Jump to content

விடுதலைப்புலிகள் மீதான தடை : இந்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன?


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இவ்வாறு செய்தி மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான Eurasia Review என்னும் இணையத்தளத்தில் ஆய்வாளர் J Jeganaathan எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது:

இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் 1991ல் முதன் முதலாக இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்தது.

"தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இந்திய தேசியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாலும், புலிகள் தொடர்ந்தும் இந்திய எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளதாலும் இது ஒரு 'சட்ட ரீதியற்ற அமைப்பாக' உள்ளதாலும் புலிகள் அமைப்பால் திடீர் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என இந்திய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு இந்திய உயர் மட்ட அரசியற் தலைவர்களும், இராஜதந்திரிகளுமே பொறுப்பாளிகள் என்ற கருத்துப்பட இணையங்கள் ஊடாக ஆக்கங்களைப் பிரசுரித்து சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும்; நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்படுவதாகவும் இந்திய உள்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீட்டிப்புக்கான அடிப்படைக் காரணம் என்ன? இதன் மூலம் ஏற்படவல்ல உள்ளக, இருதரப்பு மற்றும் அனைத்துலக ரீதியான தாக்கங்கள் எவை? என்பனவே அவ்விரு வினாக்களுமாகும்.

'நல்ல சாத்தானுக்குள்' குடிகொண்டுள்ள 'பேயானது' இந்திய பாதுகாப்புக்கு தற்போதும் அச்சுறுத்தலை விளைவிப்பதாக கருதியே இந்திய அரசாங்கமானது தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளது.

புலிகள் அமைப்பானது நீண்ட காலமாக இந்திய இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைக்கும் தீங்குவிளைவிக்கவில்லை. புலிகள் அமைப்பின் அனைத்துலக கிளையானது தற்போது வித்தியாசமான கட்டமைப்புடன் செயற்படுகின்ற போதிலும் கூட அதன் தலைமைத்துவத்தின் ஆளுமைக் குறைபாடு காரணமாக இதனால் தமிழ்நாட்டு மக்களின் அனுதாபத்தை மிக இலகுவாக கவர்ந்து கொள்ள முடியாது.

இந்திய அரசாங்கமானது புலிகள் அமைப்பின் அனைத்துலக வலைப்பின்னல் தொடர்பில் கவனம் செலுத்தினால், உண்மையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு மீதான தடை கேள்விக்குரியதாகலாம். ஏனெனில் தற்போது புலிகளின் அனைத்துலக வலையமைப்பு வேறுபட்ட பெயருடன் செயற்பட்டு வருகின்றது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், தமிழ்நாட்டில் செயற்படும் புலி ஆதரவுக் கட்டமைப்பை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. இதனால் புலி ஆதரவு அமைப்புக்கள் மீதான குற்றச்சாட்டும் வலிதற்றதாகிறது.

தமிழ்நாட்டில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள், இதற்கு முன்னர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் கைகளில் அகப்படாமல் மிக வெற்றிகரமாக தப்பித்துக்கொண்டன. இந்த முறைமை தொடர்ந்தும் நடைமுறையிலிருந்தால், யுத்தமானது மிகக் குறுகிய காலத்தில் நிறைவுக்கு கொண்டுவரப்பட முடியாது. அண்மைக்காலத்தில், தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட்டுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புலிகள் அமைப்பு மீதான இந்திய அரசாங்கத்தின் தடைநீடிப்பானது எதனை நோக்காகக் கொண்டுள்ளது? புலிகள் தொடர்பான வழக்குகள் முடிவடையும் வரை, இந்தியப் பாதுகாப்புக்கு புலிகள் மீதான தடை அவசியமானதாக காணப்படுகிறது. இந்தியாவின் உள்ளக ரீதியாக நோக்கில், இத்தடையானது புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடர்பான வழக்கு விசாரணையில் நீதியை எட்டி, அதனுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை இனங்கண்டு, தண்டனை வழங்குவதற்கு உதவுகின்றது.

இத்தடை காரணமாக புலிகள் அமைப்பானது தனக்கான வளங்களை பெற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுகளையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் புலிகள் அமைப்பு தலையிடாததன் பின்னர், தற்போது புலிகள் அமைப்பு மீதான தடையானது அத்தியாவசியமற்ற ஒன்றாக மட்டுமல்ல, எதிர் விளைவையும் ஏற்படுத்தாது.

இத்தடை நீட்டிப்பானது பிரபாகரனின் கொலை அறிவித்தல் மீது பல்வேறு வதந்திகளை ஏற்படுத்துவதுடன், புலிகள் அமைப்பு மீள்எழுகை கொள்கின்ற செய்தியை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

புலிகள் மீதான தடை நீட்டிப்பானது சட்ட ரீதியற்ற செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் இந்திய எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்ணுவதுடன், இந்திய அரசாங்கம் தற்போது இந்நீட்டிப்பின் மூலம் அரசியலைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்கின்ற நிலையை உருவாக்கும். புலிகள் அமைப்பால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு மிகப் பலமான அச்சுறுத்தல் காணப்படவில்லை என்பது தெளிவான விடயமாகும். இந்நிலையில் தடை நீட்டிப்பானது இந்திய அரசியலில் சாத்தியமான உந்துதலை ஏற்படுத்தும் எனக் கருதமுடியாது.

தமிழ்நாட்டு அரசியலை தமிழ்த் தேசியவாதம் மற்றும் மொழிசார் அடையாளங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒரேதளத்தில் நின்று செயற்படாவிட்டாலும் கூட, சிறிலங்காத் தமிழர் விவகாரம் தமிழ்நாட்டில் செயற்படும் அனைத்துக் கட்சிகளினதும் பொதுவான நிகழ்ச்சி நிரலாக காணப்படுகின்றது.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், சிறிலங்காத் தமிழர்களின் சமூக-அரசியல் பிரச்சினை தொடர்பாக உரத்துப் பேசுகின்ற போதிலும் கூட, தமிழ்நாட்டின் அகதிமுகாங்களில் வாழும் இதே சிறிலங்காத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதியளவு கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையாகும். இதுவே சிறிலங்காத் தமிழர் விவகாரம் தொடர்பான தமிழ்நாட்டு அரசியலின் உண்மை நிலைப்பாடாகும்.

தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கு [TESO] மீண்டும் புத்துயிரளிப்பது தொடர்பாக இந்திய ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திட்டமிட்ட போது, புலிகள் மீதான தடை நீட்டிப்பு தொடர்பான தகவலும் வெளிவந்தது.

சென்னையிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிறிலங்கா இராணுவ வீரர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்புமாறு கோரி தற்போது தமிழ்நாட்டை ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர்களையோ ஆதரிக்கும் கட்சிகளல்ல. இவ்விரு கட்சிகளும் சிறிலங்காத் தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை மனிதாபிமானத் தளத்தில் நின்று ஆதரிக்கின்றன. அத்துடன் மிகக் கொடிய சிறிலங்கா அரசாங்கத்தை இவை எதிர்த்து நிற்கின்றன.

சிறிலங்காத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு அரசியலை இந்திய மத்திய அரசானது தவறாக விளங்கிவைத்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும், அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இந்திய மத்திய அரசானது போதியளவில் கவனம் செலுத்தவில்லை என்பதன் பெறுபேறாகவே தற்போது தமிழ்நாட்டு தமிழ் மக்கள், சிறிலங்காத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஆதரித்து ஒன்றுதிரண்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவப் படைகளால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பல்வேறு படுகொலைகள் மற்றும் ஏனைய யுத்த கால மீறல்களை தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் இந்திய தேசியவாதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அதேவேளையில், சிறிலங்கா விவகாரம் மட்டுமல்ல, முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நீர் வழங்கல் விவகாரம் மற்றும் கூடங்குள விவகாரம் போன்றவை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மாறுபட்ட, நீதியற்ற முறையில் நடந்து கொள்வதை இந்திய தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து நிற்பதுடன், இவ்வாறான விடயங்களில் நீதி வேண்டி ஒத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20120727106680

Link to comment
Share on other sites

[size=4]சிறிலங்கா விவகாரம் மட்டுமல்ல, முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நீர் வழங்கல் விவகாரம் மற்றும் கூடங்குள விவகாரம் போன்றவை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மாறுபட்ட, நீதியற்ற முறையில் நடந்து கொள்வதை இந்திய தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து நிற்பதுடன், இவ்வாறான விடயங்களில் நீதி வேண்டி ஒத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.[/size]

Link to comment
Share on other sites

செயற்படாத ஒரு இயக்கத்துக்கு மேலும் இரு வருடங்கள் தடை போடுவதால் யாருக்கும் நன்மை இல்லை.ஒரு நாள் எஞ்சிய வி.புலிகளை சாட்சியமளிக்க ஐ.நா அழைக்கும்.அப்போ புலிகளின் தடையை எடுக்க வேண்டும்.மேலும் இந்தியா எப்படித்தான் தமிழர்களை வதைத்தாலும் சிறிலங்காவின் நெருங்கிய நண்பன் சீனா என்பதையும் இந்தியாவுக்கு தக்க தருணத்தில் காலை வார சிறிலங்கா ஒருபோதும் தயங்காது என்பதை இந்தியா உணரும் போது எல்லாமே பிந்திவிடும்.

Link to comment
Share on other sites

சிங்களப் பயங்கரவாதிகள் வீசும் எலும்புத் துண்டை நக்கிப் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரக் கும்பலிடம் இதைவிட வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.