Jump to content

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்


Recommended Posts

ஏப்ரல் 2ஆம் நாள் திங்கட்கிழமை ஒட்டாவா கனடிய பாராளுமன்ற முன்றலில் நன்றி தெரிவிக்குமுகமாக திரண்ட கனடிய தமிழர்களை நாடி ஆளும் கன்சவேட்டிவ் மற்றும் புதிய சனநாயகக்கட்சி, லிபரல் ஆகிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறாகத் திரண்டனர்.

சிறீலங்கா குறித்த விடயத்தில் கடந்த ஒரு வருடமாக கனடிய தேசமே அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக கடும்போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் அதற்கு தமது நன்றியறிதலை தெரிவிக்கும் முகமாக ரொரன்ரோ, மொன்றியல், ஒட்டாவா இருந்து திரண்ட நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை கனடிய பாராளுமன்ற முன்றலில் நடாத்தினர்.

தமிழர்களின் நன்றியறிதலை ஏற்று அவர்கள் முன் வரிசையாக நீண்ட நேரமாக உரையாற்றிய அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். அத்துடன் சிறீலங்காவில் சுயாதீன சர்வதேச விசாரணை அமைய வேண்டும் என்பதை பலரும் வலியுறுத்தினர்.

கடந்த ஆண்டில் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா வருடாந்த கூட்டத்தொடாரில் நாடுகளின் அறிக்கையில் சிறீலங்கா விடயத்தை விவாதித்த ஒரே நாடு கனடா என்பது மட்டுமன்றி, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டிலும் சிறீலங்கா விடயத்தை முதன்மைப்படுத்திய மட்டுமன்றி ராஐபக்ச பேச எழுந்தபோது கனடா பிரதமர் வெளிநடப்பும் செய்தார். சிறீலங்காவில் 2013 நடைபெறவுள்ள மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமன்றி புறக்கணிப்போம் என்ற எச்சரிக்கையும் கனடிய பிரதமர் விடுத்தார்.

அத்துடன் ஜ.நா மனித உரிமை அவையில் சமர்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து கனடாவும் முன்மொழிந்தும், வாக்களிக்கும் நாடாக இல்லாவிட்டாலும் அதன் வெற்றிக்காக பல நாடுகளை அணுகி காத்திரமாக உழைத்தும், பிரேரணை நிறைவேற்றப்பட்டதும், தமது மகிழ்ச்சியை வெளியிட்டு ஆதரித்த நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக நன்றியறிதலை முதலாவதாக வெளியிட்ட நாடும் கனடாவே.

சமீபத்தில் உண்மைந்pலையை கண்டறிய கனடாவின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாகச் சிறீலங்கா சென்று திரும்பிய கிரிஸ் அலெக்ஸ்டாண்டர், ரிக் டைஸ்ரா, லிபரல் கட்சித்தலைவர் பொப் ரே, மறைந்த புதிய சனநாயகக்கட்சித் தலைவர் ஐக் லேட்டன் அவர்களின் துணைவியார் ஒலிவியா சோ, எனப் பல முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுடன் இணைந்து கொண்டனர்.

உலகில் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் மேற்கு கரையான வன்கூவரில் இருந்து கியுபெக் வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் கணிசமானவர்களின்; தொகுதிகளில் தமிழர்கள் யாரும் கிடையாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழர் நலனை மட்டும் முன்னிறுத்தி செயற்படும் உறவுகளின் பெருமுயற்சியே இத்தகைய பாரிய கனடிய மாற்றத்திற்கான காரணம் என்றனர் கனடியத் தமிழர்கள். இந்நிகழ்வு பாரிய எழுச்சியையும் பெரும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதாக பலரும் பேசிக் கொண்டதாக தெரிவிக்கின்றார் எமது செய்தியாளர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=58141&category=TamilNews&language=tamil#.T3siVVnfUA8.facebook

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன்.....அளவில் சிறிய தொகை ஆயினும் .அற்பணிப்புடனான மக்களின் பங்களிப்பு.....மூன்று வருடங் களுக்கு முன்

நாம் தெருத் தெருவாக அழுததிற்கு கிடைத்த சிறு ஆறுதல்.இது....நன்றி கனடாவுக்கு....

Link to comment
Share on other sites

கலந்துகொண்டு இந்த அரசியல் நோக்கத்திற்கு ஆதரவு கொடுத்த உறவுகளுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.

இத்தனை மக்கள் இறக்கும் போது கொடி பிடித்துத் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என எமக்கு வலியுறுத்தப்பட்டது. அதை நியாயம் செய்தும் யாழ்களத்தில் நிறையத் தடவைகள் நான் எழுதியுமிருக்கின்றேன். நேற்று எங்கே எம் தேசியக் கொடி போய்விட்டது.

ஆர்ப்பாட்டம் செய்த தருவாயில் நிறையப் பேர் மக்கள் மரணங்களை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். தேசியக் கொடி பிடிக்க வேண்டாம் என்பதை இவர்கள் ஏற்கவில்லை. இறுதி வரை வேண்டும் என்றார்கள். ஏன் நேற்றுப் பிடிக்கவில்லை?

ஜெனிவாவில் நட்நத மனித உரிமைகள் விடயத்துக்காக யாரையும் தேசிய அவை அனுப்பவே இல்லை. ஆனால் இங்கே நன்றி சொல்ல மட்டும் நின்று கொண்டார்கள்.( அந்த விடயத்தை வலியுறுத்தியதற்காக நன்றிகள். ஆனால் அதன் பின்ணனி, நோக்கம் பற்றி விபரிக்க விரும்பவில்லை) ஜெனிவாவிற்கு ஏன் ஆட்களை அனுப்பவில்லை என்றால், அங்கு நாடு கடந்த தமிழீழ அரசு, கனடியத் தமிழ்க்காங்கிரஸ் போன்றவை கலந்து கொண்டன என்பதால் தான். எம் மக்களுடைய பிரச்சனைகளை விட, அவர்களுக்கு தங்களுக்குள்ள போட்டி மனப்பான்மையும், புகைச்சலும் தான் முன்னுக்கு நிற்கின்றது என்பதை நினைத்து நொந்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

சில விடயங்கள் எழுதவே விரும்பவில்லை. அது எம்மை நாமே பலவீனப்படுத்தும். ஆனால் இப்படியான எங்களின் சிந்தனைகளை வைத்துத் தான் இவர்கள் தப்பிக்க ஏதுவானான வழியுமாக இருக்கின்றது!

நேற்று ஏன் இவர்கள் தேசியக் கொடி பிடிக்கவில்லை. கொடியை முன்னிலைப்படுத்தவிடின் துரோகிகள் என்ற பதங்களை மற்றவர்கள் மீது தெளித்ததை இவர்கள் மீதும் பாவிக்கலாமா??

Link to comment
Share on other sites

.

... நம்மளில் கனக்க தேசியக்கொடி பிடிப்பவர்களும், தமிழீழ கோசங்கள் இடுபவர்களும், நாடு கடந்து அரசாங்கங்கள் நடத்துபவர்களும், மாவீரர்நாளை புலத்தில் உடைத்தெறிந்தவர்களுக்கும் ... பின் உள்ள மர்மங்கள் ஒன்றுமே ... துரோகங்களில்லை!!!!!!!!

இப்போ உந்த கனேடிய நிகழ்வில் ... தேசிய கொடி பிடிக்காதது ... தேசத்துரோக குற்றம்??? துரோகம்???? .... இதை... தேசியக்கொடி பிடிப்பவர்களும், தமிழீழ கோசங்கள் இடுபவர்களும், நாடு கடந்து அரசாங்கங்கள் நடத்துபவர்களும், மாவீரர்நாளை புலத்தில் உடைத்தெறிந்தவர்களின் பாசையில் சொல்வதானால் ... துரோகம்!!!!!!!!!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கொடியைப் பிடித்திருந்தால் இவர்கள் வெளியே வந்திருக்க மாட்டார்கள்..! இவர்கள் வெளியே வந்திராவிட்டால் கனேடிய அரசியல்மட்டத்தில் எமக்கு ஆதரவில்லை என்று திரிக்கப்படும்..! கோழி குருடா இருந்தால் என்ன.. குழம்பு ருசியா இருந்தால் சரிதான்..!! :rolleyes:

Link to comment
Share on other sites

குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.

இத்தனை மக்கள் இறக்கும் போது கொடி பிடித்துத் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என எமக்கு வலியுறுத்தப்பட்டது. அதை நியாயம் செய்தும் யாழ்களத்தில் நிறையத் தடவைகள் நான் எழுதியுமிருக்கின்றேன். நேற்று எங்கே எம் தேசியக் கொடி போய்விட்டது.

ஆர்ப்பாட்டம் செய்த தருவாயில் நிறையப் பேர் மக்கள் மரணங்களை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். தேசியக் கொடி பிடிக்க வேண்டாம் என்பதை இவர்கள் ஏற்கவில்லை. இறுதி வரை வேண்டும் என்றார்கள். ஏன் நேற்றுப் பிடிக்கவில்லை?

ஜெனிவாவில் நட்நத மனித உரிமைகள் விடயத்துக்காக யாரையும் தேசிய அவை அனுப்பவே இல்லை. ஆனால் இங்கே நன்றி சொல்ல மட்டும் நின்று கொண்டார்கள்.( அந்த விடயத்தை வலியுறுத்தியதற்காக நன்றிகள். ஆனால் அதன் பின்ணனி, நோக்கம் பற்றி விபரிக்க விரும்பவில்லை) ஜெனிவாவிற்கு ஏன் ஆட்களை அனுப்பவில்லை என்றால், அங்கு நாடு கடந்த தமிழீழ அரசு, கனடியத் தமிழ்க்காங்கிரஸ் போன்றவை கலந்து கொண்டன என்பதால் தான். எம் மக்களுடைய பிரச்சனைகளை விட, அவர்களுக்கு தங்களுக்குள்ள போட்டி மனப்பான்மையும், புகைச்சலும் தான் முன்னுக்கு நிற்கின்றது என்பதை நினைத்து நொந்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

சில விடயங்கள் எழுதவே விரும்பவில்லை. அது எம்மை நாமே பலவீனப்படுத்தும். ஆனால் இப்படியான எங்களின் சிந்தனைகளை வைத்துத் தான் இவர்கள் தப்பிக்க ஏதுவானான வழியுமாக இருக்கின்றது!

நேற்று ஏன் இவர்கள் தேசியக் கொடி பிடிக்கவில்லை. கொடியை முன்னிலைப்படுத்தவிடின் துரோகிகள் என்ற பதங்களை மற்றவர்கள் மீது தெளித்ததை இவர்கள் மீதும் பாவிக்கலாமா??

ஜெனிவாவில் நடந்த விடயத்திற்கு தேசிய அவையிலிருந்து ராஜ் சுப்ரமணியம் சென்றிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றாரா அல்லது அவையின் பிரதிநிதியாகச் சென்றாரா என்பதுபற்றி தெரியாது. அதைப்பற்றி அறிந்துகொண்டு எழுதுங்கள். கொடி விடயத்தை அவர்களிடமே கேட்டுக் காரணத்தை அறிவது தான் சிறந்தது. "கொடி பிடிக்க வேண்டாம்" அல்லது "கொடி கொண்டுவரவேண்டாம்" என்று சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லவில்லையெனின் அவர்களைக் குறைசொல்லி என்ன பயன்? சென்றிருந்த மக்களையல்லவா கேள்வி கேட்கவேண்டும்?

Link to comment
Share on other sites

எமக்கு இன்று ஜெனீவா தீர்மானம் பின்னராக உள்ள சர்வதேச ஆதரவை திரட்டி மேலும் பலம் சேர்ப்பதே நோக்கம்.

மொத்தமாக முப்பத்தியொரு உறுப்பினர்கள் எல்லாக்கட்சிகள் சார்பிலும் கலந்துகொண்டனர், அதாவது எமது கனேடிய அரசியல்போராட்டத்தில் பாராளுமன்றத்திடலில் இவ்வாறு கலந்துகொண்டது மிகக்குறைவு.

சிங்களம் தனக்கு ஆதரவாக ஐ.நா.வில் வாக்களித்த நாடுகளுக்கு பலவேறு விதமாக நன்றிகளை தெரிவிக்கின்றான். பல மேற்குலக முடிவுகளுக்கு பின்னால் கனடா இருந்திருக்கலாம். அடுத்த வருடம் கனடா ஐ.நா. மனித உரிமை குழுவில் இருக்கலாம். கனடா பிரெஞ்சு மொழியையும் உத்தியோகபூர்வமாக கொண்டநாடு, பல பிரெஞ்சு நாடுகளுடன் தொடர்புகொண்டது.

Link to comment
Share on other sites

ஜெனிவாவில் நடந்த விடயத்திற்கு தேசிய அவையிலிருந்து ராஜ் சுப்ரமணியம் சென்றிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றாரா அல்லது அவையின் பிரதிநிதியாகச் சென்றாரா என்பதுபற்றி தெரியாது. அதைப்பற்றி அறிந்துகொண்டு எழுதுங்கள். கொடி விடயத்தை அவர்களிடமே கேட்டுக் காரணத்தை அறிவது தான் சிறந்தது. "கொடி பிடிக்க வேண்டாம்" அல்லது "கொடி கொண்டுவரவேண்டாம்" என்று சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லவில்லையெனின் அவர்களைக் குறைசொல்லி என்ன பயன்? சென்றிருந்த மக்களையல்லவா கேள்வி கேட்கவேண்டும்?

கனேடியத்தமிழர் தேசிய மக்கள் அவை 25,000 டாலர்களை திரட்டி உலகத்தமிழர் பேரவையிடம் கொடுத்ததன் மூலம் ஜெனீவா நடவடிக்கைகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடியைப் பிடித்திருந்தால் இவர்கள் வெளியே வந்திருக்க மாட்டார்கள்..! இவர்கள் வெளியே வந்திராவிட்டால் கனேடிய அரசியல்மட்டத்தில் எமக்கு ஆதரவில்லை என்று திரிக்கப்படும்..! கோழி குருடா இருந்தால் என்ன.. குழம்பு ருசியா இருந்தால் சரிதான்..!! :rolleyes:

புரியவில்லை. இதைத் தானே யுத்தம் நடக்கும்போது பலர் சொன்னார்கள். கொடியே பிடிக்காதீர்கள். வெளியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று. அன்று கவனயீர்ப்பு எதற்காகச் செய்தோம்?? வன்னியில் மக்கள் படுகொலையைத் தடுப்பதற்காகத் தானே?? அப்போது ஞான உதயம் வரவில்லையா? இன்று அகூதா கற்பிக்கின்ற நியாயம் உற்பட, பல விடயங்களைப் பிறர் சொன்னார்கள். அவர்களை இவர்கள் வர்ணித்த விதம் எப்படியா??உலகத் தமிழர் தடை செய்யப்பட்டபோது, குறித்த பிரிதொரு அமைப்பின் அலுவலகத்தில் தான் இவர்கள் கூட்டங்கள் வைத்தார்கள். அன்று, அந்த அமைப்பு, கொடி பிடிக்க வேண்டாம். மக்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னதற்காக, அந்த அமைப்பின் அலுவலகத்தில் இவர்கள் அலுவலக நேரத்தில் பிற்பாடு கால் வைத்ததில்லை.( அலுவலக நேரம் என்று சொன்னது புரியவில்லை எனில் தனிமடல் போடுங்கள்.)உண்மையில் நேற்றுத் தான் கொடி பிடித்திருக்க வேண்டும். யார், இதற்கு நன்றி சொல்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக.... யார் குத்தினாலும் அரிசியானச் சரி எனலாம். ஆனால் இவர்கள் குத்துவது கொஞ்ச். வீணாக்குவது பல மடங்கு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் நடந்த விடயத்திற்கு தேசிய அவையிலிருந்து ராஜ் சுப்ரமணியம் சென்றிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றாரா அல்லது அவையின் பிரதிநிதியாகச் சென்றாரா என்பதுபற்றி தெரியாது. அதைப்பற்றி அறிந்துகொண்டு எழுதுங்கள். கொடி விடயத்தை அவர்களிடமே கேட்டுக் காரணத்தை அறிவது தான் சிறந்தது. "கொடி பிடிக்க வேண்டாம்" அல்லது "கொடி கொண்டுவரவேண்டாம்" என்று சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லவில்லையெனின் அவர்களைக் குறைசொல்லி என்ன பயன்? சென்றிருந்த மக்களையல்லவா கேள்வி கேட்கவேண்டும்?

பார்வையாளர் வரிசையில் நின்ற ஒருவர் பங்களித்தார் என்று சொல்கின்ற விளம்பரம் எதற்காக?? ஒரு கேள்வி கூடக் கேட்டாரா?  அந்த வகையில் நாடு கடந்த அரசும், விளம்பரத்துக்காகத் தான் போனது. ஆனால் இவர்களை விடக் கொஞ்சம் பரவாயில்லை. தனிப்பட்டரீதியில் சந்திக்க முயற்சித்தது.

நான் அறிந்தவரை, ஹரி ஆனந்தசங்கரியும், என்னுமொருவரும் தான் பேச கனடாவில் இருந்து சென்று வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்கள்..ஜெனிவாவின் முன்னுக்கு நின்று படம் எடுத்துப் போடுதல், போன்ற விளம்பரங்களால் மக்களுக்கு எந்தப் பலனுமில்லை.

------------------

ஏன் ஒழுங்கு செய்தவர்களிடம் ஒரு கொடி கூட இல்லாமல் போய் விட்டதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இன்று ஜெனீவா தீர்மானம் பின்னராக உள்ள சர்வதேச ஆதரவை திரட்டி மேலும் பலம் சேர்ப்பதே நோக்கம்.

மொத்தமாக முப்பத்தியொரு உறுப்பினர்கள் எல்லாக்கட்சிகள் சார்பிலும் கலந்துகொண்டனர், அதாவது எமது கனேடிய அரசியல்போராட்டத்தில் பாராளுமன்றத்திடலில் இவ்வாறு கலந்துகொண்டது மிகக்குறைவு.

சிங்களம் தனக்கு ஆதரவாக ஐ.நா.வில் வாக்களித்த நாடுகளுக்கு பலவேறு விதமாக நன்றிகளை தெரிவிக்கின்றான். பல மேற்குலக முடிவுகளுக்கு பின்னால் கனடா இருந்திருக்கலாம். அடுத்த வருடம் கனடா ஐ.நா. மனித உரிமை குழுவில் இருக்கலாம். கனடா பிரெஞ்சு மொழியையும் உத்தியோகபூர்வமாக கொண்டநாடு, பல பிரெஞ்சு நாடுகளுடன் தொடர்புகொண்டது.

நானும் அதைத் தான் கேட்கின்றேன். கவனயீர்ப்புப் போராட்டத்தை நாங்கள் ஏன் நடத்தினோம்?? சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றச் சொல்லித் தானே?? அப்போது மக்கள் படுகொலைத் தடுக்கின்றதை முன்னிலைப்படுத்தாமல், பிடிவாதமாகப் பல வேலைகளைச் செய்யப் போய் இத்தனை அழிவுகளையும் தடுக்க, கேட்க எமக்கு நாதியின்றிப் போய் விட்டது.

இத்தனை பேரை இழந்தபோதும் யாரும் அன்று எமக்குக் குரல் கொடுக்காமல் போனதற்கு இவர்களின் இப்படியான பிடிவாதப் போக்குக் காரணமாக இருக்கவில்லை என்கின்றீர்களா?? இன்று நீங்கள் கற்பிக்கின்ற நியாயங்களை மற்றவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் துரோகியானவர்கள்.

கனேடியத்தமிழர் தேசிய மக்கள் அவை 25,000 டாலர்களை திரட்டி உலகத்தமிழர் பேரவையிடம் கொடுத்ததன் மூலம் ஜெனீவா நடவடிக்கைகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

எனக்கு பதிலும் புரியவில்லை. வேறுபாடும் புரியவில்லை...

Link to comment
Share on other sites

பார்வையாளர் வரிசையில் நின்ற ஒருவர் பங்களித்தார் என்று சொல்கின்ற விளம்பரம் எதற்காக?? ஒரு கேள்வி கூடக் கேட்டாரா? அந்த வகையில் நாடு கடந்த அரசும், விளம்பரத்துக்காகத் தான் போனது. ஆனால் இவர்களை விடக் கொஞ்சம் பரவாயில்லை. தனிப்பட்டரீதியில் சந்திக்க முயற்சித்தது.

நான் அறிந்தவரை, ஹரி ஆனந்தசங்கரியும், என்னுமொருவரும் தான் பேச கனடாவில் இருந்து சென்று வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்கள்..ஜெனிவாவின் முன்னுக்கு நின்று படம் எடுத்துப் போடுதல், போன்ற விளம்பரங்களால் மக்களுக்கு எந்தப் பலனுமில்லை.

------------------

ஏன் ஒழுங்கு செய்தவர்களிடம் ஒரு கொடி கூட இல்லாமல் போய் விட்டதா??

விளம்பரம் என்றும் பார்க்கலாம், தவறில்லை. ஆனால், இந்த அமைப்புக்களின் சார்பாக ஐ.நா.வுக்கு சென்ற பலரும் தமது நேரம், குடும்பம், வேலை, பணம் என பலவற்றை தாயக மக்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்தார்கள்.

ஜெனீவாவில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களே தமது கருத்துக்களை முன்வைக்கமுடியும். அந்த வகையில் கிருபாகரன் அவர்கள் மட்டுமே கருத்தை வைத்தார் என நம்புகிறேன். ஆனந்தசங்கரி அவர்கள் பேசியது ஒரு சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பாக.

முள்ளிவாய்க்கால் வரை நாம் இவ்வாறான செய்பாடுகளில் ஈடுபடவில்லை, மூன்று வருட காலமாகவே நாம் முயற்சித்து வருகின்றோம்.

Link to comment
Share on other sites

எனக்கு பதிலும் புரியவில்லை. வேறுபாடும் புரியவில்லை...

உலகத்தமிழர் பேரவை சர்வதேச ரீதியில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக செயல்பட்டு வரும் அமைப்பு. பல நாடுகளிலும் ஒரு உறவை வளர்த்துவரும் அமைப்பு. அந்த வகையில் அவர்களின் பல செயல்பாடுகளுக்கு உதவி செய்வது மூலம் கூடிய அனுகூலத்தை ஏற்படுத்த முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறித்தவர் ஜெனிவா சென்றும் பேச முடியவில்லை என்கின்றீர்கள். பார்வையாளர் வரிசையில் இருந்து விட்டு வருவது தாயக மக்களின் நலன்களுக்கான அர்ப்பணிப்பு?? என்பது எவ்வகையில் பொருந்துகின்றது.

Link to comment
Share on other sites

குறித்தவர் ஜெனிவா சென்றும் பேச முடியவில்லை என்கின்றீர்கள். பார்வையாளர் வரிசையில் இருந்து விட்டு வருவது தாயக மக்களின் நலன்களுக்கான அர்ப்பணிப்பு?? என்பது எவ்வகையில் பொருந்துகின்றது.

அதற்கான பதில் இங்கே இருக்கலாம். தயவு செய்து வாசித்துப்பாருங்கள்.

http://www.ncctcanada.ca/images/docs/NCCT%20Press%20Release%20-%20Forum%20on%20US%20Resolution%20-%20March%2027th%202012.pdf

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100091&hl=&fromsearch=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு வழங்கிய நிதிப் பங்களிப்பு எப்படி ஜெனிவா நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்த்தது என அறியத் தரமுடியுமா??

உலகத்தமிழர் பேரவை சர்வதேச ரீதியில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக செயல்பட்டு வரும் அமைப்பு. பல நாடுகளிலும் ஒரு உறவை வளர்த்துவரும் அமைப்பு. அந்த வகையில் அவர்களின் பல செயல்பாடுகளுக்கு உதவி செய்வது மூலம் கூடிய அனுகூலத்தை ஏற்படுத்த முடியும்.

தமிழச்சி இதை விடயத்தை ஏற்கனவே கதைத்துள்ளார் போலுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் எழும் கேள்வி...

Link to comment
Share on other sites

நாடு கடந்த அரசின் சார்பில் (செலவில்) இங்கிலாந்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரையன், சட்டவல்லுநர் கேரன் பார்க்கர், பேராசிரியர்கள் போல் நியூமன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு, தமிழர்களுக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கான அனைத்துச் செலவுகளையும் நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

அந்த 25,000 டொலர்களும் மக்களின் பணம் என்பதை ஒத்துக் கொள்வீர்களா அகூதா? அந்த 25,000 டொலர்களும் ஐ.நா. மனித உரிமை அவையின் செயற்பாட்டிற்காகத் தான் செலவிடப்பட்டதா?

தூயவன், நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். ஒருவர் மட்டுமே சொல்லும்போது, அது பக்கச்சார்பானதாகப் பார்க்கப்படும். மக்களை விழிப்படையச் செய்வதே இப்போதைய முக்கிய தேவை.

Link to comment
Share on other sites

அதற்கு வழங்கிய நிதிப் பங்களிப்பு எப்படி ஜெனிவா நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்த்தது என அறியத் தரமுடியுமா??

தமிழச்சி இதை விடயத்தை ஏற்கனவே கதைத்துள்ளார் போலுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் எழும் கேள்வி...

அமைப்பின் சார்பாக பல நாடுகளுக்கும் சென்று வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்கின்றமை ( தென் ஆபிரிக்க பிரயாணம்) ;

வண இமானுவேல் அடிகளார் அவர்களின் இந்திய பிரயாண முயற்சியும் இந்தியாவுடனான செயற்பாடுகளும்;

ஜெனீவாவில் பல அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தல்;

பல நாடுகளில் அந்தந்த நாட்டு பிரநிதிகள் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்களில் தொடர்புகளை ஏற்படுத்தல் (ex: USTPAC in US)

22 ஆவது தொடரை நோக்கிய அரசியல் வேலைப்பாடுகள்;

GTF remains resolute that only an independent, international investigation will bring justice to the victim’s of war crimes and crimes against humanity, and their families. However, these important small steps can pave the way for an international mechanism towards truth, accountability and lasting peace on the island. http://globaltamilforum.org/gtf/

Link to comment
Share on other sites

தேசிய அவையின் சார்பில் ஐ.நா. சபைக்குச் சென்றவர் ஒரு இன்ஜீனியர். அவரால் சாதாரணமானவர்களுடன்கூட அரசியலோ, மனித உரிமைகள் பற்றியோ விவாதிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இவரைப் பற்றி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில்கூட எழுதினார்கள். அகூதா, முடிந்தால் இவரோடு நீங்கள் சிறிது நேரம் விவாதித்துப் பாருங்கள். அப்போது விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி ஆனந்தசங்கரி மட்டுமல்லாமல், வாணி என்ற ஒரு தமிழ் உறவும் கனடாவில் இருந்து சென்று பேசியிருப்பதாக அறிய முடிகின்றது...இருவரும் வழக்கறிஞர்கள், மற்றும் பல்கலைக்கழ சார்பான அமைப்பினூடாகச் சென்று பேசியிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

தேசிய அவையின் சார்பில் ஐ.நா. சபைக்குச் சென்றவர் ஒரு இன்ஜீனியர். அவரால் சாதாரணமானவர்களுடன்கூட அரசியலோ, மனித உரிமைகள் பற்றியோ விவாதிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இவரைப் பற்றி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில்கூட எழுதினார்கள். அகூதா, முடிந்தால் இவரோடு நீங்கள் சிறிது நேரம் விவாதித்துப் பாருங்கள். அப்போது விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாணி சமீபத்தில் எழுதிய கட்டுரை ரொரன்ரோ ஸ்ராரில்::

http://www.thestar.com/opinion/editorialopinion/article/1154643--sri-lanka-on-notice-where-do-we-go-from-here

Link to comment
Share on other sites

ஹரி ஆனந்தசங்கரி மட்டுமல்லாமல், வாணி என்ற ஒரு தமிழ் உறவும் கனடாவில் இருந்து சென்று பேசியிருப்பதாக அறிய முடிகின்றது...இருவரும் வழக்கறிஞர்கள், மற்றும் பல்கலைக்கழ சார்பான அமைப்பினூடாகச் சென்று பேசியிருக்கின்றார்கள்.

Gary Anandasangaree Legal Counsel for Canadian Tamil Congress (CTC) on behalf of Lawyers Rights Watch Canada (LRWC) made the following intervention at the UN Human Rights Council meeting today (March 2nd 2012) after the Sri Lankan government's permanent representative to the UN made her statement.

http://www.canadiantamilcongress.ca/article.php?lan=eng&cat=&id=34

தேசிய அவையின் சார்பில் ஐ.நா. சபைக்குச் சென்றவர் ஒரு இன்ஜீனியர். அவரால் சாதாரணமானவர்களுடன்கூட அரசியலோ, மனித உரிமைகள் பற்றியோ விவாதிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இவரைப் பற்றி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில்கூட எழுதினார்கள். அகூதா, முடிந்தால் இவரோடு நீங்கள் சிறிது நேரம் விவாதித்துப் பாருங்கள். அப்போது விளங்கும்.

அவர்கள் முயற்சிக்கிறார்கள், தவறுகளை ஏற்கும் பக்குவமும் உள்ளது. எனவே அவற்றை சுட்டிக்காட்டி ஒன்றாக நடந்து செல்வதே வழி என எண்ணுகிறேன். மாற்று வழி இருப்பாதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். ஒருவர் மட்டுமே சொல்லும்போது, அது பக்கச்சார்பானதாகப் பார்க்கப்படும். மக்களை விழிப்படையச் செய்வதே இப்போதைய முக்கிய தேவை.

------------------------------

</br>

</br>எனக்கு இவர்களைப் போட்டுத் தாக்க வேண்டும் என்ற நோக்கமில்லை. தமிழீழத்திற்காக உழைக்கின்ற அனைவரும் வரவேற்கப்பட வேண்டும் என்பதே என் அவா. ஆனால், இவர்கள் தாங்கள் மட்டுமே என்ற நோக்கத்தில் செயற்படுவதும், அதற்காக மற்றவர்களைப் பகைப்பதும் தான் பிடிக்கவில்லை.

செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் மக்களை நோக்கியதாகவே இருக்கின்றதாகவே தெரிகின்றது. எதிரியை நோக்கியதாக இல்லை. அப்படியான விளம்பரங்களையும், பெயரையும் வைத்து என்ன இலாபம்.... இதற்கு பொதுவான எல்லாக் கனடாத் தமிழ் அமைப்புகளும் விதிவிலக்கல்ல!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.