Jump to content

ஜெனிற்ரா மரியாம்பிள்ளை (காவலூர் கண்மணி) அவர்களின் இரு நூல்கள் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் கனடாவில் இருந்து காவலூர் கண்மணியாக உலாவந்த திருமதி ஜெனிற்ரா மரியாம்பிள்ளை அவர்களின் இரு நூல்கள் இன்று தாயகத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன..

 

"வெள்ளைப்புறா ஒன்று" என்ற சிறுகதைத்தொகுதியும்

 

"மலர்கள் பேசுமா" என்ற கவிதைத் தொகுப்புமாக இரு நூல்கள் அறிமுகமாகின்றன.

 

அவருடைய இந்நூல்கள் பற்றிய மேலதிக விபரங்கள் தற்சமயம் கிடைக்கப்பெறவில்லை.. இருப்பினும் "கலாநிதி" இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையும் , எங்கள் கருத்துக்கள நண்பர் காவலூர் கண்மணி(ஜெனிற்ரா மரியாம்பிள்ளை) எழுதிய ஜன்னல் வழியையும் அவருடைய நூலின் வடிவத்தையும் இங்கு இணைக்கிறேன்.

 

என் ஜன்னல் வழி…..

என் ஜன்னலுக்கு கம்பிகளில்லை ஆனால் கனவுகள் நிறைய உண்டு. ஓடும் ரயிலை விட்டு வேகமாக ஓடிச்செல்லும் மரங்களைப்போல என் கனவுப் பிரதேசங்கள் பின்னோக்கி ஓடுகின்றன நினைவலைகள் மோதும் என் மனவானில் அதிர்வலைகளாய் என் ஞாபகத்திரையில் நங்கூரமிட்டுக்கிடந்த சில நிஜங்களும் பல நிழல்களும் கற்பனைச் சிறகு விரித்து காகித வானில் பறக்கத் தொடங்கிய பொழுதுகள் அற்புதமானவை. அது என் வாழ்வில் ஓர் இனிய அனுபவம். மழலையாய் மடி தவழ்ந்த என்னை தளிர்நடை நடக்கவைத்த கனடிய வானலைகள், அன்பான ஒலிபரப்பாளர்கள், பண்பான நேயர்கள், என் எழுத்துக்களைப் பாராட்டி ஊக்கமளித்த “யாழ்” இணைய நண்பர்கள் விடலைப்பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை சுவாசிக்க வைத்த என் அன்புத் தந்தை, பண்பாகப் பரிவாக வளர்த்த என் அன்பு அன்னை, வாழ்க்கைப் பாதையில் என்னை வளமாக வாழவைத்த என் அன்புக் கணவன், ஊக்கமும் ஆக்கமும் ஊட்டிய அன்புச் சகோதரா சகோதரிகள், அவர்களது குடும்பங்கள், என்னை மிளிர வைத்த என் பிள்ளைகள், எனக்குத் தமிழமுதூட்டிய ஆசிரியர்கள், என் வளர்ச்சிக்கு உதவிய உறவுகள் நட்புகள், என் ஆக்கங்களை நூல் வடிவில் உருவாக்க உதவிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும், என் நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த பேராசிரியர் கலாநிதி இ . பாலசுந்தரம் அவர்கட்கும், வாழ்த்தரை வழங்கிச் சிறப்பித்த என் அன்புச் சகோதரன் குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களுக்கும் நெஞ்சார நன்றிகள். அத்தனைக்கும் சிகரமாய் நித்தமும் எனைக்காக்கும் இறைவன் எனக்கு அளித்துவரும் அனைத்து நன்மைகளுக்கும் கரங்கூப்பி வணங்குகிறேன்.

 

என்றென்றும் அன்புடன்
ஜெனிற்ரா மரியாம்பிள்ளை

 

wf5i.jpg

 

 

 

 

1x4x.jpg

 

மலர்கள் பேசுமா!
அணிந்துரை
பேராசிரியர் இ. பாலசுந்தரம்
தமிழ்த்துறைத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கனடா வளாகம்.

உலகப்பந்தின் பல்வேறு நாடுகளிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தம் ஆக்க இலக்கியத்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். கனடாவின் இயந்திரமயமான வாழ்க்கையிலும் ஆக்க பூர்வமான புகலிட இலக்கியப்படைப்புகள் வெளிவந்தவண்ணமுள்ளன. கனடாத் தமிழ் கவிஞர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டனர். அத்தோடு தமிழ் கவிதைகள், சிறுகதைகள் என்பனவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
இலக்கியங்கள் மானுடத்திற்கு ஆக்கரீதியான சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் ஊட்டி அவை ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு பயன்பாடுடையனவாகவே அமைகின்றன. கலையும், கவிதையும் மானுடத்தை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கச் சாதனங்கள், கவிஞன் தன் வாழ்க்கை அனுபவங்கள் தனது விருப்பு, வெறுப்புகள், இலட்சியங்கள் என்பனவற்றை ஓசை நயத்துடனும், பொருட்சுவையுடனும் பாடி மானுட உணர்வுகபளைத் தட்டி எழுப்பும் வகையில் கவிதைகளைப்படைக்கும்போது அக்கவிதைகள் மக்கள் மனதில் பதிவாகின்றன. அவை, மக்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இவ்வகையில் ஜெனிற்ரா மரியாம்பிள்ளையின் “மலர்கள் பேசுமா” என்ற கவிதைத் தொகுப்பினை நோக்கும்போது தனிமனித உணர்வுகளையும் வாழ்வியலையும் சமுதாயப்பிரச்சனைகளையும் தொட்டுப்பார்த்து மானுடத்தைச் சிந்திக்க வைக்கும் வளமிக்க சொல்லாட்சிகளுடன் அமைந்த கவிதைத் தொகுதியாக இது இலக்கிய உலகில் உலாவருகிறது.
ஜெனிற்ரா கனடாவிற்கு வந்ததன் பின்னர் எழுதிய கவிதைகள் இப்போது “மலர்கள் பேசுமா” என்ற பெயரில் புகலிட இலக்கியத் தொகுதியாக வெளிவருகின்றது இவரது கவிதைகளைப் படிக்கும்போது இவரது உணர்வுகளும் ஆதங்கங்களும் சமூகப்பார்வைகளும் வெளிப்பட்டு நிற்பதோடு – தாயகப்பற்று – மொழிப்பற்று – இவற்றுக்கு மேலாக சமய ஈடுபாடு என்பனவும் இணைந்து காணப்படுகின்றன. ஜெனிற்ரா அவர்கள் கனடாவில் என்னிடம் இளங்கலைமானி படிப்பைத் தொடங்கி – தவிர்க்க முடியாத காரணத்தால் தன் படிப்பை இடை நடுவே நிறுத்திக் கொண்டார். இவர் தமிழ் மொழி மீது தணியாத தாகம் கொண்டவர். அதன் வெளிப்பாடே இக்கவிதைத் தொகுப்பு என்றும் கூறலாம்.
இக்கவிதைத் தொகுப்பிலே 30 தலைப்புகளில் கவிதைகள் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – காவலூர்கனவுகள் – அழகுக்காட்சிகள் – உயிர்த் தியாகங்கள் – சாதியக்கொடுமைகள் – யேசு குமாரனின் அருட்பெருமை –சிவராத்திரி மகிமை – வாழ்விலேற்படும் இழப்பின் துயரங்கள் – காதல் – திருமணம் என்பவற்றிலேற்படும் விரக்திகள் – தாய்ப்பாசம் – தந்தையின் அருமை – நன்றியுணர்வு – வாழ்வின் அவலங்கள் – அன்னையர் தினம் – உலக இளைஞர் தினம் – தமிழ் மொழி மீதான அதீத பற்று – கனடா வாழ்க்கை – சிகரெட்டின் கொடுமை எனப்பல்வேறு விடயங்கள் பற்றிய அவரது அவதானிப்பும் அனுபவங்களும் கவிதைகளாக விரிந்துள்ளன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பொருளடிப்படையில் வகுத்துத் தரப்படாவிட்டாலும் கவிதைத் தலைப்புகள் வாசகருக்கு எளிதில் கவிதைப் பொருள்நிலை உணர்த்துவதாக அமைகின்றன.
இத்தொகுப்பின் முதலிலுள்ள – “காவலூர் கனவுகள் கண்களில் – அதன் கலைந்திட்ட நினைவுகள் நெஞ்சினில்” என்ற கவிதையில் வரும் பாடல்வரிகள் நம் எல்லோரையும் ஈழத்துக் காவலூருக்கே அழைத்துச் செல்கின்றன. காவலூரின் சுகமான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆசையை நிரந்தரமாய் நெஞ்சில் தாங்கி இக்கட்டிடக் காட்டிற்குள் எனக் கனடாவாழ் காவலூர் காவலூர் மக்களுக்கு கூறுவதாக அமையும் செய்தி அனைத்து இலங்கைத் தமிழினத்திற்கும் ஏற்புடையதாகும். இவ்வரிகள் ஜெனிற்ராவின் தயாக உணர்வின் ஆழத்தைத் தொட்டு நிற்கின்றன. அச்சமென்பதில்லை (11) என்ற கவிதை அவர் யேசுபிரானிடம் கொண்ட அதீத பக்தியை புலப்படுத்துகின்றது.
ஆயுள்கைதி (15) என்ற கவிதை புகைப்பிடிப்போர் அனைவரும் சுவைத்துப் படித்துத் தம்மைத் திருத்திக்கொள்ள வைக்கும் ஆற்றல் கொண்டது. சிகரெட்டின் கொடுமைபற்றி இவ்வாறு சுவைபட எழுதிய கவிதையை நான் எங்கும் படித்ததில்லை. இவரது கவிதைத் தொகுப்பில் உருவகக்கவிதைகள் பல இடம்பெற்றுள்ளமையை வாசகர் படித்துச் சுவைக்கும்போது இத்தொகுப்பின் சிறப்பை உளர்ந்து கொள்வர். ‘அகரம் என்னும் சிகரம்” என்ற கவிதை அத்தொகுப்பின் உலருவகக்கதைகளில் தலைசிறந்து காணப்படுவது மட்டுமின்றி தமிழ்மொழி மீதான ஜெனிற்ராவின் தீராக்காதலையும் அதன் உரிமைக்குக் குரல் கொடுக்கும் பக்குவத்தையும் உணரக்கூடியதாக உள்ளது என்பதைப் பினவரும் வரிகள் உணர்த்துகின்றன.
“என் அன்னை பூமியது அவல நிலையொழிந்து செங்கம்பளம் விரித்து எனைச் சேர்க்கும் நாள்வரைக்கும் நான் அள்ளி முடிக்கும் அளகம் பாரமென்றாள்”
புலம்பெயர்ந்து வாழும் எம்மவர் தாயகத்தில் மேற்கொள்ளும் மணமகள் தேடும் படலத்தை மிகச்சுருக்கமாக தந்திருக்கும் பாணி பாராட்டத்தக்கது. நிலையாமைத் தத்துவம் கேட்பதற்கு வெறுப்பைத் தருவதாயினும் –“ மலர்கள் பேசுமா” – (25) என்ற இவரது கவிதையைப் படிக்கும்போது வாழ்க்கை நிலையாமையின் உண்மை புரியும்! உலக இளைஞர் தினம் பற்றிய இவரது நீண்ட கவிதை இளைஞர்கள் படித்துச்சுவைக்கவேண்டிய ஒன்றாகும்.
தாயகத்தை – உறவுகளை – தமிழ்மொழியை – பண்பாட்டை விட்டகன்று நாட்டில் பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழும் எம்மினத்தில் ஒரு சாரார் தாயக உணர்வோடும் , மொழிப்பற்றோடும் ஆக்க இலக்கியங்களைப் படைக்கும்போது அவர்களைப்பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாழ்த்து செனிற்ரா மரியாம்பிள்ளைக்கும் உரியதாகிறது. எழுத்தாற்றல் மிளிரும் இக்கவிஞர் மேலும் தொடர்ந்து பல ஆக்கங்களை புகலிடத்தளத்திற்கு வழங்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

இ . பாலசுந்தரம் – ரொறன்ரோ – 10.03.2014

 

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

காவலூர் கண்மணி அக்காவுக்கு நல்வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணியை வாழ்த்துவதில், இரு மடங்கு மகிழ்ச்சி எனக்கு!

 

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1x4x.jpg

 

மலர்கள் பேசுமா!

அணிந்துரை

பேராசிரியர் இ. பாலசுந்தரம்

தமிழ்த்துறைத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கனடா வளாகம்.

 

 

உலகப்பந்தின் பல்வேறு நாடுகளிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தம் ஆக்க இலக்கியத்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். கனடாவின் இயந்திரமயமான வாழ்க்கையிலும் ஆக்க பூர்வமான புகலிட இலக்கியப்படைப்புகள் வெளிவந்தவண்ணமுள்ளன. கனடாத் தமிழ் கவிஞர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டனர். அத்தோடு தமிழ் கவிதைகள், சிறுகதைகள் என்பனவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

இலக்கியங்கள் மானுடத்திற்கு ஆக்கரீதியான சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் ஊட்டி அவை ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு பயன்பாடுடையனவாகவே அமைகின்றன. கலையும், கவிதையும் மானுடத்தை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கச் சாதனங்கள், கவிஞன் தன் வாழ்க்கை அனுபவங்கள் தனது விருப்பு, வெறுப்புகள், இலட்சியங்கள் என்பனவற்றை ஓசை நயத்துடனும், பொருட்சுவையுடனும் பாடி மானுட உணர்வுகபளைத் தட்டி எழுப்பும் வகையில் கவிதைகளைப்படைக்கும்போது அக்கவிதைகள் மக்கள் மனதில் பதிவாகின்றன. அவை, மக்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இவ்வகையில் ஜெனிற்ரா மரியாம்பிள்ளையின் “மலர்கள் பேசுமா” என்ற கவிதைத் தொகுப்பினை நோக்கும்போது தனிமனித உணர்வுகளையும் வாழ்வியலையும் சமுதாயப்பிரச்சனைகளையும் தொட்டுப்பார்த்து மானுடத்தைச் சிந்திக்க வைக்கும் வளமிக்க சொல்லாட்சிகளுடன் அமைந்த கவிதைத் தொகுதியாக இது இலக்கிய உலகில் உலாவருகிறது.

ஜெனிற்ரா கனடாவிற்கு வந்ததன் பின்னர் எழுதிய கவிதைகள் இப்போது “மலர்கள் பேசுமா” என்ற பெயரில் புகலிட இலக்கியத் தொகுதியாக வெளிவருகின்றது இவரது கவிதைகளைப் படிக்கும்போது இவரது உணர்வுகளும் ஆதங்கங்களும் சமூகப்பார்வைகளும் வெளிப்பட்டு நிற்பதோடு – தாயகப்பற்று – மொழிப்பற்று – இவற்றுக்கு மேலாக சமய ஈடுபாடு என்பனவும் இணைந்து காணப்படுகின்றன. ஜெனிற்ரா அவர்கள் கனடாவில் என்னிடம் இளங்கலைமானி படிப்பைத் தொடங்கி – தவிர்க்க முடியாத காரணத்தால் தன் படிப்பை இடை நடுவே நிறுத்திக் கொண்டார். இவர் தமிழ் மொழி மீது தணியாத தாகம் கொண்டவர். அதன் வெளிப்பாடே இக்கவிதைத் தொகுப்பு என்றும் கூறலாம்.

இக்கவிதைத் தொகுப்பிலே 30 தலைப்புகளில் கவிதைகள் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – காவலூர்கனவுகள் – அழகுக்காட்சிகள் – உயிர்த் தியாகங்கள் – சாதியக்கொடுமைகள் – யேசு குமாரனின் அருட்பெருமை –சிவராத்திரி மகிமை – வாழ்விலேற்படும் இழப்பின் துயரங்கள் – காதல் – திருமணம் என்பவற்றிலேற்படும் விரக்திகள் – தாய்ப்பாசம் – தந்தையின் அருமை – நன்றியுணர்வு – வாழ்வின் அவலங்கள் – அன்னையர் தினம் – உலக இளைஞர் தினம் – தமிழ் மொழி மீதான அதீத பற்று – கனடா வாழ்க்கை – சிகரெட்டின் கொடுமை எனப்பல்வேறு விடயங்கள் பற்றிய அவரது அவதானிப்பும் அனுபவங்களும் கவிதைகளாக விரிந்துள்ளன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பொருளடிப்படையில் வகுத்துத் தரப்படாவிட்டாலும் கவிதைத் தலைப்புகள் வாசகருக்கு எளிதில் கவிதைப் பொருள்நிலை உணர்த்துவதாக அமைகின்றன.

இத்தொகுப்பின் முதலிலுள்ள – “காவலூர் கனவுகள் கண்களில் – அதன் கலைந்திட்ட நினைவுகள் நெஞ்சினில்” என்ற கவிதையில் வரும் பாடல்வரிகள் நம் எல்லோரையும் ஈழத்துக் காவலூருக்கே அழைத்துச் செல்கின்றன. காவலூரின் சுகமான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆசையை நிரந்தரமாய் நெஞ்சில் தாங்கி இக்கட்டிடக் காட்டிற்குள் எனக் கனடாவாழ் காவலூர் காவலூர் மக்களுக்கு கூறுவதாக அமையும் செய்தி அனைத்து இலங்கைத் தமிழினத்திற்கும் ஏற்புடையதாகும். இவ்வரிகள் ஜெனிற்ராவின் தயாக உணர்வின் ஆழத்தைத் தொட்டு நிற்கின்றன. அச்சமென்பதில்லை (11) என்ற கவிதை அவர் யேசுபிரானிடம் கொண்ட அதீத பக்தியை புலப்படுத்துகின்றது.

ஆயுள்கைதி (15) என்ற கவிதை புகைப்பிடிப்போர் அனைவரும் சுவைத்துப் படித்துத் தம்மைத் திருத்திக்கொள்ள வைக்கும் ஆற்றல் கொண்டது. சிகரெட்டின் கொடுமைபற்றி இவ்வாறு சுவைபட எழுதிய கவிதையை நான் எங்கும் படித்ததில்லை. இவரது கவிதைத் தொகுப்பில் உருவகக்கவிதைகள் பல இடம்பெற்றுள்ளமையை வாசகர் படித்துச் சுவைக்கும்போது இத்தொகுப்பின் சிறப்பை உளர்ந்து கொள்வர். ‘அகரம் என்னும் சிகரம்” என்ற கவிதை அத்தொகுப்பின் உலருவகக்கதைகளில் தலைசிறந்து காணப்படுவது மட்டுமின்றி தமிழ்மொழி மீதான ஜெனிற்ராவின் தீராக்காதலையும் அதன் உரிமைக்குக் குரல் கொடுக்கும் பக்குவத்தையும் உணரக்கூடியதாக உள்ளது என்பதைப் பினவரும் வரிகள் உணர்த்துகின்றன.

“என் அன்னை பூமியது அவல நிலையொழிந்து செங்கம்பளம் விரித்து எனைச் சேர்க்கும் நாள்வரைக்கும் நான் அள்ளி முடிக்கும் அளகம் பாரமென்றாள்”

புலம்பெயர்ந்து வாழும் எம்மவர் தாயகத்தில் மேற்கொள்ளும் மணமகள் தேடும் படலத்தை மிகச்சுருக்கமாக தந்திருக்கும் பாணி பாராட்டத்தக்கது. நிலையாமைத் தத்துவம் கேட்பதற்கு வெறுப்பைத் தருவதாயினும் –“ மலர்கள் பேசுமா” – (25) என்ற இவரது கவிதையைப் படிக்கும்போது வாழ்க்கை நிலையாமையின் உண்மை புரியும்! உலக இளைஞர் தினம் பற்றிய இவரது நீண்ட கவிதை இளைஞர்கள் படித்துச்சுவைக்கவேண்டிய ஒன்றாகும்.

தாயகத்தை – உறவுகளை – தமிழ்மொழியை – பண்பாட்டை விட்டகன்று நாட்டில் பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழும் எம்மினத்தில் ஒரு சாரார் தாயக உணர்வோடும் , மொழிப்பற்றோடும் ஆக்க இலக்கியங்களைப் படைக்கும்போது அவர்களைப்பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாழ்த்து செனிற்ரா மரியாம்பிள்ளைக்கும் உரியதாகிறது. எழுத்தாற்றல் மிளிரும் இக்கவிஞர் மேலும் தொடர்ந்து பல ஆக்கங்களை புகலிடத்தளத்திற்கு வழங்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

இ . பாலசுந்தரம் – ரொறன்ரோ – 10.03.2014

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவை வாழ்த்த‌ அக்காவின் எழுத்துக்களின் பிரியமான வாசகனாக‌ இரட்டிப்பு மகிழ்ச்சி...யாழுடனான என் ஆரம்பகாலங்கள் கண்மணி அக்காவின் கவிதைகளின் வாசகனாக அமைந்தவை.... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா... புத்தகங்களைப்பெறுவதற்கான வழியை சொல்லுங்கள்...

Link to comment
Share on other sites

பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

சந்தோசமாக இருக்கின்றது.... வாழ்த்துக்கள் கண்மணி அக்கா.

 

இதனை பகிர்ந்த சகாறாவுக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கண்மணி அக்கா.

 

இதனை பகிர்ந்த சகாறாவுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் பெற்றெடுத்த கண்மணி அக்காவுக்கு வாழ்த்துக்கள்...மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...அதே போல சுமோவும் தனது நூலினை விரைவில் வெளியீட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி அக்காவுக்கு நல்வாழ்த்துக்கள்..!

யாழ்கள உறவு ஒருவரின், நூல்கள்.... அச்சில் வருவது, எமக்கும் பெருமையே....
இதனை எம்முடன், பகிர்ந்து கொண்ட வல்வை சகாறாவிற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். வேலை  நிமித்தம் அதிகம் யாழில்காணப்படவில்லை என்றாலும் .வெற்றிகரமாக உங்கள் கவிதைப்பிரசுரம்  அமையட்டும்.  பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் .எமது எழுத்தாளர்களை எப்போதும் ஊக்கிவிக்கவேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கனடாவில் பெரிய மண்டபம் எடுத்து புத்தக வெளியீடு என பொருட்செலவு செய்யாது எளிமையாக வன்னியில் வாழும் சிறார்கள் மத்தியில் இந் நூல்களை வெளியிட்டது அறிந்து மீண்டும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக. உங்கள பயணம் இனிதே அமைய இறைவனை வேண்டுகிறோம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என் நீண்ட நாள் கனவு மெய்பட்ட இனிய பொழுதில் என்னை வாழ்த்திய இசைக்கலைஞன், யாயினி, சாந்தி, புங்கையூரன், புலிகேசி, சுபேஸ், சோழியன், நிழலி, சுவி, விசுகு, ரதி, தமிழ்சிறி, நந்தன், நிலாமதி, அர்யுன், அலைமகள், புத்தன், கரன், தமிழினி மற்றும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் விசேடமாக இந்த நிகழ்வை இங்கு பதிந்த சகாறாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது நூல் அறிமுக விழா மல்லாவி மத்திய கல்லுரி மகளிர் விடுதி பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. மல்லாவி துணுக்காய் பிரதேச சபை பகுதிகளில் கடமை புரியும் அதிபர்கள், வைத்திய அதிகாரி, பிரதேச செயலர், ஆசிரியர்கள், நல்லாயன் கன்னியர்கள், விடுதி மாணவிகள், மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர். புலம் பெயர் மண்ணிலிருந்து தமது பிரதேசத்தில் இந் நூல் அறிமுக விழா நடைபெற்றதையிட்டு அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினர். இந் நிகழ்வு மிகுந்த மனநிறைவுடன் நடந்தேறியது. என்னை ஊக்குவித்த வாழ்த்திய அனைத்து; உறவுகளுக்கும் நன்றிகள். இத்துடன் இணைத்திருக்கும் சில நிழற்படங்கள் நூல் அறிமுக விழாவில் எடுக்கப்பட்டவை.

 

நன்றி!!!

 

 

1_zpsea01a453.jpg

 

2_zps749ed384.jpg

 

3_zpsce04a3a3.jpg

4_zpscb5cb068.jpg4_zpscb5cb068.jpg5_zps4c74b80b.jpg6_zpsde5a3b1b.jpg7_zpsd8defd98.jpg8_zps81392014.jpg9_zps497c1704.jpg10_zps1700594c.jpg11_zps701008e6.jpg12_zps7c722d15.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் அறிமுகம் பற்றிய மேலதிக விப்ரங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் காவலூர் கண்மணி. நான் உங்கள் நூல் பற்றிய தகவல்களை இணைக்கும்போது எவ்விடத்தில் அதனை வெளியீடு செய்கிறீர்கள் என்று துல்லியமாக அறிந்திருக்கவில்லை ஆதலால் முழுமையான வெளியீட்டுத் தகவலை இணைக்கமுடியாதிருந்தது. இருப்பினும் இப்போது உங்களுடைய நூல் வெளியீட்டின் காட்சித் தொகுப்பினையும் இணைத்துள்ளீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றி..யாழ் கழ உறவுகள் என்ற வகையில் ஒவ்வொருவரத்தரது முன்னேற்றதிலும் என்னால் முடிந்தளவுக்கு வாழ்த்துவதிலயாவது ஒத்துளைச்சு நிக்கிறனான்.

 

எனக்கும் உங்கள் புத்தகங்கள் வேணுமே என்ன செய்யலாம்..எப்போ கனடாவில் வெளியீடு செய்து வைப்பீர்கள்.உங்கள் தொடர்புகள் கிடைக்கப் பெற்றால் கண்டிப்பாக  நூலைப் பெறும் ஆவலில் இருக்கிறன்  கண்மணியக்கா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.