Jump to content

ஆயுத எழுத்து


Recommended Posts

என்னுரை

வாசகர்களிற்கு வணக்கம்..

இது வரை காலங்கள் பத்திரிகை,சஞ்சிகைகளில் சிறு கதைகளையும்,கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்த எனது முதலாவது நாவல் முயற்சி இது.கடந்த முப்பது வருடங்களாக இலங்கைத்தீவில் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்து விட்டிருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் நான் பார்த்த, கேட்டு அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட பல முக்கிய விடயங்களையும், 1983 ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து தொடங்கி இந்த நாவலிற்குள் அடக்கியிருக்கிறேன. இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே நபருடன் சம்பந்தப் பட்டவையல்ல. பல நபர்களும் சம்பந்தப் பட்ட பல்வேறு சம்பவங்கள். ஆனால் இலகுவாக நாவலை நகர்த்துவதற்காக ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனூடாகவே இறுதிவரை நாவலை நகர்த்தியிருக்கிறேன். அதனால்தான் நாயகனிற்கு நான் பெயரே வைக்கவில்லை. புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவன் என்றே அழைத்திருக்கிறேன். அவன் என்பவன் பலர். அவனிற்கு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டான். பல கடவுச்சீட்டுக்களில் பல நாடுகளிற்கும் பறந்து திரிந்திருந்தான். ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு பெயர்களில் அறிமுகம் ஆகியிருக்கிறான். எனவே இந்தப் புத்தகத்தினைப் படிப்பவர்கள் பலர் இதில் வரும் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம். பல சம்பவங்கள் அவர்களிற்கு மனதில் நிழலாக நினைவிற்கும் வரலாம். அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். அப்பொழுதெல்லாம் அவனும் ஒவ்வொரு பெயரில் அவர்களிற்கு அறிமுகமாகியிருப்பான். எனவே அவனும் நினைவில் வந்து போவான் ஆகவே அந்த சம்பவங்கள் நினைவிற்கு வந்தவர்கள் அட..அவனா இவன் என்று தங்களிற்கு தெரிந்த பெயரை நினைத்துக் கொள்வார்கள். அல்லது அட அவனா நீயி என்று வடிவேலு பாணியிலும் நினைக்கலாம்...இந்த நாவலைப் படிக்கும் உங்களிற்குள் கோபம், கெலைவெறி,வெறுப்பு, ஆதங்கம், ஆச்சரியம், சிரிப்பு, கவலை,சலிப்பு என்கிற ஏதாவது ஒரு உணர்வையாவது ஏற்படுத்தியிருப்பின், இந்தப் புத்கத்தினை நான் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.


கிழக்கு மாகாண சம்பவங்களின் தகவல்களை சரிபார்ப்பதற்கு உதவிய கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) ஆகியோரிற்கும்,நாவலிற்கான அட்டை வடிவமைப்பு மற்றும் ஓவியங்களை செய்து தந்த கார்த்திக் மேகாவிற்கும்,பல பகுதிகளாக எழுதி முடித்த கதைகளைத் தொகுத்து ஒரு நாவல் வடிவம் கொடுத்த யோ.கர்ணனிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, நான் எழுதத் தொடங்கிய காலங்களில் எனது எழுத்துக்களை வெளியே எடுத்து வந்து அதற்கென வாசகர்களை உருவாக்கித் தந்த யாழ் இணையம்,ஒருபேப்பர் பத்திரிகை (இலண்டன்),பூபாளம் பத்திரிகை (கனடா),எதுவரை இணைய சஞ்சிகை( இலண்டன்), மலைகள் (இந்தியா)ஆகிய ஆசிரியர் குழுவினரையும் நன்றியோடு நினைவு கூர்ந்து இந்தப் புத்தகத்தில் என்னுடைய அனுபவங்களில் வெறும் நாற்பது வீதமானவற்றையே பதிவு செய்துள்ளேன். மிகுதியில் பலவற்றை வெளிநாடுகளில் வாழும் பலரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் கருதியும், அதே நேரம் பல விடயங்களை இன்னமும் எழுதக் கூடிய சந்தர்ப சூழ்நிலை உருவாகவில்லையென நான் கருதியதாலும் எழுதவில்லை. குறிப்பாகப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு பற்றிய பல விடயங்கள் இதில் அடங்கும். நான் எழுதாமல் விட்ட மிகுதி அறுபது வீதம் சம்பவங்களை இவற்றுடன் சம்பத்தப் பட்ட வேறு யாரோ ஒரு நாளில் எழுதலாம். அல்லது இந்தப் புத்தகத்தில் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ""அவன்"" என்கிற கதாநாயகனைக் காயங்களோடு உயிரைக் காப்பாற்றி மீண்டுக் கொண்டு வந்து நானே எனது வாழ்நாளின் இறுதிக் காலங்களில் இனியென்ன சாகப் போகின்றேன். மிகுதியையும் எழுதிவிட்டு செத்துப் போகலாமென நினைத்து எழுதவும்கூடும். காலம் என்பது வலியது காலமும் இயற்கையுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எனவே இதனையும் காலத்தின் கைகளிலேயே கொடுத்துவிட்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்..


நாவலைப் படித்தவர்கள் உங்கள் கருத்துக்களை sathiri@gmail.com என்கிற மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்.

 

படத்தினை பெரிதாக்கி பார்க்க அல்லது எனது முகப்புத்தக கருத்துக்களை பார்க்க இங்கு அழுத்தவும்.நன்றி.

எனது நாவல் ஆயுத எழுத்து விரைவில்.ஓவியங்கள் கார்த்திக்மேகா..தொகுப்பு யோ.கர்ணன்.
10513449_10201297938530242_4874489249060

 

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply

நாவலில் முரண்பாடுகளுக்கும் ,புலன் +நாய் வுக்கும் குறைவில்லாமல் இருக்கும் என்றீங்கள் :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னுரை

வாசகர்களிற்கு வணக்கம்..

இது வரை காலங்கள் பத்திரிகை,சஞ்சிகைகளில் சிறு கதைகளையும்,கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்த எனது முதலாவது நாவல் முயற்சி இது.கடந்த முப்பது வருடங்களாக இலங்கைத்தீவில் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்து விட்டிருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் நான் பார்த்த, கேட்டு அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட பல முக்கிய விடயங்களையும், 1983 ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து தொடங்கி இந்த நாவலிற்குள் அடக்கியிருக்கிறேன. இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே நபருடன் சம்பந்தப் பட்டவையல்ல. பல நபர்களும் சம்பந்தப் பட்ட பல்வேறு சம்பவங்கள். ஆனால் இலகுவாக நாவலை நகர்த்துவதற்காக ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனூடாகவே இறுதிவரை நாவலை நகர்த்தியிருக்கிறேன். அதனால்தான் நாயகனிற்கு நான் பெயரே வைக்கவில்லை. புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவன் என்றே அழைத்திருக்கிறேன். அவன் என்பவன் பலர். அவனிற்கு ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டான். பல கடவுச்சீட்டுக்களில் பல நாடுகளிற்கும் பறந்து திரிந்திருந்தான். ஒவ்வொரு நண்பர்களிடமும் ஒவ்வொரு பெயர்களில் அறிமுகம் ஆகியிருக்கிறான். எனவே இந்தப் புத்தகத்தினைப் படிப்பவர்கள் பலர் இதில் வரும் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம். பல சம்பவங்கள் அவர்களிற்கு மனதில் நிழலாக நினைவிற்கும் வரலாம். அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். அப்பொழுதெல்லாம் அவனும் ஒவ்வொரு பெயரில் அவர்களிற்கு அறிமுகமாகியிருப்பான். எனவே அவனும் நினைவில் வந்து போவான் ஆகவே அந்த சம்பவங்கள் நினைவிற்கு வந்தவர்கள் அட..அவனா இவன் என்று தங்களிற்கு தெரிந்த பெயரை நினைத்துக் கொள்வார்கள். அல்லது அட அவனா நீயி என்று வடிவேலு பாணியிலும் நினைக்கலாம்...இந்த நாவலைப் படிக்கும் உங்களிற்குள் கோபம், கெலைவெறி,வெறுப்பு, ஆதங்கம், ஆச்சரியம், சிரிப்பு, கவலை,சலிப்பு என்கிற ஏதாவது ஒரு உணர்வையாவது ஏற்படுத்தியிருப்பின், இந்தப் புத்கத்தினை நான் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.

கிழக்கு மாகாண சம்பவங்களின் தகவல்களை சரிபார்ப்பதற்கு உதவிய கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) ஆகியோரிற்கும்,நாவலிற்கான அட்டை வடிவமைப்பு மற்றும் ஓவியங்களை செய்து தந்த கார்த்திக் மேகாவிற்கும்,பல பகுதிகளாக எழுதி முடித்த கதைகளைத் தொகுத்து ஒரு நாவல் வடிவம் கொடுத்த யோ.கர்ணனிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, நான் எழுதத் தொடங்கிய காலங்களில் எனது எழுத்துக்களை வெளியே எடுத்து வந்து அதற்கென வாசகர்களை உருவாக்கித் தந்த யாழ் இணையம்,ஒருபேப்பர் பத்திரிகை (இலண்டன்),பூபாளம் பத்திரிகை (கனடா),எதுவரை இணைய சஞ்சிகை( இலண்டன்), மலைகள் (இந்தியா)ஆகிய ஆசிரியர் குழுவினரையும் நன்றியோடு நினைவு கூர்ந்து இந்தப் புத்தகத்தில் என்னுடைய அனுபவங்களில் வெறும் நாற்பது வீதமானவற்றையே பதிவு செய்துள்ளேன். மிகுதியில் பலவற்றை வெளிநாடுகளில் வாழும் பலரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் கருதியும், அதே நேரம் பல விடயங்களை இன்னமும் எழுதக் கூடிய சந்தர்ப சூழ்நிலை உருவாகவில்லையென நான் கருதியதாலும் எழுதவில்லை. குறிப்பாகப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு பற்றிய பல விடயங்கள் இதில் அடங்கும். நான் எழுதாமல் விட்ட மிகுதி அறுபது வீதம் சம்பவங்களை இவற்றுடன் சம்பத்தப் பட்ட வேறு யாரோ ஒரு நாளில் எழுதலாம். அல்லது இந்தப் புத்தகத்தில் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ""அவன்"" என்கிற கதாநாயகனைக் காயங்களோடு உயிரைக் காப்பாற்றி மீண்டுக் கொண்டு வந்து நானே எனது வாழ்நாளின் இறுதிக் காலங்களில் இனியென்ன சாகப் போகின்றேன். மிகுதியையும் எழுதிவிட்டு செத்துப் போகலாமென நினைத்து எழுதவும்கூடும். காலம் என்பது வலியது காலமும் இயற்கையுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எனவே இதனையும் காலத்தின் கைகளிலேயே கொடுத்துவிட்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்..

நாவலைப் படித்தவர்கள் உங்கள் கருத்துக்களை sathiri@gmail.com என்கிற மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்.

 

படத்தினை பெரிதாக்கி பார்க்க அல்லது எனது முகப்புத்தக கருத்துக்களை பார்க்க இங்கு அழுத்தவும்.நன்றி.

எனது நாவல் ஆயுத எழுத்து விரைவில்.ஓவியங்கள் கார்த்திக்மேகா..தொகுப்பு யோ.கர்ணன்.
10513449_10201297938530242_4874489249060

 

இதை எழுதியவரே மறைமுகமாக சொல்லி கொள்கிறார் இது ஒரு சுய விளம்பரம் என்று.
வியாபார யுத்தி காரணமாக அடைமொழிகள் அடைக்கலம் தேடிகொண்டிருக்கலாம்.
 
இந்த எழுத்தாளார் எதையும் எழுத தெரியாதவர் என்பது என்னுடைய தனிபட்ட கருத்து. (அதுக்கு மற்று கருத்து இருக்கலாம்). ஏற்கனவே இவர் எழுதிய பலவற்றை நான் படித்து தெரிந்துகொண்டது. இவர் ஒரு சுய விளம்பர தாரி என்பதை மட்டுமே.
 
எழுதுவது என்பதற்கு ஒரு தர்ப்பாரியம் இருக்கிறது. அதில் எதுவும் இவரிடம் இதற்கு முன்பு இருக்கவில்லை.
இதில் இருக்கலாம் என்று தேட எனக்கு இஸ்டமும் இல்லை.
Link to comment
Share on other sites

நாவலை எப்படி பெற்றுக்கொள்வது?  மின் பிரதி உண்டா ?

வடலிமற்றும் மலைகள் இணையத்தில் ஒன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.பின்னர் இணைப்புகள் இங்கு தருகிறேன்.

 

இதை எழுதியவரே மறைமுகமாக சொல்லி கொள்கிறார் இது ஒரு சுய விளம்பரம் என்று.
வியாபார யுத்தி காரணமாக அடைமொழிகள் அடைக்கலம் தேடிகொண்டிருக்கலாம்.
 
இந்த எழுத்தாளார் எதையும் எழுத தெரியாதவர் என்பது என்னுடைய தனிபட்ட கருத்து. (அதுக்கு மற்று கருத்து இருக்கலாம்). ஏற்கனவே இவர் எழுதிய பலவற்றை நான் படித்து தெரிந்துகொண்டது. இவர் ஒரு சுய விளம்பர தாரி என்பதை மட்டுமே.
 
எழுதுவது என்பதற்கு ஒரு தர்ப்பாரியம் இருக்கிறது. அதில் எதுவும் இவரிடம் இதற்கு முன்பு இருக்கவில்லை.
இதில் இருக்கலாம் என்று தேட எனக்கு இஸ்டமும் இல்லை.

 

இந்த நாவலைப் படிக்கும் உங்களிற்குள் கோபம், கெலைவெறி,வெறுப்பு, ஆதங்கம், ஆச்சரியம், சிரிப்பு, கவலை,சலிப்பு என்கிற ஏதாவது ஒரு உணர்வையாவது ஏற்படுத்தியிருப்பின், இந்தப் புத்கத்தினை நான் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நூல்களை வரவேற்பதில்.. மிகவும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

 

சமீப காலமாக.. வரலாற்றுத் திரிபுகளை பலர் நூல்களில் ஏற்றி சந்தர்ப்பவாத எழுத்தாளர்களாகி வரும் நிலையில்... அதன் தொடர்சி தான் இது. இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு.. இவ்வளவு காலமும் என்ன தூங்கிக்கிட்டா இருந்தார்கள். அப்பவே எழுதி தொலைச்சிருக்கலாமில்ல. "அவன்" பற்றி சொல்லப்படுவதில் உள்ள சரி பிழையாவது தெரிய வந்திருக்கும்...!!!! இப்போ சாட்சியங்கள் அற்ற சபையில் உளறிக் கொட்டுவதெல்லாம்.. தத்துவம் என்றாகும் சந்தர்ப்ப சூழ்நிலையில்.. இவர்கள் குட்டையைக் கலக்கி மீன்பிடிக்க நிற்கிறார்கள்.  :icon_idea::)

Link to comment
Share on other sites

சாத்திரி உங்களை மீண்டும் உங்கள் நாவலுடன் யாழில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

புத்தகங்களை பெறக்கூடிய இடங்களையும் அறியத்தாருங்கள் வாசித்துவிட்டு கருத்துகளை வைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் எதாவது புத்தகக் கடையில் வாங்கலாமோ?...நான் ஒன்லைனில் வாங்குவதில்லை.கிருபன் இந்த புத்தகத்தை ஒன்லைனில் வாங்கினால் எனக்கும் ஒரு பிரதி வாங்கி அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்.புத்தகத்தை வாசித்த பின் என் கருத்தை சொல்கிறேன்.ஏன் சாஸ்திரியார் நூல் வெளியீடு ஒன்றும் செய்யவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் எதாவது புத்தகக் கடையில் வாங்கலாமோ?...நான் ஒன்லைனில் வாங்குவதில்லை.கிருபன் இந்த புத்தகத்தை ஒன்லைனில் வாங்கினால் எனக்கும் ஒரு பிரதி வாங்கி அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்.புத்தகத்தை வாசித்த பின் என் கருத்தை சொல்கிறேன்.ஏன் சாஸ்திரியார் நூல் வெளியீடு ஒன்றும் செய்யவில்லையோ?

வடலிக்காரரிடம் ஒன்லைனில் வாங்கிய அனுபவம் இருக்கின்றது. அதனால் இப்போது ஒழுங்காக அனுப்புவார்களே என்ற சந்தேகம் உள்ளது!

இலண்டனில் சாத்திரியாரின் புத்தகம் எப்படியும் வந்து சேரும்தானே. எனக்கு இலகுவாக எடுக்கக்கூடிய வசதியை சாத்திரியார் ஒழுங்குசெய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒன்றுக்கு இரண்டாக வாங்கினால் போச்சு.

சிவப்புப் பெட்டியில் போட்டால் ரதியிடம் வந்து சேராமலா போய்விடும்!

Link to comment
Share on other sites

கனடா.இங்கிலாந்து.இந்தியா. பிரான்ஸ்.டென்மார்க்.இலங்கை ஆகிய நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். மற்றும் வடலி.மலைகள் ஆகிய இணையங்களில் ஒன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அதற்கென வாசகர்களை உருவாக்கித் தந்த யாழ் இணையம்
நானும் ஒரு அபிமான வாசகன்......அத்துடன் ஊரான்....:D
Link to comment
Share on other sites

வடலிமற்றும் மலைகள் இணையத்தில் ஒன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.பின்னர் இணைப்புகள் இங்கு தருகிறேன்.

 

நன்றி

படிக்க ஆவலாக உள்ளேன்

 

உங்கள் எழுத்துக்கள் நாவலாக வரவேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். அதை  இக்களத்தில் சொல்லியும் உள்ளேன். அந்தவகையில் உங்கள் மூலம் ஒரு நாவல் வந்தது மகிழ்ச்சியானது

 

விருப்பு வெறுப்பு விமர்சனங்கள் எதிர்பார்ப்புகளைக் கடந்து இவ்வாறான பதிவுகள் அவசியமானது. என்னைப்பொறுத்தவரை ஒரு நாவலும் அதற்கான விமர்சனமும் இணைந்து நிற்கும்போதுதான் ஒரு காலம் பதிவுசெய்யப்படும். கீழே உள்ள கருத்தில் அதற்கான இடத்தையும் கொடுக்கின்றீர்கள்.

இந்த நாவலைப் படிக்கும் உங்களிற்குள் கோபம், கெலைவெறி,வெறுப்பு, ஆதங்கம், ஆச்சரியம், சிரிப்பு, கவலை,சலிப்பு என்கிற ஏதாவது ஒரு உணர்வையாவது ஏற்படுத்தியிருப்பின், இந்தப் புத்கத்தினை நான் எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றே எடுத்துக் கொள்வேன்.

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த அவன் என்ற பாத்திரம்

 

  1. வாசகர்களை சம்பவங்களின் ஊடாக பயணிக்க வைத்து அதனை வாசகர்கள் எடை போட / திறனாய்வு செய்ய வைக்குமா ?
  2. அல்லது உங்கள் கருத்துக்களை வாசகர் மீது நியாயப்படுத்த விளையுமா என அறிய ஆவல்

நாவல் என்று கூறியதால் சம்பவங்களின் தொகுப்போ என்றும் தெரியவில்லை ?????????  நியாய விலையில் கிடைக்கும் என்ன நினைக்கிறன் . செலவுக்கு மேலாக கிடைக்கும் வருமானம் ஏதோ charity போவதாக சொன்ன ஞாபகம் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

இந்த அவன் என்ற பாத்திரம்

  • வாசகர்களை சம்பவங்களின் ஊடாக பயணிக்க வைத்து அதனை வாசகர்கள் எடை போட / திறனாய்வு செய்ய வைக்குமா ?
  • அல்லது உங்கள் கருத்துக்களை வாசகர் மீது நியாயப்படுத்த விளையுமா என அறிய ஆவல்
நாவல் என்று கூறியதால் சம்பவங்களின் தொகுப்போ என்றும் தெரியவில்லை ????????? நியாய விலையில் கிடைக்கும் என்ன நினைக்கிறன் . செலவுக்கு மேலாக கிடைக்கும் வருமானம் ஏதோ charity போவதாக சொன்ன ஞாபகம் :lol: :lol: :lol:
மக்கள் கடைகளில் கிடைக்கும் குஞ்சி .

மக்கள் கடைகளில் கிடைக்கும் குஞ்சி .

:)

மக்கள் கடைகளில் கிடைக்கும் குஞ்சி .

:)

அல்லது அவர் இருக்கும் நேசக்கரதுக்கு கொடுப்பார்
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ...

 

அண்ணே  கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) இவர்கள் இருவரும் ஆயுத எழுத்து என்னும் புத்தகம் ஒன்று வருவதா தங்களுக்கு தெரியாது என்று கூறி உள்ளதா ஒரு தகவல் ...நிராஜ் டேவிட்  உங்களிடம் அது பற்றி தொலைபேசியில் பேசியதாக கூட ஒரு கதை வருது அவர்களிம் அனுமதி இல்லாமல் நிங்கள் விளம்பர நோக்குடன் அவர்களின் பெயர் பாவித்து இருப்பதா சொல்லப்படுது உண்மையே இது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ...

 

அண்ணே  கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) இவர்கள் இருவரும் ஆயுத எழுத்து என்னும் புத்தகம் ஒன்று வருவதா தங்களுக்கு தெரியாது என்று கூறி உள்ளதா ஒரு தகவல் ...நிராஜ் டேவிட்  உங்களிடம் அது பற்றி தொலைபேசியில் பேசியதாக கூட ஒரு கதை வருது அவர்களிம் அனுமதி இல்லாமல் நிங்கள் விளம்பர நோக்குடன் அவர்களின் பெயர் பாவித்து இருப்பதா சொல்லப்படுது உண்மையே இது .

சாத்திரியார் புலநாயை அனுப்பித் தகவல்களைத் திரட்டியிருப்பார். இவைக்கு என்ன கதைச்சது, எப்ப கதைச்சது எல்லாம் தெரியாமலேயே விடயங்கள் கறக்கப்பட்டிருக்கும்! <_<

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ...

அண்ணே கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றிய இரா.துரைரட்ணம்(சுவிஸ்) நிராச் டேவிட்(சுவிஸ்) இவர்கள் இருவரும் ஆயுத எழுத்து என்னும் புத்தகம் ஒன்று வருவதா தங்களுக்கு தெரியாது என்று கூறி உள்ளதா ஒரு தகவல் ...நிராஜ் டேவிட் உங்களிடம் அது பற்றி தொலைபேசியில் பேசியதாக கூட ஒரு கதை வருது அவர்களிம் அனுமதி இல்லாமல் நிங்கள் விளம்பர நோக்குடன் அவர்களின் பெயர் பாவித்து இருப்பதா சொல்லப்படுது உண்மையே இது .

நிராஜ் அல்லது துரைரத்தினம் உங்களிடம் அப்படி சொல்லியிருந்தால் மட்டும் இங்கு வந்து எழுதுங்கள். அல்லது அவர்களோடு நேரடியாக தொலை பேசி இணைப்பை ஏற்படுத்தி உங்களையும் இணைக்கிறேன் நேரடியாக கேட்கவும். அப்படி நான் அவர்களது பெயர்களை தவறாக பயன் படுத்தினேன் என்று அவர்கள் சொன்னால் நான் எனது புத்தகங்கள் அனைத்தையும் வெளியிடாமல் கொழுத்தி விடுவேன். அப்படி இல்லையெனில் நீங்கள் என்ன செய்வீர்கள் சொல்லவும்
Link to comment
Share on other sites

நிராஜ் அல்லது துரைரத்தினம் உங்களிடம் அப்படி சொல்லியிருந்தால் மட்டும் இங்கு வந்து எழுதுங்கள். அல்லது அவர்களோடு நேரடியாக தொலை பேசி இணைப்பை ஏற்படுத்தி உங்களையும் இணைக்கிறேன் நேரடியாக கேட்கவும். அப்படி நான் அவர்களது பெயர்களை தவறாக பயன் படுத்தினேன் என்று அவர்கள் சொன்னால் நான் எனது புத்தகங்கள் அனைத்தையும் வெளியிடாமல் கொழுத்தி விடுவேன். அப்படி இல்லையெனில் நீங்கள் என்ன செய்வீர்கள் சொல்லவும்

இது உங்களிடம் கேள்வியாகவே கேட்கப்பட்டது ......அதுக்கான பதிலை அளிப்பிர்கள் என்னும் நோக்குடன் ஏனெனின் இந்த தகவலை கூறி ஆளுக்கு நான் இதை ஆதாரம் காட்டி ஆகணும் அவ்வளவே ..

Link to comment
Share on other sites

நிராஜ் அல்லது துரைரத்தினம் உங்களிடம் அப்படி சொல்லியிருந்தால் மட்டும் இங்கு வந்து எழுதுங்கள். அல்லது அவர்களோடு நேரடியாக தொலை பேசி இணைப்பை ஏற்படுத்தி உங்களையும் இணைக்கிறேன் நேரடியாக கேட்கவும். அப்படி நான் அவர்களது பெயர்களை தவறாக பயன் படுத்தினேன் என்று அவர்கள் சொன்னால் நான் எனது புத்தகங்கள் அனைத்தையும் வெளியிடாமல் கொழுத்தி விடுவேன். அப்படி இல்லையெனில் நீங்கள் என்ன செய்வீர்கள் சொல்லவும்

புத்தகம் வெளியிடும் நீங்கள் இவற்றை எல்லாம் தாண்டி போகவேண்டும் .வதந்திகளுக்கு பதில் சொல்ல தொடங்கினால் பின்னர் அதுவே வேலையாகிவிடும் .பதில் சொல்ல வெளிக்கிட்ட நம்ம ----- நிலை எவருக்கும் வரக்கூடாது 

Link to comment
Share on other sites

புத்தகம் வெளியிடும் நீங்கள் இவற்றை எல்லாம் தாண்டி போகவேண்டும் .வதந்திகளுக்கு பதில் சொல்ல தொடங்கினால் பின்னர் அதுவே வேலையாகிவிடும் .பதில் சொல்ல வெளிக்கிட்ட நம்ம ----- நிலை எவருக்கும் வரக்கூடாது

இந்த விடையத்தை எனதுமுக புத்தகத்தில் பதிந்து நிராஜ் மற்றும் துரை ரத்தினம் அஞ்சரன் என்கிற யோ அருணகிரி ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளேன் அவர்கள் பதில் தருவார்கள்

 

Gowripal Sathiri Sri ...

 இன்று யாழ் இணையத்தில் அஞ்சரன் என்பவர் முக புத்தகத்தில் Yogoo Arunakiri ஒரு குற்ற சாட்டை வைத்திருக்கிறார் அது என்னவெனில் ...

அண்ணே கிழக்கு மகாணப் பத்திரிகையாளர்களாக பணியாற்றியhttps://www.facebook.com/ramasamy.thurairatnamஇரா.துரைரட்ணம்(சுவிஸ்)https://www.facebook.com/niraj.david?fref=ts நிராச் டேவிட்(சுவிஸ்) இவர்கள் இருவரும் ஆயுத எழுத்து என்னும் புத்தகம் ஒன்று வருவதா தங்களுக்கு தெரியாது என்று கூறி உள்ளதா ஒரு தகவல் ...நிராஜ் டேவிட் உங்களிடம் அது பற்றி தொலைபேசியில் பேசியதாக கூட ஒரு கதை வருது அவர்களிம் அனுமதி இல்லாமல் நிங்கள் விளம்பர நோக்குடன் அவர்களின் பெயர் பாவித்து இருப்பதா சொல்லப்படுது உண்மையே இது ....////அவருக்கு நான் கொடுத்த பதில் நிராஜ் அல்லது துரைரத்தினம் உங்களிடம் அப்படி சொல்லியிருந்தால் மட்டும் இங்கு வந்து எழுதுங்கள். அல்லது அவர்களோடு நேரடியாக தொலை பேசி இணைப்பை ஏற்படுத்தி உங்களையும் இணைக்கிறேன் நேரடியாக கேட்கவும். அப்படி நான் அவர்களது பெயர்களை தவறாக பயன் படுத்தினேன் என்று அவர்கள் சொன்னால் நான் எனது புத்தகங்கள் அனைத்தையும் வெளியிடாமல் கொழுத்தி விடுவேன். அப்படி இல்லையெனில் நீங்கள் என்ன செய்வீர்கள்https://www.facebook.com/yogakumark சொல்லவும் இது ....

Link to comment
Share on other sites

அதே நேரம் அஞ்சரன் உங்களிற்கு நிராஜ் மற்றும் துரை ரத்னம் அண்ணரோடு தொடர்புகள் இருக்காது எனவே எனது இலக்கம் 0611149470 தொடர்பு கொள்ளவும் நானே இணைப்பை ஏற்படுத்துகிறேன் அல்லது உங்களுக்கு போன் அடிக்கிறேன்

Link to comment
Share on other sites

அதே நேரம் அஞ்சரன் உங்களிற்கு நிராஜ் மற்றும் துரை ரத்னம் அண்ணரோடு தொடர்புகள் இருக்காது எனவே எனது இலக்கம் 0611149470 தொடர்பு கொள்ளவும் நானே இணைப்பை ஏற்படுத்துகிறேன் அல்லது உங்களுக்கு போன் அடிக்கிறேன்

சில விடையங்களை உடனம்  தெளிவுபடுத்தினா நல்லது தானே பின்னர் இப்படியான கேள்விகள் எழாமல் இருக்கும் அல்லவா .

Link to comment
Share on other sites

சற்று முன்னர் தான் அஞ்சரனோடு தொலை பேசியில் கதைத்தேன் அப்படி ஒரு தகவலை தயாளன் துரை ரத்னம் என்பவரே கொடுத்ததாக சொன்னார் இவர் அண்மைய. காலத்தில் திருமணமாகி லண்டனில் இருக்கிறார் மிகுதி விடயங்கள் விரைவில் எனவே நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்தர் உங்கள் ஆக்கம் வெளிவரும்போது பலரைப்பேசத்தூண்டும் என்பதில் ஐயமில்லை.கனடாவில் எப்போது உங்கள் நூல் வெளியீடு? உங்கள் கருத்துக்களைவிட உங்கள் எழுத்தில் ஈர்ப்பு இருக்கிறது. ஒரு நூல் வெளிவருமுன்னர் விமர்சனத்தையோ குற்றச்சாட்டுகளையோ அல்லது இவர் இப்படித்தான் எழுதுவார் என்றோ கருத்திடமுடியாதுதானே..... இருப்பினும் வாசகர்களிடம் இது தொடர்பாக வாசிக்காமலே சர்ச்சை எழுவதைப்பார்க்கும்போது வாசிப்பிற்குப்பின்னால் நிச்சயம் இந்நாவல் பேசப்படுபொருளாக இருக்கப்போகிறது அந்தவகையில் எழுதிய சாத்தருக்கு பெரும் வெற்றியாக அமையும். வரவேற்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.