Jump to content

ஜெனிவா தீர்மானத்தை முற்றாக அரசு நிராகரிப்பு; நவநீதம்பிள்ளையானாலும் அனுமதியின்றி தலையிட முடியாது என்றும் அறிவிப்பு


Recommended Posts

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முற்றாக எதிர்க்கிறது. இந்தத் தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு எத்தகைய புதிய வழி முறைகளையும் அரசு ஏற்படுத்தாது.

தொடர்ந்தும் தனது வழியிலேயே அரசு பயணிக்கும். சர்வதேச அழுத்தங்கள் அரசை ஒருபோதும் எந்த விதத்திலும் எந்தவேளையிலும் கட்டுப்படுத்த மாட்டா. எமது நாட்டு விடயங்களுக்குள் யாரும் எமது அனுமதி இன்றித் தலையிட முடியாது.

அது ஐ.நா. ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் பொருந்தும். அனைத்தையும் கையாளும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. எனவே ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் யாரும் பயப்படத்தேவையில்லை. இவ்வாறு ஜெனிவாத் தீர்மானம் தொடர்பான தனது நிலைப் பாட்டைத் தெளிவாக அறிவித்தது இலங்கை அரசு.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத்தொடரின்போது அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக்காலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ஜி.எல்.பீரிஸ், நிமால் சிறிபாலடி சில்வா, ரவூப் ஹக்கீம் இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கூட்டாகத் தெளிவுபடுத்தினர்.

ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்குத் தாம் கையாண்ட மூன்று வழிமுறைகள் என்னவென்பது குறித்தும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெளிவுபடுத்திய இலங்கை அரசு, எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தது.

இலங்கைக்கு ஆதரவளிக்க இருந்தபோதிலும் அதிஉச்ச அழுத்தம் காரணமாகவே எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட அரசு, இந்தியாவைத் தவிர, ஒட்டுமொத்த ஆசியாவும் தமது பக்கமே இருந்தது என்றும் பெருமிதமடைந்தது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,

"ஜெனிவா மாநாட்டில் எத்தகைய முடிவு வந்தாலும் அதனை ஏற்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாம் பிரசாரப் பணிகளை முன்னெடுத்தோம்.

எமது நிலைப்பாட்டைப் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டன. இருப்பினும், அதி உச்ச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாகவே பிரேரணை நிறைவேற்றப்பட்டது. என்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாம் பிரசார வழிமுறைகளை அதாவது ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை மூன்று வழிமுறைகளைப் பின்பற்றிக் கையாண்டோம். கொழும்பிலிருந்தவாறு பிரசாரத்தை முன்னெடுத்தது முதல் வழிமுறையாகும். ஜெனிவா சென்று நடவடிக்கைகளைக் கையாண்டது இரண்டாவது வழிமுறையாகும். அத்துடன், தலைநகரங்களுக்குச் சென்று நிலைமைகளைத் தெளிவுபடுத்தி ஆதரவைத் திரட்டியது மூன்றாம் கட்டமாகும்.

எமது இராஜதந்திர வழிமுறை சிறந்தமுறையில் அமைந்தது என்றே குறிப்பிடவேண்டும். ஏனெனில், மேற்குலகைச் சார்ந்த சவூதி, கட்டார், குவைத் ஆகிய நாடுகள்கூட பிரேரணையை எதிர்த்து வாக்களித்தன. அதுமட்டுமன்றி, ஆபிரிக்க நாடுகளும் எமக்குப் பக்கபலமாக இருந்தன. நாம் இவ்வாறான நடவடிக்கைகளை கையாண்டிருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கும்.

நாம் ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் அரச தலைவர்களுடன் பேசியபோது அவர்கள் எமது நிலைப்பாட்டை ஏற்றனர். உகண்டா, கொங்கோ உள்ளிட்ட மூன்று ஆபிரிக்க நாடுகள் எமக்கு ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டை எடுத்து இறுதிவரை உறுதியாக இருந்தன. மேலும் 5 ஆபிரிக்க நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 11 ஆபிரிக்க நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்தபடியாக முஸ்லிம் நாடுகளும் எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்கின. அழுத்தம் காரணமாக ஜோர்தான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே அந்நாடு இருந்தது. ஆசியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவைத் தவிர, ஏனைய நாடுகள் பிரேரணையை எதிர்த்தன.

இந்தியாவின் முடிவு சரியோ, தவறோ இரு நாடுகளுக்குமிடையிலான உறவைப் பாதிக்காது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்தியாவின் அரசியல் நிலைமைகள், அந்நாடு முன்னெடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து நாம் நன்கு அறிந்துவைத்துள்ளோம். என்றார்.

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, "ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் எமது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில்தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இது மனித உரிமை ஆணையாளருக்கும் பொருந்தும் '' எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:

போரின் பின்னரான காலத்தில் நாங்கள் பல்வேறு விதமான முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளோம். அது போன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னேற்றங்களை வெளிக்காட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.

முக்கியமாக நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வேலைத்திட்டங்களை எமது அரசு முன்னெடுக்கும். குறிப்பாக இலங்கைக்கு எதிரான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட முன்னர் நான் அங்கு உரையாற்றியிருந்தேன்.

நான் அன்று நிகழ்த்திய உரையுடன் இந்தப் பிரேரணையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. காரணம் எனது அந்த உரையில் நாங்கள் எவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்போகின்றோம் என்பது குறித்து விரிவாக விளக்கியிருந்தேன்.

முக்கியமாக இராணுவம் மற்றும் கடற்படைத் தரப்பு மேற்கொண்டுவரும் விசாரணைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான எமது வேலைத் திட்டம் குறித்து நான் எனது உரையில் விடயங்களை உள்ளடக்கியிருந்தேன். என்றார்.

அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இதே கருத்தையே வலியுறுத்தினர். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=84162930827399027

Link to comment
Share on other sites

இதுவெல்லாம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றால், என்ன ம...க்கு அதை எதிர்ப்பதற்கு முயற்சித்தவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் நீங்கள் செயற்படுத்தணும் என்றா தமிழன் எதிர்பார்க்கின்றான்.

அப்படியே அழுங்குப்பிடியா இருங்கோ.

கொஞ்சமும் இறங்காதீர்கள்

இவர்கள் யார் உங்களுக்கு வகுப்பெடுக்க???

இந்த முடிவுக்கு எங்கள் மறைமுக ஆதரவு என்றும் உண்டு. :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் நீங்கள் செயற்படுத்தணும் என்றா தமிழன் எதிர்பார்க்கின்றான்.

அப்படியே அழுங்குப்பிடியா இருங்கோ.

கொஞ்சமும் இறங்காதீர்கள்

இவர்கள் யார் உங்களுக்கு வகுப்பெடுக்க???

இந்த முடிவுக்கு எங்கள் மறைமுக ஆதரவு என்றும் உண்டு. :icon_idea: :icon_idea:

சிங்களவன், லேசிலை.... மசிய மாட்டான் :rolleyes: .

அவனுக்கு, அவன்ரை பாசையிலை விளங்கப் படுத்த, ஐ.நா.வும், அமெரிக்காவும் முன் வரவேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தம் மறைமுகமாக எமக்கு உதவியுள்ளது.சிறிலங்காவின் அனுமதியுடன்தான் மனித உரிமை ஆணையகம் செயற்பட முடியும் என்ற திருத்தத்தைக் கூட நடைமுறைப்படுத்த சிறிலங்கா அனுமதியாது.எனவே அடுத்த முறை மிகவும் கடினமான வாசகங்களைக் கொண்ட தீர்மானம் வரும். அதில் திருத்தம் செய்ய யாரும் வற்புறுத்த முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.