ஆண்குலங்கள் கூறிக்கொள்வது. ஆண் ஆனாய் இருந்து ஆளுமையுடன் ஆரம்பத்திலிருந்தே செயல்ப்பட்டால் ஏன் இத்தனையும். பெண்ணின் பெற்றோரைக் கூப்பிடும்படி வற்புறுத்தினால் நீ வேலைக்குச் சென்று கூப்பிடு என்று சொல்வதற்கும் செயற்படுத்துவதற்கும் துணிவு இல்லை எனில் அவன் என்ன ஆண் ????ரதி கூறுவது போல தம்மை மனைவிமுன் பெரிய ஆளாகக் காட்ட சில மடையர்கள் கடன் வாங்கி ஆலவட்டம் பிடிப்பார்கள். அவர்களை மீட்ட்கக் கடவுளே வந்தாலும் முடியாது. என்ன தான் சொன்னாலும் கை நீட்டிப் பெண்ணை அடிப்பவன் பேடிதான்.

 

அக்கா நீங்களும் ஒரு குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு இப்படி எழுந்தமான கருத்தை பகிர்வது ஏதோ மாதிரி இருக்கிறது..ஆண்களை பேடி நிலைக்கு கொண்டு வருவது யாரு ஒரு பெண் தானே...

எத்தனையோ  இடங்களில் வீட்டில் உள்ளவர்களின் முகத்தை நாட்கணக்காக காணாமல் வேலை,வேலை என்று ஓடுப் பட்டு திரிபவர்களும் இன்றும் இருக்கிறார்கள்....ஒரு கிழமைக்கு ஒருக்கா வீட்டுக்குப் போனாலும் ஏன் வந்தனீர்.....என்று தொடங்கி திரும்ப வேலைக்கு கலைக்கிற மனைவிமாரும் இருக்கீனம்..காரணம் தங்களின் சுதந்திரம் பறி போய் விடக் கூடாது என்ற சுய நலம்.வீட்டில் இருக்க கிடைக்கும் சொற்ப நேரத்திற்குள்ளும் ஏதாவது ஒன்றை சொல்லி எரிச்சலூட்டி குடும்பத்திற்குள் சண்டையை ஏற்படுத்துபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்...

எல்லா இடத்திலும் ஆண், பெண்ணில் மோகம் கொண்டு அவர்களை சொல்வதையே கேட்டுட்டு இருக்க மாட்டார்கள்.. ஏன் நீங்களே அறிந்திருப்பீர்கள்.சந்தர்ப்பம் சூழ் நிலை திருமணம் செய்ததும் உடன் வேலைக்கு அனுப்ப முடியாதவர்களாக இருப்பார்கள்,பிள்ளைகள் பிறந்ததும் பராமரிக்க ஆள் இல்லாத போது பிள்ளைகளை பராமிக்கும் பெரும் பங்கு யாரை சார்ந்தது..அது தானே வளரட்டும் என்று விட்டுட்டு பெண்கள் வேலைக்கு போக முடியுமா.....???

இப்படியான சந்தர்பங்களில் தான் இரண்டு,மூன்று வேலை செய்தாவது கஸ்ரமான நிலையில் இருந்து இலகுவான வாழ்க்கைக்கு வர முயற்சிக்கிறார்கள்.இவ்வாறன கல கட்டத்திற்குள் தான் பெண்கள் தங்கள் சுய ரூபத்தை காட்டத் தொடங்குகிறார்கள்...

சாதரணமாக ஏன் இப்படி ஓடித் திரியனும்,உன் அப்பா,அம்மா சகோதரத்திடம் போய் வாங்கிட்டு வாவன் என்று கேட்டு ஆய்க்கினைப்படுத்திற பெண்கள் எத்தினை பேர் இருக்கினம் தெரியுமா.......?இப்படியான நேரங்களில் தான் குடும்பத்திற்குள் பிரச்சனைகள் ஏற்படுகிறது..யார் எப்படிப் போனாலும் பறவா இல்ல தங்கள் சுய தேவைகள்  தீர்ந்தால் சரி  என்ற நினைப்பே சில பெண்கள் மத்தியில் இருக்கிறது.....சில இடங்களில் மனைவி மட்டும் ஆண்களை  ஆய்க்கினைப்  படுத்துவது அல்ல,கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் பெண் பிள்ளைகளும் சேர்ந்தே தந்தையை ஆய்க்கினைப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.விதி விலக்காக குழந்தைப் பிள்ளைகள் உள்ள குடும்பம் என்றால் அவர்கள் கதை சொல்லி வேலை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு கேள்வி. உங்களின் ஆண் சகோதரங்கள் யாராவது திருமணம் ஆகி இருக்கிறார்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி கோவிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு கேள்வி. உங்களின் ஆண் சகோதரங்கள் யாராவது திருமணம் ஆகி இருக்கிறார்களா

 

ஆம் அனைவருமே திருமணம் செய்து விட்டார்கள்..

Link to comment
Share on other sites

ஆணிலும் பெண்மை உண்டு.  பெண்ணிலும் ஆண்மை உண்டு.   ஆண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும் பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறை இப்போது செல்லாது.  இது மிகவும் அபத்தமான விடயமாகவே நான் பார்க்கிறேன்.  அதேபோல், கையை நீட்டுவது என்பது ஒருவரின் இயலாமைத்தன்மையாகவே நான் பார்க்கிறேன்.  ஒன்றாக வாழ்ந்து கொண்டு சண்டைகளைப் பிடித்து பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கச் செய்வதைவிட இவர்கள் பிரிந்து வாழ்வதே சிறந்தது.  இவ்வாறான வன்முறைக் குடும்பத்தில் வளரும் பிள்ளைகளும் எதிர்காலத்தில் வன்முறை செய்பவர்களாகவே உருவெடுக்கிறார்கள். 

 

ஒரு பெண், பொருளாதார ரீதியாக ஆணை நம்பியிருக்கும் குடும்பங்களிலேயே இவ்வாறான பிரச்சனைகள் அதிகம் உருவெடுக்கின்றன.  பெண்களை (மனைவிமாரை) வேலைக்கு அனுப்புவது அவமானம் என நினைத்துப் பல ஆண்கள் பெண்களை வேலைக்கு அனுப்புவதில்லை.  இது பெண்களின் சுதந்திரத்தினைப் பாதிப்பதால் சில வருடங்களில் மனஅழுத்தத்திற்குள்ளாகின்றார்கள்.  அப்போதுதான் இவ்வாறான பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.    ஆணின் மனஅழுத்தத்தைவிட, வீட்டிற்குள் வாழும் பெண்ணின் மனஅழுத்தம் மிகவும் பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது. 

 

ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் இவ்வாறான பிரச்சனைகள் வருவது குறைவு.  பெண்கள் வேலைக்குச் செல்வதால் அதன் அழுத்தம் புரிவதோடு பொருளாதாரம் பற்றிய அறிவும் இருக்கும்.  இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களிலும் புரிந்துணர்வு மற்றும் கல்வியறிவு குறைந்தவர்களின் குடும்பங்களிலேயே இவ்வாறான பிரச்சனைகள் வருவதுண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.