Jump to content

சிறீலங்காவில் நாளொன்றுக்கு 50 பேர் பாரிசவாத நேயினால் மரணம்; சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]7045d786c3230de7ac8b85a58e269de0.jpeg[/size]

[size=4]சிறீலங்காவில் நாளொன்றுக்கு 40-50 பேர் பாரிசவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகரில் நூறு பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் பாரிசவாத நோய்க்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. அத்துடன் வைத்திய சாலைகளில் இடம்பெறுகின்ற மரணங்களுக்குத் துணைபுரியும் நான்காவது காரணியாக பாரிசவாதம் விளங்குகின்றது.

நாட்டில் பாரிசவாதத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தசாப்தமும் இருமடங்குகள் அதிகரித்து வருவதாகவும்.

அதிலும் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இந் நாட்டில் 15-59 வயதுக்கு இடைப்பட் டோரின் மரணத்திற்கு துணைபுரியும் காரணிகளில் பாரிசவாதம் 5 வது இடத்தில் உள்ளது என்பதும் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.

உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 6 மில்லியன் பேர் உயிரி ழக்கின்றனர். இம்மரணங்களில் 80 % வறிய மற்றும் வளர்முக நாடுகளிலேயே இடம்பெறுகின்றன என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் மதுப்பாவனை, புகை பிடித்தல் பாவனை தவிர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு உப்பு பாவனையைக் குறைப்ப துடன் மரக்கறி மற்றும் பழ வகைகளை அதிகளவில் உட்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.[/size]

[size=4]http://www.onlineuth...571562829328173[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.