Jump to content

மாதகலில் 13 கிலோ கேரள கஞ்சா வவுனியா பொலிஸாரால் மீட்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாதகலில் 13 கிலோ கேரள கஞ்சா வவுனியா பொலிஸாரால் மீட்பு! photo.png 

[Wednesday 2014-07-30 19:00]
mathakal-kanja-300714-seithy-150.jpg

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ கேரள கஞ்சாவை தாம் நேற்று மாலை மீட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சாவை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்றுபேரையும் தாம் கைதுசெய்துள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். வவுனியா பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் 2.5 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

  

அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கஞ்சா மறைத்துவைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்தது என்றும், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபயவர்த்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் யாழ்ப்பாணம் வந்து இளவாலை பொலிஸாரின் அனுமதியுடன் குறித்த வீட்டில் தேடுதல் நடத்தினர் என்றும், இதன்போது 13 கிலோ கிராம் கேரள கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்தமை தெரியவந்த நிலையில் அவற்றை மீட்டதுடன் வீட்டில் இருந்த மூவரையும் தாம் கைது செய்தனர் என்றும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரும் வவுனியா பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

mathakal-kanja-300714-seithy-001.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=114081&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.