Jump to content

ஈரப்பலாக்காய்க் கறி


Recommended Posts

ஈரப்பலாக்காய்க் கறி

 

eerapilacurry.jpg?w=300

 

தேவையான பொருட்கள்

 

நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1

வெங்காயம் -1

பச்சை மிளகாய் -1

தேங்காய்ப் பால் – ¼ கப்

பூண்டு- 4 பல்லு

இஞ்சி – 1 துண்டு

மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன்

மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன்

மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு – தேவைக்கேற்ப

கடுகு- சிறிதளவு

கறிவேற்பிலை- சிறிதளவு

ஒயில் – 1 ரீ ஸ்பூன்

 

செய்முறை

 

eerapilacurryporiyal-2.jpg?w=300

 

பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள்.

 

உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள்.

 

தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

 

ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

 

வெங்காயம் மிளகாய் வெட்டி எடுங்கள்.

 

ஒயிலில் கடுகு தாளித்து வெங்காயம் மிளகாய் வதக்குங்கள்.

 

வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேற்பிலை சேர்த்துவிடுங்கள்.

 

தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

 

நன்கு கொதித்து வர கிளறி இறுகிவர, மிளகுப் பொடி தூவி இறக்குங்கள்.

 

மிளகு வாசத்துடன் தாளித்த மணமும் பரவி நிறையும்.

 

http://maathevi.wordpress.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2tree.jpgBread-Fruit3.jpg

 

எனக்குப் பிடித்த கறிகளில், ஈரப் பிலாக்காய் கறியும் ஒன்று.
இதனை... வெள்ளைகறியாகவும் சமைக்கலாம்.
ஊரில்.. இருக்கும் போது, ஏனோ தெரியாது இதனை வீட்டில் சமைக்க மாட்டார்கள்.
இங்கு வந்தபின், ஒரு நண்பர் வீட்டில் சாப்பிட்டுப் பார்த்த போது அதன் சுவை பிடித்துக் கொண்டது.
ஆனால்... தமிழ்க் கடைகளில் நெடுகவும் கிடைக்காது, அப்படிக் கண்டால்.. 2,3 வாங்கி விடுவேன்.
சமையல் குறிப்புக்கு நன்றி அலைமகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2tree.jpgBread-Fruit3.jpg

 

எனக்குப் பிடித்த கறிகளில், ஈரப் பிலாக்காய் கறியும் ஒன்று.

இதனை... வெள்ளைகறியாகவும் சமைக்கலாம்.

ஊரில்.. இருக்கும் போது, ஏனோ தெரியாது இதனை வீட்டில் சமைக்க மாட்டார்கள்.

இங்கு வந்தபின், ஒரு நண்பர் வீட்டில் சாப்பிட்டுப் பார்த்த போது அதன் சுவை பிடித்துக் கொண்டது.

ஆனால்... தமிழ்க் கடைகளில் நெடுகவும் கிடைக்காது, அப்படிக் கண்டால்.. 2,3 வாங்கி விடுவேன்.

சமையல் குறிப்புக்கு நன்றி அலைமகள். :)

ஈரப் பிலாக்காய் ஏன் வீடுகளில் சமைப்பதில்லை என்பதற்கான காரணம், அலையின் இன்னொரு பதிவில் உள்ளது! :D

 

இதைச் சாப்பிட்டால், மார்பகங்கள் அளவுக்கதிகமாக வளர்ந்து விடும் என்று ஒரு நம்பிக்கை எம்மவரிடையே உள்ளது!

 

இணைப்புக்கு நன்றிகள், அலை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரப் பிலாக்காய் ஏன் வீடுகளில் சமைப்பதில்லை என்பதற்கான காரணம், அலையின் இன்னொரு பதிவில் உள்ளது! :D

 

இதைச் சாப்பிட்டால், மார்பகங்கள் அளவுக்கதிகமாக வளர்ந்து விடும் என்று ஒரு நம்பிக்கை எம்மவரிடையே உள்ளது!

 

இணைப்புக்கு நன்றிகள், அலை!

 

ஆண்களுக்கு... ஓதம் வந்து விடும் என்று சமைக்க மாட்டார்கள் என்று பின்பு அறிந்தேன்.

சிங்களவரின் தேசிய உணவே.... ஈரப் பிலாக்காய் தான். அவர்கள் நித்தமும் சாப்பிடுவார்கள்.

அவர்களுக்கு.... ஓதம் உள்ளதா என்று, எனக்குத் தெரியவில்லை. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் அக்கா வீட்டில் அடிக்கடி சமைப்பார்கள்,  கூனி இறால் போட்டுச் செய்வினம். எனக்கம் மிகவும் பிடிக்கும் ..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு... ஓதம் வந்து விடும் என்று சமைக்க மாட்டார்கள் என்று பின்பு அறிந்தேன்.

சிங்களவரின் தேசிய உணவே.... ஈரப் பிலாக்காய் தான். அவர்கள் நித்தமும் சாப்பிடுவார்கள்.

அவர்களுக்கு.... ஓதம் உள்ளதா என்று, எனக்குத் தெரியவில்லை. :D  :lol:

 

ஓதம் அப்பிடீன்னா இன்னா பாஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓதம் அப்பிடீன்னா இன்னா பாஸ்

 

இன்னா சார்... ஓதம்னா தெரியாதா?

சமையல் பகுதியில், மருத்துவ விளக்கம் கேட்கிறீங்களே...

சரி... தெரியாததை, சொல்லித்தாறதுக்குத் தானே நாம இருக்கிறம்.

 

அதனை குடல் இறக்கம் என்று சிலரும், விதை வீக்கம் என்று பலரும் சொல்வாங்க.

சாதாரணமாக ஒருவரின் விதை, றம்புட்டான் பழ அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை.

அது தோடம்பழம் அளவுக்கு வீங்கினால்... நடக்க, ஓட, இருக்க, எழும்ப.... சிரமமாயிருக்கும்.

அதனால் தான்... தமிழர் ஈரப்பிலாக்காயை சமைக்க மாட்டாங்க சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடம்பழமாவது  பரவாயில்லை , ஈரப்பிலாக்காய் அளவு இருந்தால்தான் பிரச்சினை. வேட்டி,சால்வைதான் உடுக்கனும்...! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.