Jump to content

ஆயிரம் பச்சைப் புள்ளிகளுடன்... அகூதா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவிற்கு எத்தனை பச்சைகள் கொடுத்தாலும் காணாது  

 

அவருடைய இதயபூர்வமான தமிழினம் சார்ந்த பதிவுகளுக்கு 

ஒருமுறை தலை சாய்த்து வணங்கி வாழ்த்துகின்றேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை மடல்களை வரைந்திருப்பார், எம்மை எல்லாம் சிறு துளியேனும் செய்ய ஊக்குவிப்பவர்.

நன்றி என்ற வார்த்தைக்குள் அடக்க முடியாத அளவுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் அகூதா அண்ணாவிற்கு

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா. :)

Link to comment
Share on other sites

சக உறவுகள் அனைவருக்கும் நன்றிகள், குறிப்பாக யார் யார் இடமிருந்து எனக்கு ஒரு பச்சையுமே  கிடைக்கவில்லையோ அவர்களுக்கு  :D உங்கள் அனைவரிடமும் இருந்து பச்சைகளை பெறும் வரை தொடர்ந்து இணைந்து இருப்பேன்  :D 

 

உங்கள் அனைவரிடம் இருந்தும் நான் பல விடயங்களை கற்றவண்ணமே உள்ளேன். யாழ் களத்தை பார்க்கும்பொழுது எம்மால் எமது இனத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது தெளிவாகும். இதை உருவாக்கிய மோகன் அண்ணாவிற்கும் பல தடங்கல்கள் சிக்கல்கள் மத்தியிலும் சிறப்பாக நடாத்தி வரும் மட்டுறுத்தினர்களுக்குமே இந்த பச்சைகள் சமர்ப்பணம்.

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அகூதா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அகூதா அண்ணா!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அகூதா அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அகூதா..நீங்கள் பிறமொழி செய்திகளை மொழிபெயர்த்து தருபவர்.அத்துடன் எங்கள் விடுதலைப்போராட்டத்தின் கணணி மூலமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்பவர்.உங்களைப்போன்றோரின் கரங்கள் ஈழவிடுதலைக்கு என்றும் தேவை. :icon_idea:

Link to comment
Share on other sites

  • 4 months later...

சக உறவுகள் அனைவருக்கும் நன்றிகள், குறிப்பாக யார் யார் இடமிருந்து எனக்கு ஒரு பச்சையுமே  கிடைக்கவில்லையோ அவர்களுக்கு  :D உங்கள் அனைவரிடமும் இருந்து பச்சைகளை பெறும் வரை தொடர்ந்து இணைந்து இருப்பேன்  :D 

 

உங்கள் அனைவரிடம் இருந்தும் நான் பல விடயங்களை கற்றவண்ணமே உள்ளேன். யாழ் களத்தை பார்க்கும்பொழுது எம்மால் எமது இனத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது தெளிவாகும். இதை உருவாக்கிய மோகன் அண்ணாவிற்கும் பல தடங்கல்கள் சிக்கல்கள் மத்தியிலும் சிறப்பாக நடாத்தி வரும் மட்டுறுத்தினர்களுக்குமே இந்த பச்சைகள் சமர்ப்பணம்.

 

 

இப்படியான உறவு திடீரென  யாழுக்கு வராமல் நிற்பது கவலை அளிக்கிறது. அகூதாவுக்கு என்ன நடந்தது என கனேடிய உறவுகள் அறிய முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான உறவு திடீரென  யாழுக்கு வராமல் நிற்பது கவலை அளிக்கிறது. அகூதாவுக்கு என்ன நடந்தது என கனேடிய உறவுகள் அறிய முடியுமா?

 

எவ்வளவு உற்சாகமாக களத்தில் எழுதிக் கொண்டிருந்த‌ அகூதா, திடீரென்று வராமல் போனதை நினைக்க.. ஆச்சரியமாகவும், கவலையாகவு உள்ளது நுணாவிலான்.

அவர் களத்தில் யாருடனும் கோவித்துக் கொண்டு போனதாக நான் எண்ணவில்லை. அவரின் மனைவி வைத்தியத் துறையில்... முதுமானி (PhD) பட்டம் பெறுவதற்கு இறுதி ஆண்டு படித்துக் கொண்டுள்ளதாக, எங்கோ... ஓரிடத்தில் குறிப்பிட்ட ஞாபகம். அவரிற்கு உறுதுணையாக... சில பொறுப்புக்களை, இவர் எடுத்துச் செய்கின்றாரோ தெரியவில்லை.

 

சிலவேளை... அகூதாதான், நியானி என்று சிலர் சந்தேகப்பட்டதை... அவர் ரசிக்கவில்லையோ யாரறிவர்.

என்ன இருந்தாலும்.... அகூதாவின் செயல்பாடுகளால், வேறு யாரினதும்... அச்சுறுத்தலுக்கு உட்பட்டாரா? என்பதும் கவலைக்குரிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அவர்கட்கு, தமிழ்த்தேசத்தின் தங்கள் பற்ருறுதி யாவரும் அறிந்ததே, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்ளும் நேரம் இதுவல்ல என்பதால் தவிர்த்துள்ளேன். யாழ்களத்துக்கு வெளியே, தங்களது, எம்தேச விடுதலை நோக்கிய ஒவ்வொரு செயற்பாடுகளும் வெற்றிபெற எல்லாம்வல்ல இயற்கையை வேண்டுகிறேன். சில சந்திப்புகள் மற்றும் சந்துத் திருப்பங்கள் நாம் எதுவரை பயணம்செய்துள்ளோம் என்பதைக் கணக்குப்போடும் இடமாக அமைவதுண்டு, ஆக இவ்விடுகையையும் இவ்வேளையில் அவ்வாறே கொள்க. மேலும் தமிழ்த்தேசியத்தை விமர்சிக்கிறோம் என சிலர் புறம்கூறுவார்கள் அதானால் சங்கடமடையாதீர். எமது தேசத்தை மீட்பதற்கான போராட்டவடிவம் மாறியுள்ளதேயொழிய அதே விரைவுப்பாச்சலிலேயே தீர்மானிக்கப்பட்ட இலக்குநோக்கிச் செல்கின்றது என்பத தங்களும் ஏனைய உறவுகளும் புரிந்துள்ளீர்கள் என நாமறிவோம். இடையில் சிலர் இக்க்களத்தை தங்கள் அரிப்புகளுக்குச் சொறியுரஞ்சும் சொறிகல்லாகப் பயன்படுத்துவதைக் கண்டுகொள்ளாதீர்கள். காலம் சிலவேளை எனையும் தமிழ்த்தேசியத் துரோகியாக மாற்றியமைக்கலாம் அவ்வேளை எமைவிட வீரியம்மிக்க களப்பணியளர்கள் ஆயிரம்பேர் உருவெடுத்துவிடுவார்கள். இப்போது எம்பணி செய்துகிடப்பதே.

Link to comment
Share on other sites

அகுத்தாவும், துளசியும் யாழில் ஒரு "கனவுக் கன்னை" மாதிரி இணைந்திருந்தார்கள். அது யாழுக்கு அவர்களின் மிக மிக உபயோகமான காலம்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அகூதா..

Link to comment
Share on other sites

எவ்வளவு உற்சாகமாக களத்தில் எழுதிக் கொண்டிருந்த‌ அகூதா, திடீரென்று வராமல் போனதை நினைக்க.. ஆச்சரியமாகவும், கவலையாகவு உள்ளது நுணாவிலான்.

அவர் களத்தில் யாருடனும் கோவித்துக் கொண்டு போனதாக நான் எண்ணவில்லை. அவரின் மனைவி வைத்தியத் துறையில்... முதுமானி (PhD) பட்டம் பெறுவதற்கு இறுதி ஆண்டு படித்துக் கொண்டுள்ளதாக, எங்கோ... ஓரிடத்தில் குறிப்பிட்ட ஞாபகம். அவரிற்கு உறுதுணையாக... சில பொறுப்புக்களை, இவர் எடுத்துச் செய்கின்றாரோ தெரியவில்லை.

 

சிலவேளை... அகூதாதான், நியானி என்று சிலர் சந்தேகப்பட்டதை... அவர் ரசிக்கவில்லையோ யாரறிவர்.

என்ன இருந்தாலும்.... அகூதாவின் செயல்பாடுகளால், வேறு யாரினதும்... அச்சுறுத்தலுக்கு உட்பட்டாரா? என்பதும் கவலைக்குரிய விடயம்.

 

 

சிலர் அவரை சந்தேகப்பட்டு ஒரு குழுவாக இயங்குகிறார்கள். ஒருவராக இவ்வளவு செய்திகளை இணைக்க முடியாது என்று சந்தேகம் கூட வெளியிட்டார்கள்.இது அவருக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கோடைகாலம் என்பதால் நேரம் கிடைக்கவில்லை போல இருக்கு.. விரைவில் களம் திரும்பினாரென்றால் நல்லது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவின் பதிவுகள் யாழிற்கு வருபவர்களுக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும். குறிப்பாக ஈழவிடுதலையில் அதிக கவனத்தை ஈர்க்க வைத்த பதிவாளர்.அகூதா மீண்டும் வந்து தனது பணிகளைச் செய்வதால் எங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

கோடைகாலம் என்பதால் நேரம் கிடைக்கவில்லை போல இருக்கு.. விரைவில் களம் திரும்பினாரென்றால் நல்லது.. :D

என்ன ஒரு சிரிப்பு? அ அ 

 

அகுதாவை காணவில்லை என்றால் அது சிரிப்பா? அ அ 

 

( என்ன முகக்குறி போடலாம் என்பது நிச்சயமாக இல்லாததால் ஒன்றும் போடவில்லை)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.