Jump to content

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12 இருந்து 14 வரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12)

749084937_BHyMQ-L.jpg

ஏன் அண்ணாவையும் புகழையும் கடத்தி வைத்திருக்கினம், என்ன பிரச்சனை? எனக்கு ஒன்றையும் மறைக்காமல் சொல்லுங்கோ....

இதுவரைக்கும் எவ்வளவோ பிரச்சனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துவிட்டோம் இனிமேலும் எங்களுக்கு பிரச்சனை என்றால் அதை தாங்கும் மன வலிமையையும் உண்டு ....

சொல்லுங்கோ மச்சாள்.

வழமைபோல் காடையர்கள் அட்டூழியமும் அவர்களின் பணம் என்கின்ற பிணம் தின்னும் ஆசையும்தான் காரணம், ஒரு கோடிரூபா கேட்க்கின்றாங்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாம் அவங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது !அவங்களிடம் அதை எதிர்பார்ப்பது தப்பு.

ஆனால் எங்களுக்கு மச்சாள் அண்ணாவையும் புகழையும் முதலில் காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யவேண்டும்,

அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் யோசிக்காதேங்கோ, இனியா நீங்கள் வேறு நாங்கள் வேறு அல்ல நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் இதைக்கூட நாங்கள் செய்யாவிட்டால் உடன்பிறந்த சகோதரம் சொந்தம் என்று சொல்வதற்கு தகுதி அற்றவர்களாகி விடுவோம், இப்போது அவர்களை வெளியில் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

இவ்வளவு காசுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் மச்சாள் ? கொஞ்சம் பொறுங்கோ,.......

மச்சாள் நானும் அண்ணாக்களிடம் கதைத்துவிட்டு சொல்கின்றேன்.

சரி இனியா ..... நான் திரும்ப கூப்பிடுகின்றேன்.

சரி மச்சாள்.

என்னம்மாச்சி ஏதாவது பிரச்சனையோ ......? யார் போணில் ? உன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது !

என்ன நடந்தது ?

ஒன்றும் இல்லை .... வாங்கோ வீட்டுக்கு போவோம்.

ஏன் விசாரிக்காமல் வீட்டுக்கு போவோம் என்று சொல்கின்றாய் .....

எல்லாவற்றையும் வீட்டுக்கு போய் அப்பாவுடனும் கலந்து கதைப்பம் யோசிக்காதேங்கோ அம்மா நாங்கள் கும்பிட்ட தெய்வங்கள் எங்களை கைவிடாது .....

ஏன் பிள்ளை எனக்கு சொல்லிபோட்டு அப்பாவுக்கு சொல்லலாம்தானே,.....

அப்படி நீங்கள் யோசிக்கின்றமாதிரி ஒன்றுமில்லை .....

ம் ...... ஒரு ஆட்டோவை கூப்பிடு பிள்ளை அதில போவோம் அம்மாவால் நடக்க முடியுதில்லை ....

அண்ணே ஆட்டோ வருமோ மூலைக்கடைக்கு ....

ஓம் ... வாங்கோ கவனமாக ஏறுங்கோ, வடிவாக பிடிச்சுக்கொண்டு இருங்கோ

6458622011_62af8b26c8_o.jpg

(ஆட்டோவில் ஒலித்த பாடல் இவளின் மனதை சற்று ஆறுதல் படுத்துவதாக இருந்தது )

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு

கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு

இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை

அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுவதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

பூமியில் பூமியில்

இன்பங்கள் என்றும் குறையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில்

எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ

அதுவரை நாமும் சென்றிடுவோம்

விடைபெறும் நேரம் வரும்போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்

தீராமல் இங்கே வாழுவோம்

அம்மா இந்த பாடலின் வரிகள் எவ்வளவு மனதிற்கு சுகமளிக்கின்றது ......

நீ யார் பிள்ளை ..... ஒரு கதாசிரியரின் மகள் தானே ....

அப்படியா அம்மா (என்று கூறி மனதுக்குள் பூரித்து கொள்கின்றாள் )

sunset-27.jpg

சூரியன் சற்று ஓய்வு எடுப்பதற்காக தென் மேற்கு திசையில் செல்லும் வேளையில் அங்கே புகழும் தினாவும் வாய்விட்டு சொல்ல முடியாத சூழ் நிலையில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தகரத்தால் சுற்றி அடைக்கப்பட்ட ஒரு இடத்தில் பூச்சி புழுக்களின் மத்தியில் சோறு தண்ணீர் இன்றி இருவரும் பேசிக்கொள்கின்றார்கள் ......

(ரகசியமாக) இப்படிதானே மூன்று வருடங்களுக்கு முன் எம் இனத்தை கொன்றிருப்பாங்கள் இந்த கொடியவங்கள்.

புகழ் ....... இப்போது இரவா? பகலா? என்ன நேரம் என்று கூட தெரியவில்லை, இதென்ன வாழ்க்கை மச்சான் எதாவு வழி தெரிகின்றதா......?

இந்த இடம்பற்றி அறிந்ததை விட அதை நாங்கள் அனுபவிக்கும் போதுதான் ஆதன் வலிகளும் ரணங்களும் புரிகின்றது ...... ம்,......

''காத்திரு ..... மச்சான் ...... காத்திரு, காலமும் கடவுளும் வெகுவிரைவில் எம் பக்கம் மாறும், அப்போது சரித்திரம் வெல்லும்''

தினா, .....என்ன ஆகிற்று ....? ஏதாவது தலையில் அடிகிடி விழுந்து விட்டதோ ?(கிண்டலாக)

திடீரென தத்துவம் பேசுகின்றீர்கள்.

இல்லை ..... மச்சான், (சலிப்புடன்) ஒரு வேளை எங்களுக்கு ஏதாவது நடந்தாலும் கடைசியாக ஒரு பாடல் வரிகளை படிக்கவேண்டும் போல் தோன்றுகின்றது .....

ம் ..... எங்கிருக்கின்ராரோ? எப்போது வருவாரோ!

படியட ..... மச்சான் ..... படி ..... இந்த பாடலாவது ரணத்தை ஆற்ருதோ என பார்ப்போம். ஐயோ......, என்ன வலி வலிக்குது .....

என் இனமே... என் சனமே...

என்னை உனக்குத் தெரிகிறதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

அன்னை தந்தை எனக்குமுண்டு

அன்பு செய்ய உறவும் உண்டு

என்னை நம்பி உயிர்கள் உண்டு

ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

பாசறை நான் புகுந்த இடம்

பதுங்கு குழி உறங்குமிடம்

தேசநலன் எனது கடன்

தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...

(யாரோ வரும் சத்தம் கேட்கின்றது)

hand_gun.jpg

அடே .... என்ன சத்தங் ..... மொனுவதே கத்தாக்கரண்ட ....

முடிஞ்சுதட ..... மச்சான் ..... கதை, இண்டைக்குத்தான் கடைசியோ ?

இனியாவின் தவிப்பு தொடரும் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு பாகம் 12 படிச்சாச்சு...அணில் படம் சுப்பர்..ஏன் தனித்,தனியாக கதையை இணைக்கிறீங்கள் என்று கேக்கலாமா...முதல் தொடருடனயே இணைத்துக் கொண்டால் ஒரு தொகுப்பாகவே சேர்ந்து விடும் அல்லவா...எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

< என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் >

கதையின் மகுடமே இதுதான் . உங்கள் பாணி கதைகதையாம் பகுதியில் புதுப் பரணி படிக்கட்டும் !!!!!!!!!!!! :):):) 2 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் தமிழரசு... :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை ..அணில் படம் கவர்ச்சியாய் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு பாகம் 12 படிச்சாச்சு...அணில் படம் சுப்பர்..ஏன் தனித்,தனியாக கதையை இணைக்கிறீங்கள் என்று கேக்கலாமா...முதல் தொடருடனயே இணைத்துக் கொண்டால் ஒரு தொகுப்பாகவே சேர்ந்து விடும் அல்லவா...எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

நன்றி யாயினி

தொடர்ந்து இணைப்பதற்கு கேட்டுள்ளேன் முடிந்தால் கோப்பாக இணைப்பார்கள்.

தனித்தனியாக இணைக்கும் போது வாசகர் அதிகமாக வாசிக்கின்றார்கள்.

< என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் >

கதையின் மகுடமே இதுதான் . உங்கள் பாணி கதைகதையாம் பகுதியில் புதுப் பரணி படிக்கட்டும் !!!!!!!!!!!! :):):) 2 .

கோமகன் நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் தமிழரசு... :) :)

நன்றி புரட்சி

கதை அருமை ..அணில் படம் கவர்ச்சியாய் இருக்கிறது

நன்றி நிலாமதி

Link to comment
Share on other sites

வித்தியாசங்களை சுமந்துவருகின்றீர்கள் தமிழரசு.

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள்!

முக்கியமாக அந்த அணில் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசங்களை சுமந்துவருகின்றீர்கள் தமிழரசு.

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள்!

முக்கியமாக அந்த அணில் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்! :)

நன்றிகள் கவிதை

Link to comment
Share on other sites

இசையும் கதையுமாக இனிதாக நகர்ந்து கொண்டிருக்கிறது இனியாவின் தவிப்பு. கதையை அலங்கரிக்கும் படங்களும் உயிரோட்டம் தருகின்றன.

நிஜத்தில் நடப்பவைகளை அழகாக அதே நேரம் எளிமையாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையுமாக இனிதாக நகர்ந்து கொண்டிருக்கிறது இனியாவின் தவிப்பு. கதையை அலங்கரிக்கும் படங்களும் உயிரோட்டம் தருகின்றன.

நிஜத்தில் நடப்பவைகளை அழகாக அதே நேரம் எளிமையாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்..

நன்றிகள் கல்கி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13 எப்போ வரும்....ரொம்ப தான் பிறேக் எடுக்கிற மாதிரி தெரிகிறது...:)

Link to comment
Share on other sites

அண்ணா..... கதை, பாடல், படங்கள் என அனைத்துமே நன்றாக உள்ளது.

இந்த பகுதியில் விறுவிறுப்பை கூட்டி அடுத்த பகுதி எப்ப வரும் என்று எங்கள் எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். waiting for part 13.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு உங்கள் கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஆனால் கருத்து எழுதுவதில்லை நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 13)

northern_sri-lanka_lands.jpg

அடே ...... வரங் ....... இங்கின வரங் ...... இதிங் உங்கட உடுப்பி போறாங்,

ஆ .... சரி சரி,

ஏறுங்கட வானுல .....

நாங்கள் கண்கள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வானில் ஏற்றப்பட்டோம், பின்னர் வான் வேகமாக செல்வதை எங்களால் உணரமுடிந்தது இரண்டு மூன்று மணிநேரத்தின் பின் கைகட்டு அவிழ்க்கப்பட்டு நிலையில் வான் சற்று வேகம் குறைந்த பொழுது இருவரையும் வீதியில் தள்ளி விட்டாங்கள் .......

ஐயோ ...... அம்மா என்ன கொடுமையடா ...... ? இது எந்த இடம் ?

புகழ் மச்சான் பாரடா ...... ரெண்டு பேரின் சூட்கேசும் இருக்கு மச்சான்

இதைத்தன்னும் விட்டு வச்சாங்களே பாவியள் (சூட்கேசில் கைத்தொலைபேசியை தேடி எடுத்து

உடனே வீட்டுக்கு அழைப்பை மேற்கொண்டார்.

ஹலோ ..... யாரப்பு கதைக்கின்றீர்கள் .............?

அது ..... நான் ...... தினா ..... அப்பா

தினாவோ இப்போது எங்கு இருக்கின்றீர்கள் ..........?

உங்களை விட்டு விட்டாங்களோ ?

ஓம், அப்பா நானும் புகழும் ஒன்றாகத்தான் இருக்கின்றோம்,

எங்கு இருக்கின்றீர்கள் ?

இது முற்றிலும் சிங்களவர்கள் உள்ள இடம் இங்கு யாரிடமும் எதையும் கேட்க முடியவில்லை ....... அப்பா ,

அது சரி அம்மா....... தங்கச்சி எப்படி இருக்கின்றார்கள் ?

அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள், தினா எப்படி இந்த இரவு நேரம் வருவீர்கள் ?

எவ்வளவோ பிரச்சனைகளை தாங்கி விட்டோம் இது சின்ன பிரச்சனை,

அப்பா போனில் சாஜ் குறைந்து போகின்றது புகழின் வீட்டாருக்கு சொல்லி விடுங்கோ (என்று சொல்லி முடியும் போது போனில் சாஜ் முற்றிலுமாக போய்விட்டது)

என்ன புகழ் எதோ யோசிக்கின்றீர்கள் ? என்ன அப்படி ......?

ஒன்றுமில்லை ...... பத்து வருடங்களின் பின் இந்த நாட்டுக்கு வருகின்றேன்,

நான் அங்கிருந்தபோது எனக்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி சொல்வார் சிறிலங்காவில் ஒருபிரச்சனையும் இல்லை இங்கு உள்ள தொலைகாட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் அங்கு எதோ பிரச்சனை போன்று காண்பிக்கின்றனர் என்று சொல்லுவார் ஆனால் இங்கு நடப்பதைப்பார்த்தால் எல்லாம் தலைகீழாக இருக்கின்றது

அது சரிமச்சான் இனியாவுடன் கதைத்தீர்களா ? எப்படி இருக்கின்றார்கள் ? அவள் பாவம் கற்பனையில் இருந்திருப்பாள்..

ஏய் ..... புகழ் எப்போதிருந்து இந்த பாசம், என்னும் தாலி கட்டவில்லை ஞாபகம் இருக்குத்தானே ? உங்களுக்கு இனியா மென்மையான மனம் படைத்தவள் பண்பும் பாசமும் கேக்காமலேயே அள்ளி வீசுவாள் யாருடைய மனசையும் புண்படுத்த மாட்டாள் அப்படி பட்ட என் பாசக்கார தங்கை உங்களுக்கு மனைவியாக கிடைக்க கொடுவைத்திருக்கவேண்டும்.

ம் ....... புகழ்ந்தது போதும் இருந்தாலும் கொஞ்சம் அதிகம்தான்.

என்ன நேரம் என்றுகூட தெரியவில்லை எல்லாவற்றையும் உருவிபோட்டு விட்டுவிட்டாங்கள் இதை நினைக்கும் போதுதான் எமக்கென்றொரு நாடு இருந்தால் இந்தமாதிரியான பிரச்சனை இருந்திருக்காது !

மாச்சான் ஒரு பஸ் வருகின்றது போட்டைப்பார்த்து மறி மச்சான்

4284942831_0d1d932b6b_b.jpg

பருத்தித்துறை என்ற போட்டுடன் வருகின்றது .....

மறி ...... மச்சான் மறி இதைதான் சொல்வார்களோ கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்ததுமாதிரி என்று !

(பஸ் நிற்கின்றது)

கொய்தென்ன மல்லி ?

அண்ணை நாங்கள் ........

என்ன தம்பியவை இந்த இடத்தில .... வாங்கோ எங்கே போகவேணும்

அதொரு பெரிய கதை அதை விடுங்கோ பருத்திதுறைக்குதான் போகவேண்டும்,

அந்த சீற்றில் இருங்கோ ........ அண்ணை பஸ்சை எடுங்கோ .....

இதமான இரவு வேளையில் மனசை தொட்ட அந்த பாடல் வரிகள் ............

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே, ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

மச்சான் சூப்பர் பாட்டுமச்சான்

எனக்கு இந்தப்பாட்டை கேக்கும் போது

என்னவோ செய்கின்றது .........

ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே, ஓடோடி வா

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி

கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே, ஓடோடி வா…

moonlitUnightUsky.jpg

இனியா ....... இனியா இங்கே வாம்மா

ஓம், அப்பா என்ர நாய்க்குட்டியளுக்கு சாப்பாடு வைத்துவிட்டு வருகின்றேன் உடனே வருகின்றேன்

சரியம்மா கெதியில் வா பிள்ளை

ஏன் ..... அப்பா ஏதாவது தகவல் கிடைத்ததா ?

ஓம் ஓம் காலை பெரும்பாலும் வந்து விடுவினமாம்

என்ன இனியா காலை தம்பிதினா வந்துவிடுவாரோ ?

ஓம், அம்மா .....

(இனியா சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பரபரப்பாக இருக்கின்றாள்)

பிள்ளை ...... இனியா ....... சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும் அசதியாக நித்திரை கொள்ளவேண்டும் நான் குளிசைகள் அதிகம் பாவிப்பதால் அசந்து தூங்கிவிடுவேன்.

அப்பா, நானும் அம்மாவும் பக்கத்தில்தான் இருப்போம்.

புகழ் ....... ஏதோ சத்தம் கேட்கின்றது என்ன என்று பாருங்கோ....

என்ன ..... மச்சான் திரும்பவும் செக்கிங்கோ ?

கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம்.

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் இருந்து மீண்டது சந்தோஷம்.........கொஞ்சம் எழுத்துப்பிழைகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் இருந்து மீண்டது சந்தோஷம்.........கொஞ்சம் எழுத்துப்பிழைகள்....

நன்றி நிலாமதி,

எழுத்துப்பிழைகளை நான் நினைக்கின்றேன் திருத்தம் செய்து விட்டேன் என்று என்னும் தவறு இருந்தால் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13 எப்போ வரும்....ரொம்ப தான் பிறேக் எடுக்கிற மாதிரி தெரிகிறது... :)

நன்றி யாயினி,

13 வது பாகம் பற்றி உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.

அண்ணா..... கதை, பாடல், படங்கள் என அனைத்துமே நன்றாக உள்ளது.

இந்த பகுதியில் விறுவிறுப்பை கூட்டி அடுத்த பகுதி எப்ப வரும் என்று எங்கள் எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். waiting for part 13.

நன்றி காதல்,

பாகம் 13 ஐ பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன்.

தமிழரசு உங்கள் கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஆனால் கருத்து எழுதுவதில்லை நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ

நன்றி ரதி,

Link to comment
Share on other sites

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

ஒன்றுமில்லை ...... பத்து வருடங்களின் பின் இந்த நாட்டுக்கு வருகின்றேன்,

நான் அங்கிருந்தபோது எனக்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி சொல்வார் சிறிலங்காவில் ஒருபிரச்சனையும் இல்லை இங்கு உள்ள தொலைகாட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் அங்கு எதோ பிரச்சனை போன்று காண்பிக்கின்றனர் என்று சொல்லுவார் ஆனால் இங்கு நடப்பதைப்பார்த்தால் எல்லாம் தலைகீழாக இருக்கின்றது

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்

மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்

கேட்க்என்பது கேட்க என்றும்

எவளவோ என்பது வ்வளவோ என்றும்

போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.

அப்பா சாச் குறைந்து போகின்றது

சாஜ் என்று வர வேண்டும்.

(என்று சொல்லி முயும் போது போணும் சாச் முற்றிலுமாக போய்விட்டது)

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்

பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்

ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள் ...... இனியா ....... சில வேளை அண்ணா நாளிரவு தொலைபேசி எடுத்தாலும் அசதியாக நித்திரை கொள்ளவேண்டும் நான் குளிசைகள் அதிகம் பாவிப்பதால் அசந்து தூங்கிவிடுவேன்

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சன் பொறுங்கோ பார்ப்போம்.

கொஞ்சம் என்று வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

Link to comment
Share on other sites

இனியாவின் தவிப்பு இரட்டிப்பாகிறது. ஆனாலும் சுபமாக முடியும் என நினைக்கிறேன். பாடல் வரிகள் அருமையாக உள்ளன... பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

இந்த கதை இழுபடுறதே “........தவிப்பு” ஆலை தான். தவிப்பை விட்டால் எல்லாம் அடங்கிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 14)

lotus-flower.jpg

அதிகாலை வேளையில் வானத்தில் கதிரவன் மங்களகரமான உடையணிந்து புலருகின்றான்,

கடல் நதிகளோ தூக்கத்தைவிட்டு தன் இறகுகளான அலைகளோடு நீந்துவதற்கு எழுகின்றது ........ கோழிகள் கதிரவனைப்பார்த்து பாடல் வரிகளை சொல்லி வரவேற்கின்றன ........

பறவைகளோ தமக்கு இரை தேட தம்மினத்தை இனிமையான ...... மொழிகளில் அழைக்கின்றன ........ மிருகங்களோ ஒன்றுகூட்டி ஒன்றுக்கொன்று கதை சொல்லி ஓடி, .... மகிந்து, விளையாடுகின்றன ....... தெய்வீக திருப்பணி செய்ய அழைகின்றதோ ! கோவிலின் மணி ஓசை ....... !!!!

நம் இனமோ வாழ்வின் விடியல்தேடி ........!வாசலைப்பெருக்கி தண்ணீர் தெளித்து அவர்கள் விரும்பும் சுகந்தத்தை வரவேற்க காத்து இருக்கின்றனர்,

பூக்களின் வாசனையோ வண்ண வண்டுகளை அழைத்து முத்தமிட்டு கதை பேசி மகிழ்கின்றன .......

இந்த இனிமையான காலை வேளையில் பேரூந்து பருத்தித்துறை வந்தடைந்தது, அந்தவேளையில்

என்ன தினா கனவோ ...... ? நான் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன்,

தம்பியவை என்ன ..... கனவோ !

கனவில் வாய்விட்டு சத்தமிட்டு எங்களை பயம் உறுத்திவிட்டீர்கள்,

அது அண்ணா ....... உங்களுக்கு எங்களின் நிலை தெரியாது !

இல்லை .... தம்பி எங்களுக்கும் எல்லாம் தெரியும், எங்களின் சூழ்நிலை என்ன நடந்தாலும் தெரியாததுபோல் வாழ்வதுதான் இன்றைய காலகட்டத்தின் கட்டாயம் !

அண்ணா எங்களை தப்பாக நினைக்கவேண்டாம்

அதெல்லாம் ஒன்றும்மில்லை ........

இடம் வந்துவிட்டது இறங்குங்கோ ......

மச்சான் ஒரு கார் பிடிப்போம் வீட்டுக்கு போவதற்கு

(இருவரும் காரில் எரிச்செல்கின்றனர் )

சரி புகழ், என்னை எனது வீட்டில் இறக்கிவிட்டு

நீங்கள் போங்கோ

என்வீடுதாண்டித்தானே உங்கள் வீடு மதியம் எல்லோரும் ஒன்றாக வீட்டில் சந்திப்போம்.

சரி மச்சான் சந்திப்போம் வாறன்.

அஹ ..... அப்பா கார் சத்தம் கேட்கிறது ஒருவேளை அண்ணாவாக இருக்குமோ !

எங்க ...... பிள்ள ஒருக்கா பார்ப்போம்

இன்செரிங்கோ ..... இன்சபாருங்கோ,

பிள்ள தினா வந்திட்டான், அஹ வாப்பு .....

தினா, ..... என்ர அய்யா வந்துவிட்டியோ! வா ...... வாப்பு (என்றவாறே கட்டிதளுவினார்கள் இருவரும்)

வாங்கோ அண்ணா ..... வாங்கோ (என்றவாறே அண்ணாவை அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்)

அம்மா ... புகழும் அவர்களின் அம்மா அப்பாவும் மதியம் வீட்டுக்கு வருவதாக இருக்கின்றார்கள், அவர்களுக்கு சாப்பாட்டு ஒழுங்கு செய்யவேணும் .....

சரி ..... இந்த காப்பியை குடித்துவிட்டு குளித்துவிட்டு வா ராசா, எங்க, ஏதாவது உடம்பில காயம் இருக்கோ ஒருக்கா பார்ப்போம்,

அப்படி ஒன்றும் இல்லை அம்மா நிறைய அழுக்காக இருக்கு, குளித்துவிட்டு வாறன் தொடாதீர்கள் அம்மா,

நீங்கள் போய் ஒரு இடத்தில் இருங்கோ .......

சரி .... அப்பு கெதியில வாங்கோ தங்கச்சி உங்களுக்கு விருப்பமான கருவாட்டு பொரியலும் அரிசிமா புட்டும் செய்து வைத்திருக்கின்றார்,

DSC00974-orig1-569x484.jpgkuzhalputtu.jpg

கருவாட்டு பொரியலோ ......? ம் ...... யம்மா ஒரு பிடிக்கலாம்.

இனியா வீட்டு வேலை எல்லாவற்றை செய்து முடித்தபின்பு வீட்டு வாசலை வழிமேல் விழிவைத்து புகழின் வருகைக்காக மலர்ந்த செந்தாமரைபோல் காத்துகொண்டு இருக்கின்றாள்

(ரேடியோவில்) ........

அறிவுப்பாளர் ........

கல்லாய் இருந்தேன்; சிலையாய் ஏன் வடித்தாய். சிலையாய் வடித்தது மட்டுமல்லாமல் சிலையுருக்கொண்ட என்னைக் காதல் உயிர்தந்து வளர்த்தாய். தேன் எனினும் இன்பச் சுவையை உணர்வில் தினம் தினம் உண்டு திளைக்கும்போதில் நீ தீண்டுவாய் எனத்தினம் தினம் துடிக்கின்றேன்.

இதோ .... பாடலை கேட்டுப்பாருங்கள் ..........

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய்

சிலையாய் வளர்ந்தேன்

உயிரை ஏன் கொடுத்தாய் ......

உன் நெஞ்சின் உணர்வுகள்

இங்கு என்னுள்ளில் புகுந்ததே

சொல்லி வருமோ வருமோ

சொல்லை எடுத்துத் தருவாய்

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய் .....

உன்னைப் பார்த்த கண்கள்

விலகாது என்றும்

உன்னிலே பதியும் .....

யார் யார்க்கு மண்ணில்

நிலைக்காத அழகு

காலத்தின் ஒழுங்கு

இனியா ..... இனியாக்குட்டி,

ஓம் ...... இதோ ...... வருகிறேன்.

என்ன எல்லாம் அசத்தலாக இருக்கு,

அண்ணா ..... உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான்,

இனியா .... இன்னொரு விஷயம்,

என்ன ... அண்ணா .....

ஒன்றுமில்லை ....... என்ன, எல்லாம் புகழைப்பற்ரியதுதான் ...... அழகுக்கும் ஆளுக்கும் சம்மந்தமில்லை ...... அதில இருக்கும் மன்குண்டான் மாதிரி (என்று கிண்டலாக சொன்னார்)

அது ...... பரவாயில்லை, அவர் மனசு எனக்கு பிடிச்சிருக்கு (கிண்டலாக சிரித்தாள் )

நான் சும்மாதான் சொன்னேன் தங்கச்சி, புகழ் பார்க்க அழகான தோற்றம் நல்ல அறிவு நல்ல பழக்கவழக்கம் உங்களின் குணத்திற்கு ஏற்றவர்.

அண்ணா உங்களுக்கு பிடித்தமாதிரி மீன் வகையில் அசத்தி விடுகிறேன்.

panamafishmarket1.jpg

இனியா ..... அண்ணாவுக்கு உங்கள் சமையல் எல்லாம் பிடிக்கும் ஆனால் வரப்போகும் மாமா மாமிக்கு பிடிக்கவேணுமே !

அண்ணா யோசிக்காதேங்கோ மனசு ஒத்து போனால் உணவும் ஒத்து போகும் கொஞ்சம் பொறுத்துதான் பாருங்கோவேன்.

அதுசரி ......

எங்கே அம்மா அப்பா ?

அம்மாவும், அப்பாவும் அன்றில் பறவைபோல் இணைபிரியாமல் எங்காவது இருப்பினம் வாங்கோ பார்ப்போம்

அண்ணா இங்கே பாருங்கோ என்ன ....... பாட்டு பார்க்கினம் என்று ......... நான் சொன்னது சரிதானே ?

தொலைக்காட்சியில் .........

http://youtu.be/aHR0BfPNF7U

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Link to comment
Share on other sites

தொடருங்கள் தமிழரசு. இப்போ தான் உங்கள் தொடரை வாசிக்க தொடங்கி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்

மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்

கேட்க்என்பது கேட்க என்றும்

எவளவோ என்பது வ்வளவோ என்றும்

போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.

சாஜ் என்று வர வேண்டும்.

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்

பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்

ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சம் என்று வர வேண்டும்.

நன்றி காதல்,

நான் விட்ட தவறுகளை சுட்டிகாட்டியதினால் இப்போது அந்த தவறுகளை கருத்தில் கொண்டு புதிய பாகத்தை எழுதியுள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்தைதாருங்கள்.

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

நன்றி யாயினி,

தொடந்தும் உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.