Jump to content

மத்திய அரசு போடும் முட்டைக்கட்டைகளை கூட்டுறவு மூலம் இணைந்து உடைப்போம்! முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு


Recommended Posts

fgaddd.jpg

 

மத்திய அரசு எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு பலவித நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் கூட்டுறவே அத்தடைகளை உடைத்தெறிந்து முன்னேற வழிவகுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண சபையின் கீழான கூட்டுறவு சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-
 
மத்திய அரசாங்கத்திற்கும் எமக்கும் சில விடயங்களில் ஒருங்கிணைந்த அதிகாரங்கள் இருப்பினும் உள்ளூராட்சி, கூட்டுறவு பற்றிய விடயங்களில் எமக்குப் போதிய அளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதை நாம் மறத்தலாகாது. போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் எம்மக்களுக்கு பல வித சேவைகளை கூட்டுறவு மூலம் நாங்கள் வழங்க முடியும் என்பதையும் நாம் உணர்ந்திருக்க வேண்டும். உண்மையில் மத்திய அரசாங்கம் எமது செயற்பாடுகளை முடக்குவதற்குப் பலவித நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் கூட்டுறவே எமக்கு அத்தடைகளை உடைத்தெறிந்து முன்னேற வழிவகுக்கும் தன்மை வாய்ந்தது என்பது எனது கருத்தாகும். உலக மகா யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் மக்கள் வாழ்க்கையின் சீரமைப்புக்கு வழிவகுத்தது கூட்டுறவே. ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதற்கு உதாரணம். ஆபிரிக்காவிலும் அண்மையில் சமாதானம் ஏற்பட்ட உடன் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க அவர்கள் சுவீகரித்தது கூட்டுறவு முறையையே. தென்னாபிரிக்கா, எரித்திரியா, ஸாம்பியா, மலாவி, தன்சானியா போன்ற ஆபிரிக்க நாடுகள் இதற்கு உதாரணம்.
 
எம்மைப் பொறுத்த வரையில் போருக்கு முன்னர் வடமாகாணப் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய ஊன்றுகோலாக மிளிர்ந்தது கூட்டுறவே என்று கூறலாம். உற்பத்தியாளர்களிடம் இருந்து வேளாண்மைப் பொருட்களையும் வேறு பொருட்களையும் வாங்கி நியாயமான விலையில் அவற்றை சந்தைப்படுத்த அவர்கள் உதவிபுரிந்து வந்தார்கள். போர் அவற்றை எல்லாம் சின்னாபின்னப்படுத்திவிட்டது. இப்பொழுது மீண்டும் கூட்டுறவுத் துறை மீளெழுந்து பணிபுரிய நாங்கள் யாவரும் ஒத்துழைக்க வேண்டும். எம் மத்தியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள், மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள், சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை, தென்னை சம்பந்தமான கூட்டுறவுச் சங்கங்கள் என்று பலவித கூட்டுறவுச் சங்கங்கள் தற்பொழுதும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொழுது அவை சிறிது சிறிதாகத் தமது பணிகளை ஆற்ற முன்வந்துள்ளன. சிற்சில கூட்டுறவுச் சங்கங்களில் காணப்படும் குறைபாடுகள் பல எமக்கு உணர்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் பல சங்கங்கள் அரசியல் ரீதியாகச் செயற்பட வேண்டியிருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
http://malarum.com/article/tam/2014/07/30/4086/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html#sthash.P6JfZHi9.dpuf
 
 
Link to comment
Share on other sites

அரசினதோ மாகாணசபையினதோ பிரதேச சபையினதோ உதவியின்றி புலம்பெயர்ந்த ஊரவரின் உதவியுடன் ஒரு கிராமக்தையும் சமூகத்தையும் எவ்வாறு உன்னதமான நிலைக்கு உயரத்த முடியும என்பதற்கு உதாரணத்தை இந்த இணையதளத்தில் பார்வையிடவும். http://www.marumalarchy.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசினதோ மாகாணசபையினதோ பிரதேச சபையினதோ உதவியின்றி புலம்பெயர்ந்த ஊரவரின் உதவியுடன் ஒரு கிராமக்தையும் சமூகத்தையும் எவ்வாறு உன்னதமான நிலைக்கு உயரத்த முடியும என்பதற்கு உதாரணத்தை இந்த இணையதளத்தில் பார்வையிடவும். http://www.marumalarchy.org/

 

மிகவும் நல்ல விடையம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன "முட்டைக்கட்டைகள்".. கேள்விப்பட்டதே இல்லையே..???! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம கட்டைகள் போடுற முட்டையாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.