Jump to content

என்ன பாட்டு போட? (இசை புதிர்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசையால் வசமாகா இதயம் எது?

என் பருவத்தின் அங்கீகாரமே இளயராஜா இசை மட்டுமே என்பேன்.

அன்று; முதல் முறை கேட்டபோது உள்ளுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒன்று... இன்றும் கூடவே தொடர்ந்து வருகிறதே.

என்னை போலவே நீங்களும் மூழ்கி திளைத்த பாடல்களின் குட்டி குட்டி இசை ஹைக்கு வடிவங்கள் உங்கள்  ஞாபக திறனை சுவாரஸ்யமாக சற்றே தட்டிப்பார்க்க இதோ.

 

பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள்.

 

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள்.

 

https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z

 

 

என் மன ஓட்டம்:

 

"இப்படி மொட்டையாக ஒரு மொக்கை பாட்டின் இசையை இணைத்துக் கேட்டால் எப்படி? :huh:

ஏதாவது க்ளு சொல்லுங்கள், முயற்சிக்கலாம்..!" :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றினிலே வரும் கீதம்

 

Link to comment
Share on other sites

தாழம்பூவே.. வாசம் வீசு..

3 வினாடிகள்.. :D

Link to comment
Share on other sites

இந்தப் பாடலில் எனக்கு மிகப்பிடித்த பகுதி என்றால் சரணங்களை அவர் முடித்து வைக்கும் அந்த மெட்டு..

நெஞ்சத்திலே ஊஞ்சல்கட்டி..

ஆரிரரோ பாடவோ..

இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் யாரோ தாலாட்டுவது போலவே இருக்கும்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மன ஓட்டம்:

 

"இப்படி மொட்டையாக ஒரு மொக்கை பாட்டின் இசையை இணைத்துக் கேட்டால் எப்படி? :huh:

ஏதாவது க்ளு சொல்லுங்கள், முயற்சிக்கலாம்..!" :rolleyes:

 

வணக்கம் வன்னியன்.

பாடல்களின் இடையில் வரும் இசை வடிவங்கள் மட்டுமே இங்கு தரப்படும்.

உங்கள்  ஞாபக திறனை  சற்றே தட்டிப் பார்த்து பாடலை கண்டு  பிடியுங்கள்.

நம்ம இசை கலைஞன் போல ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலில் எனக்கு மிகப்பிடித்த பகுதி என்றால் சரணங்களை அவர் முடித்து வைக்கும் அந்த மெட்டு..

நெஞ்சத்திலே ஊஞ்சல்கட்டி..

ஆரிரரோ பாடவோ..

இதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் யாரோ தாலாட்டுவது போலவே இருக்கும்.. :wub::D

 

வணக்கம் இசை கலைஞன் ... உங்கள் திறமைக்கு  நான் கொஞ்சம் கஷ்டமான பாடல்கள் தான் கொண்டு வர வேணும் ..

உங்கள் பதில் சரி. பாடல்: "தாழம் பூவே ... வாசம் வீசு" 

காற்றினிலே வரும் கீதம்

வணக்கம் மெசொ அக்கா,

நீங்கள் கூறும் பாடலிலும் இதே போன்ற உணர்வோடு இசை இருக்கும். நீங்கள் கூறியதன் பின்னர் தான் நானும் அப்படி ஒன்றை உணர்கிறேன். அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

ஆகாய கங்கை.. ( 2 வினாடிகள்..) :D

Link to comment
Share on other sites

ஆகாய கங்கை.. ( 2 வினாடிகள்..) :D

 

நான் நம்ப மாட்டன்... நைசா முழுக்க கேட்டுட்டு இப்படி எல்லாம் அலப்பறை செய்யக் கூடாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை தருமோ என் மேகம்...... :D

Link to comment
Share on other sites

How you are embedding the HTML code here? :o

 

Could you explain pl ?

முதலில் யாழ்வாலிக்கு நன்றி.. :D

1)[ sc5 ]

2)audioclip identifier, embed கோடிங் இல் உள்ள பெரிய இலக்கம் ஒன்று..

3)[ /sc5 ]

1 + 2 + 3 = பாடல் :D

நான் நம்ப மாட்டன்... நைசா முழுக்க கேட்டுட்டு இப்படி எல்லாம் அலப்பறை செய்யக் கூடாது :lol:

உண்மையில் ஒரு செக்கன் தான் எடுத்தது..  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது இசைப்புதிர்.

வணக்கம் கறுப்பி,

உங்களின் வரவில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், நீங்களும் சேர்ந்து கலக்குங்கள்...

[ sc5 ]144263766[ /sc5 ]

https://soundcloud.com/write2ravi/2014-04-10-224531/s-Dc943

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் உன்னை நான்........ :D

Link to comment
Share on other sites

ஏதோ நினைவுகள்.. :D ( 6 வினாடிகள் :huh: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் உன்னை நான்........ :D

 

நிலா ...கொஞ்சம் அவசரப் பட்டு விட்டீர்களோ...

இசை..  மீண்டும் ஒரு முறை சரியாக அனுமானித்துள்ளார்... :)

ஏதோ நினைவுகள்.. :D ( 6 வினாடிகள் :huh: )

இசை..  மீண்டும் ஒரு முறை சரியாக அனுமானித்துள்ளார்...

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உங்களுக்கான அடுத்த இசை.

இந்துஸ்தானி "கஸல்" வடிவில் உருவாக்கப்பட்ட பாடல்.

https://soundcloud.com/write2ravi/2014-04-10-230226

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உங்களுக்கான அடுத்த இசை.

இந்துஸ்தானி "கஸல்" வடிவில் உருவாக்கப்பட்ட பாடல்.

https://soundcloud.com/write2ravi/2014-04-10-230226

 

"மேகமே மேகமே பால் நிலா காயுதே...

தேகமே தேயினும் தேன் ஒளி வீசுதே..."

Link to comment
Share on other sites

மேகமே.. மேகமேதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இணையத்திலும் இப்படி போட்டி வைக்கலாமா? சுவார்சியமாக இருக்கிறது தொடருங்கள் சசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இணையத்திலும் இப்படி போட்டி வைக்கலாமா? சுவார்சியமாக இருக்கிறது தொடருங்கள் சசி

இதே போட்டியை ஏற்கனவே ஈசன் கடந்த 2013 யூலை 15 இல் "பாடலைக் கண்டுபிடியுங்கள்" என்று தொடங்கியிருந்தார். பின்னர் ஏதோ காரணத்தினால் நிறுத்திவிட்டிருந்தார். நான் எனக்கு நேரம் கிடைத்த சந்தர்ப்பங்களில் பாடல்கள் MP3 வடிவில் இணைத்திருந்தேன். மொத்தத்தில் யாழுக்கு இது ஒரு புது முயற்சியல்ல.

 

பாடலைக் கண்டுபிடியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125529

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

 

எல்லோருமே சரியாகவே பாடலை கண்டுபிடித்து எழுதி உள்ளீர்கள்.

வன்னியன், கறுப்பி, இசைக்கலைஞன், வாலி.

உங்கள் கருத்திற்கு நன்றி சகாறா அக்கா. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

பூங்கை அண்ணா உங்களை காண்பதிலும் மகிழ்ச்சி.

வாலி அண்ணா - உங்கள் இணைப்பிற்கு நன்றிகள். முன்னர் இருந்த போட்டியை நான் கவனிக்கவில்லை.

இது சுவராஸ்யமாக எல்லோரையும் சந்தோசப் படுத்துமேயானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.