Jump to content

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அத்துடன் கட்சியின் உப தலைவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

1986 ஆம் ஆண்டு இதேநாளில் விடுதலைப்புலிகளினால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

P1310398.JPG

 

P1310400.JPG

 

P1310401.JPG

 

P1310404.JPG

 

P1310403.JPG

 

P1310402.JPG
P1310405.JPG

 

P1310410.JPG

 

P1310414.JPG

 

P1310418.JPG

 

 

 

 
P1310416.JPG

 

P1310417.JPG

 

 

 

P1310421.JPG

 

P1310420.JPG

 

P1310422.JPG

 

P1310427.JPG

 

P1310459.JPG
 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள் 

Link to comment
Share on other sites

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

Link to comment
Share on other sites

i

 

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

போலியாக வாழா பழகிவிட்டோம் .எங்கள் வியாபாரத்திற்கு எது வசதியோ அவர்களுக்கு வணக்கம் வைக்கலாம் .

Link to comment
Share on other sites

சுட்டவர்களுக்கு வீரவணக்கம் சூடுவேண்டியவர்களுக்கு நினைவுவணக்கம் !  இதில்தான் எத்தனை முரண் !!

 

 

 

 

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பினர் ஒற்றுமையாகத்தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். கூட்டமைப்பு தமிழ் மக்களின் நன்மை கருதி ஒன்றாகத்தான் இருக்கிறது.

 

மையவாதம் பேசும், இந்துக்களை கருவறுக்கும், பௌத்தம் பரப்பும் சுற்றம் -உறவு- இனம்-குலம் இல்லா பரதேசிகள் கூட்டம் மேட்டுக்குடி - ஓட்டுக்குடி, சாதியம்-அசாதியம், வடக்கு-கிழக்கு, முஸ்லீம்-இந்து பிரிவினைகளை வளர்க்கப் போய் தங்கள் அடையாளங்களை இழந்ததுதான் மிச்சம். இவர்கள் இந்துக்களோ சிங்கள பௌத்தர்களோ இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறார்கள். ஏன் எனில் கைமுணு தான் பலவருடங்களாக தயார் செய்து போரிட்ட எல்லாளன் என்ற தனது எதிரிக்கு நினவுச் சமாதிகட்டி அவ்வழி போவோர் எல்லாள மன்னனை வணக்கம் செய்துவிட்டு போக உத்தரவிட்டிருந்தான். அவன் சிங்கள பௌத்தன். மன்னன் மெய்பொருள்கண்டார் தன் எதிரி தன்னிடம் போரில் தோற்றத்திற்கு பழிவாங்கத்தான் வந்திருக்கிறான் என்றதை தெரிந்தும் தன் அரன்மனைக்குள் அனுமதித்து அவன் விரும்பங்களை நிறைவேற்றி தனது மெய்பாதுகாப்பாளர்களின் துணையுடன் அவனை பாதுக்காப்பாக நாட்டுக்கு வெளியே அனுப்பி வைத்துவிட்டுத்தான் இறந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

 

மாடு, ஆட்டை அறுப்பது போல மனித சனங்களை கறுவறுக்கும் கொடூரப் பண்பு,  இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து போரிடும்  தமிழ் இந்துக்களுக்கோ, சிங்கள பௌத்தர்களுக்கோ இருந்ததாக இல்லை.இது இலங்கையில் தோன்றியிருக்கும் ஒரு தனி புதிய அலகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவர்களுக்கு வீரவணக்கம் சூடுவேண்டியவர்களுக்கு நினைவுவணக்கம் !  இதில்தான் எத்தனை முரண் !!

 

ஒற்றுமை   வேண்டும் என  கூக்குரலிட்டுக்கொண்டு

தமிழரின் பலவீனங்களை வசை  பாடிக்கொண்டு

 

ஆனால் அவற்றிற்கு முன் உதாரணமாக ஏதாவது செய்யப்பட்டால்

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அமிர்,உமா,பத்மநாபா,மாணிக்கதாசன்,சங்கிலி ஆக்களின்ர அஞ்சலியையும் கொண்டுவந்து போடுங்கோ ஒருக்கா விழுந்து எழும்புவம்.

 

என்னை பொருத்தவரை தப்பேயில்லை.....எங்களை விட ஒரு படி மேலானாவர்கள்.இளம்வயதில் உரிமைக்காக குரல் கொடுக்க புறப்பட்டவர்கள்.என்னைப் போல சுழிச்சுகொண்டு புலம் பெயரவில்லை.

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

 

இது மயிர்வாதம் ,இதை நிறுத்தமுடியாது :D

Link to comment
Share on other sites

ஒற்றுமை   வேண்டும் என  கூக்குரலிட்டுக்கொண்டு

தமிழரின் பலவீனங்களை வசை  பாடிக்கொண்டு

 

ஆனால் அவற்றிற்கு முன் உதாரணமாக ஏதாவது செய்யப்பட்டால்

அவற்றில் வந்து இது போன்று மயிர் புடுங்குவதை  எப்பொழுது நிறுத்துவோம்???? :(  :(  :(

 

முன்னுதாரணமாக செயற்படுவதானால் சபா உமா பத்மநாபா மற்றும் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு மடிந்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துங்கள். அவர்களையும் உள்ளடக்கி மாவீரர்தினத்தை நினைவு கூருங்கள். இருப்பவர்கள் நூறாக பிரிந்து சிதைந்து கிடப்பது யதார்த்தம் ஆனால் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு இறந்தவர்களை ஒன்றாக அணுகுவதே முன்னுதாரணம். எதிர்வரும் மாவீரர் தினங்களில் இவ்வாறான தியாகிகளின் படங்களும் மாவீரர் மண்டபத்தில் இருந்தால் அதுவே முன்னுதாரணம்.

 

Link to comment
Share on other sites

முப்பது வருடமாக வராத ஒற்றுமை 2009 ஆண்டிற்கு பிறகு சிங்களவன் கொடுத்த அடிக்கு பிறகு வருகுது பலபேருக்கு .

 

முப்பதுவருடமாக செய்த கொலைகளையும் நியாயப்படுத்தி துரோகிகள் என்று தூற்றி திரிந்தவர்கள் ஒற்றுமை என்ற சொல்லை கூட ஊச்சரிக்க தகுதியற்றவர்கள் .

வந்துவிட்டார்கள் அடுத்தவன் இறப்பிலும் வியாபராம் செய்ய .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1986 இல் படுகொலை செய்யப்பட்ட தலைவர் சிறிசாபாரத்தினம் மற்றும் அனைத்து தமிழீழ விடுதலை இயக்கப் போராளிகள் அனைவருக்கும் நினைவு வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

முப்பது வருடமாக வராத ஒற்றுமை 2009 ஆண்டிற்கு பிறகு சிங்களவன் கொடுத்த அடிக்கு பிறகு வருகுது பலபேருக்கு .

 

முப்பதுவருடமாக செய்த கொலைகளையும் நியாயப்படுத்தி துரோகிகள் என்று தூற்றி திரிந்தவர்கள் ஒற்றுமை என்ற சொல்லை கூட ஊச்சரிக்க தகுதியற்றவர்கள் .

வந்துவிட்டார்கள் அடுத்தவன் இறப்பிலும் வியாபராம் செய்ய .

 

முப்பதல்ல முன்நூறு வருடங்களையும் அதையும் தாண்டி இன்று வரை தமிழன் ஒற்றுமையாய் இருந்ததும் இல்லை அதற்கான வரலாறும் இல்லை.

 

சிஙகளவன் மற்றும் ஏனைய சக்திகளும் அடித்தது ஒற்றுமையற்ற இந்த இனத்துக்கத்தான் தவிர இனத்தில் இருந்த நாலுபேருக்கு மட்டுமில்லை. நானும் நீங்களும் என்னுமொரு நாட்டில் இரண்டாந்தரப்பிரஜைகளாக இருப்பதற்கும் இந்த அடித்தான் காரணம். அடிவாங்கிய பிறகும் ஞானம் பிறக்கவில்லையாயின் அதில் அர்த்தம் என்ன இருக்கமுடியும்?  பலபேருக்கில்லை எல்லோருக்கும் அடிவாங்கிய பின் ஒற்றுமை உணர்வு வரவேணும் இல்லையேல் அடிவாங்கிக்கொண்டே இருப்போம். அடிவாங்கினாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருக்கமுடியாது என்பதையே நீங்கள் முன்வைக்கின்றீர்கள்.

 

ஆம் ! புலம்பெயர்வும் ஒரு வியாபரம் தான். தேசீயத்தை சிங்களவனுக்கு விற்று அதற்குப் பதிலான வாழ்வுதான் புலம்யெர்வாழ்வு. ஆனால் என்ன நாட்டில் உள்ள வறிய மக்களுக்கு தெரியாமல் அவர்களையும் விற்றுவிட்டோம். இது ஒரு போதைக் கடத்தலை விட மோசமான டீல்.

 

 

Link to comment
Share on other sites

1461472_738073599566682_2936033960017194s


சிறி சபாரட்ணம் சுடப்பட்ட இடத்திலும் அஞ்சலி செய்தார்கள் .சிவாஜிலிங்கம் நிற்கின்றார் .

 

(சிறு வயதில் நான் ஓடித்திரிந்த காணி இது .)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோவினால் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு வங்சகமான முறையில் கொல்லப்பட்ட கப்டன் லிங்கம் அண்ணாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

முன்னுதாரணமாக செயற்படுவதானால் சபா உமா பத்மநாபா மற்றும் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு மடிந்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துங்கள். அவர்களையும் உள்ளடக்கி மாவீரர்தினத்தை நினைவு கூருங்கள். இருப்பவர்கள் நூறாக பிரிந்து சிதைந்து கிடப்பது யதார்த்தம் ஆனால் தாயக விடுதலைக்கென்று புறப்பட்டு இறந்தவர்களை ஒன்றாக அணுகுவதே முன்னுதாரணம். எதிர்வரும் மாவீரர் தினங்களில் இவ்வாறான தியாகிகளின் படங்களும் மாவீரர் மண்டபத்தில் இருந்தால் அதுவே முன்னுதாரணம்.

 

நடப்பதை தெரியாத வீரப்பிரதாப ஆலோசனை இது. நாடுகடந்த அரசை பொறுத்தவரைக்கும் மாவீரர் தினம் விழுந்த வீரர்கள் எல்லோருக்கும் தான். இது தெளிவாக அவ்ர்களால் சொல்லப்பட்டது. அவர்கேளேதான் மசூதிகள் அடிக்கப்பட்ட போது சர்வமத வழிபாடு நடத்தினார்கள். அலோகர்கள் இந்து மததைதை கருவறுத்த ஆலோசனைகள் மட்டும்தான் படிப்பித்தார்கள். என்ன தனமான குடிகாறன் பேச்சுக்கள் அப்ப இது வெல்லாம்.. 

 

கழு வேற்றுவது ஆரிய மதங்களான சமணமும் புத்தமும் தமிழரிடம் கொண்டுவந்தவை. கல்லால் எறிந்து கொலை செய்வதும், கருவறுத்து பெண்களின் நடத்தையை தண்டிப்பதும் அராபிய மதம் தமிழருக்கு கொண்டுவந்தும் அவற்றின் கொடூரத்தனத்தாலும், தமிழரின் நாகரீக முதிர்ச்சியாலும் அவை தமிழரிடம் எடுபடவில்லை. 

Link to comment
Share on other sites

முப்பதல்ல முன்நூறு வருடங்களையும் அதையும் தாண்டி இன்று வரை தமிழன் ஒற்றுமையாய் இருந்ததும் இல்லை அதற்கான வரலாறும் இல்லை.

 

அதில் எந்த உணமியும் இல்லை. 10,000 ஆண்டுகாலமாக மண்ணில் இருக்கும் ஒரே குடி தமிழன். மதங்களின் மிக இளமையான இஸ்லாம் சீனா, இந்தியா, யப்பான், எல்ல மேர்குநாடுகள்,  எல்ல் கிழக்கு ஐரோபியநாடுகளிலும் பிரச்சனையை உருவாக்கி அழிவை தெடிக்கொண்டிருக்கிறது. தனது நிலங்களான, மத்திய கிழக்கில் அது தன்னுள் காட்டும் பொறாமையும் போட்டியும் உலகின் அந்த மதமும் காட்டுவதில்லை.   தமிழரின் சரித்திரத்தை தமிழில் இருப்பது போல கூற வந்தால் அதை விவாதிக்கலாம். தயாரா

 

சிஙகளவன் மற்றும் ஏனைய சக்திகளும்(-அது எந்த எனைய சக்திகள் என்று கூற முடியமா? தங்களின் மத வெறியர்களைப்பற்றியா ? வெளிப்படையாக கூறினால் உங்களையே அவர்கள் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்பத்தால் இப்படி ஒழிவு மறைவாக ஏனைய சக்திகள் என்கிறீர்கள்.? உங்களுக்கு நீங்களெ பயந்து கொண்டா தமிழனுக்கு ஒற்றுமைப்பாட்டம்?)அடித்தது ஒற்றுமையற்ற இந்த இனத்துக்கத்தான் தவிர இனத்தில் இருந்த நாலுபேருக்கு மட்டுமில்லை. நானும் நீங்களும் என்னுமொரு நாட்டில் இரண்டாந்தரப்பிரஜைகளாக இருப்பதற்கும் இந்த அடித்தான் காரணம். (நீங்கள் இன்னொரு நாட்டில் இரண்டாம்தர பிரச்சையானகாராணம் தமிழனிடம் ஒற்றுமை இல்லாது மட்டுமா? எனக்கு உங்கள் நாட்டின் குடிவரவு அகதி கொள்ளகைகளை இந்த இணையத்தில் இணைப்பாக கொடுக்க முடியுமா? எந்த நாட்டில் முக மூடி போட்டேய்க்க தமிழன் ஒற்றுமை இன்மை சட்டமாக்கப்பட்டிருக்கு.  தமிழன் பட்ட அவஸ்த்தையை வைத்து பிழைத்துக்கொண்டு அவனுக்கே பாடமா?)ஆருக்கையா டூப் எழுதுகிறீர்கள்?)அடிவாங்கிய பிறகும் ஞானம் பிறக்கவில்லையாயின் அதில் அர்த்தம் என்ன இருக்கமுடியும்?  பலபேருக்கில்லை எல்லோருக்கும் அடிவாங்கிய பின் ஒற்றுமை உணர்வு வரவேணும் இல்லையேல் அடிவாங்கிக்கொண்டே இருப்போம். அடிவாங்கினாலும் பரவாயில்லை ஒற்றுமையாக இருக்கமுடியாது என்பதையே நீங்கள் முன்வைக்கின்றீர்கள். (இப்போது அடி விழ ஆரம்பித்திருக்கு. இப்போ ஞானம் பேர ஆரம்பமாயிருக்கு. நாங்களும் தொடர்ந்து எழுதுவதை தொடர்ந்து படிதுக்கொண்டுதான் வருகிறோம். BBSன் அடியில் தமிழனுக்கு போதித்துகொண்டாவது அவனுடன் போய்ச் சேரவேண்டும் என்று ஞானம் பிறப்பதையும் அவதானித்துக்கொண்டுதான் வருகிறோம். மனிசராக மாறி வராத வரக்கும் சேர்ப்பது என்பது நடக்கபோவத்தில்லை. )

 

ஆம் ! புலம்பெயர்வும் ஒரு வியாபரம் தான். தேசீயத்தை சிங்களவனுக்கு விற்று அதற்குப் பதிலான வாழ்வுதான் புலம்யெர்வாழ்வு. (உங்களை நம்பித்தான் அரசு 16 அமைப்புக்களையும், 424 தனி நபர்களையும் புலிகள் என்று பிராகடனப்படுத்தியிருக்கு. அரசை, வியாபாரத்தனமான பொருளாதார அகதிகளை பயங்கரவாதிளாக்குகிறது என்று எதிர்த்து எழுதி அரசின் பகமையை தேடிக்கொண்டால் சம்பளம் வராது. ஊருக்கு திரும்பி போக ஏலாது- கவனம் இப்படியான மடைத்தனமான அரசு எதிர்ப்பு கதைகளை வெளிநாடுகளில் பரப்பும் போது) ஆனால் என்ன நாட்டில் உள்ள வறிய மக்களுக்கு தெரியாமல் அவர்களையும் விற்றுவிட்டோம். இது ஒரு போதைக் கடத்தலை விட மோசமான டீல். நாம் மக்களுக்கு தெரியாமல் அவர்களை விற்பத்தாலா கக்கீம், அஸ்வர், பதியுன் பக்கத்தில் இருந்து கொண்டே விற்கிறார்கள்? எம்மை பற்றி நாங்கள் பார்த்துக்கொள்வோம். உங்களை பற்றி இனி பார்த்துக்கொள்ளலாம். 

 

நாகரிகம் தெரிந்து எழுதுவதாக நடிப்பவர்கள் BBS அடிக்கு பிறகு மகிந்தாவை  மகிந்தன் என்று எழுதினார்கள். அவை ஒற்றுமையில் இருந்தும் யாழ் நிர்வாகம் அகற்றவில்லை. குத்தியை செயலாளர் நாயமாக மாற்ற முயன்றவர்கள் தாம் இவர்கள்.  அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லைத்தான். பௌத்தம் அரபியா முழுவதும் பரவினால் பல நனமைகள் வர இடமுண்டு.

 

Link to comment
Share on other sites

10,000 ஆண்டுகாலமாக மண்ணில் இருக்கும் ஒரே குடி தமிழன்

தமிழன் என்ற ஒரு இனமோ இல்லை அவ் வினத்துக்கென்று ஒரு நாடோ இன்றுவரை உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதற்குள் 10 000 யிரம் வருசத்துக்கு முதல் தமிழன் என்று எவனும் இல்லை. பலதரப்பட்ட மக்கள் கூட்டம் இருந்திருக்கும். விட்டால் பத்துக்கு பக்கத்தில் என்னும் பத்து சைபர் போட்டுவிடுவீர்கள்.

Link to comment
Share on other sites

தமிழன் என்ற ஒரு இனமோ இல்லை அவ் வினத்துக்கென்று ஒரு நாடோ இன்றுவரை உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. இதற்குள் 10 000 யிரம் வருசத்துக்கு முதல் தமிழன் என்று எவனும் இல்லை. பலதரப்பட்ட மக்கள் கூட்டம் இருந்திருக்கும். விட்டால் பத்துக்கு பக்கத்தில் என்னும் பத்து சைபர் போட்டுவிடுவீர்கள்.

உங்களின் சத்திய வாக்கை தெரியாததால் இன்றுவரை அறிவிலிகளாக இருந்துவிட்டோம். நன்றீறீறீ. அடுத்த முறை தரும் சரித்திர பாடத்தை உங்களுக்கு BBS சரியாகத்தர அவர்களுக்கும் அரேபிய கதவுகளுகள் திறந்திருக்கட்டும். "வல்லவனுக்கு வல்லவன் ஒருத்தான் வந்தால் பார்த்துக்கடி."

 

 

---------------

 

நியானி: சில வரிகள் தணிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராளியின்ர அஞ்சலி திரியில என்னத்தை எழுதிக்கொண்டிருக்கிறியள்? 

 

இதில கேவலம் அந்த இயக்க ஆதரவாளர்கள் எழுதிற கேவலம். நல்ல வேளை இதை எல்லாம் பாக்க  அஞசலிககு சொந்தகாரர் இல்லை. 

 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம்

 

 

அந்த போராளி மீது உண்மையில அககறையுள்ளவர்களாக இருந்தால் அவரின் லட்சியத்திற்காக நீங்கள் தொடர்ந்து போராடுவது தான். தமிழீழம் என்பது அவரின் லட்சியமும் தான். இன்று அவரிற்கு அஞ்சலி செலுத்த முன்வந்த உங்களில் எத்தை பேர் அதற்காக போராடப்போகிறீர்கள்? அவர் மட்டும் சண்டையில் வீரச்சாவடைந்திருந்தால் இன்று அவரை யாரும் நினைத்துபார்த்திருக்க மாட்டீர்கள். புலிகளை விமர்ச்சிப்பதற்கு அவர் இப்பொழுது  உங்களிற்கு ஒரு கருவி. அவ்வளவு தான்! உண்மையில் அவரை நேசிப்பவர்களாக இருந்தால் அவரின் லட்சியத்திற்காக போராடியிருப்பீர்கள். ஆனால் இங்கே என்ன நடக்கின்றது? கோழைகளை போல் சிஙகளவன் அடித்தான் நாம் அடியை வாங்கி கொண்டு பேசாமல் இருப்பது தான் நல்லதாம். ஏன் இதை உங்களின் தலைவர் செய்திருக்கமாட்டாரா? அப்படி போராளியின் வழியில் வந்தவர்கள் என்று சொல்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்! தயவுசெய்து அவரை உங்களின் தலைவர் என்று சொல்லி அவரை கொச்சைப்படுத்தாதீர்கள். இது தான் அவரிற்கு நீங்கள் செய்யும் உண்மையான மரியாதை. 

 

உங்கட குழு மோதல்களை தயவுசெய்து உங்களோடையே புதைகுழிக்குள்ள கொண்டுபோங்கோ. அடுத்த சந்ததிக்கும் அதை கையளிக்காதேங்கோ. உங்கட இயக்கங்களின் குறிக்கோளை மட்டுமே கையளியுங்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம், இன்னும் பலர் கொல்லப்பட்டபோது தமிழீழத்தை அடைவதற்கான தடைக்கற்கள் அகல்கின்றன என்று மகிழ்ந்துவிட்டு இப்போது நினைவு வணக்கம் என்று போலியாக நடிக்கமுடியாதுள்ளது. அப்போது ஒரு சில தடைக்கற்கள் போன்று தோன்றியது இப்போது மலைபோன்று வளர்ந்த கற்குவியலாக ஆகிவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம், இன்னும் பலர் கொல்லப்பட்டபோது தமிழீழத்தை அடைவதற்கான தடைக்கற்கள் அகல்கின்றன என்று மகிழ்ந்துவிட்டு இப்போது நினைவு வணக்கம் என்று போலியாக நடிக்கமுடியாதுள்ளது. அப்போது ஒரு சில தடைக்கற்கள் போன்று தோன்றியது இப்போது மலைபோன்று வளர்ந்த கற்குவியலாக ஆகிவிட்டது!

 

உண்மைதான் ஆனால் ,அன்று நாங்கள் புனிதமாக நினைத்த இயக்கத்திலயே இன்று பலர் தடைகற்கள் போல் உருவாகியிருக்கிறார்கள்....போராட போய் மரணித்தவர்களை தவிர எனையோர் சந்தர்பவாதிகள் மட்டுமே .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.