Jump to content

ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை


Recommended Posts

ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சூடான கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விரைவில் விவாதத்துக்கு வரப்போகிறது. வாக்கெடுப்பும் நடக்கப் போகிறது.

இந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது.

இந்த எதிர்பார்ப்பு இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் தான் உருவாகியுள்ளது. காரணம் இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவுக்குப் போயுள்ளது. அதைவிட, இதன் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

இலங்கை அரசு இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க எந்தளவுக்கு முயற்சிக்கிறதோ அமெரிக்காகவும் அதேயளவுக்கு தீர்மானத்தை வெற்றிபெற வைக்க முனைகிறது.

பாகிஸ்தான்இ கியூபா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் அல்லது அதனை பலவீனப்படுத்தியாவது விடவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

ஆனால் தீர்மானத்தை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அரசதரப்பின் கருத்துகளில் இருந்து உணரமுடிகிறது. என்றாலும், அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. கிட்டத்தட்ட மேற்குலகிற்கு எதிரான ஒரு போரை நடத்தும் தோரணையில் அரசாங்கம் செயற்படுகிறது.

இது கருத்து ரீதியான மோதலுக்கும் அப்பால் குரோதமான போக்கையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. பிரதி வெளிவகார அமைச்சர் நியோமல் பெரேரா பங்கேற்ற- அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இது அரசாங்கம் எந்தளவுக்கு இராஜதந்திர ரீதியாக குழப்பமடைந்துள்ளது என்பதற்கு சாட்சியாகும்.

ஈரான், சிரியா, வடகொரியா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் இது போன்று நடந்திருந்தால் ஆச்சரியமில்லை. ஆனால் இலங்கையில் நடந்திருப்பது ஆச்சரியமான விடயம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் மேற்சொன்ன நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்த்து விடக் கூடிய நிலையை உருவாக்கி விடக்கூடும்.

ஜெனீவா களத்தில் நடக்கும் இராஜதந்திரப் போரை, கோலியாத்தும் சிறுவன் தாவீதும் மோதும் போர்க்களம் என்று கொழும்பு ஊடகங்கள் ஒப்பிடுகின்றன. அது உண்மை தான்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளை இலங்கை அரசு முரண்பட்டு மோதிக்கொள்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொடுக்கும் துணிவு தான் இந்தளவுக்கு இலங்கை நின்று பிடிப்பதற்குக் காரணம்.

புவிசார் அரசியல் சூழலை நன்றாக கவனித்து இலங்கை அதற்குள் புகுந்து விளையாட முனைந்தது. அதாவது சீனாவையும் ரஷ்யாவையும் இந்தியாவையும் மிகத்தந்திரமாகக் கையாள்வதன் மூலம் தனக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை உடைத்து விடலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது போல இந்தியாவின் முடிவு அமைந்து விட்டது.

ஜெனீவா தீர்மான விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா நழுவல் போக்கில் தான் இருந்தது. எதையும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தே வந்தது.

ஒரு கட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்திய நாடாளுமன்றத்தில் கூறிய கருத்து மிகவும் விந்தையாகவே இருந்தது. அமெரிக்காவின் தீர்மான வரைபு எல்லா நாடுகளுக்கு வழங்கப்பட்டு பல நாட்களுக்குப் பின்னர் இவர்கள் தீர்மான வரைபை இந்தியா படிக்கவில்லை என்று கூறியது வேடிக்கை.

இந்தியா இந்த விடயத்தில் எந்தளவுக்கு நழுவ முடியும் என்றே பார்த்தது. ஆனால் மாநிலக் கட்சிகளின் கையில் மத்திய அரசின் குடுமி இப்போது வலுவாகச் சிக்கியுள்ளதால் வேறு வழியிருக்கவில்லை. அதிலும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களே மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது தான் மிகப்பெரிய சோகம்.

அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தமது நம்பகத்தை காத்துக் கொள்ளாது போனால் தமிழ்நாட்டில் தமது இருப்பு பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் தோன்றத் தொடங்கி விட்டது.

எப்படியோ மன்மோகன்சிங் அரசு அழுத்தங்களுக்கு நின்று பிடிக்க முடியாமல் தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவிக்க இலங்கை அரசுக்கு அது இடியான செய்தியாகவே அமைந்தது. அதைவிட ஆபிரிக்க நாடுகளும் கூட எதிர்பார்த்தளவுக்கு கைகொடுக்கத் தயாராக இல்லை.

குறிப்பாக இந்தமாதத் தொடக்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பயணம் மேற்கொண்ட நைஜீரியா, கமரூன் போன்ற நாடுகளே தீர்மானத்துக்கு ஆதரவாக நிற்கின்றன. இவையெல்லாம் ஜெனிவாவில் இலங்கையின் நிலையைப் பலவீனப்படுத்தியுள்ளது.

இதனால் வாக்கெடுப்பு முடிவு பெரும்பாலும் இலங்கைக்குச் சாதகமாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. முடிவு எப்படி அமைந்தாலும், அரசாங்கம் கவலைப்படாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி கூறியதாக அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

தீர்மானம் தமக்குச் சாதமாக அமையாது என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டு விட்டதையே இது வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதையடுத்து பல தொடர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியரங்கிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால இனமோதல்கள் வெடிக்கும் என்ற தொனியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டிருந்தார். அந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துகள் விரும்பத்தகாத விளைவுகளைத் தான் தரும்.

இன்னொரு இனமோதலுக்கு நாடு தயாராக இல்லை என்றாலும், அதனைத் தூண்டும் வகையில் அரசிலுள்ளவர்களே கருத்துகளை வெளியிடுவதை சர்வதேசம் உன்னிப்பாகவே கவனிக்கும். இதுபோன்ற எச்சரிக்கைகள் மக்களிடையே பீதியை ஏற்றுபடுத்தவே செய்கின்றன.

அதேவேளை இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பிடித்து உள்ளே போட வேண்டும் என்ற குரல்களும் எழுகின்றன. இவையெல்லாம் கோபத்தை தமிழர்கள் மீது தீர்ப்பதற்கான இன்னொரு முயற்சியாகவே தெரிகிறது.

ஜெனிவா தீர்மான விடயத்தில் தமிழர்கள் மீது கோபத்தைத் தீர்ப்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்தத் தீர்மானம் தமிழர்களால் கொண்டு வரப்பட்டதும் இல்லை. இது தமிழர்களுக்கு முற்றிலும் சாதகமானதும் இல்லை.

ஆனாலும் இந்த விவகாரத்தை தமிழருக்கு எதிராக திருப்பி விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது நல்லிணக்க முயற்சிகள எந்தக் கட்டத்தில் உள்ளன என்பதற்குப் போதிய ஆதாரமாகியுள்ளது.

அதேவேளை, ஜெனிவா தீர்மானம் இலங்கைக்குப் பாதகமாக அமைந்தால் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையும் வெளிநாடுகளுடனான உறவுகளும் கடும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளன.

தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் அரசியல், இராஜதந்திர மட்டங்களிலும் மாற்றங்கள் வர வாய்ப்புகள் உள்ளன. எது நடந்தாலும், அரசாங்கம் அடுத்த ஆண்டுக்குள் நல்லிணக்கம் தொடர்பான உறுதியான நகர்வுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஏனென்றால் தீர்மான வரைபின்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

அந்த அறிக்கை பாதகமாக அமைந்து விட்டால், அடுத்து இன்னும் பல பாதகமான தீர்மானங்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே ஜெனீவா களத்தில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி அசட்டையாக இருக்க முடியாது.

இலங்கை வெற்றிபெற்றால் இன்னும் வலுவான பொறியொன்றை வைக்க மேற்குலகம் முனையும். தோல்வியடைந்தால், அடுத்த கட்டம் குறித்த தீர்மானிக்க நாள் குறிக்கும்.

எது எப்படியிருந்தாலும், நல்லிணக்க முயற்சிகள், பொறுப்புக்கூறுல், அரசியல்தீர்வு என்பன இனிமேல் இலங்கைத் தீவின் எல்லைகளுக்குள் மட்டும் முடங்கிப் போகும் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

http://www.tamilmirr...1-19-22-03.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.