Jump to content

விடுதலைப்புலிகள் மீதான தடை : இந்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன?


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இவ்வாறு செய்தி மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான Eurasia Review என்னும் இணையத்தளத்தில் ஆய்வாளர் J Jeganaathan எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது:

இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் 1991ல் முதன் முதலாக இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்தது.

"தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இந்திய தேசியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாலும், புலிகள் தொடர்ந்தும் இந்திய எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளதாலும் இது ஒரு 'சட்ட ரீதியற்ற அமைப்பாக' உள்ளதாலும் புலிகள் அமைப்பால் திடீர் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என இந்திய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு இந்திய உயர் மட்ட அரசியற் தலைவர்களும், இராஜதந்திரிகளுமே பொறுப்பாளிகள் என்ற கருத்துப்பட இணையங்கள் ஊடாக ஆக்கங்களைப் பிரசுரித்து சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும்; நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்படுவதாகவும் இந்திய உள்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீட்டிப்புக்கான அடிப்படைக் காரணம் என்ன? இதன் மூலம் ஏற்படவல்ல உள்ளக, இருதரப்பு மற்றும் அனைத்துலக ரீதியான தாக்கங்கள் எவை? என்பனவே அவ்விரு வினாக்களுமாகும்.

'நல்ல சாத்தானுக்குள்' குடிகொண்டுள்ள 'பேயானது' இந்திய பாதுகாப்புக்கு தற்போதும் அச்சுறுத்தலை விளைவிப்பதாக கருதியே இந்திய அரசாங்கமானது தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளது.

புலிகள் அமைப்பானது நீண்ட காலமாக இந்திய இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைக்கும் தீங்குவிளைவிக்கவில்லை. புலிகள் அமைப்பின் அனைத்துலக கிளையானது தற்போது வித்தியாசமான கட்டமைப்புடன் செயற்படுகின்ற போதிலும் கூட அதன் தலைமைத்துவத்தின் ஆளுமைக் குறைபாடு காரணமாக இதனால் தமிழ்நாட்டு மக்களின் அனுதாபத்தை மிக இலகுவாக கவர்ந்து கொள்ள முடியாது.

இந்திய அரசாங்கமானது புலிகள் அமைப்பின் அனைத்துலக வலைப்பின்னல் தொடர்பில் கவனம் செலுத்தினால், உண்மையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு மீதான தடை கேள்விக்குரியதாகலாம். ஏனெனில் தற்போது புலிகளின் அனைத்துலக வலையமைப்பு வேறுபட்ட பெயருடன் செயற்பட்டு வருகின்றது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், தமிழ்நாட்டில் செயற்படும் புலி ஆதரவுக் கட்டமைப்பை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. இதனால் புலி ஆதரவு அமைப்புக்கள் மீதான குற்றச்சாட்டும் வலிதற்றதாகிறது.

தமிழ்நாட்டில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள், இதற்கு முன்னர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் கைகளில் அகப்படாமல் மிக வெற்றிகரமாக தப்பித்துக்கொண்டன. இந்த முறைமை தொடர்ந்தும் நடைமுறையிலிருந்தால், யுத்தமானது மிகக் குறுகிய காலத்தில் நிறைவுக்கு கொண்டுவரப்பட முடியாது. அண்மைக்காலத்தில், தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட்டுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புலிகள் அமைப்பு மீதான இந்திய அரசாங்கத்தின் தடைநீடிப்பானது எதனை நோக்காகக் கொண்டுள்ளது? புலிகள் தொடர்பான வழக்குகள் முடிவடையும் வரை, இந்தியப் பாதுகாப்புக்கு புலிகள் மீதான தடை அவசியமானதாக காணப்படுகிறது. இந்தியாவின் உள்ளக ரீதியாக நோக்கில், இத்தடையானது புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடர்பான வழக்கு விசாரணையில் நீதியை எட்டி, அதனுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை இனங்கண்டு, தண்டனை வழங்குவதற்கு உதவுகின்றது.

இத்தடை காரணமாக புலிகள் அமைப்பானது தனக்கான வளங்களை பெற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுகளையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் புலிகள் அமைப்பு தலையிடாததன் பின்னர், தற்போது புலிகள் அமைப்பு மீதான தடையானது அத்தியாவசியமற்ற ஒன்றாக மட்டுமல்ல, எதிர் விளைவையும் ஏற்படுத்தாது.

இத்தடை நீட்டிப்பானது பிரபாகரனின் கொலை அறிவித்தல் மீது பல்வேறு வதந்திகளை ஏற்படுத்துவதுடன், புலிகள் அமைப்பு மீள்எழுகை கொள்கின்ற செய்தியை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

புலிகள் மீதான தடை நீட்டிப்பானது சட்ட ரீதியற்ற செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் இந்திய எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்ணுவதுடன், இந்திய அரசாங்கம் தற்போது இந்நீட்டிப்பின் மூலம் அரசியலைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்கின்ற நிலையை உருவாக்கும். புலிகள் அமைப்பால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு மிகப் பலமான அச்சுறுத்தல் காணப்படவில்லை என்பது தெளிவான விடயமாகும். இந்நிலையில் தடை நீட்டிப்பானது இந்திய அரசியலில் சாத்தியமான உந்துதலை ஏற்படுத்தும் எனக் கருதமுடியாது.

தமிழ்நாட்டு அரசியலை தமிழ்த் தேசியவாதம் மற்றும் மொழிசார் அடையாளங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒரேதளத்தில் நின்று செயற்படாவிட்டாலும் கூட, சிறிலங்காத் தமிழர் விவகாரம் தமிழ்நாட்டில் செயற்படும் அனைத்துக் கட்சிகளினதும் பொதுவான நிகழ்ச்சி நிரலாக காணப்படுகின்றது.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், சிறிலங்காத் தமிழர்களின் சமூக-அரசியல் பிரச்சினை தொடர்பாக உரத்துப் பேசுகின்ற போதிலும் கூட, தமிழ்நாட்டின் அகதிமுகாங்களில் வாழும் இதே சிறிலங்காத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதியளவு கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையாகும். இதுவே சிறிலங்காத் தமிழர் விவகாரம் தொடர்பான தமிழ்நாட்டு அரசியலின் உண்மை நிலைப்பாடாகும்.

தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கு [TESO] மீண்டும் புத்துயிரளிப்பது தொடர்பாக இந்திய ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திட்டமிட்ட போது, புலிகள் மீதான தடை நீட்டிப்பு தொடர்பான தகவலும் வெளிவந்தது.

சென்னையிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிறிலங்கா இராணுவ வீரர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்புமாறு கோரி தற்போது தமிழ்நாட்டை ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர்களையோ ஆதரிக்கும் கட்சிகளல்ல. இவ்விரு கட்சிகளும் சிறிலங்காத் தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை மனிதாபிமானத் தளத்தில் நின்று ஆதரிக்கின்றன. அத்துடன் மிகக் கொடிய சிறிலங்கா அரசாங்கத்தை இவை எதிர்த்து நிற்கின்றன.

சிறிலங்காத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு அரசியலை இந்திய மத்திய அரசானது தவறாக விளங்கிவைத்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும், அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இந்திய மத்திய அரசானது போதியளவில் கவனம் செலுத்தவில்லை என்பதன் பெறுபேறாகவே தற்போது தமிழ்நாட்டு தமிழ் மக்கள், சிறிலங்காத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஆதரித்து ஒன்றுதிரண்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவப் படைகளால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பல்வேறு படுகொலைகள் மற்றும் ஏனைய யுத்த கால மீறல்களை தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் இந்திய தேசியவாதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அதேவேளையில், சிறிலங்கா விவகாரம் மட்டுமல்ல, முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நீர் வழங்கல் விவகாரம் மற்றும் கூடங்குள விவகாரம் போன்றவை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மாறுபட்ட, நீதியற்ற முறையில் நடந்து கொள்வதை இந்திய தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து நிற்பதுடன், இவ்வாறான விடயங்களில் நீதி வேண்டி ஒத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20120727106680

Link to comment
Share on other sites

[size=4]சிறிலங்கா விவகாரம் மட்டுமல்ல, முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நீர் வழங்கல் விவகாரம் மற்றும் கூடங்குள விவகாரம் போன்றவை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மாறுபட்ட, நீதியற்ற முறையில் நடந்து கொள்வதை இந்திய தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து நிற்பதுடன், இவ்வாறான விடயங்களில் நீதி வேண்டி ஒத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.[/size]

Link to comment
Share on other sites

செயற்படாத ஒரு இயக்கத்துக்கு மேலும் இரு வருடங்கள் தடை போடுவதால் யாருக்கும் நன்மை இல்லை.ஒரு நாள் எஞ்சிய வி.புலிகளை சாட்சியமளிக்க ஐ.நா அழைக்கும்.அப்போ புலிகளின் தடையை எடுக்க வேண்டும்.மேலும் இந்தியா எப்படித்தான் தமிழர்களை வதைத்தாலும் சிறிலங்காவின் நெருங்கிய நண்பன் சீனா என்பதையும் இந்தியாவுக்கு தக்க தருணத்தில் காலை வார சிறிலங்கா ஒருபோதும் தயங்காது என்பதை இந்தியா உணரும் போது எல்லாமே பிந்திவிடும்.

Link to comment
Share on other sites

சிங்களப் பயங்கரவாதிகள் வீசும் எலும்புத் துண்டை நக்கிப் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரக் கும்பலிடம் இதைவிட வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.