Jump to content

அமெரிக்காவின் பிறந்த நாள்


Recommended Posts

[size=6]அமெரிக்காவின் பிறந்த நாள் ஜூலை 4, 1776 [/size]

[size=5]1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டம் மற்றும் 1770 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது, இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது.

ஜூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில்கூடிய கண்டமாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தைஅமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்டஅந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது, இந்த பிரகடன வரைவு ஜூலை 4, 1776 அன்று, தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. [/size]

[size=4]3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. [/size]

[size=4]உலகில் பன்முக இனங்களையும் பலவித கலாச்சாரங்களையும் மிக அதிகளவில் கொண்ட தேசங்களில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும். அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).[/size]

[size=4]ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.[/size]

Link to comment
Share on other sites

[size=6]அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்[/size]

[size=4]நிலவில் மனிதன் முதலில் கால் வைக்கும் நிகழ்வில் விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின், 1969 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி அறிவியல் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. 1876 ஆம் ஆண்டில், தொலைபேசிக்கான முதல் அமெரிக்க காப்புரிமை அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பெற்றார். தாமஸ் எடிசனின் ஆய்வகமானது போனோகிராப், முதல் நெடுநேரம் எரியும் லைட் பல்ப், மூவி கேமரா ஆகியவற்றை உருவாக்கியது. நிகோலா டெஸ்லா அல்டர்னெடிங் மின்சாரம், ஏசி மோட்டார், ரேடியோ ஆகியவற்றை உருவாக்கினார்.[/size]

[size=4]20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரான்சம் ஈ.ஓல்ட்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டின் தானுந்து நிறுவனங்கள் தொகுப்புவரிசையை ஊக்கப்படுத்தின. 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள், முதலாவது கட்டுப்படுத்தக்கூடிய காற்றை விட கனமான உந்துசக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினர்.[/size]

[size=4]1930 ஆம் ஆண்டுகளில் நாசிசத்தின் எழுச்சியானது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், என்ரிகோ பெர்மி உள்ளிட்ட பல ஐரோப்பிய விஞ்ஞானிகளை அமெரிக்காவுக்கு குடியேறச் செய்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில், மன்ஹாட்டன் திட்டம் அணு ஆயுதங்களை உருவாக்கி, அணுஆயுதக் காலத்தை கொண்டுவந்தது. விண்வெளி போட்டியானது ராக்கெட் தொழில்நுட்பம், பொருளறிவியல், கம்யூட்டர்களில் துரித முன்னேற்றங்கள் ஆகியவற்றை கொண்டுவந்தது. ARPANET மற்றும் அதன் தொடர்ச்சியான இன்டர்னெட் ஆகியவற்றை அமெரிக்கா பெருமளவில் உருவாக்கியது. இன்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் பெருமளவு, 64%, தனியார் துறையில் இருந்து வருகிறது.[/size]

[size=4]அறிவியல் ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் தாக்க காரணியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. உயர்ந்த நிலை தொழில்நுட்ப நுகர்வு பொருட்களை அமெரிக்கர்கள் கொண்டிருக்கிறார்கள், அத்துடன் ஏறக்குறைய பாதி அமெரிக்க வீடுகள் அகலக்கற்றை இணைய அணுகல் கொண்டிருக்கின்றன. [/size]

[size=4]மரபணு புகுத்திய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் உருவாக்குவதிலும் இந்த நாடு முதன்மையானதாக இருக்கிறது; உயிரிதொழில்நுட்ப பயிர்கள் பயிரிட்டிருக்கும் நாடும் அமெரிக்கா ஆகும்.[/size]

Link to comment
Share on other sites

[size=6]சியார்ச் வாசிங்டன் : விடுதலை வீரனா இல்லை பயங்கரவாதியா [/size]

[size=4]சியார்ச் வாசிங்டன் (ஜார்ஜ் வாஷிங்டன்; ஜோர்ஜ் வொஷிங்ரன்; பெப்ரவரி 22, 1732 -டிசம்பர் 14, 1799) அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். [/size]

[size=4]இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.[/size]

Link to comment
Share on other sites

[size=6]தி இண்டிபெண்டன்ஸ் டே [/size][size=5]அமெரிக்க திரைப்படமும் [/size][size=6]தற்கொடைத்தாக்குதலும் [/size]

independence+day.jpg

[size=4]இந்த அமெரிக்க திரைப்படம் இந்த நாட்களில் அதிகம் பார்க்கப்படும் படம்.[/size]

[size=1]

[size=4]இதன் கருவூலம் என்னவென்றால் இந்தப்பூமியை வேற்று கிரக வாசிகள் தாக்க முற்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முழு மனிதகுலமும் இணைந்து மிகப்பெரிய விமானத்தாக்குதலை ஒரு கணனி வைரஸ் தாக்குதலை அடுத்து செய்கின்றன. அப்பொழுது தாக்குதலை வெற்றிகரமாக முடிக்க ஏவுகணைகள் முடிந்த நேரத்தில் ஒருவரிடம் மட்டும் ஒன்று எஞ்சியுள்ளது, ஆனால் அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுட மறுக்கின்றது. [/size][/size]

[size=1]

[size=4]அப்பொழுது அந்த இளைப்பாறிய விமான ஓட்டி தனது விமானத்தை தன்னை வெடிகுண்டாக்குகின்றார், இந்த அமெரிக்காவையும்,பூமியையும், மனித குலத்தையும் காப்பாற்றுகின்றார். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]இன்று பிறந்த நாளை கொண்டாடும் அமெரிக்கர்களுக்கு, தாயக மற்றும் யாழ் கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். [/size]

[size=1]

[size=4]உலகின் வல்லரசான அமெரிக்கா தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களுக்கு ஒரு தனி நாடு அமைய உதவவேண்டும். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இன்று பிறந்த நாளை கொண்டாடும் அமெரிக்கர்களுக்கு, தாயக மற்றும் யாழ் கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். [/size]

[size=1][size=4]உலகின் வல்லரசான அமெரிக்கா தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களுக்கு ஒரு தனி நாடு அமைய உதவவேண்டும். [/size][/size]

நன்றி !

Link to comment
Share on other sites

[size=4]இன்று பிறந்த நாளை கொண்டாடும் அமெரிக்கர்களுக்கு, தாயக மற்றும் யாழ் கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். [/size]

[size=1][size=4]உலகின் வல்லரசான அமெரிக்கா தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களுக்கு ஒரு தனி நாடு அமைய உதவவேண்டும். [/size][/size]

நன்றிகள்.

Link to comment
Share on other sites

[size=4]இன்று பிறந்த நாளை கொண்டாடும் அமெரிக்கர்களுக்கு, தாயக மற்றும் யாழ் கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். [/size]

[size=1][size=4]உலகின் வல்லரசான அமெரிக்கா தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களுக்கு ஒரு தனி நாடு அமைய உதவவேண்டும். [/size][/size]

நன்றி அகுத.

நீங்கள் சொன்னதெல்லாம் கேட்டது, இப்போது நாங்கள் தேர்தல் அத்தடியில் இருக்கிறோம். ஒரு மாதிரி அதுவரைக்கும் கொஞ்சம் வாயைக்காட்டி, வயத்தை கட்டி மனேஜ் பண்ணிக்க பாருங்கோ. இது எல்லாம் சீனா சம்பந்த படுகிற விடையம். தேர்தல் முடிய பேசிக்கலாம்.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]அமெரிக்காவின் மிகப்பெருமை கொண்டது அதன் அரசியல் சாசனம். மேலும் அதன் மேல்சபை, கீழ்சபை, சனாதிபதி என்ற தேசிய அரசிலமைப்பு பலமானது. இந்தப்பலமான கொள்கைகளுக்குள் பல ஓட்டைகளும் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் உச்சமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது. இதன் மூலம் அவர்கள் போட்டிபோட வேண்டிய தேவை, அதற்கு பணம் தேவை. அதனால் அவர்களின் முடிவில் பணமுள்ளவர்கள் சில திணிப்புக்களை மேற்கொள்ள முடிகின்றது. நீதி கொஞ்சம் நீதி தவறலாம். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=2]

[size=5]அமெரிக்க மக்களின் நினைவில் நிற்கும் முதல் 20 விடயங்கள்.[/size][/size][size=2]

[size=4]01ம் இடம் : 2001 செப் 11 தாக்குதல்.[/size][/size][size=2]

[size=4]02ம் இடம் : 2005 கற்றரினா புயல்[/size][/size][size=2]

[size=4]03ம் இடம் : 1995 ஓ.ஜே.சிம்சன் வழக்கு[/size][/size][size=2]

[size=4]04ம் இடம் : 1986 சேலன்ஜர் விபத்து[/size][/size][size=2]

[size=4]05ம் இடம் : 2011 ஒஸாமா பின்லேடன் கொலை[/size][/size][size=2]

[size=4]06ம் இடம் : 1994 சிம்சன் வழக்கு[/size][/size][size=2]

[size=4]07ம் இடம் : 2011 சுனாமி ஜப்பான்[/size][/size][size=2]

[size=4]08ம் இடம் : 1999 கொலம்பியா ஹை ஸ்கூல் கொலை[/size][/size][size=2]

[size=4]09ம் இடம் : 2010 மெக்சிக்கன் ஓயில் கழிவு[/size][/size][size=2]

[size=4]10ம் இடம் : 1997 டயானா இறுதிக்கிரியை[/size][/size][size=2]

[size=4]11ம் இடம் : 2012 விற்னி கவுஸ்சன் மரணம்[/size][/size][size=2]

[size=4]12ம் இடம் : 2006 சதாம் உசேன் தீர்ப்பு[/size][/size][size=2]

[size=4]13ம் இடம் : 2008 பராக் ஒபாமா பேச்சு[/size][/size][size=2]

[size=4]14ம் இடம் : 2011 பிரின்ஸ் . வில்லியம் காற்றே திருமணம்[/size][/size][size=2]

[size=4]15ம் இடம் : 1963 யோன் எப் கெனடி மரணம்[/size][/size][size=2]

[size=4]16ம் இடம் : 1995 ஒக்கலகாமா குண்டு[/size][/size][size=2]

[size=4]17ம் இடம் : 2000 யோர்ஜ் புஸ் – அல்கோர் தீர்ப்பு[/size][/size][size=2]

[size=4]18ம் இடம் : 1992 றொட்னி கிங் போலீஸ் ஊழல்[/size][/size][size=2]

[size=4]19ம் இடம் : 2011 மகளை கொன்ற பெண் காஸி அன்ரோனி விடுதலை[/size][/size][size=2]

[size=4]20ம் இடம் : 1963 யோன் எப். கெனடி இறுதி யாத்திரை[/size][/size][size=2]

[size=4]உங்கள் மனதில் இவைகளில் ஏதாவது இருக்கிறதா.. மேலும் உங்கள் மனதில் உள்ள முதல் 20 விடயங்களையும் நினைவுபடுத்திப் பாருங்களேன்.[/size][/size][size=2]

http://www.alaikal.com/news/?p=109949[/size]

Link to comment
Share on other sites

03ம் இடம் : 1995 ஓ.ஜே.சிம்சன் வழக்கு

06ம் இடம் : 1994 (ஓ.ஜே) சிம்சன் வழக்கு (இது கலிபோர்ணியா விரைவு வீதில் நடந்த மிக ஆறுதலான பொலிஸ் துரத்தலாக இருக்கலாம்)

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]எனக்கு பிடித்தது ஒபாமாவின் பேச்சு.[/size][/size]

[size=1]

[size=4]இவரும் றேகனும் பேசுவதில் வல்லவர்கள். ஆனால், எதிர்க்கருத்தாளர்களை வெல்வதில் றேகன் ஒபாமாவை விட சிறப்பாக செய்துள்ளார். ஆனால், ஒபாமாவுக்கு இன்னும் காலம் உள்ளது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1][size=4]அமெரிக்காவின் மிகப்பெருமை கொண்டது அதன் அரசியல் சாசனம். மேலும் அதன் மேல்சபை, கீழ்சபை, சனாதிபதி என்ற தேசிய அரசிலமைப்பு பலமானது. இந்தப்பலமான கொள்கைகளுக்குள் பல ஓட்டைகளும் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் உச்சமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது. இதன் மூலம் அவர்கள் போட்டிபோட வேண்டிய தேவை, அதற்கு பணம் தேவை. அதனால் அவர்களின் முடிவில் பணமுள்ளவர்கள் சில திணிப்புக்களை மேற்கொள்ள முடிகின்றது. நீதி கொஞ்சம் நீதி தவறலாம். [/size][/size]

எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னது உலகில் இல்ல அசசியல் சாசனங்களில் மாற்றங்கள் இல்லாமில் நினைத்து நிற்றும் அரசியல் சாணம் அமெரிக்கர்களுடையது(தான்) என்றார் ....

இன்று ஒரு அமெரிக்கரை (அலம்புகிற :) சந்தித்தேன் பலருக்கு constitution பற்றி தெரிந்திருப்பதாக சொன்னார். அவர்கள் அதை மதிப்பது கூட என்று நான் நினைக்கறேன் .

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னது உலகில் இல்ல அசசியல் சாசனங்களில் மாற்றங்கள் இல்லாமில் நினைத்து நிற்றும் அரசியல் சாணம் அமெரிக்கர்களுடையது(தான்) என்றார் ....

இன்று ஒரு அமெரிக்கரை (அலம்புகிற :) சந்தித்தேன் பலருக்கு constitution பற்றி தெரிந்திருப்பதாக சொன்னார். அவர்கள் அதை மதிப்பது கூட என்று நான் நினைக்கறேன் .

[size=4]ஆம் அவர்கள் தமது அரசியல் சாசனத்தை மதிப்பது மிக அதிகம். அவர்களை பொறுத்தவரையில் அதுவே அவர்களின் சட்டக்கோப்பின் மூலம்.[/size]

[size=4]அத்துடன் முதல் திருத்தம், இரண்டாம் திருத்தம் (first and second amendments) எனவும் கதைப்பதுண்டு. [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.