Jump to content

காமத்துப்பால்


Recommended Posts

தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய்,

தளர்வதற்காய்த் தள்ளாடும்...

தேகங்களின் தேடல்களுக்கு,

இடுக்களில் வடிந்தோடும் - மன்மத

நீரில் நீந்தியபடியே...

உயிர் பிரியும் போராட்டம்!!!

பதின்மங்களில் பெற்றதை

பலமுறை பழகிப் பார்க்க,

தவறிய சந்தர்ப்பங்களை...

இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய்

பயின்றிடத் துடிக்குது,

நெஞ்சம் - கொஞ்சம்!

ஆனாலும் பக்கத்தில் இல்லையே...

என் மஞ்சம்!!!

"இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால்,

அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாண்டினேன்...தாண்டினேன்

சாறம் கிழிய முட்கம்பி வேலி தாண்டினேன்

மழையிருட்டிலும் உன்முகம் காண

தாண்டினேன்...தாண்டினேன்

அலம்பல் வேலி காலில் கீறுப்பட தாண்டினேன்

உன் மேல்மூச்சு கீழ்மூச்சு என் காதோரம் உரசும் அளவை அளக்க

தாண்டினேன்...தாண்டினேன்

காவோலை வேலி சரசரக்க தாண்டினேன்

உன் வைடூரிய வார்த்தைகளுக்காக

தாண்டினேன் தாண்டினேன்

என்வீட்டு வீமனின் உறுமலையும் மீறி தாண்டினேன்

உன் அழகுமஞ்சத்தில் அமைதியாக.........

தாண்டினோம் தாண்டினோம்

இருவரும் தாண்டினோம்

இன்றோ

நீ அங்கே

நான்

இங்கே

உனக்கு

நான்கு

எனக்கு நான்கு

இதில் யார் தாண்டவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கவிதை :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு இரண்டு பேரின் கவிதைகளும், ஏன் தாண்டியிறல், தலைகணி இருக்குதானே தூங்குவதிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதை :lol: :lol: :lol:

அடியேனுக்கு ஒரு பச்சைவர்ணம் அன்பளிப்பதில் அயலவருக்கு என்ன இடைஞ்சலோ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியேனுக்கு ஒரு பச்சைவர்ணம் அன்பளிப்பதில் அயலவருக்கு என்ன இடைஞ்சலோ? :(

குத்தினான், சொன்னாங்கு உன்க்கு முடிச்சுது என்று, யாழ் நிர்வகம் செரிய மிஞ்சம் பிடிக்கிறாங்க

என்னிடம் பச்சை இல்லை இரவு வந்து குத்திறேன்

Link to comment
Share on other sites

இருவரின் கவிதையும் அருமை. ஆளுக்கொரு பச்சையும் குத்தியிருக்கு.

உன் மேல்மூச்சு கீழ்மூச்சு என் காதோரம் உரசும் அளவை அளக்க

பிடிச்ச வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுமே அழகிய கவிதைகள்!

ஆனால் தாண்டவர், கு.சா. அண்ணை தான்!

முள் வேலி தாண்டிய நீங்கள், கடலையும் தாண்டியிருக்கலாம், உங்கள் துணையோடு! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியேனுக்கு ஒரு பச்சைவர்ணம் அன்பளிப்பதில் அயலவருக்கு என்ன இடைஞ்சலோ? :(

குத்தினேன் ஒர் பச்சைகாமத்துப்பால் தந்த கவிதைக்குபதில் கவிதைதந்த குசாவுக்கு இரு பச்சை.....

Link to comment
Share on other sites

அருமையான கவிதையை நயத்துடன் :wub: சொல்லியிருக்கின்றீர்கள் குமாரசாமி அண்ணை! ரொம்பவும் இரசித்தேன்! :wub:

ஒரு பச்சை என்னோடதும்.............!!!! :)

Link to comment
Share on other sites

கு.சா நல்லாத்தான் தாண்டியிருக்கிறாயப்பு. அலம்பல் வேலி காலிலை மட்டும்தான் கீறினதோ ?? சாறத்தை சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு தாண்டேக்கை கால்லை மட்டும்தான் கீறிதெண்டால் ..அதுதான் யோசிக்கிறன் :lol:

Link to comment
Share on other sites

கு.சா நல்லாத்தான் தாண்டியிருக்கிறாயப்பு. அலம்பல் வேலி காலிலை மட்டும்தான் கீறினதோ ?? சாறத்தை சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு தாண்டேக்கை கால்லை மட்டும்தான் கீறிதெண்டால் ..அதுதான் யோசிக்கிறன் :lol:

சாத் அண்ணாக்கு அந்த மாதிரி டவுட் எல்லாம் உடனுக்கு உடன் வந்திடும். :lol:

Link to comment
Share on other sites

இருவருக்கும் பச்சைப் புள்ளிகள்...

கு.சா வின் தாண்டலை கேட்டவுடன் எனக்கும் பல பழைய தாண்டல்கள் நினைவுக்கு வருகுது...ம்ம்ம்..ஊரில கறன்ட் இல்லாக் காலம் ஒரு வசந்த காலம் எனக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

தாண்டினோம் தாண்டினோம்

இருவரும் தாண்டினோம்

இன்றோ

நீ அங்கே

நான்

இங்கே

உனக்கு நான்கு

எனக்கு நான்கு

இதில் யார் தாண்டவர்?

இருவரும்.... ஆளுக்கு நாலு, நாலு என்று.. பெற்று வைத்திருப்பதால்....

தாண்டவர் யாரும் இல்லை. இருவரும் சமமானவர்களே.

நல்ல கவிதை, குமாரசாமி அண்ணை.smiley-char023.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கு.சா அண்ணா இப்படி எல்லாம் எழுதுறீங்கள்...இவ்வளவு திறமையை வைத்திருக்கும் நீங்கள் நேர‌ம் கிடைக்கும் போது தனித் தலைப்பு தொட‌ங்கி எழுதலாமே!...கவிதைக்கும் எனது பாராட்டுகள்

Link to comment
Share on other sites

கவிதையின் கவிதை நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்!

'காவோலை வேலி சரசரக்க தாண்டிய தாண்டவரின்' பீலிங்க்ஸ் ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிக்கிறது... ^_^ வாழ்த்துக்கள் கு.சா. அண்ண :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதையை நயத்துடன் :wub: சொல்லியிருக்கின்றீர்கள் குமாரசாமி அண்ணை! ரொம்பவும் இரசித்தேன்! :wub:

ஒரு பச்சை என்னோடதும்.............!!!! :)

கரு தந்த கவிதைக்கு நன்றிகள்.இத்திரியில் வந்த அனைத்து கருத்தோட்டங்களும் உங்களுக்கே சொந்தம். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் காமத்துப்பாலும் கு.சா அண்ணையின் தாளாத..... :lol: :lol: :lol: கவிதையும் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் இருவரின் ஆக்கங்களை இன்னும் இக்களத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் இரசிப்போமில்ல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் பச்சை குத்தியுள்ளேன்.கு.சா பழசை எல்லாம் நினைத்து நனைக்க வைச்சுட்டீங்கள். :lol:

எனக்கும் படித்த வரிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவிதை அருமை!

அதற்கு கிளை பரப்பிய கு.சா.வுக்கு பெருமை!

கருத்திட்ட கவிதை மனம் நிறைமை

கருத்துக்களை ஈந்திட்ட கரம் செழுமை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.