Jump to content

இணைய வழங்கி மாற்றம்


Recommended Posts

கடந்த சில தினங்களாக யாழ் இணையத்தின் பல பகுதிகள் செயலிழந்து போனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதனால் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி பலரும் பல வழிகளிலும் அறியத் தந்திருந்தார்கள்.

யாழ் இணையத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவ்வப்போது மலிவாகக் கிடைக்கப்பெறும் இணைய வழங்கிக்கு மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையில் இருக்கின்றோம். இறுதியாகக் கடந்த வாரம் புதிய இணைய வழங்கிக்கு அனைத்து விடயங்களையும் மாற்றினோம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதுவிதத்திலும் யாழ் இணையம் தடங்கலில்லாது இருக்கும் என நம்பியிருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக முதலில் முகப்பு பக்கத்தில் இணைக்கப்பட்ட script மூலம் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது. அதன் பின்னர் சிலருக்கு dns பிரச்சனையால் யாழ் இணையம் சுமார் 48 மணிநேரம் வரை இயங்கவில்லை.

பழைய இணைய வழங்கியிலிருந்து அனைத்துக் கோப்புகளையும் முழுமையாக மாற்ற 2 நாட்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மாற்றிய பின்னர் ஏற்பட்ட தவறினைக் கண்டுபிடிக்க மீண்டும் பல மணித்தியாலங்கள் செலவிட வேண்டிய தேவையேற்றபட்டது. இதன்படி முன்னர் பாவித்து வந்த யாழ் முகப்பினைத் தொடர்ந்து பாவிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் தற்காலிகமாக முன்னைய முகப்பு வேறொரு பகுதியில் சில வாரங்களுக்கு இயங்கச் செய்வோம். அங்கு சிலர் தங்களுக்கான பக்கங்களை உருவாக்கியிருந்தால் திறந்திருக்கும் காலப் பகுதியில் தேவைப்படும் விபரங்களைச் எடுத்துக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றீர்கள்.

இக்காலக் கட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியூர்ப் பயணம் ஒன்று மேற்கொள்ள வேண்டியிருந்ததால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது களத்தினை மட்டும் இயங்க விடப்பட்டது. இதனால் பலருக்கும் பலவித அசெகரியங்கள் ஏற்பட்டதை அவர்களிடம் இருந்து வந்த பல வழியிலுமான தொடர்பாடல் மூலம் அறிய முடிந்தது. யாழ் இணையத்தில் அக்கறை கொண்டு விரைவில் அனைத்தும் சரிப்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்கள் பரவலாக முன்வைக்கப்பட்டது. அவர்களுக்கு விரைவில் யாழ் இணையம் சரி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக யாழ் இணையத்தினால் ஏற்பட்ட அசெகரியங்களுக்கு மனம் வருந்தும் அதேவேளை தொடர்ந்தும் உங்கள் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்.. தற்போது தற்காலிகமாக சில மாற்றங்களைச் செய்துள்ளோம். வரும் புது ஆண்டில் இருந்து யாழ் இணையத்தினை புதுப்பெலிவுடனும், சில மாற்றங்களுடனும் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளோம். உங்கள் ஆரோக்கியமான கருத்துக்கள் தொடர்ந்தும் வரவேற்கப்படுகின்றது.

மேலும் வரும் ஆண்டில் இருந்து விளம்பரங்கள் மூலம் யாழ் இணையத்தின் செலவுகளை ஈடுகட்ட தீர்மானித்துள்ளோம். பல உறுப்பினர்கள் யாழ் இணையத்தின் செலவில் ஒரு பகுதியைத் தருவதாகச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. தனிப்பட உறுப்பினர்களிடம் இருந்த பணம் வாங்கிக் கொள்வதை இப்போது தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றோம். யாழ் இணையத்திற்கு உதவ விரும்பும் உறுப்பினர்கள் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த வர்த்தகர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்றுத் தந்தால் பேருதவியாக அமையும். விளம்பரங்கள் என்னும் போது வர்த்தக விளம்பரங்கள், அறிவித்தல்கள், வாழ்த்துகள் போன்றவை அமையும். எனினும் சில வகையான விளம்பரங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை மிக விரைவில் அறியத் தருகின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.