Jump to content

TNA இல் போட்டியிட்டு NPC க்குத் தெரிவான யாழ் இந்துவின் மைந்தர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் அரசியல்.. சமூக.. பொருண்மிய... விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. யாழ் இந்துக் கல்லூரி அளப்பரிய பங்களிப்புக்களை அளித்துள்ளது.

 

தியாக தீபம் திலீபனில் இருந்து இன்று வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள கஜதீபன் வரை யாழ் இந்துவின் மைந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வடக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் தெரிவான யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

எமது கல்லூரி தந்த மாவீரர்களினதும்.. ஏனைய எல்லா மாவீரர்களினதும்..  நினைவேந்தி.. உங்கள் மக்களுக்கான கடமைகளைச் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

 

Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC     Posted on: 24/09/2013 (Tuesday)    

Ponnudurai Ayngaranesan (Jaffna Hindu College 1970 – 1976) and Balachandran Gajatheepan (AL 2001 Maths) were elected to the Northern Provincial Council under the ITAK party at the recently concluded provincial council election in Northern Sri Lanka.

Ponnudurai Ayngaranesan received 22,268 preferential votes and Balachandran Gajatheepan received 23,669 preferential votes at the NPC election conducted on Saturday, the 21st of September 2013.

Jaffna_Hindu_Ayngaranesan_Ponnudurai.jpg

Mr.Ayngaranesan Ponnuthurai - Jaffna Hindu 76 Batch AL


Mr.P.Ayngaranesan, a graduate of Madras Christian College, is an environmentalist and was running a tutory, Universal Science Centre, in Kantharmadam, Jaffna. He was the Director of that institution from 1977 to 1996. He was born in 1958.

Mr.Balachandran Gajatheepan graduated from the Kopay Teachers’ Training College and took to the profession of teaching. He was a Mathamatics Teacher at Analativu Sathasivam Mahavidyalayam (2009 – 2013) and J/Union College Tellipalai (2004 – 2009). Mr.Gajatheepan was born in 1983, and is the Leader of the TNA Youth Wing.


Jaffna_Hindu_Gajatheepan_Balachandran.jp

Mr.Gajatheepan Balachandran - Jaffna Hindu 2001 Batch AL

 

http://www.jaffnahindu.org/news/hindu-old-boys-p-ayngaranesan-and-b-gajatheepan-elected-to-northern-provincial-council-72.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

பள்ளிக்கு அளப்பரிய (!) பணி செய்த, கடந்த தேர்தலில், நிண்று, நிதானித்து, கட்டுப்பணம் இழந்த, எங்கள் அண்ணர், உரும்பராய் செம்மல், 1980 A/L செவ்வேள் பற்றியும் சொல்லக்கூடாதா?

அண்ணர் கோவிக்கப்போறார்.

புங்கையூரான், என்ன, நான் சொன்னது சரிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு நீங்கள் சொல்லும் நபர் பற்றித் தெரியாது.

 

யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து ஒரு சில புறநடைகளும் உருவாகி உள்ளன என்பது மட்டும் தெரியும். :)

 

மேலும்.. ஐங்கரநேசன் சேரை நாங்கள் கல்வி கற்ற காலத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பித்தவர்.. அயலவர் என்ற வகையில் நன்கு தெரியும்..! அப்பவே நிறைய மனிதாபிமான நடவடிக்கைகளைச் செய்தவர். குறிப்பாக வறிய மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்க உதவியவர்..! ஆரம்பத்தில்.. ரெலோ அமைப்பைச் சார்ந்திருந்த போதும்.. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில்.. பகமை உணர்வு பாராட்டாதவர். போராளிகளின் தியாகங்களை மதிக்கத் தெரிந்தவர். மாணவர்களுடன்.. தேச விடுதலையின் தேவை குறித்து சிலாகிக்கும் பழக்கமும் உள்ளவர். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது?

பழைய மாணவர் சங்கம் இங்கிலாந்து, செவ்வேள் பற்றி தெரியவில்லை என்றால் எப்படி??

நீங்கள் திண்னவேலி போல இருக்கிறது!

பொன் ஜங்கரன் எனக்கும் பரீட்சயமானவர் தான். எனினும் சிறந்த நிர்வாகியாயும் அதேவேளை தன்னைப் புகழ்பெற வைக்கும், சில தானதர்ம நடவடிக்கைகளை செய்யும் போது எல்லோரும் கவனிப்பதை உறுதி செய்வார்.

பரீட்சை மண்டபங்களுக்கு வெளியே, காரில், loudspeaker வைத்து, வெளியே கடத்தப்பட்ட விணாத்தாளுக்கான விடைகளை, அறிவித்து, புலிகள் எச்சரிக்கையால், நிறுத்தி, ரெலோ பக்கம் போனார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரும்பிராய் செவ்வேளைத் தெரியும்!

 

ஆனால் செவ்வேளின்ர தேர்தல் விளையாட்டு, நீங்க சொல்லித்தான் தெரியும், நாதமுனி!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது?

பழைய மாணவர் சங்கம் இங்கிலாந்து, செவ்வேள் பற்றி தெரியவில்லை என்றால் எப்படி??

நீங்கள் திண்னவேலி போல இருக்கிறது!

பொன் ஜங்கரன் எனக்கும் பரீட்சயமானவர் தான். எனினும் சிறந்த நிர்வாகியாயும் அதேவேளை தன்னைப் புகழ்பெற வைக்கும், சில தானதர்ம நடவடிக்கைகளை செய்யும் போது எல்லோரும் கவனிப்பதை உறுதி செய்வார்.

பரீட்சை மண்டபங்களுக்கு வெளியே, காரில், loudspeaker வைத்து, வெளியே கடத்தப்பட்ட விணாத்தாளுக்கான விடைகளை, அறிவித்து, புலிகள் எச்சிக்கையால், நிறுத்தி, ரெலோ பக்கம் போனார்.

 

உந்தப் பழைய மாணவர் சங்கங்கள் நடத்திறவங்கள் பெரும்பாலான ஆக்கள் நேர்மையற்றவர்கள். மேலும்.. எந்த ஒரு பழைய மாணவ சங்கத்திலும் நாங்க சேரல்ல. சும்மா.. சோ.. காட்டிற உவைட நடவடிக்கைகளில் உடன்பாடில்லை. 1000 பவுனைச் சேர்த்திட்டு.. 50 பவுனை பள்ளிக்கூடத்துக்கு கொடுத்து ஊரை ஏமாற்றிக்கிட்டு இருக்காங்க. இவை சேர்க்கிற காசில 50% கொடுத்தாலே பள்ளிக்கூடமும்.. மாணவர்களும் நல்ல தரமான கல்வியை.. சேவைகளை வழங்கவும் பெறவும் முடியும்.

 

மேலும்.... நாங்க நல்லூரைச் சேர்ந்தவங்க.. நாதமுனி. நல்லூர்.. திருநெல்வேலி எல்லாம் பக்கம் பக்கம் தானே..! :)

 

என்ன தான் சொன்னாலும்... ஐங்கரநேசன் சேர் எங்களின் தனிப்பட்ட சில கோரிக்கைகளை நிறைவு செய்தவர். அன்றைய காலத்தில் வறுமைக்கோட்டில் இருந்த மாணவர்கள் சிலருக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் இலவசக் கல்வி அளித்தவர். இதில.. கேட்டுக் கொண்ட நாங்க.. பெரிய ஆக்கள் அல்ல. வறுமைக் கோட்டில் இருந்த மாணவர்கள் ஆண்டு 7 என்றால்.. நாங்க ஆண்டு 9.  சின்னப் பிள்ளைகளின் கோரிக்கை.. என்று தட்டிக்கழிக்காமல்.. தேவை என்ன.. என்பதை அறிந்து ஆராய்ந்து ஊக்குவிக்கும் பண்பு நிச்சயம் மற்றைய ஆசிரியர்களை விட ஐங்கரநேசன் சேரிடம் அதிகம் உள்ளது. அதற்கு எப்போதும் நாங்க மதிப்பளிக்கிறம். இங்கு லண்டனில் அவர் இருந்த போதும்.. சமூக நோக்கோடு செயற்பட்டிருக்கிறார். பார்ப்போம்.. இப்போ மக்கள் பிரதிநிதியாகி இருக்கிறார். அவருக்கு இடமளித்தால்.. நிச்சயம் நல்ல பல விடயங்களை மக்களுக்குச் செய்வார் என்றே நம்புகிறோம். :icon_idea:

 

Link to comment
Share on other sites

ஐங்க்ஸ் நல்ல மனுசன்.
 
டெலோ தாக்கப்படும் போது மோட்டசைக்கிளில் போய்க்கொண்டிருந்தவரை இழுத்து நிலத்தில் விழ்த்தி உருட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்போது  CD200 ஒன்று வைத்திருந்தார்.
 
 
ainks_zpsd5a6beec.png
 
:D  :D
Link to comment
Share on other sites

யாழ் இந்து கல்லூரி பற்றிய தகவல் என்பதால் இதை எழுதுகின்றேன் .

செவ்வேள் உரும்பிராய் இல்லை ஊரெழு .

ஐங்கரநேசன் ,செவ்வேள் இந்த இருவரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பர்வர்கள் .இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவர்கள் தான் . தமது புகழுக்காக எதுவும் செய்வார்கள் .உண்மைக்கும் நேர்மைக்கும் இவர்களுக்கும் வெகு தூரம்.

செவ்வேள் சில காலம் லண்டனில் எங்களுடன் ஒரே வீட்டில் இருந்தவர் .இம்முறையும் மாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக நின்றவர் .ஐங்கரநேசன் டியுட்டரி வைத்திருந்தது எங்களுடன் படித்த ரவிராஜ் வீட்டில் தான் .ஐங்கரநேசன் இப்போ மாகாணசபை உறுப்பினர் ஆனபடியால் படிக்கும் காலங்களில் நடந்த சில விடயங்களை எழுதவிரும்பவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து கல்லூரி பற்றிய தகவல் என்பதால் இதை எழுதுகின்றேன் .

செவ்வேள் உரும்பிராய் இல்லை ஊரெழு .

ஐங்கரநேசன் ,செவ்வேள் இந்த இருவரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பர்வர்கள் .இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவர்கள் தான் . தமது புகழுக்காக எதுவும் செய்வார்கள் .உண்மைக்கும் நேர்மைக்கும் இவர்களுக்கும் வெகு தூரம்.

செவ்வேள் சில காலம் லண்டனில் எங்களுடன் ஒரே வீட்டில் இருந்தவர் .இம்முறையும் மாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக நின்றவர் .ஐங்கரநேசன் டியுட்டரி வைத்திருந்தது எங்களுடன் படித்த ரவிராஜ் வீட்டில் தான் .ஐங்கரநேசன் இப்போ மாகாணசபை உறுப்பினர் ஆனபடியால் படிக்கும் காலங்களில் நடந்த சில விடயங்களை எழுதவிரும்பவில்லை .

 

அர்ஜீன் அண்ணா கோபத்தை விட்டுட்டு திரும்ப வந்து எழுதலாமே
Link to comment
Share on other sites

செவ்வேள் உரும்பிராய் அல்ல அவர் ஊரெழு இந்து கல்லூரியில் 80அல்லது 81 வர்த்தக பிரிவில் படித்தவர்

Link to comment
Share on other sites

கஜதீபன் ,சித்தாத்தனின் கருணையால் PLOTஇற்கு கிடைத்த ஆசனப்பகிர்வு மூலம் போட்டியிட்டு வென்றவர் .இப்படி தமிழரசுக்கட்சி யை சார்ந்தவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் வேறுகட்சிகளின் மூலம் களமிறங்கி வென்றுள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து கல்லூரி பற்றிய தகவல் என்பதால் இதை எழுதுகின்றேன் .

செவ்வேள் உரும்பிராய் இல்லை ஊரெழு .

ஐங்கரநேசன் ,செவ்வேள் இந்த இருவரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பர்வர்கள் .இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவர்கள் தான் . தமது புகழுக்காக எதுவும் செய்வார்கள் .உண்மைக்கும் நேர்மைக்கும் இவர்களுக்கும் வெகு தூரம்.

செவ்வேள் சில காலம் லண்டனில் எங்களுடன் ஒரே வீட்டில் இருந்தவர் .இம்முறையும் மாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக நின்றவர் .ஐங்கரநேசன் டியுட்டரி வைத்திருந்தது எங்களுடன் படித்த ரவிராஜ் வீட்டில் தான் .ஐங்கரநேசன் இப்போ மாகாணசபை உறுப்பினர் ஆனபடியால் படிக்கும் காலங்களில் நடந்த சில விடயங்களை எழுதவிரும்பவில்லை .

 

ரவிராஜ் - டாக்டர் ?? கநதர்மடம் ???
 
மறைந்து விட்டார்  அல்லவா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வேல், பள்ளிகூட நாட்களில் 'ஞானக்குழந்தை' படம் லிடொ திரைஅரங்கில் பார்க்க அழைத்துச் செல்வதாக மாணவர்களிடம் காசு சேர்த்தார்.

 

முழுவதையும் செலவழித்த பின்னர், அரங்கில் படமும் மாறிய பின்னர், கேட்ட பொடியளுக்கு, விசேட காட்சிக்க்கு ஒழுங்கு பண்ணி இருப்பதாக முதலில் சொன்னார்.

 

பின்னர் அடுத்து வரும் பக்தி படம் ஒன்று காட்டுவதாக சொன்னார்.

யாருக்கும் கொடுத்த காசு கிடைக்கவில்லை .

 

இப்ப கேட்டால், அந்த காசில் தான், இந்தியாவில், சிம்ரன் தங்கை, மறைந்த மோனலை வைத்து தமிழ் படம் எடுத்து விட்டேன், பார்க்க வில்லையா? என்று சொல்லுவார். 

Link to comment
Share on other sites

நாதமுனி ,

அதே கந்தர்மடம் டாக்டர் ரவிராஜ் தான் .அவர் இறந்தது பெரும்சோகம் .ஒரு தம்பி மோகன்ராஜ் இந்தியாவிலும் மற்ற இரு தம்பிமார் கனடாவிலும் இருக்கின்றார்கள் .அவர்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து படித்தேன் .

 

செவ்வேள் ,பிரசன்னாவை வைத்து காதல் டாட் கம் ,நந்தாவை வைத்து கோடம்பாக்கமும் எடுத்தார் .இலங்கையில் பனைமரக்காடு என்ற படத்திற்கு பூஜை போட்ட படி இருக்கு .லண்டனில் இருக்கும் போது ஆளை தூக்கி வாசிங் மெசினில் போடவேண்டும் என்று பகிடி விடுவோம் அவ்வளவு சுத்தம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,
 
நானும் கந்தர்மடம் தான். நிச்சயமாக உங்களை தெரிந்திருக்க வேண்டும். தனியே தொடர்பு கொள்கிறேன்.

 

டாக்டர் ரவிராஜின் அம்மாவும் அண்மையில் இந்தியா போனபோது காலமாகி விட்டார்.

 

செவ்வேல் யாழ் இந்துவுக்கு பஸ் வாங்க லண்டனில் காசு திரட்டி, அங்கே, முழுப்பணமும் கொடுத்து வாங்காது HP ல வாங்கி கொடுத்து, மாதாந்த காசு கட்டுப் படாமல், Finance Company' பஸ் தூக்க வந்ததாயும், வேறு பல இந்து பழைய மாணவர் சங்க உதவியில் இது நிறுத்தப் பட்டதாயும் கேள்விப் பட்டேன். உண்மையோ என்று தெரிய வில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வேல், பள்ளிகூட நாட்களில் 'ஞானக்குழந்தை' படம் லிடொ திரைஅரங்கில் பார்க்க அழைத்துச் செல்வதாக மாணவர்களிடம் காசு சேர்த்தார்.

 

முழுவதையும் செலவழித்த பின்னர், அரங்கில் படமும் மாறிய பின்னர், கேட்ட பொடியளுக்கு, விசேட காட்சிக்க்கு ஒழுங்கு பண்ணி இருப்பதாக முதலில் சொன்னார்.

 

பின்னர் அடுத்து வரும் பக்தி படம் ஒன்று காட்டுவதாக சொன்னார்.

யாருக்கும் கொடுத்த காசு கிடைக்கவில்லை .

 

இப்ப கேட்டால், அந்த காசில் தான், இந்தியாவில், சிம்ரன் தங்கை, மறைந்த மோனலை வைத்து தமிழ் படம் எடுத்து விட்டேன், பார்க்க வில்லையா? என்று சொல்லுவார். 

இங்கும் லண்டனில் செவ்வேள் என்னுமொருவருடன் சேர்ந்து ஒரு சொலிசிட்டர் பேர்ம் வைத்து நடத்தி பலரிடம் இமிக்கிரேசன் கேசுக்காக காசை வாங்கிவிட்டு இமிக்கிரேசன் கேசை அனுப்பாமல் பணத்துடன் சிறிலங்காவுக்கு ஓடிவிட்டதாக அவரிடம் காசு கொடுத்து ஏமாந்த ஒருவர் சொன்னார்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் லண்டனில் செவ்வேள் என்னுமொருவருடன் சேர்ந்து ஒரு சொலிசிட்டர் பேர்ம் வைத்து நடத்தி பலரிடம் இமிக்கிரேசன் கேசுக்காக காசை வாங்கிவிட்டு இமிக்கிரேசன் கேசை அனுப்பாமல் பணத்துடன் சிறிலங்காவுக்கு ஓடிவிட்டதாக அவரிடம் காசு கொடுத்து ஏமாந்த ஒருவர் சொன்னார்.

அவர்தான் இவர். Toterhnam court road இல் office வைத்து reject பண்ணுப்பட்டவர்களுக்கு கேஸ் வென்றுகொடுக்கின்றார் என்று கேள்விப்பட்டு ஒருவரோடு போய்ச் சந்தித்திருந்தேன். கதையைக் கேட்டுவிட்டு கேஸ் வெல்லேலாது என்று சொல்லியனுப்பிவிட்டார். ஆண்டிகள் மாதிரிப் போனதால் அனுதாபப்பட்டு கொன்சல்ரேசனுக்குக் காசும் வாங்கவில்லை! பல சொலிசிற்றர்கள் மாதிரி மற்றவர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு ஒழுங்கான வேலையைச் செய்யாமல் விட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் லண்டனில் செவ்வேள் என்னுமொருவருடன் சேர்ந்து ஒரு சொலிசிட்டர் பேர்ம் வைத்து நடத்தி பலரிடம் இமிக்கிரேசன் கேசுக்காக காசை வாங்கிவிட்டு இமிக்கிரேசன் கேசை அனுப்பாமல் பணத்துடன் சிறிலங்காவுக்கு ஓடிவிட்டதாக அவரிடம் காசு கொடுத்து ஏமாந்த ஒருவர் சொன்னார்.   

அவர்தான் இவர். Toterhnam court road இல் office வைத்து reject பண்ணுப்பட்டவர்களுக்கு கேஸ் வென்றுகொடுக்கின்றார் என்று கேள்விப்பட்டு ஒருவரோடு போய்ச் சந்தித்திருந்தேன். கதையைக் கேட்டுவிட்டு கேஸ் வெல்லேலாது என்று சொல்லியனுப்பிவிட்டார். ஆண்டிகள் மாதிரிப் போனதால் அனுதாபப்பட்டு கொன்சல்ரேசனுக்குக் காசும் வாங்கவில்லை! பல சொலிசிற்றர்கள் மாதிரி மற்றவர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு ஒழுங்கான வேலையைச் செய்யாமல் விட்டிருக்கலாம்.

 

 

இருவர்  கருத்திலும் பெரும் முரண்பாடுள்ளது

பார்த்தப்பா

ஒருவரைப்பார்த்து கை நீட்டும்முன் நாலு தரம் விசாரியுங்கோ.......... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ரவிராஜ் - டாக்டர் ?? கநதர்மடம் ???
 
மறைந்து விட்டார்  அல்லவா?

 

 

நாதமுனி ,

அதே கந்தர்மடம் டாக்டர் ரவிராஜ் தான் .அவர் இறந்தது பெரும்சோகம் .ஒரு தம்பி மோகன்ராஜ் இந்தியாவிலும் மற்ற இரு தம்பிமார் கனடாவிலும் இருக்கின்றார்கள் .அவர்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து படித்தேன் .

-----

 

டாக்டர் ரவிராஜ் இறந்து விட்டாரா? :o 

எப்போ.... ஏன்... இறந்தவர். அவரின் குடும்பத்திலுள்ள எல்லோரையும் தெரியும்.

அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே... தந்தை இறந்தவர்.

மோகன்ராஜ் சிறிது காலம் ஜேர்மனியில் இருந்தவர். பின் இந்தியா சென்று விட்டார்.

அவர்களின் வீட்டில் தான்... ஐங்கர நேசனின் "ரியூட்டரி" இருந்தது.

அதற்கு அருகில் செல்லத்துரை மாஸ்ரரும், Boxer ஜெகந்நாதன் மாஸ்ரரும் ரியூஷன் சொல்லிக் கொடுத்தவர்கள்.

Link to comment
Share on other sites

இந்த ஒரு பதிவே பல உண்மைகளை சொல்லி நிற்கிறது  ,

தங்களது சுயநல வாழ்வில் மட்டும் நேரத்தை செலவழித்ததால் சுற்றி வர என்ன நடக்கின்றது தெரியாமல் வாழ்ந்து தொலைத்துவிட்டார்கள் .

செவ்வேளா,ரவிராஜா ,ஐங்கரநேசனா உடன் பதில் தரக்கூடிய நிலையில் தான் எனது தொடர்புகள் ,

இதற்குள் நெடுக்கரின் பகிடி பெரும் பகிடி .

இந்த பெரிய யாழ் இந்து புலம்பெயர்பெயர் தேசத்தில் காசை அடித்து உலையில போடுகின்றார்கள் என்பது .

புலம் பெயர்ந்த யாழ் இந்து பழையமாணவர் செய்த உதவிகள் பட்டியல் ரொம்ப நீளம் .

சந்திரனை பார்த்து நாய் குரைப்பது வழக்கம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது தொடர்புகள் முன்னாள் இந்தியராணுவத் தளபதியிலிருந்து, சவுத் புளொக், கோடம்பாக்கம் என்று... நீண்டு கொண்டு போகும்.
உங்களுடன் எம்மை ஒப்பிடுவதே... மகாதப்பு.

Link to comment
Share on other sites

விளங்கினால் சரி ,

இந்திய இராணுவத தளபதிகளுடன் தொடர்பு வைக்க நான் நாட்டில் இருக்கவில்லை ,

டெல்கியில் நான் இருந்தது நோர்த் புளோக் ,கடைசி அந்த வித்தியாசம் ஆவது தெரியுமா .

வெளிநாடு வந்தமா வீடு வாங்கினாமா பிள்ளைகளை படிப்பிதாமா என்றில்லாமல் ஏனப்பா உங்களுக்கு வேண்டாதவேலை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தவிர யாருக்கும் எதுவும் தெரிய கூடாது. இந்த கட்சியில் யார் சேர விரும்புகிறீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் ரவிராஜ் இறந்து விட்டாரா? :o 

எப்போ.... ஏன்... இறந்தவர். அவரின் குடும்பத்திலுள்ள எல்லோரையும் தெரியும்.

அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே... தந்தை இறந்தவர்.

மோகன்ராஜ் சிறிது காலம் ஜேர்மனியில் இருந்தவர். பின் இந்தியா சென்று விட்டார்.

அவர்களின் வீட்டில் தான்... ஐங்கர நேசனின் "ரியூட்டரி" இருந்தது.

அதற்கு அருகில் செல்லத்துரை மாஸ்ரரும், Boxer ஜெகந்நாதன் மாஸ்ரரும் ரியூஷன் சொல்லிக் கொடுத்தவர்கள்.

 

தமிழ் சிறி,
 
நெருங்கி வருகிறீர்கள்,
 
மோகன்ராஜ் இருந்தது பிரான்சில்.
 
போக்ஸ்சர் ஜெகனாதர், tuition கொடுத்தாரா என்று தெரியவில்லை. செலத்துரை மாஸ்டர் applied maths கொடுத்தார்.
 
இந்த போக்ஸ்சர் ஜெகனாதர் மகள், tuition படிக்க, ஐங்கரநேசன் டியூஷன்  சென்டர் வந்தார். அங்கே தான் அந்த மாணவியை ஐங்கரன் மடக்கி காதலித்து மனைவி ஆக்கினார். இங்கே ஆனால் உள்ள போட்டு இருப்பார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்தான் இவர். Toterhnam court road இல் office வைத்து reject பண்ணுப்பட்டவர்களுக்கு கேஸ் வென்றுகொடுக்கின்றார் என்று கேள்விப்பட்டு ஒருவரோடு போய்ச் சந்தித்திருந்தேன். கதையைக் கேட்டுவிட்டு கேஸ் வெல்லேலாது என்று சொல்லியனுப்பிவிட்டார். ஆண்டிகள் மாதிரிப் போனதால் அனுதாபப்பட்டு கொன்சல்ரேசனுக்குக் காசும் வாங்கவில்லை! பல சொலிசிற்றர்கள் மாதிரி மற்றவர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு ஒழுங்கான வேலையைச் செய்யாமல் விட்டிருக்கலாம்.

கிருபன்,

இந்த செவ்வேளின் அலுவலகம் கிழக்கு லண்டனில்தான் இருந்ததாம் நீங்கள் வேறு யாரையோ தவறாக இவர் என்று நினைக்கின்றீர்கள். :)  

 

 

இருவர்  கருத்திலும் பெரும் முரண்பாடுள்ளது

பார்த்தப்பா

ஒருவரைப்பார்த்து கை நீட்டும்முன் நாலு தரம் விசாரியுங்கோ.......... :(  :(  :(

விசுகு, 
செவ்வேளைப் பற்றி நீங்கள் கிழக்கு லண்டனில் நாலு தரம் என்ன நூறுதரம் விசாரித்தாலும் நான் சொன்னதைத்தான் சொல்வார்கள்.  
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.