Jump to content

சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர்.


Recommended Posts

சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர்.

 
சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது.

ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை.

இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் நம்பியிருக்கும் கணவனுக்கு மறைக்க அவள் பட்ட துயரங்களை வார்த்தைகளில் கோர்த்துவிட முடியாது.

அக்காவுக்கும் , அவள் கணவனுக்கும் 2009வரையிலும் அவர்களுக்காக அவர்களது உயிர் காக்கவும் ஆட்கள் இருந்தார்கள். ஆறுதல் தருவதற்கே ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். 2009மே மாதத்தோடு எல்லாம் போனது. ஏனென்று கேட்க நாதியற்றுப் போன பல்லாயிரக்கணக்கானவர்களுள் அவர்களும் அடக்கமாயினர்.

20வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையில் உடலெங்கும் இரும்புத்துகள்களும் நஞ்சூறிய கந்தகக்காற்றையும் சுவாசித்தே வாழ்ந்தார்கள். ஓடியோடி கடமையும் களமும் என வாழ்ந்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. அவளுக்குப் பொருத்தமான துணையாக வந்த கணவனின் துணையோடு அவர்கள் மூச்சு விடுதலைக்காகவே சுவாசித்துக் கொண்டிருந்தது.

ஒருகாலம் தங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது உறவென்று சொல்லிக் கொள்ளவோ ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தைரியத்தையும் உடல் பலத்தையும் கூட களத்தில் தான் அக்கா இழந்தாள். அதற்காக அவர்கள் ஒருநாளும் கலங்கியதுமில்லை கவலைப்பட்டதுமில்லை. இன்று அத்தகையதொரு குழந்தையொன்று இல்லாது போனதற்காய் அதிகம் கவலைப்படுகிறாள் அக்கா.

அந்தரிக்கும் உயிருக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றவே ஆளில்லாது வாழ்நாள் நோயாளியாகிப் போன அவர்களுக்கு உறவென்று சொல்லிக் கொள்ளும் அளவில் ஊரில் யாருமில்லை. ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்தவர்களுக்காக அவர்களது பாதையை நேசித்து அவர்களோடு வாழ்ந்த சிலரின் சின்ன ஆறுதல் மட்டுமே அவர்களை ஏதோ வாழ வைத்துக் கொண்டிருந்தது.

ஏற்கனவே பலதடவைகள் காயங்களுக்கு உள்ளாகிய அண்ணை திடீரென ஒருநாள் மயங்கி விழுந்து நினைவிழந்தார். அக்கா துடித்துப் போனாள். அடுத்தநாள் விடிந்ததும் யாழ்ப்பாணம் மருத்தவத்திற்கு அண்ணையை அழைத்துப் போனாள். உடனே தலையில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென்றார்கள். ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படக்கூடிய சத்திரசிச்சையை தனியார் மருத்துவமனையில் தான் செய்ய முடியுமென்றார்கள் இலவச மருத்தவமனையில் சம்பளம் பெறும் மருத்துவர்.

யாருக்கும் தொல்லை கொடுத்து சிரமப்படுத்தக் கூடாதென்று வாழ்ந்த அக்கா வெளிநாட்டிலிருந்து அவளுக்கு அவ்வப்போது சின்னச் சின்ன உதவிகளை வழங்கிய அக்காவோடு ஒருகாலம் களமாடியவளைத் தான் தொடர்பு கொண்டு அண்ணையின் நிலமையைத் தெரிவித்து அழுதாள்.

அண்ணைக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய அக்கா தன் மகளாய் நேசிக்கும் ஒருத்தியே உதவினாள்.

சத்திரசிகிச்சை முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து மருத்துவத்திற்கான மருந்துக்கான செலவுகள் அவர்களை நிம்மதியாய் விடவில்லை. இயன்றவரை கிடைத்த சின்னச் சின்ன உதவிகள் மூலம் அண்ணையின் உயிர் போராடிக் கொண்டிருந்தது.

வெயிலில் நின்று வேலை செய்யவோ அல்லது பாரமொன்றைத் தூக்கி சுமக்கவோ ஒரு கூலிவேலையைத் தன்னும் செய்யும் பலத்தை இழந்து போனது அண்ணையின் ஆரோக்கியம். அக்காதான் தன் இயலாத நிலமையோடும் அண்ணையைக் காத்தாள். மருந்தின்றேல் அண்ணையால் இயங்க முடியாத நிலமையாகியது.

திடீரென அக்கா சுவாசிக்கச் சிரமப்பட்டாள். மூச்செடுக்க அவளுக்கு முடியாமல் போகத் தொடங்கியது. பணமில்லாதவர்களுக்காக இலவச மருத்துவமனைகள் தான் உயிர் தரும் இல்லங்கள்.

தன்னையே கொண்டு செல்ல முடியாத அண்ணை அக்காவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இலவச மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த மருத்துவர் பணம் கொடுத்தே அக்காவிற்கு உயிர்காக்க முடியுமென்று அறிவித்தார். கடவுளாகத் தெரிந்த மருத்துவர் காசுப் பிசாசாகி அக்காவின் உயிரைப் பலியெடுக்கும் காலனாகித் தெரிந்தார்கள். காசு இல்லாது போனால் அக்காவை வீட்டுக்குக் கொண்டு போகச் சொன்னார்கள்.

அண்ணையின் உலகம் , ஆறுதல் ,பலம் , நம்பிக்கை , வாழ்வு எல்லாமே அக்காதான். அவளில்லையென்றால் எதையும் சமாளித்து வாழக்கூடிய நிலமையே இல்லாத தனிமனிதன் அக்காவின் உயிர்காக்கப் போராடினார். ஆனால் பணம் தான் அக்கா உயிரைத் தரும் கடவுளாகியது.

அக்கா வாழும் வரையும் வாழ்ந்துவிட்டுப் போகிறேனென ஊர் திரும்பினாள். ஒரு மாதம் வரையிலும் எதுவோ சமாளித்துவிட்டாள். கடந்த வாரம் அவளால் உணவை உட்கொள்ளவோ எழுந்து நடக்கவோ முடியாது போனது. உயர் இரத்த அழுத்தம் அத்தோடு சுவாசிக்க முடியாது அவள் சாவின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அண்ணை அவளை யாழ்ப்பாணம் கொண்டு சென்றார். பணம் வை இல்லையேல் ஆளைக் கொண்டு போ...! இலவச மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். தெரிந்தவர்களின் வீட்டில் அக்காவை வைத்துக் கொண்டு அண்ணை கடைசி நம்பிக்கை கைவிடாதென நம்பி வெளிநாட்டுக்கு தொடர்பெடுத்தார்.

என்ரை புள்ள உங்களை விட்டா எங்களுக்கு ஒருத்தருமில்லை...அக்கா சாகப்போறாள்....காப்பாற்று....என்ற அண்ணையின் கண்ணீர் ஐரோப்பா வரையிலும் கசிந்தது. அந்தச் செய்தியைக் கொண்டு வந்தாள் ஒரு போராளித் தங்கை. என்ன செய்தெண்டாலும் அக்காவை காப்பாற்ற வேணும்.

முகநூல் , வலைப்பூ மூலம் அறிமுகமான மருத்துவர்கள் பலரது இலக்கங்களைத் தேடிய போது திருகோணமலையில் வாழும் வலைப்பூவில் அறிமுகமான மருத்துவர் தம்பியொருவரின் தொடர்பே கிடைத்தது. அவசர மருத்துவ சேவையில் நின்ற அந்தத் தம்பி தனது அவசர நிலமைக்கு மத்தியிலும் உடனடியாக தொடர்பில் வந்து அக்காவை காப்பாற்ற வேண்டிய ஆதரவைத் தர முன்வந்தார். காசுக்காயே மருத்துவம் செய்யும் காசுப் பிசாசுகள் மத்தியில் அந்த மருத்துவர் தம்பி சத்தியமாய் என் கண்ணில் கடவுளாயே தெரிந்தார்.

17.04.2014 அன்று வேகவேகமாக அக்காவின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி 18.04.2014 ஏதாவது ஒரு வழியைக் காணும் வேகத்தில் தொடங்கிய முயற்சி. 18ம் திகதி அக்காவை மருத்துவமனையில் எதிர்பாராமல் ஒருவர் சந்தித்ததை கடவுள் அருளென்பதா ? இல்லை விதியென்பதா ?

1991இல் அக்காவோடு களமாடி வரலாற்றுச் சமரொன்றில் காயமடைந்து அவள் உயிர் போய்விட்டதென நம்பினார்கள். ஆனால் அக்கா மட்டுமே அவளுக்கு உயிர் இருப்பதை நம்பித் தன் தோழில் நீண்ட தூரம் காவிச் சென்று பிணமாகிக் கிடந்தவளுக்கு உயிர் கொடுத்திருந்தாள். அந்தத் தோழி பின்னர் குடும்பமாகி போராட்ட வாழ்வை விட்டு விலகியிருந்தாள். நீண்ட காலம் தொடர்புகள் எதுவும் இல்லாது போனது. அப்படியொரு உயிரைக் காத்ததைக் கூட அக்கா மறந்து போனாள்.

1991இல் அக்காவால் உயிர் காக்கப்பட்டவள் அக்காவின் நிலமையைக் கேட்டாள். அன்றைக்கு அக்கா தந்த உயிரே இன்று அவளை அந்த இடத்தில் உயிரோடு நிறுத்தியிருந்ததையும் நினைவுபடுத்தி அக்காவுக்கு உயிரைக் கொடுத்தேனும் உதவுவேன் என முன்வந்தாள்.

எங்கள் ஏற்பாடுகளின் நடுவில் அக்காவுக்கு கிடைத்த அந்தத் தோழி தனது உறவினர்கள் மூலம் அக்காவுக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய ஏற்பாட்டைச் செய்து இரவோடிரவாக கொழும்பு கொண்டு செல்லப்பட்டாள்.

சிகிச்சை முடிந்தால் ஆறுமாதங்கள் வரையில் அக்காவை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும். அதற்கான செலவை கட்டாயம் கருணையுள்ளம் படைத்தோர் யாராவது செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் குடும்பம் அக்காவுக்கான சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்துள்ளார்கள்.

தனது மனைவியின் அருகில் போயிருக்கத் தேவையான பணமில்லாததால் அண்ணை ஊரில் போயிருந்து தனியே அக்காவிற்காக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். உலகில் யாருக்கும் வரக்கூடாத துயரம் அண்ணைக்கு.

18ம் திகதி வீடு சென்ற அண்ணை திடீரென மயங்கி வீழ்ந்தார். ஏன் எதற்கு ?

காரணம் எதுவும் புரியவில்லை. தனித்தே வாழும் அந்த மனிதனுக்கு சுடுதண்ணீர் கொடுக்கக்கூட ஆளின்றி படுக்கையிலிருந்து எழ முடியாது போனது. தனது நிலமையை அக்கா அறிந்தால் வேதனைப்படுவாள் என யோசித்து தான் சுகமாய் இருப்பதாய் பொய் சொல்லிவிட்டு அக்காவின் வரவிற்காய் காத்திருக்கிறார்.

19ம் திகதி காலை 9மணிக்கு சிகிச்சை நடக்குமென்றார்கள். 18.04.2014 மாலை அக்காவை அழைத்தேன். அவள் கதைக்கவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு சொல்லை அவள் சொல்லும் போதும் நிமிடக்கணக்கில் அந்தரிக்கிறாள்.

ஆச்சி என்னால ஏலாதமணை....அண்ணையோடை கதையுங்கோ....அவர் பாவம்....நானில்லாட்டில் அவர் தனிச்சுப் போவர்....உங்கை யேர்மனியிலயும் எனக்கு சொந்தக்காறர் ரெண்டு பேர் இருக்கினம். அவைக்கெல்லாம் ரெலிபோன் எடுத்துப் பாத்தனான்...ஒருத்தரும் உதவமாட்டமெண்டிட்டினம்....அம்மாச்சி என்ரை செல்லம் கடவுள் தான் உங்களையெல்லாம் எனக்குக் காட்டியிருக்கிறான்.

நேற்றைக்கு மட்டும் இனியெனக்கு சாவுதான் தப்பமாட்டனெண்டுதானணை நினைச்சனான்....ஆனால்....அக்காவால் பேச முடியாது குரல் மிகவும் சோர்ந்து போய்க்கொண்டிருந்தது. அண்ணையோடை எடுத்துக் கதையணை....அவர் பாவம் என்னோடை ஏலாதத்தோடை அலைஞ்சவர்....பாவம் இப்ப தனிச்சு கிடக்கிறார்....!

அக்கா நீங்க யோசிக்காமல் படுங்கோ...நாளைக்கு எல்லாம் நல்லா முடிஞ்சு நீங்கள் திரும்பி வருவீங்கள்....உங்களுக்கு உதவிறதுக்கு இங்கை கனபேர் இருக்கினம் எல்லாரிட்டையும் கேட்பம்....உங்களை நாங்க கைவிடமாட்டம்....நிம்மதியா படுங்கோ....சொன்ன போது அக்கா அழுதாள்...

என்ரையம்மா என்னாலை ஏலாதாம் நான் படுக்கட்டே....அக்கா விடைபெற்ற போது இலங்கை நேரம் இரவு 9.40ஆகியிருந்தது. நீ வருவாய் எங்கள் அக்காவாய் உனக்கான உதவியை புலம்பெயர்ந்து வாழும் கருணையாளர்கள் தருவார்கள் நிம்மதியாய் இரு என்று சொல்லிக் கொண்டு தொடர்பை துண்டிக்கிறேன்.

அவளது குரலும் அவள் மூச்செடுக்க சிரமப்படுவதும் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. நேற்றைய இரவு விடியும் வரையும் அக்காவின் சிகிச்சை முடிவு பற்றிய செய்தியையே கைபேசி எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

பொறுமை கடந்து அண்ணைக்கு தொடர்பெடுத்த போது....ஓம் பிள்ளை சொல்லணை என்ற தீனக்குரலில் அழைத்தார். அக்காவுக்கு என்னமாதிரியண்ணை எல்லாம் முடிஞ்சுதே ? இல்லையம்மா அவவுக்கு பிறசர் சரியா கூடீட்டுதாம் பிறசர் குறையத்தானாம் செய்வினம்....!

தனது தனிமை , தனது இயலாமை , தனது நோயின் வலி பற்றியெல்லாம் அண்ணை சொல்லிக் கொண்டிருந்தார். 21ம் திகதி அண்ணைக்கான அடுத்த மருத்துவ சோதனைக்குப் போக வேணும். ஆனால் போவதற்கு கையில் எதுவும் இல்லாது இருக்கிறார். ஏதாவது வழி செய்வமண்ணை நாளைண்டைக்கு போங்கோ என்ற போது சொன்னார். எனக்கு உதவாட்டில் காரியமில்லை மகள் அக்காவைக் காப்பாற்றுங்கோ....அக்காவுக்கு உதவுங்கோ....!

அண்ணையின் குரல் அழுகையாகி விக்கலெடுத்துத் தேம்பினார். பணமே எல்லாவற்றையும் எல்லாரையும் வாழ வைக்கும் பலமாகிய விதியை நினைக்க கோபம் இயலாமை விரக்தியென ஏதோதோ உணர்வுகள் கண்ணிலிருந்து கண்ணீராய் வழிகிறது.

யோசிக்காதையுங்கோ அண்ணை....அக்கா சுகமாகி கெதியில வருவா....காசுதானே இந்த உலகத்தில எத்தினை பேர் இருக்கினம்....இன்னும் மனிதமும் மனிதர்களும் சாகேல்லயண்ணை திங்கள் விடியக் கிடையில உங்களுக்கு மருந்துக்கு காசு வரும்....! சொன்ன போதும் அண்ணை அக்காவைத் தான் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அக்காவைக் காக்க அக்காவைத் தவிர யாருமில்லாத அண்ணையைக் காக்க கருணையுள்ளம் படைத்தவர்களே உங்களிடமெல்லாம் கையேந்துகிறோம். எங்களுக்காக வாழ்ந்த இரு சீவன்கள் உயிர்காக்க உங்களால் மட்டுமே முடியும்.

19.04.2014 (இந்த உயிர்கள் இரண்டையும் காப்பாற்ற உதவுங்கள். உதவக் கூடியவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை வழங்கி உயிர்காத்துத் தாருங்கள்)

தொடர்புகளுக்கு :-

நேசக்கரம்
முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418
nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

 சாந்தி ரமேஷ் வவுனியன் 

http://mullaimann.blogspot.de/2014/04/blog-post_19.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பல பிரச்சனைகள் இருப்பினும்.....இவர்களுக்கு நான் கை கொடுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

அக்கா கண்கள் கலங்கி விட்டது. என்னால் இப்போதைக்கு உதவ முடியாது. அந்த உறவுக்காக மனதார பிரத்திக்கின்றேன் விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

எனக்கு பல பிரச்சனைகள் இருப்பினும்.....இவர்களுக்கு நான் கை கொடுக்கின்றேன்.

உங்களது சிரமங்கள் மத்தியிலும் உதவ முன்வந்தமைக்கு நன்றிகள் சகோதரமே. ஒரு சகோதரியின் சகோதரனின் உயிர்காக்க முதலாவது ஆளாக ஓடிவந்து நேசக்கரம் நீட்டிய உங்கள் கருணைக்கு நன்றிகள். இதர விபரங்கள் தனிமடலில் அனுப்புகிறேன்.

Link to comment
Share on other sites

இக்குடும்பத்துக்கு தனது உதவியாக  €437,55 EUR கொக்குவிலான் வழங்கியுள்ளார். உயிர்காக்க தனது உதவியை வழங்கிய கொக்குவிலானுக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இந்த உறவுக்கு நல்லபடியாக சத்திரசிகிச்சை நேற்று முன்தினம் நடந்து முடிந்துவிட்டது. உதவிய கொக்குவிலான், யேர்மனி யசோதரன், கனடா தனேஷ் ஆகியோருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

உதவிய உறவுகளுக்கு நன்றி.

சொல்வீரர்கள் திளைக்கும் இந்த நூற்றாண்டில் அங்கொன்று இங்கொன்றா இருக்கும் செயல் வீரர்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

உதவிய உறவுகளுக்கு நன்றி.

சொல்வீரர்கள் திளைக்கும் இந்த நூற்றாண்டில் அங்கொன்று இங்கொன்றா இருக்கும் செயல் வீரர்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள் விவசாயி விக்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

meri_zps5909371b.jpg

 

உதவிகளை வழங்கிய கருணையாளர்களுக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

மேற்காணும் உறவுக்கு உதவியவர்களுக்கு நன்றிகள். குறித்த உறவு மீண்டும் உணவு உட்கொள்ள முடியாத நிலமையில் மீண்டும் நோயுற்றுள்ளார். மருத்துவத்திற்கு செல்வதற்கு பணமின்மையால் துன்பப்படுகிறார்கள். இன்று காலையில் வந்த அழைப்பு கண்ணீரோடு வந்திறங்கியுள்ளது. அவசர மருத்துவ உதவியொன்று  செய்யப்பட வேண்டியுள்ளது. உதவக்கூடிய உறவுகளே உங்களால் உதவி கிடைக்குமென்ற நம்பிக்கையில் இங்கு தகவலை பகிர்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.