Jump to content

உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை.


Recommended Posts

உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை.

 
weinendes-auge.jpg

13.06.1991 உலகின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கப் பிறந்த அவனது பிறப்பு மர்மமானது. ஓவ்வொரு பிள்ளையும் விரும்பும் அம்மாவின் மடிவாசம் அப்பாவின் தோழ்வாசம் எதையும் அவன் அனுபவிக்காதவன். பெற்றவர்களை அவன் காணவேயில்லை. உறவென்று சொல்லி உரிமை கொண்டாட யாருமில்லாத சிசுவாகவே தனித்துப் போனான்.

அவனை வளர்த்தவர்களும் பாலக வயதிலேயே ஏனோ கைவிட்டு விட்டார்கள். யாரில்லாது போனாலென்ன 'புனிதபூமி' இருக்கிறது என அவனை புனிதபூமியே தத்தெடுத்துக் கொண்டது. புனிதபூமியின் குழந்தையாகி மீண்டது அவனது மகிழ்ச்சிக்காலம். உறவில்லை உறவினர்கள் இல்லையென்று அழுத பிஞ்சு மனசில் ஆயிரக்கணக்கான உறவுகளின் அணைப்பையும் ஆற்றுதலையும் புனிதபூமி கொடுத்தது.

எந்தக் கவலையும் இல்லாது புனிதபூமியின் அணைப்பில் வாழ்ந்த பிள்ளைகள் 2009 யுத்த முடிவின் பின்னர் திசைக்கொன்றாய் பிரிந்து போனார்கள். முகாம் வாழ்வு யாருமற்றுப் போனதான பயம் எல்லாமே கூடியது. எனினும் தனியே போராடித் தன் வாழ்வை வெல்லும் தைரியத்தை தானே வளர்த்துக் கொண்டான்.

மீள் குடியேறி வன்னி மண் இழந்து போன வசந்தத்தின் கருகல்களிலிருந்து மீளத்துடித்த பொழுதில் அவனும் பிறந்த ஊருக்குப் போனான். அடுத்த வாழ்வுக்கு அவனிடம் வழியில்லை. இனிமேல் அவனது வாழ்வை உயர்த்த அவனது கல்வியைத் தொடர்ந்தால் மட்டுமே வெளிச்சம் வருமென்பதை உணர்ந்தான்.

நெருப்பின் கொடிய சுவாலையின் வெப்பத்தில் எரிந்து போனாலும் மீளவும் எழுந்து நிற்கும் தைரியத்தை துணிவை அவனுக்கு விதைத்தது காலம். தானே படித்து முன்னேற வேண்டுமென்ற கனவை வளர்த்து படித்தான். தனது கல்வியைத் தொடரத்தானே உழைத்தான்.

கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தான். குடியிருக்க அவனுக்காக நிலமில்லை. ஆனாலும் வாடகை செலுத்தி தனக்கான தங்குமிடத்தை தெரிவு செய்தான். உழைத்துக் களைத்து வருகிறவனுக்கு தண்ணீர் கொடுக்க ஆளில்லாத போதும் தானே சமைத்து தன்னையே நம்பிய நம்பிக்கையின் ஆதாரம் அவனே.

பல்கலைக்கழகம் செல்லும் கனவோடு படித்தான். அவனது கனவு நனவாகி பல்கலைக்கழக நுளைவும் கிடைத்தது. தனது கல்விக்காக யாரையும் உதவுங்கள் என காத்திருக்காமல் தானே வேலைசெய்து படிக்கத் தொடங்கினான். ஆறுமாதங்கள் தான் தற்போது முடிகிறது.

என்னால் முடியுமென்ற நம்பிக்கையில் படிக்கத் தொடங்கியவனுக்கு திடீர் திடீரென உடல் இயலாமல் போகிறது. இரத்த வாந்தி வருகிறது. சிலவேளைகளில் எழுந்து நிற்க இயலாதபடி உடல் ஓய்ந்து விடுகிறது. காரணம் தேட முடியாது திரும்பவும் உடலை வருத்தும் வேலைகளைத் தேடித்தேடிச் செய்து கொண்டிருக்கிறான்.

இனியும் இயலாதென்ற வலியில் மருத்துவத்தை நாடிய போது அங்கேயும் பணமே முன்னுக்கு நின்று வரவேற்றது. பணமில்லையேல் வாழ்வு இல்லையென்ற உலகில் அவன் மட்டும் கருணையாக காசில்லாமல் எதையும் செய்ய முடியாது போனது.

குருதிப்புற்றுநோயின் தொடக்கம் என மருத்துவ அறிக்கைகள் சொன்னது. எனினும் மாற்ற முடியும் என்றது மருத்துவம். வாரம் தோறும் மருந்து எடுக்க 2500ரூபா , தங்குமிட வாடகை 1500ரூபா  , உணவு , கல்வி எல்லாவற்றையும் சமாளிக்க இனி இயலாதென்று உடல் சோர்கிறது.

உதவிகள் தேடி அமைப்புகள் நிறுவனங்களை நாடுகிறான். எல்லோரும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவனது வலிமிகு நாட்களை இழுத்தடித்துக் கொண்டே போகிறார்கள். இறப்பதற்கு முன்னம் தனது கல்வியை முடித்துக் கொண்டு இறந்துவிடலாமென பாசக்கயிற்றோடு துரத்தும் நோயோடு போராடிக்கொண்டு இயன்ற நாட்களில் வேலை செய்து முடிந்த போது உணவை உட்கொண்டு கிடைக்கிற போது மருந்தையும் உட்கொண்டு தனது கல்வியை கற்று முடிக்கும் கனவோடு போராடத் தொடங்கினான்.

வர வர உடல்வலி அசதி களைப்பு எல்லாம் சேர்ந்து அவனது கல்வியையும் கைவிடும் நிலமையில் மனம் களைத்துவிட்டது.

வழியேதும் இல்லையென்று ஓய்ந்த போது அவன் வந்தான். மெடம் என்றான்.  அவனது நோய் அவனது கல்வி அவனது வாழ்வு பற்றி தொலைபேசியில் கதைக்கத் தொடங்கிய போது ஒரு நிறுவனத்தில் விண்ணப்பம் செய்யும் ஒருவன் போலவே பேசத் தொடங்கினான்.

தம்பி மெடம் வேண்டாமய்யா நீ இயல்பா பேசு. உனக்கு என்ன தேவை உன்னைப் பற்றிச் சொல்லு ?

எனக்கு உறவென்று யாருமில்லை...வருத்தத்தில கொஸ்பிற்றலில் இருக்கேக்கையும் ஒருவரும் பாக்க வாறேல்ல....யாரும் இருந்தால் தானே என்னையும் பாக்க வருவினம்....! அவனது துயரங்கள் குழந்தைக்காலம் முதல் இன்று வரை அவனது போராட்டம் பற்றி நிறையவே சொல்லிக் கொண்டு வந்தான்.

எனக்கு படிக்க மட்டுமெண்டாலும் உதவுங்கோ அன்ரி. நான் படிச்சு முடிக்க வேணும். நான் படிச்சு முடிச்ச பிறகு என்னைப் போல அம்மா அப்பா சொந்தம் இல்லாத பிள்ளைகளுக்கு நான் உதவி செய்வன். என்னுடைய கனவு அதுதான்.

நீங்க ரெலிபோன் எடுக்கிறதுக்கு அரை மணித்தியாலம் முதல் தான் வந்தனான். இப்பதான் சமைக்கிறன். என்னாலை வேலை செய்ய முடியேல்ல ஆனாலும் இண்டைக்கு வேலைக்குப் போயிற்றுத்தான் வந்தனான். வெளியில சாப்பிடுறதெண்டா செலவு கூட அதாலை நான் தானன்ரி சமைச்சு சாப்பிடுறனான். அவன் சொல்லிக் கொண்டிருந்த போது இலங்கை நேரம் இரவு 9.40ஆகியிருந்தது.

பாசத்துக்காகவும் தன்னை நேசிக்கிற மனிதர்களுக்காகவும் அவன் நிறையவே ஏங்குகிறான். நோயில் விழுகிற போது தாங்க ஒரு தோழும் துயரில் சோர்கிற போது நாங்களிருக்கிறோம் என்று சொல்லி ஏந்தவும் உறவுகள் இல்லாது போகிற போது எல்லா உயிரையும் வதைக்கும் மனவலி அவனை உள்ளால் குடைந்து கோதாக்கி விட்டிருக்கிறது என்பதையே அவனது பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

அவனது துயரக்கதைகளை மாற்றி எனது குடும்பம் குழந்தைகள் பற்றி கதையை ஆரம்பிக்க அவன் கதையும் மாறியது. நீ யோசிக்காதை நீ படிக்கவும் உன்னுடைய கனவுகளை நிறைக்கவும் நாங்கள் இருக்கிறம். உன்னை மாதிரி உன்ரை வயசுக்கு கிட்ட எனக்கும் ரெண்டு பிள்ளையள் இருக்கினம். இனிமேல் உனக்கு அம்மா , அப்பா , தம்பி  , தங்கைச்சி என உறவுகளாக நாங்கள் இருக்கிறம்.

சில வினாடிகள் அவனிடமிருந்து பேச்சு வரவில்லை. நிக்கிறீங்களோ தம்பி....! ஓம்.....! அவன் குரல் உடையத் தொடங்கியது. கனபேர் என்னோடை கதைச்சவை...எல்லாரும் கதைச்சிட்டு பிறகு எடுக்கவேயில்லை....வளமை போல நீங்களும் கதைச்சிட்டு விட்டிடுவீங்களெண்டு தான் நினைச்சன்.

ஆனால் நீங்கள் கதைச்சது நம்பிக்கை வருது.

மெடம் என்றவன் பிறகு அன்ரியென்றான் இப்போது அம்மா என்கிறான். எத்தனையோ பிள்ளைகள் அவன் போல அம்மா என உரிமையோடு அழைப்பது போல அவனும் எனது குழந்தையாகிறான். மாதம் அவனுக்காக 60€அனுப்ப வேண்டும். மேற்கொண்டு அவனது மருத்துவத்துக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்;. இன்னும் மூன்றரை வருடங்கள் மிச்சமிருக்கும் அவனது பல்கலைக்கழக கல்வியை முடிக்கும் வரை அவனுக்கான உதவியை ஒழுங்கு செய்ய வேண்டும்.

தன்போல உறவுகளற்ற பிள்ளைகளை ஆதரவு கொடுத்து வாழ்வில் நம்பிக்கையோடு முன்னேற்றி உருவாக்கும் கனவோடும் வாழ்வை வாழவும் ஆசைப்படும் அவன் வாழ அவனைக் காக்க வேண்டும். மரணத்தின் நாளையும் மாற்றிப் போடும் சக்தி மிக்க மருத்துவம் மூலம் அவனைக் காக்க முடியும் எனது குழந்தையைக் காப்பாற்ற எனது குழந்தையின் வாழ்வை மீட்க உதவிகள் வேண்டும். உதவுங்கள் என உலகத்தின் அனைத்து மனிதாபிமானிகளையும் வேண்டுகிறேன்.

01.04.2014

Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418
nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

 
 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இவ் இளைஞனுக்கு பிரித்தானியாவிலிருந்து முகநூல் மூலம் அறிமுகமான அகல்யா ஒரு மாதத்திற்கான உதவியை வழங்க முன்வந்துள்ளார். அதுபோல கள உறவு சுபேஸ் தன்னால் முடிந்த உதவியை செய்ய முன்வந்துள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.