Jump to content

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!


Recommended Posts

airtel%209514sd.jpg

 

1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
 
2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
 
3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
 
இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர்.
 
ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
 
4. விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர்.
 
அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
நன்றி: வினவு -
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

...

 

அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
 

 

 

vil-super.gif நல்ல கருத்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கைதட்டும் பெற்றோர், பிள்ளைகளின் நடவடிக்கை கைமீறும் போது தலையில் கை வைக்கதான் சரி.

 

குழந்தைகளுக்கான எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்க, இவர்கள் இப்படிப்பட்ட பாடல்களை ஊக்குவிப்பது ஏனோ?

 

படிக்கும் வயதிலேயே பேரும் புகழும் சேர, இவர்களின் நாட்டம் படிப்பில் குறைவாகவே இருக்கும் மற்றவர்களின் புகழ்ச்சியால்

Link to comment
Share on other sites

எல்லோரும் புகழ் என்ற மாயையில் இருக்கும் போது இதை யார் யாருக்குத் தெளிவு படுத்துவது?? சுப்பர்சிங்கரில் தெரிவானால் ஏதோ ஒரு தனிநாட்டையே கைப்பற்றி அதற்கு அரசானாகிய ஒரு உணர்வு எல்லோருக்கும். போட்டி இருக்கத்தான் வேணும், ஆனால் அது ஒரு ஆரோக்கியமானதாக இருந்தால் தான் வளரும் சமுதாயத்திற்கு நல்லது.. இது எல்லாம் எப்போதுதான் பெற்றோருக்கு புரியப்போகுதோ? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த எங்களுக்கும் பங்குண்டு,....

Link to comment
Share on other sites

இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் விட்டதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.. :o:huh:

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் அறவே போய்விட்டது .

 

தொடர்ந்து மனோ ,சித்திரா ,சுபா முகங்களையும் கோமான்சையும்  பார்க்க சகிக்கலை .

Link to comment
Share on other sites

"குற்ற உணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்லை

நான் யாரையும் ஏமாத்தவில்லை எமாறத் தயார இருக்கிறவங்களுக்கு வாய்ப்புத் தாறன்"

 

சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு நல்லாப் பெருந்தும்.  இது ஒரு வியாபராம். ரிவிக்காரன் விற்பனை செய்கின்றான் பார்வையாளன் வாங்குகின்றான். இது நல்ல பொருளா என்ற கேள்வி இப்போது எழுகின்றது.

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் விட்டதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.. :o:huh:

 

நானும் சுப்பர் சிங்கர் பார்ப்பதில்லை.  இவ்வாறான நிகழ்ச்சிகளில் பல போலித்தனங்கள் இருந்தது மட்டுமின்றி வெளிப்படையான பாரபட்சங்களைஅதிகமாகப் பார்க்க முடிந்தது.  அதிலும் சித்ரா மிகவும் மோசம்.  சுபபர் சிங்கரில் அவர் நடுவராக வந்த பின்னர், அவரது  குரலில் வந்த பாடல்களை மட்டுமே ரசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அதுக்கு தான் நாங்க சொல்லுறம் சன் சிங்கர் பாருங்க எண்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் அறவே போய்விட்டது .

 

தொடர்ந்து மனோ ,சித்திரா ,சுபா முகங்களையும் கோமான்சையும்  பார்க்க சகிக்கலை .

 

ஒருவருடத்திற்குமுன்..... சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கனேடியபிள்ளை படிப்புகள் தொடர்பாக  ஒரு கருத்தை வைத்திருந்தேன். அதற்கான உங்களின் பதிலை மீண்டுமொருமுறை அசைபோட்டு பார்க்கின்றேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=-J13WklIckI

 

இங்கே எதை இரசிக்கின்றார்கள்/இரசிக்கின்றீர்கள்.எவ்வளவு விகாரமான பாட்டு இது. இதனை ஒரு குழந்தையின் வாயிலிருந்து வரவழைத்து இரசிக்கின்றார்கள்.
 
சர்க்கஸ் கொம்பனிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாதாரிகள்.
Link to comment
Share on other sites

75 லட்சம் பெறுமதியான வீடு முதல் பரிசு என்பது நிகழ்ச்சியின் பரிமாணத்தையே மாற்றி விட்டது. அதனை அடைய எதனையும் செய்விக்க தொலைக்காட்சியும் பெற்றோரும் துணிந்து விட்டார்கள். இடையில் மாட்டுப்பட்டு தவியாய் தவிப்பது அப்பாவி குழந்தைகள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

75 லட்சம் பெறுமதியான வீடு முதல் பரிசு என்பது நிகழ்ச்சியின் பரிமாணத்தையே மாற்றி விட்டது. அதனை அடைய எதனையும் செய்விக்க தொலைக்காட்சியும் பெற்றோரும் துணிந்து விட்டார்கள். இடையில் மாட்டுப்பட்டு தவியாய் தவிப்பது அப்பாவி குழந்தைகள் தான்.

 

ஒரு  தகப்பன் என்பதால்

இவற்றை  ஊக்கவிப்பதில்லை

இவ்வாறான நிகழ்ச்சிகளை  பார்ப்பதில்லை

 

எல்லாமே வியாபாரமாகிவிட்டதால் வந்த வினை   இது.

இதை தடுத்து நிறுத்தமுடியும் என நினைக்கவில்லை

Link to comment
Share on other sites

எதுவுமே பார்பதில்லை. சீரியலும் பார்பத்தில்லை. ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் இயக்கிய சீரியல்கள் பார்க்காமல் விட்டதில்லை. உதாரணமாக
 
ரயில் சினேகம்..
கையளவு மனசு..
 
இப்போது எல்லாமே கன்றாவியாக இருக்கிறது. 
 
பிள்ளைகளை இவற்றைப் பார்க்கவிடுவதும் தப்பு.
 
ஒருவர் சொன்னார். சீரியல் குடும்த்துடன் பார்க்கும் பிள்ளை தன் தாயைக் கேட்டதாம்.. 
 
"முதல் இரவு என்றால் என்ன அம்மா ? " 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சின்ன வயசா இருக்கும் போது Wrestling அடிதடி ரீ.வி.யில இரவிரவா வாயை ஆஆஆ என்டு கொண்டு பாப்பம். 

இவ்வளவு அடி வாங்கியும் எப்பிடி உயிரோட இருக்கிறாங்கள் என்டு ஒரே ஆச்சரியம்  :icon_idea:

 

ஒரு வயசு வரதான் தெரிஞ்சது அதெல்லாம் ஒரு "Enertainment Show" என்று. வெற்றி தோல்வி முதலே நிட்சயிக்கப்பட்டுவிடும். அந்த வகை Enertainment  தான் இப்படியான நிகழ்ச்சிகளும். 

 

சமூகத்தை சிந்திக்கவிடாமல் செய்யிற வேலை தான் இது. நாட்டில என்ன நடந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் இரவு வேலையால வந்தா இப்படியான நிகழ்ச்சிகளை பாத்து உலகறியா சமூகமாக வாழ வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். இடையிடையே புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரையும் சொருகி நம்மளையும் கொஞ்சம் கவர்ந்திழுப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை வைத்து அறிவியல் போட்டி நடத்தினாலும், காரியமில்லை.
சினிமாப் பாடலை வைத்து.... என்ன போட்டியோ. கறுமம் பிடிச்சவங்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்க இப்படியான நிகழ்ச்சிகளையும்,
தாய்... தகப்பனை முட்டாளாக்க தினமும் சினிமாப் படங்களையும், நாடகங்களையும் போட்டு.....

தமிழ்ச்சனத்தையே..... கோமா நிலையில் வைத்திருக்க...

இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், போட்டி போடுகின்றன. 

Link to comment
Share on other sites

இது இவருடைய குமுறல் மாத்திரமல்ல, என்போன்ற பல அப்பாக்கள், பார்வையாளர்கள், நலன் விரும்பிகள் என பலர் இவர் முன்னே குமுறலுடன் உள்ளனர், என்ன ,,,,தென்புள்ள இவர் கொட்டித்தீர்த்துவிட்டீர்கள். நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு ஆசை.. நடுவர்கள் என்று இந்தப் போட்டிகளுக்கு வருவோரிடையே போட்டி நடத்தி.. அவர்களையும் அழவைச்சு.. ஆட வைச்சு பார்க்கனுன்னு..! :lol:

 

வரவர மனுசனுக்கு எதை ரசிக்கிறது.. எதை வளர்க்கிறது என்ன விவஸ்தையே இல்லாமல் போச்சுது.

 

இதில.. புலம்பெயர் தமிழர்கள்.. வெளிநாட்டில இருந்து கொண்டு.. வாக்கு வேற போடினமாம்..! சும்மா இருந்து கொண்டு.. ஏதேனும் சொறிவேலை செய்யுறதென்னா.. புலம்பெயர் தமிழர்களுக்கு சொர்க்கலோகம் போவது போல. அவைக்கென்ன... பொழுதுபோக்கு.. அங்க பிள்ளைகளை வறுத்தெடுக்கிறார்கள்..! :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் ஒருவரும் ஏன் தங்கள் கருத்தை இது வரை வைக்கவில்லை?...யாழில் கூட சுப்பர் சிங்கர் வீடியோக்களை கொண்டு வந்து இணைத்தார்கள்.இப்ப வாயை மூடிப் பேசாமல் இருக்கினம்

Link to comment
Share on other sites

இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் ஒருவரும் ஏன் தங்கள் கருத்தை இது வரை வைக்கவில்லை?...யாழில் கூட சுப்பர் சிங்கர் வீடியோக்களை கொண்டு வந்து இணைத்தார்கள்.இப்ப வாயை மூடிப் பேசாமல் இருக்கினம்

 

ரதி, நானும் கூட இந்த நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்த்து பல வீடியோக்களை இணைத்து இருக்கின்றேன். ஆனால் கடந்த சீசனுடன் இது வெறுத்துப் போச்சு. மிகவும் மிகைப்படுத்தப்பட்ட, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவு கொண்ட  ஒரு நாடகத்தினை பார்ப்பது போன்று உள்ளது. அத்துடன் இக் கட்டுரை சொல்வதில் உள்ள நியாயமும் சரியாக இருக்கின்றது.

 

ஜூனியர் சுப்பர் சிங்கரின் முதலாம் சீசனைப் பார்த்ததால் தான் என் மகனுக்கு இசைக்கருவிகள் மீது நாட்டம் வந்து டிரம்ஸ் வாசிக்க விரும்பினார். இப்ப அதில் ஓரளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். இன்னும் சில வருடங்களில் முழுமையாக படித்து முடித்து விடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி

Link to comment
Share on other sites

ரதி ,

சூப்பர் சிங்கர் இப்போ எப்படி மிகை படுத்துப்பட்டு வெறும் வியாபாரம் போல ஆகிவிட்டதோ அதே போலத்தான் உந்த கட்டுரையும் .

 

நான் இன்றும் சூப்பர் சிங்கர் ,ஜோடி நம்பர் வன்,எல்லாம் தவறாது பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன் .பிடித்தால் பார்க்கிறது பிடிக்காவிட்டால் சானலை மாற்றி விடுகிறது இதுதான் எனது பொலிசி .பிடிக்காத எத்தனை சினிமா படங்கள் பார்க்கின்றோம் (போன வாரம் சந்தோஸ்சிவனின் ராதாவின் மகள் கார்த்திகா நடித்த படம் ஒன்று பார்த்தேன் .அதற்கு பிறகும் நான் தூக்கு போட்டு சாகாமல் இருப்பதே பெரியவிடயம் )

அப்படிதான் இதுவும் .உதுக்குள் போய் மெசேஜ் ,அரசியல் வக்கிரம் பிசினஸ் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது .

 

சும்மா எல்லாவற்றிலும் சரி பிழை கண்டுபிடித்து அரசியல் செய்ய நான் வேலை வெட்டியில்லாத தமிழ்நாட்டு அரசியல்வாதியல்ல .

 

Link to comment
Share on other sites

ரதி ,

சூப்பர் சிங்கர் இப்போ எப்படி மிகை படுத்துப்பட்டு வெறும் வியாபாரம் போல ஆகிவிட்டதோ அதே போலத்தான் உந்த கட்டுரையும் .

 

நான் இன்றும் சூப்பர் சிங்கர் ,ஜோடி நம்பர் வன்,எல்லாம் தவறாது பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன் .பிடித்தால் பார்க்கிறது பிடிக்காவிட்டால் சானலை மாற்றி விடுகிறது இதுதான் எனது பொலிசி .பிடிக்காத எத்தனை சினிமா படங்கள் பார்க்கின்றோம் (போன வாரம் சந்தோஸ்சிவனின் ராதாவின் மகள் கார்த்திகா நடித்த படம் ஒன்று பார்த்தேன் .அதற்கு பிறகும் நான் தூக்கு போட்டு சாகாமல் இருப்பதே பெரியவிடயம் )

அப்படிதான் இதுவும் .உதுக்குள் போய் மெசேஜ் ,அரசியல் வக்கிரம் பிசினஸ் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது .

 

சும்மா எல்லாவற்றிலும் சரி பிழை கண்டுபிடித்து அரசியல் செய்ய நான் வேலை வெட்டியில்லாத தமிழ்நாட்டு அரசியல்வாதியல்ல .

 

இது அரசியல் இல்லை அர்ஜுன்.  இந்தக் கட்டுரை சமூகநோக்கிற்காக எழுதப்பட்டது.  குழந்தைகளைக் குழந்தைகளாகவே இருக்க, செயற்பட விடவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது.   உங்களால், அரசியலையும். சமூக அக்கறையையும்கூட பிரித்துப் பார்க்க முடியாமல் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.