Jump to content

தன் பிள்ளை என்றால்..............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன்.

திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதேநிலை ஒரு நாள் எனது மகளுக்கு வந்தபோது...........

வயிற்றுக்குள் நோகுது அம்மா என்று அவள் சொன்னபோது......

துடித்துப்போனேன். கண்களில் ரத்தக்கோடுகள்.

லா சப்பலுக்கு ஓடினேன்.

சின்ன வெங்காயம் அதிலும் நல்ல கொழு கொழு என்று சிவந்ததாகப்பார்த்து

(வாழ்நாளில் இப்படி நான் பார்த்து வாங்கியதே இல்லை)

சிறிய கத்தரிக்காய்

திறமான நல்லெண்ணெய்

வயிற்றில் பூச மஞ்சல்

தடவிவிட வேப்பிலை

குடிக்காத நான் வாங்கியது திறமான பிரண்டி...........

எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம்.

ஆனால் கண்ணில் கலக்கம்.

என்ப்பா எனக்கேட்டேன்.

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

பதில் சொல்ல ஏதுமில்லை.

உண்மை எப்போதும் சுணைக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

Link to comment
Share on other sites

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

எம்மை நாம் தீட்டவேண்டும்

அதுவே இப்பதிவின் நோக்கம்

அதைப்புரிந்து எழுதியுள்ளீர்

நன்றி ஐயா

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

நன்றி துளசி

பெண்கள் இதற்குள் வரமாட்டார்கள் என்று நினைத்தேன்.

முதலிலேயே வந்து ஆறுதலும் தந்துள்ளீர்.

இது ஆண்களைத்தொடவேண்டும் என்பதால் திறந்த திரி.

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயுமானவன்

உண்மைதான் நந்தன்.

அதுவும் அடக்கம்.

நன்றிகள் கருத்துக்கும் நேரத்திற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...பெண்கள் என்றால் மெசின் போன்று வேலை செய்பவர்கள் என்ற உணர்வுகளே அனேகரின் மனங்களில் உண்டு...ஆனால் அவற்றையும் கடந்து பெண் என்பளுக்குள்ளும் பல வித சொல்லிக் கொள்ள முடியாது ஏக்கங்கள் இருக்கிறது என்பதை இனிமேல் காலத்திலவாது ஆண்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிறன்..இந்த கருத்தை எனக்காக மட்டும் சொல்ல இல்லை...நான் பெற்றோருடன் இருக்கும் பிள்ளை..என் உணர்வுகள் வேறு பட்டதாக இருக்கும்..சில பிள்ளைகள் வளர்ந்து தன் அறிவு என்று வந்த பின் வெளியில் எல்லா விடையங்களையும் சொல்ல விரும்ப மாட்டார்கள்...ஆனால் ஒரு திருமணம் செய்த பெண்ணின் உணர்வுகள் விச்சு அண்ணா பகிர்ந்து கொண்டது போல் வேறு பட்டதாக இருக்கும்....நான் நிறைய,நிறைய எழுதிக் கொள்ள விரும்ப இல்லை...அனைத்து ஆண்களும் உங்கள் வீடுகளில் உள்ள பெண்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்பிறன்..

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

யாழ்போதனா வைத்தியசாலையில் இதற்கு மருத்துவ உதவியை நாடினால் பனடோல் தான் கொடுப்பார்கள். தனியார் மருத்துவர்களிடம் போனால் அவர்கள் வழங்குவது சாதாரணமாக அனைத்து வலிகளுக்கும் வலி நிவாரணியாக இருக்கும் ponstan. (இது ஒரு antibiotic). இதனை பயன்படுத்துவதால் வலி குறைவடையாது.

இஞ்சி தேநீர் குடித்தோ அல்லது சுட்ட உள்ளி சாப்பிட்டோ எதுவும் ஆகாது.

வெளிநாடுகளில் பல மருந்துகள் உள்ளன. இல்லை என்று கூறவில்லை. ponstan ஐ விட சிறந்தவை. ஆனால் அவை கூட போட்டவுடன் வலியை குறைக்காது. சிறிது நேரத்தில் வலி குறைவது போல் இருக்கும். பின்னர் குறிப்பிட்ட மணித்தியாலத்தின் பின் மீண்டும் வலிக்கும். மருந்தை பயன்படுத்தாமல் விட்டால் ஒரு நாளில் வலி போய்விடுமாக இருப்பவர்களுக்கு மருந்தை பயன்படுத்தினால் விட்டு விட்டு 3 நாளுக்கு கூட தொடரலாம். அது கூட பல மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். (சிலருக்கு இப்படி நடப்பதில்லை...)

மருந்து எடுப்பதால் நிச்சயம் பக்க விளைவுகள் உருவாகும். எடுப்பவர்களுக்கு குறைவாக பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு பக்க விளைவுகள் அதிகளவில் உருவாகும்.

உடற்பயிற்சி தொடர்ச்சியாக எடுத்து வருபவர்களுக்கு வலிக்காது என்பது பற்றி தெரியாது.

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

இதை எழுதும் போது நான் என்ன நினைத்தேனோ அது தங்கள் கருத்தில் இருக்கு இசை.

இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.

உங்களுக்கு விழுந்து கொண்டிருக்கும் விருப்பு வாக்குகளும் அதைத்தான் சொல்கின்றன.

கண்ணுக்குத்தெரியாத உறவுகளுக்காகவே பரிதவிப்போர் நாம்.

எம்மில் பாதியாகிய துணையை விட்டுவிடுவோமா?

ஆனாலும் எம்மை அறியாது விட்டுள்ளது உறைத்தது.

அதை என் தம்பிகளும் உறவுகளும் கவனிக்கணும் என்பதற்காகவே இந்தப்பதிவு.

உங்கள் கருத்து இனி இந்தக்கேள்வி எம்மை நோக்கி வராது என்ற உறுதி தருகிறது.

அதுவே இந்தத்திரியின் நோக்கம்.

நன்றி சகோதரா.

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்.

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

உங்களுக்குமா?

நன்றி

நேரத்திற்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

உண்மைதான் தம்பி தமிழ் சூரியன்

உப்பை எவரும் கணக்கெடுப்பதில்லை.

அது இல்லாதபோது...............???

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும்..........

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

இது தான் வேண்டும்.

நன்றி தம்பி

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்....

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

நன்றி தங்களது கருத்துக்கும் நேரத்திற்கும் ஆலோசனைக்கும்.

எவருக்காவது பிரயோசனப்பட்டால் மிக மிகச்சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...

சாதாரணமாக எழுதினாலும்

இந்த திரியில் நான் எதிர் பார்த்ததை பதிந்துள்ளீர்கள்.

அதற்காகத்தான் நான்(ஆண்) இதை இங்கு கொண்டு வந்தேன்.

வெளியில் சொல்லும் செய்தியா இது என நீங்கள் பகிடியாக எழுதினாலும்..........

அதை என் போன்றவர்களால்தான் சொல்ல முடியும் என்பதும்

யாழ் கள உறவுகளுடன் கன நாட்களாக பழகுபவன் என்ற முறையில் அவர்கள் எதில் விளையாடுவார்கள் எதில் விளையாட மாடட்டார்கள் என்பதை அறிவேன். இந்த திரி அதற்கு சான்றாக அமையும். அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

இல்லை. வலி ஏற்படுவோரை பற்றி தான் கருத்து எழுதியிருக்கிறேன். :D

அத்துடன் வைன் குடிக்கும் வெள்ளைக்காரிகளை பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறேன். எம்மவர்களை எழுதவில்லை. :D

இப்பவும் குழந்தைப்பிள்ளை மாதிரி இருக்கா.... :D:):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

கிட்டத்தட்ட

உங்கள் நிலையே எனதும்.

ஆனால் அவர் சொன்னது உண்மை. அதுவே சுட்டது.

அது எனக்கு என் மாமனாரை ஞாபகப்படுத்தியது. இன்னொருவரின் பிள்ளையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற பரிதவிப்பு எனக்கு. என் பிள்ளை என் பிள்ளை என்பது இன்னொருவரை காயப்படுத்துவது புரிந்தது.

நீங்கள் அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு இனிப்புக்கொடுத்தநிலைதான் இதுவும்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

உங்களைப்போன்றோர் இருக்கும் பொதுத்தளத்தில் எழுத எனக்கென்ன அச்சம்?

தங்களது நன்றியும் பாராட்டும் பெரும் வெகுமதி எனக்கும் இந்த திரிக்கும்.

நன்றி சகோதரி.

எதைச்செய்தாலும் நாலு பேர் நன்மையடையக்கடவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

வெள்ளை காரிகளுக்கு வலியில்லாததன் காரணம் வைன் இல்லை.

அவர்கள் சிறு வயதில் இருந்தே கற்பத்தடை மருந்துகளை பாவிக்கிறார்கள்.

வாயிற்று வலி என்று இவர்கள் மருத்துவரை நாடியதும் அவர்கள் கருத்தடை மாத்திரைகளையே பரிந்துரைக்கிறார்கள். அவை பின்பு பக்க விளைவுகளை கொடுக்கலாம். கருத்தடை மாத்திரைகளை பாவித்தால் வயிற்றுவலி இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

நன்றி தம்பி பகலவன்

இதை எழுதியதன் வெற்றி இந்த வரிகள்.

நாங்கள் எவரும் கெட்டவர்கள் கிடையாது. ரொம்ப நல்லவர்கள்.

சந்தோசமாக

அன்பாக

பண்பாக

ஆசையாக

குடும்பம் நடாத்தும் ......

எம்மைப்போன்று கணவன்மார் கூட அறியாமல் செய்யும் பிழையையே இங்கு கொண்டு வந்தேன்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் உறுதிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.