Jump to content

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்


Recommended Posts

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்

02 ஏப்ரல் 2012

lg-share-en.gif

cheran-ezhuthuvathu2_CI.jpg

"மழை பெய்கிறது

ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது

தமிழர்கள் எருமைகளைப் போல

எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள்

ஈரத்திலேயே நடக்கிறார்கள்

ஈரத்திலேயே படுக்கிறார்கள்

ஈரத்திலேயே சமையல்; ஈரத்திலேயே உணவு

உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட

அகப்பட மாட்டான்."

மார்ச் மாதம் இருபத்திரண்டாம் நாள் இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு தமிழர்களில் பலருடைய – குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலருடைய – செயற்பாடுகளைப் பார்க்கிற போது பாரதியின் மேற்கூறிய வரிகள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (புலிகளாக இருந்த தமிழர்களை எருமைகளாக மாற்ற முற்படுகிறேன் எனத் தயவு செய்து என் மீது கோபம் கொள்ள வேண்டாம்!)

ஐ.நா அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு ஒரு கூட்டம் தமிழர்கள் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்டு அமெரிக்காவுக்கும் ஹிலரி கிளிண்டனுக்கும் நன்றி தெரிவித்தார்கள். இன்னொரு கூட்டம் தமிழர்கள் கனடாவிலுள்ள அமெரிக்கக் கொன்சலேற்றுக்கு முன்னால்கூடி நன்றிக் கண்ணீர் வடித்தார்கள். இன்னொரு கூட்டம் தமிழர்களே இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்குப் பின்நின்று உழைத்த கனடிய அரசுக்கு நன்றி கூறுவதற்காகக் கனடியத் தலைநகரான ஓட்டாவாவில் அமைந்திருக்கும் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அடுத்த வாரம் கூடப் போகிறார்கள். 1987 இல் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்ததும் அதன் பின்னர் நடந்தவையும் நாம் மறந்து விடலாம்! சிட்டுக் குருவிகளுக்குக் கூட அற்புதமான மூளை இருக்கிறது.

Bild_176.jpg

கனடாவைப் பொறுத்தவரை இத்தகைய செயற்பாடுகளுக்கு அமைப்பு சார்ந்து பின்னணியில் இருக்கின்றவர்கள் முன்னாள் விடுதலைப் புலிகளும் அவர்களது சார்பில் முன்பு இயங்கிய நிறுவனங்களும் என்பது ஒரு கேலிக்க்குரிய முரண்நகையாகும். கனடிய வரலாற்றிலேயே மிகவும் மோமான பிற்போக்குவாத பழமை பேணும், மக்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவாளர்களாக இருப்பதிலும் இந்த நிறுவனங்களுக்கு நாணம் கிடையாது. இது நாணயம் சம்பந்தப்பட்ட விடயம்.

ஐ.நா மனித உரிமைகள் அவையில் தீர்மானம் வெற்றி பெற்ற மறுநாளே அமெரிக்க அரசு முக்கியமான ஒரு பரிசை இலங்கைக்கு வழங்கியது. கடலோரப் பாதுகாப்பு, கடல் வலையக் கண்காணிப்பு சார்ந்த தொழில்நுட்பம், கண்காணிப்பு தொடர்பான உதாரிகள் இலங்கைக்கு வழங்கப்படுவதற்கு கடந்த முட்பது ஆண்டுகாலமாக இருந்த தடை மார்ச் 23 ஆம் நாள் நீக்கப்பட்டது, என்ற செய்தியை வாஷிங்டன் போஸட் நாளிதழ் வெளியிட்டது. பாதுகாப்பு, படைத்தளவாடங்கள், பயிற்சி போன்ற விடயங்களில் இலங்கை அரசுக்கு முக்கியமான சலுகை இது. கூடவே, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாகவும் அமெரிக்கா இலங்கைக்கு ஒரு பெரிய சலுகையை வழங்கியிருக்கிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடையும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதித் தடையையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதில் முன் நிற்கும் அமெரிக்கா இலங்கை அரசுக்கு வழங்கியுள்ள சலுகையின் படி எண்ணெய் இறக்குமதியில் 15 வீதத்தைக் குறைத்தால் மட்டுமே போதுமானது. இலங்கை தனது எண்ணெய் இறக்குமதியில் 93வீதத்தை ஈரானில் இருந்தே பெற்றுக் கொள்கிறது. எனவேதான் நான் ஏற்கனவே இந்தப் பத்தியில் குறிப்பிட்டதுபோல இலங்கை அரசு அமெரிக்க எதிர்ப்பை இவ்வளவு மூர்க்கத்தனமாகக் காட்டுவது ஒரு ‘தேசபக்தி’ நாடகமாகவே இருக்கமுடியும்.

இத்தகைய பின்னணியில் ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தீர்மானம் பற்றிய வேறு சில தரவுகளையும் இத்தீர்மானம் ஏற்படுத்திப்போகும் தாக்கங்களையும் பார்க்கலாம்.இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எத்தகைய கடப்பாடும் இலங்கை அரசுக்குக் கிடையாது. (Non-binding). மனித உரிமைகள் அவையில் கியூபாவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதை நாம் நினைவு கொள்ளலாம். மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்படுகிற எந்தத் தீர்மானமும் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்பதலோடும். அந்த நாட்டுடன் கலந்தாலோசிக்கப்பட்டுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஐ.நா. அவையின் ஒழுங்குமுறை அடிப்படை விதிகளில் ஒன்றாகும். இது நிரந்தரமானது. எனவே இந்திய அரசு கொண்டு வந்த ‘திருத்தம்’ என்று ஊடகங்கள் பல தூக்கிப் பிடித்த விடயம் பெரும் ‘பம்மாத்து’ என்பதை விட வேறு எதுவும் சொல்வதற்கில்லை. ஐ.நா. மனித உரிமை அவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அரசியல், புவியியல் - அரசியல், நாடுகளின் சுயநலம் பேணல் போன்ற, மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களே முன்னிலை வகிக்கின்றன.

ஐ.நா அவையின் தீர்மானங்கள் தமக்குச் சாதகமாக இல்லாத போது நாடுகள் எதிர்க்கின்றன. அதற்காக அவர்கள் முன்னிலைப்படுத்துகிற ஒரேயொரு காரணம் நாடுகளது ‘இறைமை’ ‘இறையாண்மை’ யில் எவருமே தலையிடமுடியாது என்ற பழைய வாதமாகும். இந்த இரண்டு சொற்களுமே அடிப்படையில் தவறானவை என்பது ஒருபுறம் இருக்க, உலகமயமாதலின் தீவிரம் எல்லா நாடுகளதும் ‘இறைமை’ யைத் திட்டமிட்ட முறையில் வேரறுத்து வருவதால் ‘இறைமை’ என்ற கோட்பாடே இப்போது யானை தின்ற விளாம்பழமாக மாறிவிட்டது. இன்னொரு தளத்தில். தமது சொந்த மக்களையே எண்ணுக் கணக்கற்றுப் படுகொலை செய்யும் அரசுகள் ‘இறைமை’ யைத் தூக்கிப் பிடிப்பதற்கான அறவலிமையை இழந்து விடுகின்றன. ‘இறைமை’ , "இறையாண்மை" என்பதை அரசுகளுக்கு உரியது என்று புரிந்து கொள்வதைவிட "இறைமை" மக்களிடமே உள்ளார்ந்து இருக்கிறது-இறைவனிடமும் ஆண்மையிடமும் இருந்து அது பெறப்படுவதில்லை என்ற புரிதலை நாம் முன்னிலைப் படுத்த வேண்டும். அதுதான் புதிய அரசியலாக இருக்க முடியும். இந்தப் புதிய அரசியல் ஐ.நா,அவையைத் தாண்டியது. பல்வேறு மக்களின் உணர்வொருமைப்பாட்டிலும் உணர்வுத் தோழமையிலும் (solidarity) உருவாவது.

இலங்கை பற்றிய ஐ.நா. அவைத் தீர்மானம் விவாதிக்கப்பட்ட போது ஐ.நா. அவைக்கான கியூபாவின் தூதர் அங்கதச் சுவையோடு ஒரு கேள்வியைக் கேட்டார், போரின் போது இலங்கை பயன்படுத்திய ஆயுதங்களால் நாற்பது வீதமானவற்றை அமெரிக்காவே வழங்கியது. பிறகு ஏன் இந்தத் தீர்மானத்தை நீங்களே முன் வைக்கிறீர்கள்? மீதி 60 வீதமான ஆயுதங்களை வழங்கியவர்களில் பலரும் அந்த அவையில் இருந்தார்கள்.

எனினும் மகிந்த அரசும் அதனுடைய தொண்டர் அடிப்பொடிகளும் இத்தகைய ‘மென்மை’ யான தீர்மானத்துக்கே சஞ்சலம் கொள்வது ஏன்? முதலாவதாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது பற்றிய வேலைத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும். இரண்டாவது, இடம் பெற்று போர்க் குற்றங்களைப் பற்றிய சுயாதீனமான விசாரணை பற்றிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, இவை இரண்டையும் பற்றிய இலங்கையின் நடவடிக்கைகள் பற்றி அறிக்கைகளை மனித உரிமைகள் அவை ஆணையாளர், மற்றும் சிறப்பு அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவே தொடர்ந்து நீண்ட காலத்துக்கு இலங்கை விடயம் ஐ.நா அவையில் இடம் பெறப் போகிறது. வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு முன்வராவிட்டால், அல்லது மறுத்தால் என்ன பின் விளைவுகள் நிகமும் என்பது பழையபடி சூதாட்டத்திலும் சதுரங்கத்திலும் தான் தங்கியுள்ளது. பொதுவாகவே சர்வதேசச் சட்டங்களும் ஐ,நா. தொழில்முறைகளும் மிக நீண்ட காலம் எடுப்பவை. இத்தகைய கால அவகாசம் இலங்கை அரசுக்கு மிகவும் வாய்ப்பானது. ஏனெனில், பலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்வது போல ஒவ்வொரு நாளும் திட்டமிட்ட முறையில் வடக்கு, கிழக்கின் சமூக, பொருளியல், குடியியல் மற்றும் நுண் அரசியல் நிலைமகளை மாற்றி விடலாம். இவ்வாறு ஐ.நா.அவைக்கும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமான கயிறிழுப்பில் இலங்கை அரசு சாமர்த்தியமாக வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்காக ஆனந்தக் கண்ணீர் சிந்திய தமிழர்கள், ஒரு கோப்பை, கண்ணீருக்குள் பழையபடி தமது தலையை மூழ்கடிக்க வேண்டியது தான்!

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

மேலே எழுதப்பட்ட கருத்து சில தரவுகளை மறைத்து (மறந்து?) தன்னையும் ஒரு தமிழின ஆர்வலராகவும் தொடர்ந்தும் அரசியல் மேடையில் ஒரு நாயகனாக வைத்திருக்கவும் எழுதப்பட்டுள்ளது:

1. இலங்கை அரசாங்கம் தாம் மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்ததாகவே கருதுகிறது. மனித உரிமை பேரவையில் நடைபெற்ற வாக்களிப்பின் போது தமக்கு சாதகமாக குறைந்த வாக்குகள் கிடைத்தனது என்ற விடயத்திற்காக இலங்கையின் தலைவர்கள் அமெரிக்காவையும் இந்தியாவையும் குறை கூறுகிறார்கள்.

2. இந்தியா முன்கூட்டியே தமது முடிவை அறிவித்தமையே இலங்கைக்கு ஆதரவாக இருந்த பல நாடுகள் தமது முடிவையும் மாற்றிக் கொண்டன என வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்தார். தமது பிரேரணை தோல்வியடையும் என்ற நிலை நிச்சயமாக காணப்பட்டு இருந்தால் அமெரிக்கா வேறு நாடுகள் மீது நெருக்குதலை கொடுத்திருக்கக் கூடும்.

3.

கனடா உலக அரசியலில் மென் சக்தியாக (soft power) உள்ளது, அமெரிக்கா தலையிட முடியாத இடங்களில் அது தலையிடக்கூடியதாக உள்ளது. நன்றி சொல்வதால் ஒன்றும் குறைந்து போவப்போவதில்லை.

4. அமெரிக்கா பாலஸ்தீன மக்களுக்கு வைத்தது போன்று ஆப்பு வைக்கக்கூடாது என்றால் அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டும். அதையே எம்மில் செய்யும் சிலர் மீது இவ்வாறான 'அக்கறை' போன்ற போர்வைக்குள் வைக்கப்படும் கருத்துக்கள் மக்களை ஏமாற்றாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே எழுதப்பட்ட கருத்து சில தரவுகளை மறைத்து (மறந்து?) தன்னையும் ஒரு தமிழின ஆர்வலராகவும் தொடர்ந்தும் அரசியல் மேடையில் ஒரு நாயகனாக வைத்திருக்கவும் எழுதப்பட்டுள்ளது:

1. இலங்கை அரசாங்கம் தாம் மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்ததாகவே கருதுகிறது. மனித உரிமை பேரவையில் நடைபெற்ற வாக்களிப்பின் போது தமக்கு சாதகமாக குறைந்த வாக்குகள் கிடைத்தனது என்ற விடயத்திற்காக இலங்கையின் தலைவர்கள் அமெரிக்காவையும் இந்தியாவையும் குறை கூறுகிறார்கள்.

2. இந்தியா முன்கூட்டியே தமது முடிவை அறிவித்தமையே இலங்கைக்கு ஆதரவாக இருந்த பல நாடுகள் தமது முடிவையும் மாற்றிக் கொண்டன என வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்தார். தமது பிரேரணை தோல்வியடையும் என்ற நிலை நிச்சயமாக காணப்பட்டு இருந்தால் அமெரிக்கா வேறு நாடுகள் மீது நெருக்குதலை கொடுத்திருக்கக் கூடும்.

3.

கனடா உலக அரசியலில் மென் சக்தியாக (soft power) உள்ளது, அமெரிக்கா தலையிட முடியாத இடங்களில் அது தலையிடக்கூடியதாக உள்ளது. நன்றி சொல்வதால் ஒன்றும் குறைந்து போவப்போவதில்லை.

4. அமெரிக்கா பாலஸ்தீன மக்களுக்கு வைத்தது போன்று ஆப்பு வைக்கக்கூடாது என்றால் அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டும். அதையே எம்மில் செய்யும் சிலர் மீது இவ்வாறான 'அக்கறை' போன்ற போர்வைக்குள் வைக்கப்படும் கருத்துக்கள் மக்களை ஏமாற்றாது.

Intention is to distrubt the just qnd right path of Eelam Tamils political goal.

But the Sri lankan genocide crowd is using ancient media spinning techniques with unknown so called Analysts.

This article is a sign that the Sri lankan genocide victims are on the right direction.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான ஜனனாயகத்துக்குள் வாழும் மக்களின் எமது இனநலம் சார்பாக ஏகோபித்த கருத்துக்களாக கொண்டிருப்பவை எவையோ, அவற்றின் மீதான காக்காய் எச்சங்களாக கறைபடிக்கும் இந்தக் கருமாந்திரன்ங்களின் எண்ணங்கள் மட்டும் வானத்தில் பறக்கின்றது!

செயல் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதபோதும், வாய் வைகுண்டம் ஏறுகின்றது!

Link to comment
Share on other sites

தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன்.

நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.

Link to comment
Share on other sites

சேரன் அப்படியாயின் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்? அமெரிக்கா இந்தியா கனடா எல்லாமே தமது நலனில் இருந்தே செயற்படுகின்றன என்பது எவரும் அறிந்தது.ஐ நா மனித உரிமை அவையும் ஒரு கருவியே என்பதையும் அறிவோம்.

எமக்கு இன்று இருக்கும் நடைமுறைச் சாத்தியமான அரசியல் என்பது, பூகோள நலன் சார் மு்ரண்படுகளைப் பாவித்து சிறிலங்கா அரசை சீன சார்பு நிலை எடுக்கத் தள்ளுவதே.இதன் மூலமே நலன் சார் முரண்பாட்டின் பாற்பட்டு அமெரிக்கா முதலான மேற்குலகம் சிறிலங்காவை நோக்கி பொருளாதரத் தடை முதலாய நடவடிக்கைகளை எடுக்கும்.மேலும் சிறிலங்கா அமெரிக்காவிடம் சரணடைந்தாலும் ,தம்ழருக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்க வேண்டிய கடப்பாடு மேற்குலகத்திற்க்கு இருக்கிறது.ஐ நா நிபுணர் குழு அறிக்கை சனல் நான்கின் ஆவணம் எல்லாம் எமக்குச் சாதகமானவையே.இவை நாம் எமது சொந்த வாழ்க்கையைத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கும் போது தானாக நடந்தவை அல்ல.

தொடர்ச்சியாக நாம் போராட வேண்டும்,, அதை எல்லாத் தளங்களிலும் எல்லா தரப்பினரிடமும் நாம் தான் கொண்டு செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதை எழுதினவர் போராடிக் களைச்சு விழுந்து போனாராம்.. அதுதான்.. இயலாமையில்.. மற்றவர்களைப் பார்த்து திட்டுறார். :lol:

இன்று இரண்டு வடிமான கருத்துக்களை முன்னாள் இன்னாள் துரோகிகள் எதிரிக்காக எம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பல வழிமுறைகளிலும் விதைத்து வருகின்றனர்..

1.விடுதலைப் புலிகளின் போர்க்களத் தோல்வி - இதனை முக்கியப்படுத்தி.. தமிழீழம் என்பதை சாத்தியமற்ற ஒன்று என்பது- இது துரோகிகள் தாங்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு எஜமானர்களிடம் (இந்திய.. சிங்கள) கூனிக்குறுகி மக்களின் உரிமைகளை தாரைவார்த்தை நியாயப்படுத்தி தாங்கள் செய்தது ஏதோ அதிமதிநுட்பச் செயற்பாடு என்பது போல காட்ட நினைக்கிறார்கள். ஆனால் அங்கு ஒன்றும் இல்லை.. பாவங்கள்.. எஜமானர்கள் பார்த்துப் போட்டால் வாலையாட்டிக் கொண்டு கவ்விற அளவில் தான் இவர்களின் பிழைப்பு போய்க்கிட்டு இருக்குது..!

2. புலம்பெயர் மக்கள் புலிகள் - இதன் மூலம்.. பெரும்பான்மையான புலம்பெயர் மக்களிடம் இன்றும் இருக்கும்.. தாயக.. விடுதலை நோக்கிய தமிழ் தேசிய உணர்வு.. சுயநிர்ணய கோட்பாடுகளை சிதைப்பது - எதிரி தனது படைப்பல ஆக்கிரமிப்பு மூலம் செய்ய முடியாததை இவர்கள் இங்கு புகலிடத்தில் அவனுக்காகச் செய்கின்றனர். தாயகத்தில் சிங்களப் படையோடும் இந்திய ஜவான்களோடும் நின்று கண்கட்டி.. தலையாட்டி.. காட்டிக் கொடுத்ததன்.. நவீன வடிவமாக... கொஞ்சம் உருமாற்றிய.. ஜனநாயக.. மாற்றுக்கருத்து சாயம் பூசிய.. முகங்களோடு.. இது நிகழ்த்தப்படுகிறது. தாயகத்தில் இன்னும் அதே பழைய நிலையும் பேணப்படுகிறது.

இவர்களிடம் உள்ள உண்மையான.. மக்கள் மீதான கருசணை என்பது ரின் உணவு உண்ணும் பூனைக்கு கருவாடு போல..! அடிப்படை கொள்கைகள்.. மக்கள் நலன்.. இராஜதந்திரம் எவையும் இவர்களின் எழுத்தில் வடிகட்டினாலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இந்த நிலையில்.. யாழ் இவற்றை உள்வாங்குவதன் நோக்கம்...????!

யாழும் தன்னை ஜனநாயக வாதின்னு.. வரிஞ்சு கட்டவா....???! எதற்கு இந்த வேண்டாத வேடம் நமக்கு..???!

எம்மவரின் சுத்துமாத்து அரசியலை கடந்த 35 வருடங்கள் கண்டுமா.... கடந்து வந்துமா.. நாங்கள் துரோகிக்கும் எதிரிக்கும்.. எதிர்க்கட்சிக்கும் வரவிலக்கணம் வகுக்க முடியாமல் கிடக்கிறம்..! இப்படியான ஒரு நிலையில் நமக்கு ஜனநாயகம் ஒரு கேடு..???!!!

அமெரிக்காவைப் பாருங்கள்.. தேர்தலை வைச்சு.. அரசு செய்யும் தனக்கு விரோதமான ஆட்சியாளர்களையே தூக்கி எறிய வேண்டும் என்று நினைத்தால் படைப்பலம் கொண்டும்.. அதை தூக்கி எறியும். ஜனநாயகம் என்பது.. எல்லாம்.. ஒரு தேவையோடு தான். அங்கு ஒன்றும் இலட்சியத் தன்மை காக்க வேண்டிய சட்டவிதியோ.. கட்டாயமோ இல்லை. நாம் ஒரு அடிமைப்பட்டுள்ள.. அடிமை விலங்கொடிக்க போராடும் இனம். எமக்கு ஜனநாயகத்தை விட அடிப்படை வாழ்வுரிமையை மீட்பதுதான் முக்கியம். அதை பலர் இன்னும் விளங்கிக் கொள்ளாமை.. எமது பலவீனம்..!

இவற்றின் ஒட்டுமொத்த விளைவே இவ்வாறான எழுத்துக்களும் அவறிற்கான பதிவிடல்களும்..! :icon_idea:

மேலும் இது செய்தியல்ல. கடந்த கால நிகழ்வுகள் தொடர்பில்.. தனிநபர்.. ஒருவரின் கருத்து. இதனை செய்திகள் பகுதியில் ஒட்ட என்ன தேவை இருக்கிறது..???????! அதன் நோக்கம் என்ன..??! இதனை ஆனந்தபுர நிகழ்வு நினைவு நாளில்.. முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை என்ன..?????????!

சிந்தியுங்கள்.. இத்தலைப்பிற்கான விடை கிடைக்கும்..! :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு முன்னாள் இரோசில் இருந்த நண்பர் ஒருவரைத் தெரியும்.அவரும் சேரனைப் போல் தான் , தமது சுய தொழில் வேலை என்று கண்ணும் கருதுமாக இருப்பார்கள்.பொது நோக்கிற்காக எவராவது எதாவது பண உதவி கேட்டால் , நீங்கள் செய்யிறது எல்லாம் பிரியோசனம் இல்லாத வேலை என்பார்.அப்ப உங்கட சரியான போராட்டம் எது என்று கேட்டால்.ஏகாதிபத்திய எதிர்ப்பு , மக்கள் போராட்டம் என்பார்.அப்ப எப்ப அதைத் தொடங்குவியள் எண்டு கேட்டா சொல்லுவார்.உங்கட கதை நல்லா இருக்கு நாங்கள் என்ன நெருப்புக்க போய் விழுகிறதோ என்று கேட்பார்.இவர்களுக்கு அந்தப் பாதை நெருப்பு என்று தெரியும் ஆனால் இவர்கள் செய்ய மாட்டார்கள், மற்றவனைப் போய் நெருப்பில் விழச் சொல்லுவார்கள்.

அந்தப் பாதை நெருப்பென்றால், நெருப்பின் சூட்டை நாம் குறைக்க முடியும்.போராடக் கூடிய மக்களுக்கு அந்தப் போராட்டத் தளம் என்பது பாதுகாப்பானதாக இருக்கக் கூடிய சூழலை நாங்கள் சர்வதேச நலன் சார் முரண்பாடுக்ினூடு உருவாக்க முடியும்.

தானும் ஒண்டும் செய்ய மாட்டங்கள் செய்யிறவங்களைக் கூறை சொல்லியே விமர்சகர்,பந்தி எழுத்தாளர். என்று பெயர் மாட்டிக் கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன்.

நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.

நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழைத்தல் மேம்பட்டு உய்தல் தொடர்பாக எனக்குத் தெரிந்த வரைக்கும்ம் நமக்கு இதைவிட அடுத்த தெரிவுகள் இல்லை. தெரிவை உருவாக்கக்கூடிய பலத்தை உருவாக்க பெரிதாக அரசியல் வெளியும் இல்லை.இருக்கிற இறிய அரசியல் வெளிக்குள் நுளைந்து அதைப் பெருப்பிக்க வேண்டிய அவசரத்தேவை நமக்கு உள்ளது. அந்த பணிகளின் சரியான ஆரம்பமே கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழர்கலது அமைப்புகளும் அமரிக்காவுக்கும், கனடாவுக்கும் மேற்க்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நன்றி கூறும் நிகழ்வுகள். இது காலத்தின் அவசியமாகும்.

ஆனாலும் இதுதொடர்பாக நீங்கள் வைக்கக்கூடிய ஒரே ஒரு காத்திரமான விமர்சனம் உள்ளது. தமிழர்களே நீங்கள் பெரிய நாடுகளோடு நிறுத்திக்கொள்கிறீர்கள் அது தப்பு. அது தொடர்பாக எனக்கு விமர்சனம் இருக்கு. பெரிய நாடுகளோடு நிண்றுவிடாமல் தீர்மானத்தை ஆதரித்த அத்தனை சின்ன நாடுகளுக்கும் நன்றி கூறுங்கள். அவற்றுட் சில கொள்கைரீயாகவும் எம்மை ஆதரிக்கும் நிலைபாடு எடுத்தவை. அத்தகைய நாடுகள் எமக்கு அமரிக்கா போல முக்கியமானவையாகும்.ஆதரித்த அத்தனை நாடுகளுக்கும் நாம் நன்றிகூறவும் அவற்றுடனான தமிழர் நட்புறவுச் சங்கங்களை அமைத்துத் தொடர்ந்து செயல்படவும் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழர் மெச்சிக்கோ நட்புறவு சங்கம் தமிழர் இந்தியா நட்புறவுச் சங்கம், தமிழர் மொறீசியஸ் நட்புறவுச் சங்கமென புலம் பெயர்ந்த நாடுகளில் நூறு நட்ப்புறவு மலர்கள் மலரட்டும். நடுநிலை வகித்த நாடுகளில் மலேசியா முக்கியமானது. இலங்கைக்கு ஆதரவான அந்த நாட்டை மலேசிய தமிழர்களின் போராட்டங்களே அசைத்தது. மலேசிய தமிழருக்கு நாம் நன்றி சொன்னோமா என உரத்துக் கேட்க்க வேண்டி உள்ளது. தமிழர் மலேசிய நட்புறவு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. இத்தகைய விமர்சனங்களுக்கே இடம் இருந்தது. அத்தகைய விமர்சனத்தையே உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்.

மேலும் நீங்கள் ஆதரித்த அல்லது நடுநிலை வகித்த நாடுகளுக்கும் நன்றி கூறுங்கள். உலக மனித உரிமை அமைப்புகள் பாசன தமிழ்நெற் வாகீசன் அமரர் மேரி கொலின் போன்ற சிங்கள தமிழ் சர்வதேச [பத்திரிகையாளர்கலையும் கவுரவியுங்கள் அது அடிப்படையில் முக்கியமானது என்பதை அழுத்திச் சொல்லியிருக்கலாம். அதனை நானும் ஆதரித்திருப்பேன்.

.

ஏனேனில் பிரபலமான ஒருசிலநாடுகளை வாழ்த்திவிட்டு முக்கியமான பல நாடுகலையும் நபர்களையும் மறந்து விடுவோம். இத்தகைய தவறுகள்தான் நாம் திரும்பத் திரும்ப இளைக்கிற தவறுகள் சிங்கள பத்தீரிகையாளர் பாசன தமிழ்வாணி வாகீசன் போன்ற உயிரைப் பணயம் வைத்து இனக்கொலை யுத்தக்குற்ற தகவல்களை சர்வதேச அரங்கிற்க்கு கடத்திவந்த நம் காலத்து நாயகர்க் நாயகிகள் பலரை நாம் ஏற்கனவே மறந்துபோனது கொடுமை. இதற்காக நம்மவரை எருமைகடா என்றால் நானும் ஆமோதிதிருப்பேன். நானும் உங்களோடு சேர்ந்து குரல் கொடுக்கவே விரும்புகிறேன் எனவே நமினத்தை இன்னும் பாதாலத்துக்குள் தள்ளிவிடக்கூடிய தங்கள் anarchistic அணுகுமுறையை விட்டு விட்டு. தோழரே தயவு செய்து மாற்றி யோசியுங்கள்.

நல்ல கருத்து கவிஞரே

Link to comment
Share on other sites

..கடைசியில பச்சை சிவப்பு குத்தும் முறை என்னையும் குழப்பிப்போட்டுது...பச்சை சிவப்பு குத்தாமல் ஆரு என்ன குத்தியிருக்கினம் என்று பார்க்க ஒரு வழி கண்டு பிடிக்கவேண்டும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் தானே சொல்றீங்கள் நிழலி சேரனைப் பிடிக்கும் என்பதால் தானே பச்சை குத்தினீங்கள் :D

Link to comment
Share on other sites

பொய் தானே சொல்றீங்கள் நிழலி சேரனைப் பிடிக்கும் என்பதால் தானே பச்சை குத்தினீங்கள் :D

..உண்மையாக குத்தி இருந்தன் என்றால் கமுக்கமாக இருந்து இருப்பன்...வாசிக்க முதல் ஆரு எவ்வளவு குத்தி இருக்கினம் என்று விடுப்பு பார்க்கப் போய் இப்படியாயிற்று... :mellow: இன்னும் கட்டுரையில் என்ன எழுதி இருக்குது என்று வாசிக்கவில்லை...இரவுதான் இதனையும், பொயட்டின் பதில் திரியையும் வாசிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் போன்றவர்கள் எல்லாம் ஏதும் மாற்றுத்திட்டம் இல்லை ஏதும் தீர்வுத்திட்டம்,மாற்று யொஒசனை ஏதும் வைத்துக்கொண்டா உபதேசம் செய்ய வெளிக்கட்டிட்டவை என்றா யாரும் நினைக்கிறீர்கள்? தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற கூட்டம் இவர்கள். தமிழ் தெரிஞ்ச ஒரே காரணத்துக்காக பப்ளிசிட்டிக்கு அலையும் கூட்டம்,

எங்கண்டை தலையெழுத்து வாசித்து தொலைக்க வேண்டி இருக்குது. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் சுப்புறமணி சாமி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணாவிற்கு நன்றி. 

எல்லா கருத்துக்களும் அருமையாக இருந்தன.  ஈழ தமிழர் காரியத்தில் கண்ணாய் இருப்பது கருத்துக்களில் பரிமாறப்படும் திட்டங்களில் தெரிகிறது. 

ஈழத்தின் சுப்புறமணி சாமி...

எங்களட்ட ஒரு சுப்புரட்டு சுவாமி ஆர்மியே இருக்கு ஈழத்தில். 

எங்களை விடமாட்டாங்கள்... அப்படி ஒரு கொலைவெறி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம்..........

ஆனால் இலக்கிய எழுத்து துறையில் சேரன் நீங்கள் எட்டி பிடிக்க முடியாத எடத்திட்கு சென்றுவிட்டார். அவருடைய எழுத்தின் அற்புதங்கள் எல்லைகளற்று விரிந்து கிடக்கிறது.

மாடு திட்டி காகம் கரைவதை நிறுத்தபோவதில்லை.

நான் நினைக்கிறேன் "காகம் திட்டி மாடு சாகபோவதில்லை" இப்படி வந்திருக்கவேண்டும் என்று.

எப்படி இருந்தால் என்ன எதையாவது எழுதிவிட்டோமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எருமைக்கு எம்மைப்பார்த்து கத்தும் அதிகாரத்தை எந்தக்கழுதை கொடுத்தது.??? :( :( :(

Link to comment
Share on other sites

இங்கே ஒரு விடயத்திற்கு எனக்கு விளக்கம் தேவை நாம் போடும சி.ப.புள்ளிகள் கருத்திற்கா,கருத்தை பிரசுரித்தவர்க்கா போய்ச்சேரும்???? நான் கருத்திற்கே புள்ளியிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மாகாகவியின் மகனான சேரனா??? அல்லது அவரது பெயரில் இன்னொருவனா??

ஏனென்றால், கொழுபிலிருக்கும்வரை சரிநிகர் பத்திரிக்கை நடாத்தி நடுநிலையாளனாகக் காட்டிக்கொண்ட இவர் பின்னர் கணடா சென்றவுடன் நடுநிலையென்றால் சிங்களத்தை ஆதரிப்பதுதான் என்று புதிய விளக்கம் கொடுத்தாராம் என்று கேள்வி.

ஆனால் மிக அண்மையில் இந்தியாவில் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் மிகவும் உண்மையாக, போர்ரக்குற்றவிசாரணைகளின் அவசியம் பற்றியிம், தமிழருக்கான தீர்வுபற்றியும், இந்த நூற்றாண்டின் இனவழிப்புப் பற்றியும் மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசியிருந்தார்.

இப்போதுதான் தெரிகிறது இவையெல்லாம் தனது பெயரை காப்பாற்றும் வேலைகளென்று.

பரதேசிகள்

Link to comment
Share on other sites

எண்பதுகளின் ஆரம்ப மத்தியில் (84) சேரனும் அவர் மனைவி ஊர்வசி டீச்சரும் கிழக்கில் இருந்த பொழுது அங்கு செயற்பட்ட போராட்ட அமைப்புக்களில் ஈடுபாடு இருந்ததில்லை.

இவர் எப்பொழு புலி அமைப்பில் சேர்ந்தார்?

Link to comment
Share on other sites

''தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்''

திரு சேரன் அவர்கள் கனடாவில் விரிவுரையளராம். நம்பமுடியவில்லை.

Link to comment
Share on other sites

''தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்''

திரு சேரன் அவர்கள் கனடாவில் விரிவுரையளராம். நம்பமுடியவில்லை.

இதையே மொழிபெயர்த்து சேரனின் சக விரிவுரையாளர்கள், மாணவர்களுக்கு அனுப்பினால்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில பலகலை கழகத்தில் என்ன படிப்பிகிறார் இவர்? 

பாவம் காசு கட்டி படிக்கிற பொடியள். 

Link to comment
Share on other sites

அரசியல் பாடம்தான். இவர்களைப் போன்றவர்கள், தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விடமாட்டார்கள். இவர் அரசியலில் முதுமானிப் பட்டம் பெற்றவராச்சே, ஏதாவது செய்வார் என்று பார்த்தால், எல்லாவற்றையும் விமர்சிப்பதுதான் இவரது வேலை. உலகத்தில் எங்கு என்ன மாநாடு நடந்தாலும் அங்கு இவர் ஆஜர். இவருக்கு இலக்கியத்தில்தான் ஆர்வம் என்றால் அதோடு நிற்க வேண்டியதுதானே? அதை விடுத்து, இவர் தானும் குழம்பி, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

ஒரு வேளை புலம் பெயர் தமிழ் சமூகம் எதையும் செய்யாமல் இருந்தால், இந்த புத்திசீவிகள் கீழே உள்ள மாதிரித்தான் எழுதுவினம்

".. ஒரு சிறிய இனத்துக்கு கிடைக்கும் ஒரு சின்ன சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சிறிய சந்தர்ப்பங்களை தவற விடும் போது பெரிய சந்தர்ப்பங்களுக்கான வாய்ப்புகள் அற்றுப் போகும். நாதி அற்று இருக்கும் எம் இனத்துக்கு நண்பர்களை உருவாக்கவும் உருவாகத் தேவையான புறச் சூழல் எழும்போது அதை சரியாகப் பயன்படுத்தவும் ராஜதந்திரமாக சிந்திக்க தெரிவதில்லை.இது தான் போராட்ட ஆரம்பகாலங்களிலும், போராட்டம் தீவிரமாக நடக்கும் போதும், இன்றும் தொடரும் நிலை. இதை மாற்றுவதற்குரிய செயல்களும் இன்னும் முளைவிடுவதாக இல்லை. இதனையே நான் போராட்டம் ஆரம்பமான காலம்தொட்டே எழுதியும் தகுந்த நேரங்களில் பேசியும் வந்துள்ளேன்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.