Jump to content

சைவ உணவு வகைகள்.


Recommended Posts

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :)

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :D

:(:lol:

தகவலுக்கு நன்றி சிறி அண்ணா :(

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

கோவைக்காய் பெரியல்...

கோவைக்காயை 4 5 துண்டுகளாக நீளம் நீளமாக வெட்டி விட்டு உப்பு போட்டு தூள் கொஞ்சமாக போட்டு ஊற 10 நிமிசம் வைத்து விட்டு பெரித்தால் நல்லா இருக்கும்.. பிட்டு சோறுடன் சாப்பிடலாம்...உங்களுக்கு விரும்பினால் தூள் போடுங்கள்... இல்லையென்றால் கூட ஒகே.... நான் தூள் போட்டுத்தான் பண்ணுவன்...

koovaikkaai/tindora masala

Ingredients

Kovakkai- 3 cups (cut lengthwise )

Onions- 1 large chopped finely

Green chilli-1 chopped finely

Ginger garlic paste- 2 tsp

Coriander powder- 2 tsp

Chilli powder – 1 tsp or acc to taste

Turmeric powder- ¼ tsp

Cloves- 3 or 4

Salt to taste

Oil- 4 to 5 tsp

Coriander leaves- 2 tsp chopped finely

For seasoning

Mustard seeds- ¼ tsp

Jeera- ¼ tsp

Curry leaves - few

Peanuts- 3 tsp

Method

Heat oil in a pan add the seasoning items. Add the chopped onion and green chilli and fry till the onions become transparent. Then add the ginger garlic paste and fry till the raw smell disappears. Now add the kovakkai pieces and fry for some time. Add the turmeric, coriander and chilli powders. Crush or powder the cloves and add it to the masala. Add little water , simmer the flame and close it with a lid. Cook till the vegetable becomes tender and oil seperates. Garnish with coriander leaves and serve hot with rice.

http://premascookbook.blogspot.com/2006/09/kovakkaitindora-masala.html

Link to comment
Share on other sites

வல்லாரை & கரட் சம்பல்

467868061_95XKP-500x500.jpgcarrot+ingre.jpg

தேவையானவை

வல்லாரை - 1 பிடி

கரட் - 3

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 3

தயிர் 1 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள்- தேவையான அளவு

கருவேப்பிலை- 10

தேசிக்காய்ப் புளி- தேவையான அளவு

செய்முறை

வல்லாரைக்கீரையை சுத்தம் செய்து மிக மெல்லிதாக வெட்டவும் .

கரட்டை துருவி எடுக்கவும் .

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை, கருவேப்பிலையை மிக்கச் சிறிதாக வெட்டவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 1மேசைக் கரண்டி தயிரையும், தேவைக்கு ஏற்ப உப்பு, தேசிக்காய்ப் புளி, மிளகு தூள் கலந்தது பரிமாறலாம்.

(விருப்பமானவகள் சிறிதளவு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருகிறேன்.உங்கள் மனைவி உங்களை பேய்காட்டிப்போட்டா :(

நானும்தான் சிறி அண்ணை முதலே சாப்பிட்டு இருக்கன் எங்கள் வீட்டில் அம்மா பண்ணுவார்கள்... :(

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:(:lol:

.

பிலாக்காய் உருளை கிழங்கு சொதி..

---------

---------

இது பிலாக்காய் பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு.. Unknown-8.gif

பிலாக்காய் சொதிக்கு நன்றி புரட்சி. :):D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிசமாகவே கோடி நன்றி குட்டி! நான் பல நாட்களாக தேடினேன் கிடைக்க வில்லை. :)

Link to comment
Share on other sites

பாகற்காய் சம்பல்?????

சிறிய பாகற்காய் - ஒன்று (வெள்ளை பாகற்காயில் கசப்பு குறைவு)

வெள்ளரிக்காய் (Cucumber) - 1/4 துண்டு

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 1

உள்ளி - 1 பல்

தயிர் - 1/2 கப்

தேசிக்காய் - 1

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

- உள்ளி, Cucumber, பாகற்காய் ஆகியவற்றை Gratter இல் அரைக்கவும்.

- பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்த கலவையுடன் தயிரை சேர்த்து, உங்கள் தேவைக்கேற்ப புளியை பிழிந்து விடவும்.

இதனை எப்படி கூறுவதென்று தெரியவில்லை. அதுதான் கேள்விகுறி அடயாளமிட்டுள்ளேன்.

இதில் உள்ள பொருட்களின் அளவுகளை உங்கள் ருசிக்கேற்ப மாற்றிகொள்ளலாம்.

*** நீரிழிவு நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பாவற்காய் உண்ண வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாவற்காய் சம்பல் செய்யும் முறை;

பாவற்காயை நடுவால் இரு துண்டுகளாக வெட்டி அளவான நீர் விட்டு அவிய விடவும்[அதிகளவு நீர் விட்டால் சத்து வீணாகிப் போய் விடும்]

அவிந்த பின் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிய பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு,தேசிக்காய் புளி விட்ட பின் சாப்பிடவும்...விரும்பினால் தக்காளி பழம் சேர்க்கவும்...தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:lol::(

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

Link to comment
Share on other sites

தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

உண்மை ரதி. பாவர்ற்காய் நீரிழிவு நோய்க்கு நல்லது. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. ஆனால் நீரிழிவு நோய்க்கு மருந்து எடுக்கும் போது மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது என இணையத்தில் வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

விசுகு,, உங்கடை உள் குத்து எல்லாம் விளங்குது........ :(

உங்களின் நகைச்சுவையான கருத்தை ரசித்தேன். :D:lol::D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய சட்னி..இது இட்லி தோசை பிரியர்களுக்கு... :):lol:

idly-3.jpg

Plantain%20Dosa2.jpg

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 3

காய்ந்த மிளகாய் - 15

தக்காளி - 2

புளி - சிறிதளவு

மஞ்சள் தூள் - ஸ்பூன்

பூண்டு- 1

சோம்பு - 1 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

எண்ணை - சிறிதளவு

கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளி பூண்டு(தோலுரித்தது) ஆகிய மூன்றையும் அரிந்து கொள்ளவும்.. புளி உப்பு காய்ந்த மிளகாய் சோம்பு ஆகிய நான்கையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.. பின்னர் அடுப்பில் வாணலை வைத்து எண்ணைய் விட்டு காய்ந்த வுடன் தாளிக்கும் சாமான்களை போட்டு தாளித்து..நறுக்கி வைத்துள்ளதை போட்டு வதக்கவும்.. பின்னர் சிறிது மஞ்சள் தூளையும் போடவும்.. பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. சுவையான வெங்காய சட்னி தயார்.. இது இட்லி ... தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்...

நன்றி.. செட்டிநாட்டு சமையல் குறிப்புகள் ஆசிரியர் ராஜேஸ்வரி

இது இட்லி தோசை பிரியர்களுக்கு...

s_grands-31%5B1%5D.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

உங்கள் வெங்காய சட்னி குறிப்பை, இன்று காலை தான் பார்த்தேன் புரட்சி. :lol:

நான் வெங்காய சட்னி பற்றி கேள்விப்பட்டுள்ளேன்..... ஆனால் செய்முறை தான் தெரியாமல் இருந்தது.cooking-emoticon.gif

சட்னிக்கு தேவையான பொருட்களில்..... சோம்பை தவிர மிச்சம் எல்லாம் வீட்டில் இருக்குது.

உங்கள் குறிப்புக்கு மிக நன்றி thumb_smiley-vault-signs-096.gif புரட்சி. அடுத்த முறை தோசை, அல்லது இட்டலி செய்யும் போது வெங்காய சட்னி தான். smiley_cooking.gif

.

Link to comment
Share on other sites

.

மிக மிக முக்கியமான திரி. எல்லாருக்கும் நன்றி. :lol:

புளிக்குழம்பு தூக்கலோ தூக்கல்.

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சாறு செய்தோம் மிக நன்றாக வந்தது. நன்றி! :lol:

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

சாப்பிட்டுள்ளேன். சுவையே தனிதான்.நன்றி ஈசன்.

Link to comment
Share on other sites

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

Vegetable Biriyani1 கிலோ அரிசி, ஒரு தேங்காய், 250 கிராம் வெங்காயம், 15 பச்சை மிளகாய், 200 கிராம் காலி பிளவர், 100 கிராம் பூண்டு, 1 கட்டு கொத்தமல்லி, 100 கிராம் உருளைக் கிழங்கு, இஞ்சி சிறுதுண்டு, தேவையான அளவு புதினா, 50 கிராம் கேரட், 50 கிராம் பீன்ஸ், 10 ஏலக்காய், 10 கிராம்பு, 100 கிராம் பட்டாணி, 100 கிராம் டால்டா, 1துண்டு இலவங்கம், 100 கிராம் நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி கேசரிப் பவுடர்

செய்முறை:

அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

http://www.lankasri.eu/ta/link.php?33y6M332HS

Link to comment
Share on other sites

.

.பலாப்பழ பாயாசம்

பலாப்பழச் சுளைகள் - 20, 30 (வருக்கை பலாப்பழம் சிறப்பு)

வெல்லம் - கால் கிலோ

நெய் அல்லது டால்டா தேவையான அளவு

ஏலக்காய் தேவையான அளவு

முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு வாணலில் நெய் விட்டு அது இளகியதும் நறுக்கிய பலாப்பழசுழைகளை இட்டு வதக்கவும்.

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேகவிட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்துவிடலாம்.

மீதம் வந்த பலாப்பழம் இருந்தால் இவ்வாறு செய்து காற்றுபுகாமல் அடைத்து வைத்திருந்து கொஞ்சமாக சாப்பிடலாம். இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

http://tamil2friends.com/tamil-samayal/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈசனின் பாகற்காய் சம்பல்.

சுஜியின் வெஜிடபிள் பிரியாணி,

நுணாவின் பிலாப்பழ பாயாசம் எல்லாவற்றுக்கும் நன்றி.xmas-7294.gif

.

Link to comment
Share on other sites

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

நன்றி ஈசன்,பாவற்காய் சம்பல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாவற்காயை சிறிது துண்டுகளாக வெட்டி அதில் உப்பு கலந்து அரை மணிநேரம் வைத்தாலே அதில் உள்ள உவர்ப்புத் தன்மை குறைந்து விடுகிறது. அதன் பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி இலை இவற்றை கொஞ்ச எண்ணெயில் வதக்கி பின்பு தேசிக்காய் புளியும் விட்டு எடுத்தால் நன்றாக இருக்கும். பாவற்காய் சக்கரை வியாதிக்கு நல்ல ஒரு மருந்தாகவும் இருக்கிறது.

இணைப்பினை தொடர்ந்து இணைக்கும் உறவுகளுக்கும் நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்கறி சாம்பார்

sambar.jpg

தேவையான பொருட்கள்.

ஏதாவது ஒரு காய் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

துவரம் பருப்பு - 100 கிராம்

புளி - நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி(மிளகாய்தூள் + கொத்தமல்லி தூள் + மஞ்சள் தூள்) கலவை - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

காய்ந்த மிள்காய் - 2

பெருங்காயம் - 1 சிட்டிகை

கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

முதலில் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் .. காய். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி ஒரு டமளர் தண்ணீர் விட்டு பாத்திரத்தில் வேக விடவும்.. காய் வெந்தவுடன் உப்பு புளிகரைசல் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி மற்றும் பருப்பை போட்டு கொதிக்க விடவும் கடைசியாக 2 ஸ்பூன் எண்ணைவிட்டு கடுகு உளுந்து மிள்காய் சீரகம் வெந்தயம் பெருங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றையும் போட்டு தாளித்து கொட்டி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் ..கமகம சாம்பார் ரெடி.. சோற்றுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்..

எல்லா சாம்பாருமே இந்த முறையில் செய்ய வேண்டியதுதான் . வெண்டைக்காய் கத்திரிக்கு மட்டும் வேக வைக்கும் முன்பு சிறிது எண்ணை ஊற்றி ஒரு பாத்திரத்தில் நன்றாக வதங்கிய பின்பு மேற்சொன்ன முறையில் சாம்பார் செய்யவும்..

cooking-34.gif

நன்றி . ராஜெஸ்வரி பதிப்பகம்... சிவகாசி

Link to comment
Share on other sites

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

இது ஜிம் பாடி ஏற்றுவதற்கு பயனுள்ள குறிப்பு தோழரே குட்டி... அனைவரும் இவ்வாறுதான் காலையில் உண்டுவிட்டு உடற்பயிற்சி செய்கிறார்கள்.. :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.