Jump to content

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிங்கள், நீங்கள் தான் என்பது விடுதலைப்புலிகளின் தலைச்செயலகத்தின் அரசியல் பிரிவினர் என்று கூறாமல் கூறுவது எமக்கு புரிகிறது!!! .. இதற்குதானே நா.க.த.அ இருக்கிறது!! யார் இயக்குகிறார்கள்? எவர் எவர் இதன் பின் புலம் இருக்கிறார்கள்?? ... என ஆயிரம் கேள்விகள் கேட்க்கப்பட்டும் பதில்கள் இன்றுவரை இல்லை!!!

பதில் கேட்டு அதனை என்ன.. சிங்களவனுக்கு கடத்தப் போறீங்களா..! உங்களுக்குத்தானே எதிலும் நம்பிக்கை இல்லையே. பிறகெதற்கு.. கேள்வி.. பதில் எதிர்பார்க்கிறீங்களோ..??! எதிலும் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு பதில் அளிப்பதும் முட்டாள் தனம்..! :lol:

... இங்கு நா.க.த.அ இன் பிரச்சார பீரங்கியான GTV நிர்வாகம், யமனுக்கு ஆப்படித்த கேபியுடன் தொடர்புகளை வைத்திருக்கிறதென்று ஆதாரங்களுடன், ஒரு பேப்பர் செய்தி வெளியிட்டது!!!!! ... அச்செய்தி பொய்யாயின், ஏன் வழக்கு வைக்கவில்லை?

இதை நீங்கள் ஜி ரி வி நிர்வாகத்திடம் போன் போட்டுக் கேளுங்கோ..! ஒரு பேப்பர் வழக்குப் போட செய்தி போடவில்லை. இப்படியும் நடக்கிறதா என்ற கேள்வியை மக்களிடம் கொண்டு வந்தது. அதற்கான பதிலை ஜி ரி வி செயலில் காட்டி விட்டது. ஏமாந்தது நீங்கள்..! ஊரல்ல..! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

பீரிஸ், மகிந்த என்ன இந்தியாவும் நா.க.த.அ வை ஆகா ஓகோ என்று புகழும்!! ஏனெனின் அப்ப தான் நெடுக்கர் போன்ற நாலு அறிவாளிகள், ஓகோ ஆகா அவர்கள் வெட்டுகிறார்கள் புடுங்குகிறார்கள் என பின் நிற்பார்கள்/செல்வார்கள்! ... அவர்கள் நினைப்பது என்ன அவர்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும்!!

பி.கு: இங்கு நெடுக்கர் போன்ற அறிவாளிகள் என்பது விளங்கக்கூடியதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸ், மகிந்த என்ன இந்தியாவும் நா.க.த.அ வை ஆகா ஓகோ என்று புகழும்!! ஏனெனின் அப்ப தான் நெடுக்கர் போன்ற நாலு அறிவாளிகள், ஓகோ ஆகா அவர்கள் வெட்டுகிறார்கள் புடுங்குகிறார்கள் என பின் நிற்பார்கள்/செல்வார்கள்! ... அவர்கள் நினைப்பது என்ன அவர்களின் சிந்தனை செயல் வடிவம் பெறும்!!

பி.கு: இங்கு நெடுக்கர் போன்ற அறிவாளிகள் என்பது விளங்கக்கூடியதே!

அவர்கள் வெட்டுகிறார்களோ.. புடுங்கிறார்களோ.. நாட்டுக்காக எதையாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்கிறார்களே. அதுபோதும். உங்களை மாதிரி எல்லாத்தையும் குழப்படி அடிக்கல்லையே..! போராளிகளின் தியாகங்களைக் கூட உங்களின் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்தக் கூடிய இழிவான சிந்தனைகளை உங்களிடம் காண்கிறேன். இது வெட்கக் கேடானது..! :icon_idea:

Link to comment
Share on other sites

... இன்று மேற்குலகின் சிறிலங்கா தொடர்பான மாற்றம் எமக்காவல்ல .. அவர்களின் இராணுவ அரசியல் நலன் சார்ந்தது! .. நாளை கூட சிங்களம் மேற்கின் கால்களில் விழுந்தால், சிலவேளை மேற்கின் நிலைப்பாடு மாறலாம் ... இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் செய்யக்கூடியதை செய்ய வேண்டும்! .. தற்போது யார் குற்றியும் அரிசியாகட்டும், அதனை குழப்ப வேண்டாம்!

... கனடா,கடந்த காலங்களில் சிங்கள இனவழிப்புக்கு மற்றய நாடுகள் போல் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ... ஆயுதங்களும், பணமும், ஆலோசனைகளும் வழங்கியது. ஓ ஓ இவர்கள் எம்மை அழிக்க துணை போனார்கள், உங்கள் உதவிகள் எமக்கு எப்பவும் தேவையில்லை என்று கூட ... குளத்தை கோபித்துப்போட்டு, *** கழுவாமல் இருக்க இருப்பது போல் ... உந்த கூட்டங்களும் வேண்டாம்? ஆதரவும் வேண்டாம்? நாமே வெட்டுவம், விழுத்துவம் என்றும் இருக்கலாம்!!!????

அவர்கள் வெட்டுகிறார்களோ.. புடுங்கிறார்களோ.. நாட்டுக்காக எதையாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல் செய்கிறார்களே. அதுபோதும். உங்களை மாதிரி எல்லாத்தையும் குழப்படி அடிக்கல்லையே..! போராளிகளின் தியாகங்களைக் கூட உங்களின் சுயநலத்திற்காக கொச்சைப்படுத்தக் கூடிய இழிவான சிந்தனைகளை உங்களிடம் காண்கிறேன். இது வெட்கக் கேடானது..! :icon_idea:

அண்ணை நெடுக்கர் ... நீங்கள் தியாகம் என்பது ... கடந்த மாவீரர் நாள், அதற்கு முன் ஆடியதை கூறுகிறீர்களா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... இன்று மேற்குலகின் சிறிலங்கா தொடர்பான மாற்றம் எமக்காவல்ல .. அவர்களின் இராணுவ அரசியல் நலன் சார்ந்தது! .. நாளை கூட சிங்களம் மேற்கின் கால்களில் விழுந்தால், சிலவேளை மேற்கின் நிலைப்பாடு மாறலாம் ... இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் செய்யக்கூடியதை செய்ய வேண்டும்! .. தற்போது யார் குற்றியும் அரிசியாகட்டும், அதனை குழப்ப வேண்டாம்!

... கனடா,கடந்த காலங்களில் சிங்கள இனவழிப்புக்கு மற்றய நாடுகள் போல் ... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா ... ஆயுதங்களும், பணமும், ஆலோசனைகளும் வழங்கியது. ஓ ஓ இவர்கள் எம்மை அழிக்க துணை போனார்கள், உங்கள் உதவிகள் எமக்கு எப்பவும் தேவையில்லை என்று கூட ... குளத்தை கோபித்துப்போட்டு, *** கழுவாமல் இருக்க இருப்பது போல் ... உந்த கூட்டங்களும் வேண்டாம்? ஆதரவும் வேண்டாம்? நாமே வெட்டுவம், விழுத்துவம் என்றும் இருக்கலாம்!!!????

அண்ணை நெடுக்கர் ... நீங்கள் தியாகம் என்பது ... கடந்த மாவீரர் நாள், அதற்கு முன் ஆடியதை கூறுகிறீர்களா?????

மாவீரர்கள்.. தேசியக் கொடி.. தேசியம்.. தமிழீழம்.. தமிழர்கள்.. இவை தொடர்பில் உங்களோடு கருத்தாடுவது.. அநாகரிமானதாகவே தென்படுகிறது. உங்களுக்கும் இவற்றிற்கும் வெகு தூரம். பொறுமையாக பதிலிறுக்க முடியாதவர்கள்.. போர்த்திக்கிட்டு சுருண்டு தூங்குவது நல்லது.

உங்களோடு இதற்கு மேல் கருத்தாட நீங்கள் இராஜதந்திரியும் அல்ல.. நான்.. நாடு கடந்த அரசின் பிரதமரும் அல்ல..! அது அது தன்பாட்டில இயங்கிக் கிட்டு தான் இருக்கும். நீங்கள் திட்டிக்கொண்டே கிடவுங்கோ..!

நன்றி. :)

Link to comment
Share on other sites

திரி அமிகொஸ் கூட்டத்தில் வைத்து ஒபாமா ஸ்டீபன் கார்பரிடம் கேட்டாராம் "உங்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழர்கள் ஒட்டாவா வருகின்றார்கள் ,நீங்கள் ஏன் அங்கு போகாமல் இங்கு வந்தீர்கள் என்று "

கார்பர் சொன்னாராம் "அவங்க ரொம்ப நல்லவங்க ,சாதுவானவங்க ,வம்பு தும்பிற்கு போகாதவங்க ,என்ரை நிலையை புரிஞ்சு கொள்ளுவாங்க" என்றபடியால தான் இங்கு வந்தனான் .இருந்தாலும் அங்கு அவர்களின் ஒரு ஆய்வாளன் இருக்கின்றான் அவனுக்கு திரும்பி போய் sorry சொல்லவேண்டும் இல்லாவிட்டால் முழு தமிழரின் வாக்கையும் எனக்கு எதிராக திசை திருப்பிவிடுவான் .அப்புறம் அடுத்த தேர்தலுக்கு பின் நான் மொட்டைதான் போடவேண்டும்.

Link to comment
Share on other sites

முதலாவது விடயம். எல்லோரும் குழப்பிக் கொள்ளுகின்றீர்கள் போலுள்ளது. தேசியக் கொடி பிடித்தல், பிடிக்காமல் இருத்தல் பற்றியதான தலைப்பு இதுவல்ல. தேசியக் கொடி பிடிக்க வேண்டியதை நானே பல தடவை இங்கே வலியுறுத்திக் கூறியுமுள்ளேன். அது எங்களின் அடையாளம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், முன்பு 2009களில் யுத்தம் நடந்தபோது, மக்களின் படுகொலைகளை நிறுத்த வேண்டிய தருணத்தில் கொடி தொடர்பாக பிரச்சனைகளை முதன்மைப் பிரச்சனையாக உருவாக்கி தங்களை மட்டுமே விடுதலைப் போராட்டத்திற்கான விசுவாசத் தளம் என்றும், கொடி பிடிக்காத மற்றவர்கள் துரோகிகள் என்றும், அவர்களின் சொத்துக்களுக்கு சேதாரம் ஏற்படுத்தியதுமான செயற்பாடுகளின் அடிப்படையில், கடந்த ஒட்டாவா நன்றி கூறலின் போது கொடி பிடிக்காத இவர்கள் எப்படித் துரோகிகள் ஆகவில்லை என்பதே கேள்வி.

அது தான் இங்கு கேட்க முனைந்ததே தவிர, மற்றும்படி எவ்விதத்திலும் தேசியக் கொடி தொடர்பான விவாதமாக இருக்கவில்லை. அது இக்காலத்தில் தேவையுமற்றது.

தூயவனின் கருத்தே எனதும். 2009இல், எமது ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தபோது, அவர்கள் வரமறுத்ததற்கான காரணமே தாங்கள் "புலி முத்திரை" குத்தப்பட்டுவிடுவோம் என்பதுதான். அதனால்தான் அவர்கள் தேசியக் கொடியைத் தவிர்க்கச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அன்று அப்படிச் சொன்னவர்களைத் துரோகியாக்கிவிட்டு இன்று அவர்களே முற்றாக தேசியக் கொடியினைத் தவிர்த்து வருகிறார்கள். அப்படியானால், இப்போது இவர்களும் துரோகிகள்தானே? அவர்களது நிகழ்வுகளில் தேசியக் கொடி இருப்பதில்லை. அலுவலகத்திலாவது இருக்கிறதா என்பதும் சந்தேகமே. யாராவது உறுதிப்படுத்த முடியுமானால் உறுதிப் படுத்துங்கள்.

இன்று தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற தமிழ் எம்.பி.யான ராதிகா சிற்சபைஈசன்கூடத் "தமிழீழம்" என்ற சொல்லைத் தவிர்த்து வருகிறார். இதற்கு வாழும் புலம் பகுதியில் அகூதா கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது, இவர்களைப் பொறுத்தவரையில் ராதிகாவும் துரோகியாகத்தான் பார்க்கப்படவேண்டும். ஆனால், தங்கள் நிகழ்வுகளில் இவரை முன்னிலைப்படுத்தியே வருகிறார்கள்.

ராஜ்குமார் சுப்பிரமணியம் அவர்களுக்கு,

நீங்கள் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது மனிதஉரிமைகள் ஆர்வலராகவோ அங்கு சென்றிருந்தால் பயன் இருந்திருக்கும். நீங்கள் ஒரு தமிழ் அமைப்பின் பிரதிநிதி மட்டுமே. அத்தோடு, உங்களின் நுழைவுச்சீட்டு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியைக் கொண்டது. அந்த அனுமதியுடன் அங்கு சாதிப்பதும் மட்டுப்படுத்தப்பட்டதே. உங்களின் இந்தத் தகுதி எத்தகைய பலனைத் தரும் என்று வாசகர்களே தீர்மானிக்கட்டும். இதன்மூலம் நீங்கள் சாதித்ததின் அளவையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.

இதே வேளை, கனேடியத் தமிழ் காங்கிரசிலும் அரசியல் தெரிந்தவர்கள், மனிதஉரிமைகள் பற்றி அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சு வல்லமையும் நிறைய உண்டு. அவர்கள் நினைத்திருந்தால் நீங்கள் பெற்றுக் கொண்ட அதே நுழைவுச் சீட்டுடன் அவர்களும் அங்கு சென்றிருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும் ஜெனிவாவிற்குச் செல்ல முயற்சிக்கவில்லை. ஏனெனில் இந்த நுழைவுச் சீட்டுடன் அவர்கள் சென்று சாதிப்பதை விட அந்தத் துறையிலுள்ளவர்களை அனுப்பினால் அதிக பலனைத் தரும் என அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால்தான், அந்த துறையைச் சார்ந்தவர்களையே அனுப்பி வைத்தார்கள். நான் உங்களின் தனிப்பட்ட தகுதியைப் பற்றி இந்தக் கருத்துக்களத்தில் குறிப்பிடவில்லை என்பதை இந்த விளக்கத்திற்குப் பின்னராவது விளங்கிக் கொள்ளுங்கள். அது எனக்குத் தேவையுமற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கொடியை பிடிக்கக்கூடாது என்பார்கள் நாளை நாம் கடந்த முப்பது ஆண்டு காலப்போரட்டம் தவறு என்பார்கள் இவைகளை இன்று அனுமதித்தால் நாளை மறுநாள் கூறினாலும் கூறுவார்கள் எமது மாவீரர்கள் மடிந்ததும் தவறு இப்படியே எல்லாவற்றையும் தவறு என்றுகூறி நாம் எந்த இலக்கை அடைவதக்காக பயனித்தாமோ அதுவே தவறு என்று சொல்லி தங்களின் கருத்தை எம்மீது திணிக்கவும் முயற்சிப்பார்கள்.

என்னைபொறுத்தவரை எந்த கொடியுடன் என்ன இலட்சியத்துக்காக புறப்பட்டோமோ அதில் இருந்து விலகிச்செல்வதென்பது எங்களை நம்பி தங்கள் உயிரை துறந்த மாவீரகளுக்கு செய்யும் துரோகமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரி அமிகொஸ் கூட்டத்தில் வைத்து ஒபாமா ஸ்டீபன் கார்பரிடம் கேட்டாராம் "உங்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழர்கள் ஒட்டாவா வருகின்றார்கள் ,நீங்கள் ஏன் அங்கு போகாமல் இங்கு வந்தீர்கள் என்று "

கார்பர் சொன்னாராம் "அவங்க ரொம்ப நல்லவங்க ,சாதுவானவங்க ,வம்பு தும்பிற்கு போகாதவங்க ,என்ரை நிலையை புரிஞ்சு கொள்ளுவாங்க" என்றபடியால தான் இங்கு வந்தனான் .இருந்தாலும் அங்கு அவர்களின் ஒரு  ஆய்வாளன் இருக்கின்றான் அவனுக்கு திரும்பி போய் sorry சொல்லவேண்டும்  இல்லாவிட்டால் முழு தமிழரின் வாக்கையும் எனக்கு எதிராக திசை திருப்பிவிடுவான் .அப்புறம் அடுத்த தேர்தலுக்கு பின் நான் மொட்டைதான் போடவேண்டும்.

ஐயா! இப்படி இந்த விவகாரங்கள் எல்லாம் உங்கள் காதுக்குள் போட்டு முன்னோட்டம் பார்த்த பிறகுதான் இவர்கள் கதைப்பார்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.