Jump to content

கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன்


Recommended Posts

கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன்

மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில்

குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன

இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும்

மூடாத வாய்களில்

மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன

இரத்தத்தில் பிறந்து

இறுதிவரையில் இரத்தம் காயாமல்

பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய

குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர

எனது நிலத்து பாலகர்கள் திரிகையில்

இலையான்கள் காயங்களை அரித்து

அவர்களைத் தின்று முடித்தன

எல்லோருடைய கண்களின் முன்பாகவும்

எனது தேசத்திற்கெதிரான போரில்

பாலகர்களை பலியிடும் பொழுது

தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில்

தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது

பெண்குறியிலிருந்து குழந்தைகள்வரை சிதைக்கப்பட

பாலகர்களின் பூமியின் வேர் கருகியது

போர் ஆயுதங்கள் மிகுந்த ரசனையொடு

பாலகர்களை சிதைத்துக் கொன்று தின்றன

ஏங்கும் குழந்தைகளின் கண்களை பிடுங்கி

வார்த்தைகளை அழித்து

அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டனர்

பாலகர்களுக்கு எதிரான போரில்

வேருடன் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது

பூமி வெளித்துப் போனது

அழிக்கப்படும் தேசத்தில் பிறந்த

ஏதும் அறியாத பாலகர்களைக் கொன்று

இரத்தத்தை உறிஞ்சிப் பருகும் போர்ப்படைகள்

பூமியின் கடைசிப் பாலகனின்

நெஞ்சில் துப்பாக்கிகளால் துளைகளையிட்டு

இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பொழுது

எல்லாக் குழந்தைகளும் நிலத்தில் வீழ்ந்து கிடந்தனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75228/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களை மரியாதை கொடுத்து ஜனாதிபதி என்று அழைத்து சால்வை போடும் சிறி லங்கா தமிழரும் சேர்ந்து ஸ்ட்ரா வைத்து இரத்தம் உறிஞ்சினர்.

கருமவினை கெட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலகர்களுக்கு எதிரான போரில்

வேருடன் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது

பூமி வெளித்துப் போனது

தீபச் செல்வனின் வரிகள், தங்களை இங்கே இனங் காட்டுகின்றன!

நன்றிகள், நிழலி!!!

Link to comment
Share on other sites

THE BLOOD OF THE LAST LITTLE BOY

A poem by deepachelvan

Translated into English by Latha Ramakrishnan

In the eyes of those little boys that refuse to close

float scenes infinite of crimes.

In those mouths that remain open

trying to utter something till the very end

dying declarations, hidden, keep echoing.

Born in blood

and with the blood not getting dried up

all through their lives

but sticking and oozing all over the body-

with their limbs, torn to shreds by bullets and bombs,

falling apart

when the little boys of our land kept wandering

the ‘Ilaiyaangal’ relished their wounds,

having a real feast at their expense and

so made them cease to be.

When, in the full glare of everybody-

in the raging war against our Mother Land

when the children were sacrificed,

when they were weeping, looking at their mothers

the laps of those hapless mothers were

filled with blood.

From vaginas to babies -with everything smashed and torn

The root of our children’s soil was burnt.

The Weapons of War

went on a killing spree, inflicting wounds of the worst kind

and killing the children,

with a fine sense of Cruelty.

Plucking out the longing eyes and erasing their words-

the little boys were wiped out

without a trace.

when in the bitter war against little boys

they were wiped away, rooted out

the Eartyh turned deserted.

When the battalions that butcher the innocent children_

born as sons of the soil in the land being destroyed­­_

so systematically

sucking and relishing their blood,

made holes with the gun in the heart of

the last child of the land

and sucked his blood to their heart’s content

all the children had been felled.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75352/language/en-US/article.aspx

Link to comment
Share on other sites

நன்றி!! தீபச்செல்வன் வரிகள் முகப்பு வலையில் படித்த கவிதை !!

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தீபச் செல்வனின் எழுத்து நடந்தவற்றை நேரில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.