Jump to content

சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார் என மின்னஞ்சல் செய்தி கிடைத்திருக்கிறது.

The public meeting will be held at theRegbyrne Community Centre, Darcy Road, WentworthvilleWhen : Saturday, 14th April 2012Time : 3.45pm for 4.00pm start.

Link to comment
Share on other sites

முடிந்தால் உறவுகள் சென்று சந்தியுங்கள்.

என்னிடம் உள்ள ஒரு கேள்விகள்:

- சிங்களம் ஏமாற்றி வரும் நிலையில், ஏன் கூட்டமைப்பு ஒரு தீர்வை சர்வதேசத்தின் முன் வைக்கக்கூடாது?

- நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை திட்டங்களை ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றா விட்டால் கூட்டமைப்பு என்ன செய்ய உத்தேசித்துள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ்மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு சரவதேசத்திடம் கூட்டமைப்பு கோரவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை யாழுக்கு கூட்டியரேலாதோ ;)

கூட்டிவந்தாலும் உள்ளத்தில் உள்ளதுகளை கேட்டால் தனிமனிததாக்குதல் ....... களவிதி மீறல் என்று கூறி நீக்கினாலும் நீக்கிடுவார்கள். :lol::D

சிட்னியில் இருக்கும் எமது உறவுகளான கந்தப்பு புங்கையூரான் சுண்டல் உடையார் போன்றோர் எமது சார்பில் அவரிடம் கேட்க்கவேண்டிய கேள்விக்கணைகளை தொடுக்கலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

எதுக்கு இப்ப வந்து வாங்கிக்கட்டப்போறார்?

ஆனாலும் அவரது இந்த நிலைப்பாட்டுக்கான விளக்கங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

கேள்வி

நாம் அறிந்தவரை எந்தவொரு நாட்டிலும் பேச்சுவார்த்தை குழுவினர் இறுதியில் கூட்டாகவோ அல்லது தனியாகவோ அன்றைய பேச்சுவார்த்தை முடிவுகளை அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். ஸ்ரீ லங்கா அரசோ தமிழ் கூட்டமைப்போ ஏன் இவ்வாறான அறிக்கை எதனையும் விடுவதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

அவருக்கு உண்மையாகவே உடம்புக்கு சுகமில்லையா அல்லது உங்கள் கேள்விகளை எதிர் கொள்ள திரணியில்லையா?

Link to comment
Share on other sites

கேள்வி:

நாம் அறிந்தவரை எந்தவொரு நாட்டிலும் பேச்சுவார்த்தை குழுவினர் இறுதியில் கூட்டாகவோ அல்லது தனியாகவோ அன்றைய பேச்சுவார்த்தை முடிவுகளை அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். ஸ்ரீ லங்கா அரசோ தமிழ் கூட்டமைப்போ ஏன் இவ்வாறான அறிக்கை எதனையும் விடுவதில்லை?

இலங்கை அரசு எதற்கும் இதுவரையில் உடன் படவில்லை. அதை கூட்டமைப்பு வெளியில் சொல்லியிருக்கிறது.

அதற்கு மேல் கூட்டமைப்பு எதையாவது வெளியில் சொல்வதாயின் அது இரகசிய பேச்சுவார்த்தைகள் அல்லாமல் பகிரங்க சவால்களாகத்தான் போய் முடியும்.

பகிரங்க சவால்கள், தமிழர் தரப்பிலிருந்து இன்னொரு ஆயுதப்போராட்டத்திற்கு தயாரான பின்பே விடப்படவேண்டும். ஆயுதப் போராட்டமா அல்லது ஐ.நா வாக்கெடுப்பா என்பதை தமிழர் பொறுத்திருந்து முடிவு எடுக்க வேண்டும்.

கூட்டமைப்பு 65 வருடங்களில் சாத்தியமாகாத பேச்சுவார்த்தையின் மூலமான தீர்வை செய்து முடிக்கும் என்று எதிர்பார்ப்பது கனவு மட்டுமே. அரசாங்கம் சங்கட சூழ்நிலையைக்கண்டால் உடன் படிக்கை ஒன்றை எழுதிவிட்டு இனக்கலவரத்தை தூண்டி அதை அழித்துவிடும். இதையேதான் அரசு சென்றமாத ஐ.நா. பிரேரணையின் போதும் முயற்சித்தது. எனவே கூட்டமைப்பின் தீர்வு எந்த விதத்திலும் நிரந்தர தீர்வாக முடியாது. கூட்டமைப்பு இரகசியங்களை வெளியில் சொல்லி, தான் தான் பேச்சுவார்த்தைகளை குழப்பியதாக பழியை வாங்குவதால் ஒரு முன்னேற்றமும் வராது.

இதை பேச்சுவார்த்தைக்கு அனுசரனையான நாடுகள் விரும்பமாட்டா. அனுசரனை நாடுகளுக்கு உள்ளே கிடைக்கும் முன்னேற்றங்கள் பற்றி நன்கு தெரியும். அமெரிக்கா நடைமுறைப்படுத்தபடப் போவதில்லை என்ற பிரேரணையை நிறைவேற்றிவிட்டு காவல் இருக்கிறது. அமெரிக்காவின் அடுத்த படி நடவடிக்கைகள் கூட தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அம்சங்களை கொண்டிருக்குமா அல்லது இப்படி ஏகாந்தத்தில் தான் சஞ்சரிக்குமா என்பது தெரியாது.

அமெரிக்கா "ஒற்றைநாட்டு" தீர்வை மனதில் வைத்து, இலங்கை அரசை விழுத்தி, தீர்வை கொண்டுவர காய்களை நகர்த்துகிறது என்று வைத்தால், அது பர்மிய அர்சாங்கத்தில் அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றியை இலங்கையிலும் சோதித்து பார்க்கிறது என்று கொள்ளலாம். ஆனால் இங்கே நிலமை வேறு.

இலங்கையின் சர்வாதிகாரம் இலங்கை மக்கள் விளிப்பாக இருந்து தங்களால் தமக்கு ஏற்படுத்தி கொள்ளப்பட்ட பாதுகாப்புக் கவசம். அதாவது சர்வாதிகாரம் அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது. சிங்கள மக்களின் பரம விரோதிகளான தமிழரை எதிர்த்துப் போராட அவர்களால் அரசுக்கு திரும்பத் திரும்ப வழங்கப்பட்டஆணை (mandate)தான் இலங்கையின் சர்வாதிகார சூழ்நிலை . இதையேதான் D.S. சோல்பரியிடம் வாதாடி கேட்டு வெற்றி பெற்றார். இதை பண்டாரநாயக்கா, டட்லி, சிறிமா, J.R., பிறேமதாசா, சந்திரிக்கா, மகிந்தா வரை படிப்படியாக, அதிகாரங்கள் தேவையானபோது, மக்களிடம் சென்று, கேட்டுப்பெற்று அரசை பலப்படுத்தினார்கள். இங்கே இராணுவப் புரட்சியால் சர்வாதிக்காரம் திணிக்கப் படவில்லை. இந்த ஜனநாயக சர்வாதிகாரத்தை J.V.P எதிர்த்து பலதவைகள், ஆயுதத்தாலும் வாக்கெடுப்பாலும், தோல்வி கண்டது. அதாவது இலங்கை என்ற அரசியல் அமைப்புக்குள், சிங்கள மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அரசு கடமைப் பட்டிருக்கிறது.

சோல்பரி அரசியல் அமைப்பிலிருந்த சிறப்பம்சம் இங்கிலாந்து சுபிறீம் கோடு இலங்கை அரசியல் அமைப்பின் மீது எப்போதும் தான் தீர்வு வழங்கத்தக்க பலத்தை தன்னிடம் கையடக்க படுத்தியிருந்தது. அப்படி ஒரு பாதுகாப்பு இனி எந்த சட்டத்திலும் வரப்போவதில்லை. இருந்தும் அதுவே நமக்கு பாதுகாப்பு வழங்க தவ்றிவிட்டது.

எனவே ஒற்றை நாடென்ற பேச்சு வார்த்தைகளிலிருந்து வரும் தீர்வு 65 வருடங்களிலிருந்து வந்த தீர்வை விட மாறுதலாக இருக்க முடியாது. ஒற்றை நாட்டுக்கு மேல் எந்த பேச்சுவார்த்தையின் தீர்வும் சிங்கள அரசாங்கங்களிடம் இருந்து வராது. ஆபிரகாம் லிங்கன் சிங்கள மக்களிடம் பிறக்க முடியாது.

எப்படி இதை சோல்பரி விளங்கத்தவறினாரோ அதே போல்த்தான் அமெரிக்காவின் தற்போதைய கொள்கைகளுக்கு வழி வகுத்த பிரபல ராஜதந்திரி ரொபேட் பிளேக்கும் இதை விளங்கத்தவறி, அமெரிக்காவின் இலங்கை சம்பந்தமான கொள்கைகளை நெறிப்படுத்திவிட்டார். இதனால் ஏற்பட்ட நிலைமைகளை வைத்து நாம் அமெரிக்காவும், மேற்குநாடுகளும் கூட்டமைப்பை தூண்டி பேச்சு வார்த்தைகளை நடத்தி தீர்வைக்கொண்டுவரும் என்று எதிர் பார்க்கிறோம். இந்த எதிர் பார்ப்பிலிருந்து கூட்டமைப்பின் மீது சரமாரியான கேள்விகள் எழும். இவை பேச்சுவார்த்தையின் பல படிகளிலும் பல கோணங்களிலுமிருந்து வரும். ஆனால் கூட்டு மொத்தமாக இவைகளின் பொருள் ஒன்றுதான்; அதாவது மலடியைப் பிடித்து பிள்ளை பெறு என்று துன்புறுத்துவதுதான்.(யாழ் நிர்வாகம் இந்த சொல்வடையை வெட்டாது என்று நம்புகிறேன்)

தீர்வு பேச்சுவார்த்தைகள் மூலம் வரும் என்று நம்பாத தாயக மக்கள் நீதியைக் கோரியே கூட்டமைப்புக்கு வாக்களித்தார். அதாவது கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்கள் சர்வதேசத்திடம் போர்குற்ற விசாரணையைக் கேட்டார்கள்

கூட்டமைப்பை சாராமல் புலம்பெயர் தமிழர் செய்யத்தக்கது போர்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வைப்பது. இதை இந்தியா விரும்பாவிட்டாலும் அமெரிக்கா(ஒபாமா அரசு) ஆதரிக்கிற சந்தர்ப்பம் இருக்கிறது. சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டால், இது ஒரு தீர்வுக்கு வழி வகுக்கும்.

போர்க்குற்ற விசாரணையில் அரசுகள் கடைசியிலும், NGOக்கல் தான் முதலிலும் பங்கு பற்றும். (அத்தாவது ஊரில் இருக்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மாதிரி - ஆரம்பத்தில் சிறிதளவு பெற்ரோல் தெளித்து "ஸ்ராட்" போட்டால், இயங்கத்தொடங்கியவுடன் மண்ணெண்னெயில் தொடர்ந்து ஒடி காரியத்தை முடிக்கும் - ஆரம்பத்திற்கு NGOக்கள் வேண்டும்) இதை விளங்கி தமிழர்கள் எல்லோரும் இந்த தொண்டு நிறுவனகளுடன் தொடர்பு வைத்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

மெல்பேர்னில் எங்கட ஆட்கள் கேட்ட கேள்வியிலேயே வைத்த கலக்க தொடங்கி இருக்கும், சிட்னிக்கு வந்து சந்திப்பு நடத்தினால் ....... அசிங்கமாக போய்விடும் அதனாலேயே வரவில்லை என்று நினைக்கின்றேன். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை)

recipe-chutney-bengal-gram-coconut-chutney.jpg

தோழர் சிக்கல் கிட்னியிலா.. அல்லது தேங்காய் சட்னியிலா... என தெளிவாக விசாரித்தீர்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு உண்மையாகவே உடம்புக்கு சுகமில்லையா அல்லது உங்கள் கேள்விகளை எதிர் கொள்ள திரணியில்லையா?

உண்மையில் சுகமில்லை. அவரைப் பரிசோதித்த வைத்தியரை எல்லோருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

Reference : http://www.padalay.com/

அவுஸ்ரெலியா மெல்பேணில் நடந்த கூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு! பற்றிய பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@யோக்கர் அவர்களே,

என் பதிவுகளை பகிரும்போது தயவு செய்து ஒரு மடல் அனுப்பி அனுமதி கேட்டால் நன்றாக இருக்கும். இதை நானே முறையாக யாழ் களத்தில் பகிர்வதாக இருந்தேன். பரவாயில்லை.

நன்றி,

ஜேகே

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஜேகே அவர்களே, ஒரு ஆர்வக்கோளரில இங்க பதிந்துவிட்டேன் !!!

உங்கள் பதிவுக்கு தொடுப்பாக மாற்றிவிடுகிறேன்.

உங்கள் பதிவுக்கு காப்புரிமையபோடுங்கோ !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவாயில்லை ... பகிர்வதில் பிரச்சனையில்லை .. ஆனால் எனக்கு தெரியாமல் போனால், விமர்சனங்களுக்கு பதிலளிக்கமுடியாது இல்லையா? அதனால் தான்.

Link to comment
Share on other sites

ஜேகே,

உங்களது வலைப்பதிவில் காப்புரிமை பற்றி எதுவும் இல்லை. உங்களது பதிவுகளை ஏனைய இணையத் தளங்களில் வெளியாகும் பதிவுகள் போலவே யாழ் உறுப்பினர்களால் யாழில் பதிய முடியும். உங்களது வலைப்பதிவில் வெளியாகும்போது உடனடியாக இங்கு இணைத்து விட்டீர்களானால் இந்தப் பிரச்சனை வராது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இணையவன் ... காப்புரிமை பற்றி குறிப்பிடுகிறேன். தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.