Jump to content

விரும்பிக் கேட்டவள் - விகடனில் படித்த கதை.


Recommended Posts

விரும்பிக் கேட்டவள்

எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன்

ஓவியம் : எஸ்.இளையராஜா

''அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா...'' என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கியிருந்தேன். 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்’ என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டு இருந்தான்.

ஸ்ரீனிவாஸோடு பொருந்தவில்லை என்றபோதும், அந்த இளைஞன் பாடலை அனுபவித்துப் பாடுகிறான் என்பது புரிந்தது. ஒவ்வொரு முறை அந்தப் பாடலைக் கேட்கும்போதும் மனம் கனத்துவிடுகிறது. பல நேரங்களில் என்னை மீறி நான் அழுதுவிடுவதும் உண்டு.

'சினிமா பாட்டைக் கேட்டு யாராவது அழுவாங்களா, ஏன் இப்படி இருக்கீங்க?’ என்று என் மனைவி லீலாகூடச் சொல்வாள். ஆனால், அவளுக்குத் தெரியுமா, இந்தப் பாடலின் பின்னே அழியாத கண்ணீர்க் கறை படிந்திருக்கிறது என்பது. தனது பள்ளி வயதில் இருந்து அந்தப் பாடலை நாள் எல்லாம் தன் உதட்டில் முணுமுணுத்துக்கொண்டே இருந்த வசந்தி சித்தி, தலை மொட்டை அடிக்கப்பட்டு அழுக்கடைந்துபோன பச்சை நிற அங்கி போன்ற உடையோடு மருத்துவமனையின் தனியறை ஒன்றில் இந்தப் பாடலைக் கேட்டபடியேதான் இறந்துபோனாள் என்று. அவள் வாழ்நாளின் சகல துயரங்களிலும் இருந்து அவளை மீட்டுக் காப்பாற்றியதும் இந்த ஒரு பாடல்தான் என்று.

p68.jpg

சித்தி அந்தப் பாடலைத் தன்னுடையதாகஆக்கிக்கொண்டுவிட்டாள். அவள் மட்டும் இல்லை, மனத் துயரம்கொண்ட ஒவ்வொருவரும் ஏதோவொரு சினிமா பாடலைத் தன்னுடைய பாடலாக்கிக்கொண்டுவிடுகிறார்கள். அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பாடலின் கூடவே பாடி சந்தோஷம் அடைகிறார்கள். பாடலோடு சேர்ந்து அழுகிறார்கள். பின்பு, அந்தப் பாடல் அவர்களின் நிரந்தரத் துணையாகிவிடுகிறது.

அப்படி வசந்தி சித்தி தனது வாழ்வின் பற்றுக்கோடாக பி.பி.ஸ்ரீனிவாஸைப் பிடித்துக்கொண்டு இருந்தாள். தாத்தா வீட்டிலேயே சித்திதான் அதிகம் படிக்காதவள். அவள் டுடோரியலில் படித்துத்தான் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்தாள். வீட்டில் ராணி சித்தி, பிரேமா சித்தி இருவரும் வாய் ஓயாமல் பேசக் கூடியவர்கள். ஆனால், வசந்தி சித்தி யாரோடும் அதிகம் பேசியதே கிடையாது. அதனால்தானோ என்னவோ சினிமா பாட்டைத் துணைக்கு வைத்துக்கொண்டாள்.

சித்திக்கு இருந்த ஒரே திறமை எந்தப் பாடலையும் ஒரு முறை கேட்டால், மறுமுறை அப்படியே பாடிவிடுவது. அதைத் திறமை என்று யாரும் ஏற்றுக்கொண்டது இல்லை. வெட்டிவேலை என்றே தாத்தா சொல்வார். மற்றவர்களைப் போல டெய்லரிங், டைப்பிங், ஒயர் கூடை போடுவது போன்றவற்றைக் கற்றுக்கொள்ள வசந்தி சித்தி மறுத்துவிட்டாள்.

'படிக்காத கூகை... சினிமா பாட்டைக் கேட்டு வீணாப்போகப்போற பாரு’ என்று அவளை தாத்தா அடிக்கடி திட்டுவார்.

அப்படியும் தாத்தாவுக்குத் தெரியாமல் பாட்டுப் புத்தகங்களை வாங்கி வந்து, தலையணைக்குள் ஒளித்துவைத்துப் பாடுவாள். ஒரு முறை தாத்தா அவளது பாட்டுப் புத்தகங்களைக் கண்டுபிடித்து அடுப்பில் போட்டு எரித்ததோடு, அவளது இடது கையில் சூடும் போட்டார். சூடு போட்டதற்கு அழுததைவிட, தனது பாட்டுப் புத்தகங்கள் எரிந்துபோனதற்குத்தான் சித்தி அதிகம் அழுதாள்.

தாத்தாவின் கட்டாயத்துக்காக பாளையம்பட்டியில் டீச்சர் டிரெய்னிங் படித்தாள். ஆச்சிதான் அலைந்து திரிந்து ஆட்களைப் பிடித்து அவளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்தாள். சாகேஹள்ளி என்ற சிறிய ஊரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக அவளுக்கு வேலை கிடைத்தது. ஆச்சிதான் அவளை அழைத்துக்கொண்டு போய் விட்டுவந்தாள்.

சாகேஹள்ளி மிகவும் சிறிய கிராமம். இருநூறு வீடுகளுக்குள் இருந்தன. அந்த ஊருக்கு நேரடியாகப் பேருந்து கிடையாது. ராயக்கோட்டை போகிற வழியில் உள்ள குறுக்குச் சாலையில் இறங்கி நடந்து தான் போக வேண்டும். சிறிய ஓட்டு வீட்டுக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்டு சித்தி தனியே வாழ்ந்துகொண்டு இருந்தாள். பகலிலும் அந்த வீடு இருண்டே இருந்தது. வேலைக்குப் போன பிறகு, அவள் எல்லா உறவுகளில் இருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டாள்.

ஒரு முறை அங்கே விடுமுறைக்குப் போயிருந்தபோது, கட்டுவிரியன் பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். சித்தி எப்படி இந்த ஊரில் வசிக்கிறாள் என்று ஆச்சர்யமாக இருந்தது.

''ஏன் சித்தி இங்கே வந்து இப்படிக் கஷ்டப்படுறே?'' என்று கேட்டேன்.

''இங்கே பேச்சுத் துணைக்குக்கூட ஆள் கிடையாது. அதனால, நிறைய நேரம் பாட்டு கேட்கலாம். ரேடியோ இருக்கு. என் சம்பளத்துல புதுசா கேசட் பிளேயர் வாங்கி இருக்கேன். கேசட்ல எனக்கு விருப்பமான பாட்டா பதிஞ்சி வெச்சிருக்கேன். தாத்தா கத்துவாரேனு பயமே இல்லாமப் பாட்டு கேட்குறதுக்கு இந்த ஊருதாண்டா லாயக்கு'' என்றாள்.

அவளது பதின்வயதில் ஒரேயரு முறை பொருட்காட்சிக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் கச்சேரியில் பாடுவதற்கு வரப்போகிறார் என்று கேள்விப்பட்டு, அதற்குப் போயாக வேண்டும் என்று முரண்டுபிடித்து இருக்கிறாள். வயதுக்கு வந்த பெண் தனியாக இரவில் பாட்டுக் கச்சேரி கேட்கப் போகக் கூடாது என்று தாத்தா தடுத்துவிட்டதோடு, மீறிப் போனால் அவளை வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். ஆனால், சித்தி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. கச்சேரி கேட்பதற்காக 20 ரூபாய் டிக்கெட் வாங்கப் பணம் தரவில்லை என்று, தான் போட்டிருந்த கொலுசை விற்று டிக்கெட் வாங்கிக்கொண்டு போய் இருக்கிறாள்.2,000 பேருக்கும் மேலான கூட்டம். வரிசை வரிசையாக நாற்காலிகள், அலங்கார டியூப்லைட்டுகள், மிகப் பெரிய மேடை, வாத்தியக் கலைஞர்கள், 20 ரூபாய் டிக்கெட் எல்லாம் கடைசியில் இருந்தது. அங்கும் பெரிய கூட்டம். தள்ளுமுள்ளு. அதற்குள் முண்டி புகுந்து ஒரு கம்பத்தின் அருகே நின்றபடியே குதிகாலை உயர்த்தி நின்று, எப்படியாவது மேடையில் ஒரு நிமிடம் பி.பி.எஸ்ஸைப் பார்த்துவிட்டால் போதும் என்று எக்கி எக்கி முயன்றுகொண்டு இருந்தாள்.அன்று பி.பி.ஸ்ரீனிவாஸ் கச்சேரிக்குவரவே இல்லை. வேறு பல முன்னணிப் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஆனால், பி.பி.எஸ். வந்து விடக்கூடும் என்று சித்தி கடைசிப் பாடல் முடியும் வரை நம்பிக்கையோடு காத்திருந் தாள். அவர் வரவில்லை என்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடிய வில்லை. பொருட்காட்சியில் இருந்து வீடு திரும்பும் வழி எல்லாம் புலம்பிக்கொண்டே வந்தாள். இருட்டைப் பற்றியோ, தனியாக வருவதைப் பற்றியோகூட அவளுக்குள் பயம் இல்லை. பி.பி.எஸ். வரவில்லையே என்பது தான் ஒரே ஆதங்கம்.

''யாரைக் கேட்டுக்கொண்டு தனியாக் கச்சேரி கேட்கப் போனே... தறுதலை அப்படியே எங்கயாவது ஊர் மேயப் போயிடு... வாசல்ல நிக்காதே'' என்று தாத்தா வாசல் கதவைத் திறக்காமல் கத்தினார். அவள் தாங்க முடியாத மன வேதனையோடு சொன்னாள், ''நான் இப்பவே கிணத்துல விழுந்து செத்துப்போயிர்றேன்... அப்போ உங்களுக்கு என்னால எந்தத் தொந்தரவும் இருக்காது'' என்று சிட்ஃபண்ட்ஸ் ஆபீஸை ஒட்டிய கிணற்றை நோக்கி விடுவிடுவென நடந்துபோனாள். அன்றிருந்த மனநிலையில் அவளை விட்டிருந்தால், செத்துப்போயிருக்கக் கூடும். ஆனால், உறக்கத்தில் இருந்த ஆச்சி பயந்து எழுந்துபோய், அவளைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து சொன்னாள், ''ராத்திரி சாப்பிடாமலே போயிட்டே... எவ்வளவு நேரம்டி வெறும் வயித்தோட இருப்பே. ஒரு வாய் சாதம் சாப்பிட்டுத் தூங்கு.'' சித்திக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. அவளுக்கு மனம் கசந்துபோயிருந்தது. சாப்பிட மறுத்துவிட்டு, வெறும் தரையில் படுத்துக்கொண்டாள். ''அதான் ரேடியோவுல ஒரு நாளைக்கு நூறு தடவை பாட்டுப் போடுறான்ல. அப்புறம் கச்சேரிக்கு வேற ஏண்டி போற. பொம்பளைப் பிள்ளை துணை இல்லாம ஒத்தையில வந்தா என்ன ஆகுறது?'' என்று கேட்டாள் ஆச்சி.

''அதான் உசிரோட முழுசா வந்து தொலைச்சிட்டேன்ல... இன்னும் ஏம்மா படுத்துறே?'' என்று சித்தி கத்தினாள்.

ஆச்சிக்கு அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பதின்வயதில் பொம்பளைப் பிள்ளைகள் எதற்குக் கோபப்படுகிறார்கள் என்று உலகில் யாருமே புரிந்துகொள்ள முடியாது. அந்தக் கோபம் ஒரு வடிகால். ஆச்சி அவளின் முதுகில் கை வைத்துத் தடவிக்கொடுத்தாள்.

சித்திக்கு அந்தத் தொடுகை அழுகையைப் பீறிடச் செய்தது. அவள் தன் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு விசும்பி அழுதாள். அவளாக அழுது முடிக்கட்டும் என்று ஆச்சி அமைதியாக இருந்தாள். நீண்ட கேவலுக்குப் பிறகு அவள் தன் அம்மாவின் பக்கம் திரும்பிச் சொன்னாள், ''கொலுசை வித்துட்டேன். அதுக்கு வேற அப்பா நாளைக்குக் கத்துவாரு பாரு.''

''தொலைஞ்சிபோச்சினு சொல்லுடி. உங்கப்பா பொருட்காட்சிக்குப் போயி தேடவா போறார்?'' என்றபடியே ஆச்சி புரண்டுபடுத்துக்கொண்டாள். சின்னஞ்சிறு பொய்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையின் கொதிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது போலும். ஆச்சி வீட்டில் இருந்துதான் நானும் பொய்யின் பயன்பாடுகளைக் கற்றுக்கொண்டு இருந் தேன்.

சித்தி மறுநாள் காலை வழக்கத்துக்கு மாறாக வாசலில் மிகப் பெரிய தாமரைக் கோலம் ஒன்றைப் போட்டிருந்தாள். அவளுக்கு மனது சந்தோஷமாக இருந்தால்தான், அப்படியான வண்ணக் கோலத்தைப் போடுவாள். அவள் வரைந்த கோலத்தை அவளாகவே ரசித்தபடியே வீட்டுக்குள் போய் ரேடியோவைப் போட்டாள்.

டிபன் சாப்பிடும் நேரம் 'கொடி மலர் என்ற படத்தில் இருந்து ஒரு பாடல்’ என்ற அறிவிப்பு வந்தவுடன் பி.பி.எஸ்ஸை முந்திக் கொண்டு அவள் ''மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்'' என்றுபாடத் துவங்கியிருந்தாள்.

''அடி செருப்பால மூதேவி'' என்ற குரல் தாத்தாவிடம் இருந்து எழுந்தது.

வீட்டில் பெண்கள் சினிமா பாட்டு பாடுவது தாத்தாவுக்குப் பிடிக்காது. அதிலும் இப்படி ரேடியோவோடு கூடவே பாடினால் அவருக்குக் கோபம் பொங்கி வழியும். அதற்காகவே சித்திக்கு ஒரு முறை காலில் சூடு வைத்திருக்கிறார். அந்தக் காயத்தின் வடுவை அடிக்கடி அவள் தடவிக்கொண்டே இருப்பாள். நானும்கூட அதைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன்.

''ரேடியோ கூடவே பாடுனா என்னடா தப்பு? பாட்டைக் கேட்டா, கூடவே பாடத் தோணுதுடா சுப்பு. பாடிக்கிட்டே இருந்தா, பி.பி.எஸ். பக்கத்தில் இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்டா. அந்த மனுஷன் என்னமாப் பாடுறார்... பாதரசம் ஓடுற மாதிரி குரல்ல ஒரு வசீகரம், ஒரு மினுமினுப்பு இருக்குடா. ஒவ்வொரு குரலுக்கும் ஒரு வாசனை இருக்கு. நல்ல பாடகர்கள் பாடும்போது அந்த வாசனையை நாம உணர முடியும். பி.பி.எஸ். பாட்டைக் கேட்டா, எனக்குப் பால் பொங்குற வாசம் வருதுடா. அவர் பாட்டைக் கேட்டுக்கிட்டே செத்துப்போயிட்டா நல்லா இருக்கும்ல'' என்றவள், 'ஒடிவதுபோல் இடை இருக்கும்... இருக்கட்டுமே ஹோய்’ என்ற பாடலை முணுமுணுக்கத் துவங்கினாள். அன்றுதான் எனக்கு ஓர் உண்மை புரிந்தது. நம் எல்லோரின் உதட்டிலும் பாடல்கள் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன. சில பாடல்களை நாம் வெளிப்படுத்துகிறோம்... சிலவற்றை நாம் விழுங்கிவிடுகிறோம்.

சித்தி விரும்பியபடியேதான் அவள் வாழ்க்கை முடிந்துபோனது. எந்தப் பாடலைத் தன் வாழ்நாள் முழுவதும் நேசித்தாளோ, அதைக் கேட்டுக்கொண்டபடியேதான் இறந்தும்போனாள். அன்று நான் அவளோடு மருத்துவமனையில் உடனிருந்தேன்.

ஏனோ அவள் இறப்பதற்கு ஒரு வாரத்தின் முன்பு என்னைக் காண வேண்டும் என்று வரச் சொல்லி இருந்தாள். அப்போது பெங்களூரில் வங்கிப் பணியில் இருந்தேன். சிவப்பிரகாசம் மாமா போன் செய்து சொன்னார், ''வசந்தி உன்னைப் பாக்க ணும்னு சொல்றாடா. நீதானே அவ பெட்? உடனே போயிப் பாத்துரு. 10 நாள் கூடத் தாங்காதுனு டாக்டர் சொல்லிட்டாரு. மன திருப்திக்காக ஹாஸ்பிடல்ல வெச்சிப் பார்த்துட்டு இருக்கோம்.''

போனை வைத்தவுடன் எனது கை நடுங்கத் துவங்கியது. தொண்டையில் கனமேறி குரல் அடைத்துக்கொண்டதுபோல் ஆனது. இப்படி ஆகும் என்று சென்ற முறை நேரில் பார்த்தபோதே உணர்ந்திருந்தேன். அதை மாமாவின் குரல் உறுதிப்படுத்தியது மனதில் கலக் கத்தை ஏற்படுத்தியது.

இரண்டு வருஷத்துக்கு முன்பாக சிறுநீரகக் கோளாறு எனச் சிகிச்சைக்குப் போன சித்தி, தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக முடி கொட்டிப்போய், ஆள் மெலிந்து ஒடுங்கி, 37 கிலோ எடையில் ஒரு சிறுமியைப் போல உருமாறி இருந்தாள். மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டு பெங்களூரிலும் கோவையிலும் அவளுக்கு மாறிமாறி சிகிச்சை அளிக்கப்பட்டது. வலியும் வேதனையுமாகக் கழிந்த நாட்களில் அவள் தன் அறையில் கூடவே அந்த டேப்ரிக்கார்டரை வைத்திருந்தாள். தனக் காகப் பதிவுசெய்துவைத்திருந்த கேசட்டு களையும் கூடவே வைத்திருந்தாள். தலை மாட்டிலே டேப்ரிக்கார்டரை வைத்துக் கொண்டு மெல்லிய சப்தத்தில் ஒலிக்கும் பாடலைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். சில நாட்கள் வலி அதிகமாகி உறக்கம் வராமல் போகையில், அவள் இரவெல்லாம் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தாள் என்று மாமா சொன்னார்.

சித்தி மருத்துவமனையில் இருந்தபோது அவளைப் பார்க்கச் செல்கையில் பி.பி.எஸ். பாடல்கள் அடங்கிய சி.டி-யும் புதிதாக ஒரு சி.டி. பிளேயரும் வாங்கிப் போயிருந்தேன். சித்தி அப்போது ஊதா நிற அங்கி ஒன்றை அணிந்து இருந்தாள். ஆறாம் வகுப்புக்குப் போகும் ஒரு சிறுமியின் உடல்வாகுபோலத்தான் அவளின் தோற்றம் இருந்தது. அவளது கண்கள் பிதுங்கித் துருத்திக்கொண்டு இருந்தன. உலர்ந்த உதடு, ஒடுங்கிப்போன மார்புகள், கால்கள் குச்சியாக இருந்தன. படுக்கையில் அயர்ந்துகிடந்தாள்.

அருகில் போய் உட்கார்ந்து, ''சித்தி நான் சுப்பு வந்திருக்கேன்'' என்று சொல்லியபோது, அவள் கைகளை ஊன்றி உட்கார முயன் றாள். ஆனால், எழுந்துகொள்ள முடிய வில்லை. நான் அவளைத் தலையணையில் சாய்வாக உட்காரவைத்தேன். முகத்தில் லேசான புன்னகை வந்தது. அவள் என் கைகளைப் பிடித்தபடியே கேட்டாள்... ''பிள்ளைக நல்லா இருக்கா சுப்பு?''

சுப்ரமணி என்ற என் பெயரை சுப்பு என அழைக்கும் ஒரே ஆள் சித்தி மட்டும்தான். அன்று அவள் அப்படிக் கூப்பிடுகையில் உடல் சிலிர்த்துப்போய்விட்டது.

''நல்லாயிருக்காங்க சித்தி...'' என்றபடி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

''காலைல ரேடியோவுல 'வீரத் திருமகன்’ படத்துல வர்ற 'ரோஜா மலரே ராஜகுமாரி’ போட்டான். நீயும் நானும்தானே அதை முத்து டாக்கீஸ்ல பாத்துட்டு வந்தோம். ஞாபகம் இருக்கா?''

அது நினைவில் இல்லை. ஆனால், அந்த வயதில் சித்தி எவ்வளவு அழகாக இருந்தாள். நெற்றியில் கீற்றளவு சந்தனம், சிறிய திருநீறு, கழுத்தில் ஒரு பாசிமாலை, கையில் இரண்டே வளையல்கள், வெளியூர் போகும்போது மட்டும் போட்டுக்கொள்ளும் செருப்பு. அந்த நாட்களில் சித்தியின் முகம் மிகுந்த பொலிவுடன் இருந்தது. ஒரு சிறு சுருக்கம்கூட இல்லாமல் தாவணி அணிந்து இருப்பாள். கால் விரல் நகங்களைக்கூடக் கச்சிதமாக வெட்டி சுத்தமாக வைத்திருப் பாள். அவளுக்கு மஞ்சள் ரோஜா பிடிக்கும் என்பதற்காக பூங்கா வரை நடந்துபோய் பூ வாங்கி வைத்துக்கொள்வாள். இப்படி மனதில் ஏதோ நினைவுகள்.

சித்தியால் தலையணையில் சாய்ந்துகூட உட்கார முடியவில்லை. ''நான் படுத்துக்கிடுறேண்டா சுப்பு. முதுகு வலிக்குது'' என்று படுத்துக்கொண்டாள். அவளை அப்படியே ஒரு குழந்தையைப் போல அள்ளி மடியில் வைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந் தது. அவள் குரல் உடைந்துபோனவளாகச் சொன்னாள், ''நான் யாருக்குமே ஒரு கெடுதல் செய்யலைடா சுப்பு. கல்யாணம் கூடப் பண்ணிக்கிடாம சின்னப் பிள்ளை களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துக்கிட்டு தனியாத்தானே வாழ்ந்துட்டு இருந்தேன். எனக்கு ஏண்டா இப்படி ஒரு நோய் வந்துச்சி? உடம்பை உருக்குதுடா... எங்க அப்பா பேச்சைக் கேட்காம சினிமா பாட்டாக் கேட்டேனே... அதுக்கு ஆண்ட வன் குடுத்த தண்டனை இதுவாடா?''

என்னால் பதில் பேச முடியவில்லை. அவள் கைகளை இறுகப் பற்றியபடியே சொன்னேன், ''உனக்கு ஒண்ணும் ஆகாது சித்தி.''

''என் உடம்பைப் பத்தி எனக்குத் தெரி யும்டா. சின்னப் பிள்ளையா இருந்தப்போ நாம குடியிருந்த வீடு, விளையாடின இடம், கூட ஃப்ரெண்டா இருந்த கனக லட்சுமி, அப்போ படம் வரைஞ்சு தருவாரே டேனியல் மாமா... எல்லாரையும் பாக்கணும்னு மனசு அடிச்சிக்கிட்டே இருக்குடா. ஆனா, இனிமே போயி பாக்க முடியாதுனு நல்லாத் தெரியுது. இந்த நெனைப்பு வந்துட்டாலே, கதை அவ்வளவுதான்னு படிச்சிருக்கேன். எனக்காக நீ போயி இவங்களை எல்லாம் பாத்து, நான் கேட்டேன்னு சொல்வியாடா?'' என்றாள்.

''ஏன் சித்தி இப்படிப் பேசுறே... உனக்கு உடம்பு சரியானதும் என் கார்ல நாம ஊருக்குப் போயிட்டு வருவோம்'' என்றேன்.

சித்தி பதில் பேசவில்லை. நினைவில் ஆழ்ந்துபோய் இருந்தாள்.

அதன் பிறகு என்னோடு ஒரு வார்த்தை பேசவில்லை. அப்படியே கண்களை மூடிப் படுத்துக்கொண்டுவிட்டாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் ஊருக்குப் போகையில் சொன்னாள், '' 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ பாட்டை நேத்து கனவுல கேட்டேன். விடிஞ்சி ரேடியோவைப் போட்டா, அதுதான் மொதப் பாட்டு. நான் நினைச்சதையே போட்டது, சந்தோ ஷமா இருக்குடா. சினிமா பாட்டு மட்டும் இல்லேன்னா, நான் எப்பவோ செத்துப் போயிருப்பேண்டா சுப்பு.''

சித்தி ஒன்றரை வருஷம் மாறி மாறி மருத்துவமனையில் இருந்த காரணத்தால், அவளைப் பார்க்க வந்துபோகிற உறவினர்கள் குறைந்துபோனார்கள். ஒரு சமயத்தில் அவளோடு மருத்துவமனையில் துணைக்கு இருப்பதற்குக்கூட யாருமே இல்லாமல் அவள் மட்டுமே தனியே மருத்துவமனையில் இருந்தாள்.

ஆனால், தன்னை மற்றவர்கள் கவனித்துக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவளிடம் இருந்ததே இல்லை. தன்னால் மற்றவர்களுக்கு அதிகம் உதவி செய்ய முடியாமல் வாழ்க்கை முடிந்துவிடப்போகிறதே என்றுதான் ஆதங்கம்.

அந்த ஆதங்கம் உறுதியாகும்படியாகவே அவளது இறுதி நாட்கள் அமைந்து இருந்தன. கடைசியாக சித்தியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் கிளம்பினேன். வழியில் காரில் வைத்து தருண்கூடக் கேட்டான்.

''சினிமா பாட்டு பாடுமே... அந்த சித்தியாப்பா சாகப்போறா?''

''அப்படி எல்லாம் பேசக் கூடாது தருண்.''

''அம்மாதான் சொன்னா, நீயும் சினிமா பாட்டு பாடுவியாப்பா?''

''நான் பாட மாட்டேன், கேட்பேன்.''

''சித்திதான் உன்னையும் பாட்டுக் கேட்கப் பழக்கிவிட்டாளா?''

அதுதான் உண்மை. அதைச் சொல்வதற் காகத் தலையாட்டும்போது என்னை அறியாமல் கண்ணீர் கசிந்துபோனது. அதை தருண் கவனித்திருக்கக்கூடும். அவன் என் மனைவியின் சேலையை இழுத்தபடியே சொன்னான், ''அப்பா அழறார்.''

லீலா அதைக் கவனித்தபோதும் கேட்டுக்கொள்ளவில்லை. நித்யா மட்டும் புரியாமல் என்னைப் பார்த்தபடி இருந்தாள். சித்திக் குப் பிடித்த பாடலாகவே பெங்களூரில் இருந்து சேலம் மருத்துவமனை வரும் வரை கேட்டுக்கொண்டே வந்தேன்.

மருத்துவமனையில் இருந்த சித்தியால் கால்களை அசைக்கக்கூட முடியவில்லை. மூத்திரம் போவதற்குக்கூட அவளைப் படுக்கையில் ஒரு ஆள் தூக்கிக்கொண்டு போக வேண்டி இருந்தது. அவளது குரல் கூட மாறி இருந்தது. எங்கோ கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோலப் பேசினாள். லீலாவையும், தருணையும், நித்யாவையும் பார்த்ததும் சித்தி சிரிக்க முயற்சி செய்தாள். அவளால் முடியாமல் போகவே கண் கலங்கியது. பிள்ளைகளைத் தன் அருகில் வரச்சொல்லி ஜாடை செய்தாள். ஆனால், நித்யா, தருண் இருவருமே அருகில் போகப் பயந்து நின்றார்கள்.

''ஆச்சி கையைப் பிடிச்சிக்கோ'' என்று நான் சொன்னதும் நித்யா, வசந்தி சித்தியை நோக்கிக் கையை நீட்டினாள்.

சித்தி நடுங்கியபடியே நித்யாவின் கையைப் பற்றியபடி என்னிடம் சொன்னாள், ''அந்த பேப்பருக்கு அடியில் ஒரு சாக்லேட் வெச்சிருக்கேன். எடுத்துக் குடு.''

பழைய நியூஸ் பேப்பர் அடியில் ஒரு ஐம்பது பைசா சாக்லேட் இருந்தது. அதை எடுத்து நித்யாவிடம் நீட்டினேன். நித்யா அதை வாங்க மறுத்து, ''தருண் நீ வாங்கிக்கோ'' என்றாள். தருண் தனக்கும் வேண்டாம் என்றான். ''வாங்கிக்கோ நித்யா'' என்றேன்.

''இந்த ரூம்ல ஒரே ஸ்மெல்லா இருக்கு. எனக்கு வேண்டாம்'' என்று அவள் வராந்தாவை நோக்கி ஓடத் துவங்கினாள். சித்தியின் முகம் வாடிப்போயிருந்தது. நான் அந்த சாக்லேட்டைப் பையில் போட்டுக்கொண்டபடியே வசந்தி சித்தியின் அருகில் உட்கார்ந்துகொண்டேன்.

''இதோட சரி சுப்பு... இனிமே ரொம்பத் தொந்தரவு குடுக்க மாட்டேன். கடைசியா ஒரு தடவை பாக்கணும்னு தோணிச்சி. நீ ஒருத்தன்தாண்டா என் வளர்ப்பு. உங்க அம்மாவைவிட நான்தான் உன்னைப் பாத்துப் பாத்து வளத்தேன். இப்பகூட நீ டவுசர் போட்டுக்கிட்டு இருக்கிற சின்னப் பையனாத்தான் எனக்குத் தெரியுற. ஒரு ஆளோட உருவம் கண்ணுக்குள்ளே பதிஞ்சுபோச்சுன்னா, அதை மறக்கவே முடியாது. எனக்கு நீ எப்பவும் ஸ்கூலுக்குப் போற சுப்புதான். அப்படித்தான் நினைப்புல இருக்கு.''

என்ன பேசுவது என்று தெரியாமல் சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடியே இருந்தேன். மனம் ததும்பிக்கொண்டு இருந் தது. எச்சிலை விழுங்குவதுகூட வேதனை யாக இருந்தது.

சித்தி சொன்னாள், ''இப்போ எல்லாம் ரேடியோ, டேப்ரிக்கார்டர் எதுவுமே இல்லாமல் மனசுல இருந்தே பாட்டு கேட்க முடியுதுடா. கண்ணை மூடிக்கிட்டா மனசு தானே நினைக்கிற பாட்டை ஓடவிடுது. அதைத்தான் கேட்டுக்கிட்டே இருக்கேன். பகலும் ராத்திரியும் பாட்டு... பாட்டு... பாட்டுனு கேட்டுக்கிட்டே இருக்கேன். அது ஒண்ணுதான் எனக்கு மருந்து, சாப்பாடு எல்லாமே. கேட்கக் கேட்க மனசு லேசாகிருது. என் நெனைப்பா இந்தப் பாட்டுகளைத்தாண்டா விட்டுட்டுப் போறேன். அதைக் கேட்கிறப்போ என்னை நினைச்சிக்கிடுவே இல்ல?''

என்னால் அதற்கு மேல் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சித்தியும் அழுதாள். பிறகு, இருவரும் மௌனமா இருந்தோம். சித்தி கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்குள் பாட்டு கேட்கத் துவங்கியிருக்க வேண்டும். நான் ஜன்னலுக்குப் பக்கமாக நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டேன்.

ஆறு நாட்கள் பகலிரவாக அவளோடு மருத்துவமனையில் இருந்தேன். அவளை நானே தூக்கிக்கொண்டு போய் கழிப்பறையில் விட்டேன். ஒரு புறாக் குஞ்சைக் கையில் பிடித்திருப்பதுபோலவே இருந்தது. முதுகு வளைந்து, இடுப்பு ஒடுங்கி, முட்டிகள் துருத்திக்கொண்டு அய்யோவென்று இருந்தது. சித்தியின் உதடுகள் எப்போதாவது அசையும். அவள் கூடவே பாடிக்கொண்டு இருக்கிறாள் என்று எனக்குத் தோன்றும். அந்த உதட்டு அசைவை வைத்து என்ன பாடலைப் பாடு கிறாள் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்வேன். சில வேளைகளில் என்னால் அவள் மனதில் ஒலிக்கும் பாடலைக் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒரு நள்ளிரவில் அவள் பாதி தூக்கத்தில் எழுந்து சொன்னாள், ''கண்ணை மூடுனா, ஒரே குழப்பமா இருக்குடா. பாட்டு கேட்க மாட்டேங்குது. வண்ணத்துப்பூச்சி பறக்கிற மாதிரி சடசடனு ஏதோ உருவம் மங்கலா வருது. டேப்ரிக்கார்டர்ல பாட்டைப் போடு. நான் எழுந்து அவளது டேப்ரிக்கார்டரைத் தலைக்கு அருகில் வைத்தபடியே ''என்ன பாட்டு?'' என்று கேட்டேன்.

சித்தி தெளிவற்ற குரலில் சொன்னாள்

''நிலவே என்னிடம் நெருங்காதே...''

அந்தப் பாடல் அறையில் ஒலிக்கத் துவங்கியபோது அவள் உடல் வேதனையோடு புரண்டு படுத்துக்கொண்டது. அன்றிரவு துவங்கி மறு நாள் சாயங்காலம் வரை பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இரவு பெய்த மழை யால் மின்சாரம் இல்லாமல் போனது. சித்தி அன்றிரவு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டு இருந்தாள். விடிகாலை 5 மணி இருக்கக் கூடும். அவள் எழுந்து, அருகில் இருந்த டம்ளரை எக்கி எடுக்க முயன்று தள்ளி விட்டாள்.

நான் கண் விழித்து, ''என்ன வேணும் சித்தி?'' என்றேன்.

''பாட்டை ஆஃப் பண்ணிட்டியா?'' என்று கேட்டாள்.

''கரன்ட் இல்லே... அதான்...'' என்றேன்.

''நாம ரெண்டு பேரும் ஒண்ணா மெட்ராஸுக்குப் போயி பி.பி.எஸ்ஸை பாக்கிறது மாதிரி ஒரு கனா வந்துச்சி. எனக்கு இப்போ எல்லாம் கனவு வர்றதே இல்லை. ஆனா, நேத்து இந்தக் கனா வந்துச்சி. அவர் பாட்டைக் கேட்கிறப்போ, மனசுல தோண்ற உருவத்துக்கும் நேர்ல பாக்குற துக்கும் வேற மாதிரி இல்ல இருக்கும். அவரைப் பார்க்கவே வேணாம்னுதான் தோணுது!''

''அதெல்லாமில்லை சித்தி. நான் அவரை டிரைவ் இன் உட்லண்ட்ஸில் பாத்துப் பேசியிருக்கேன். ஒரு தடவை உனக்குகூட ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வந்து குடுத்தேனே?'' என்றேன்.

''ஞாபகமிருக்கு சுப்பு... வீட்ல அதை என் சூட்கேஸ்ல வெச்சிருக்கேன். இந்த உலகத்துலயே மனுசனோட குரலுதான் பெரிய ஆச்சர்யம். அது என்னவெல்லாம் மாயம் பண்ணுது. சிலரோட முகம் மறந்துபோய், குரல் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கு. குரலுக்கு வாசனை இருக்கு. நிறம் இருக்கு. வெளிச்சம் இருக்கு. ருசியும் இருக்குடா. நான் அதுலயே கிறங்கிப்போயிக் கிடக்கேன். இந்த உலகத்தில் நான் ஆசை தீர அனுபவிச்சது பாட்டு மட்டும்தாண்டா. ஆனாலும், போதும்னு விட முடியலை. அதுக்காக இன்னும் அம்பது வருஷம் வாழணும்னு ஆசையா இருக்குடா'' என்று விம்மத் துவங்கினாள்.

அன்றிரவுதான் கடைசி முறையாக சித்தி மௌனமே பார்வையால் பாடலைக் கேட்டாள். பின்பு, இரவு மூன்றரை மணிக்கு இறந்துபோனாள். அவளது காலத்துக்குப் பின்பு அந்த டேப்ரிக்கார் டரையும் பதிவுசெய்துள்ள பாடல்களையும் நான் எடுத்துக்கொண்டு வந்தேன். அதில் பாட்டு கேட்பதே இல்லை.

சித்தியின் நினைவாக ஷோகேஸில் பாது காப்பாக வைத்திருக்கிறேன். ஓடாத அந்த ஒலிநாடாவோடு அவளது நினைவுகளும் சுருண்டுகொண்டு இருக்கின்றன.

அதிலிருந்து எப்போதெல்லாம் டி.வி-யில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகிறதோ, அப்போதெல்லாம் பிள்ளைகள் தவறாமல் நினைவுபடுத்துகிறார்கள்.

''அப்பா உன் பாட்டு டி.வி-யில ஓடுது...''

அது என் பாட்டு இல்லை மகளே... உலகில் துயரம் தீராத ஒவ்வொரு பெண்ணும் தன் மனதுக்குள் காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல் அது. நீயும் ஒருநாள் இதுபோல ஒரு பாடலை உனதாக் கிக்கொள்வாய். அன்றைக்கு என்னைப் போலவே நீயும் பாடல் கேட்டபடியே அழுவாய்.

எளிய மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷமோ, துயரமோ எதுவா யினும் அதைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் இந்தப் பாடல் களைத் தவிர வேறு என்ன இருக் கின்றன?

'முன்னம் இருக்கும் இந்தச் சின்ன உதட்டில் பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்’ என டி.வி-யில் இளைஞன் உருகிப் பாடிக்கொண்டு இருந்தான்.

அதைக் கேட்டபோது தோன்றியது...

இந்த நிமிஷம் ஏதாவது ஒரு ஊரில், யாராவது ஒருவர் நிச்சயம் பி.பி.எஸ். பாடலைக் கூடவே பாடிக்கொண்டு இருப்பார், வசந்தி சித்தியைப் போல!

நன்றி - விகடன்.

=======================================

ராமகிருஷ்ணன் அழகாக மனிதரின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் வண்ணம் கதைகள் எழுதுவார். விகடனில் தான் அவரது கதைகளை வாசித்துள்ளேன்.

இளையராஜாவின் ஓவியமும் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. பாதத்தில் வெயில் அடிப்பது கூட மென்மையாக வரையப்பட்டுள்ளது.

இனிமேல், "மௌனமே பார்வையால்" பாட்டுக்கேட்டால் சுப்புவும் வசந்தி சித்தியும் நினைவில் வருவார்கள் என்பது நிச்சயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை..நன்றி ஈஸ் அண்ணா பகிர்விற்கு...இளையராஜாவின் ஓவியங்கள் அப்படித் தத்ரூபமாக இருக்கும்...ஓவியங்கள் உயிர் பெற்றுவருபவை போல் இருக்கும்...சந்தேகமே இல்லாமல் இந்தியாவின் தலை சிறந்த ஓவியர்களில் ஒருவர் இளையராஜா...இந்தப் படத்தை சுட்டுவிட்டேன் கவிதை எழுத...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Copy%252Bof%252BPicture%252B152.jpgilayaraja.mankuthiray.jpg

இணைப்பிற்கு நன்றி ஈஸ்.

சுபேஸ், இளையராஜாவின் ஓவியங்களை நேரம் போவது தெரியாமல்... ரசித்துக் கொண்டிருக்கலாம்.

அவரின் மேலும் சில ஓவியங்கள் உங்கள் ரசனைக்காக...sisters1.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.