Jump to content

ஒலிபெருக்கிப் பாவனைக்கு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

aedd5be3733fddf1ea9362fef2e0c0cb.jpg

வடமாகாணத்தில் ஒலிபெருக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு புதிய நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. 

அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒலிபெருக்கியினைப் பயன்படுத்துபவர்கள் ஏனையோரது உடல் உள மற்றும் கல்வி நடவடிக்கையினைப் பாதிக்காத வகையில் குறிக்கப்பட்ட நேர அட்டவணைகளைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. 

அண்மைக்காலமாக ஒலிபெருக்கி பாவனை அதிகரித்துள்ள நிலையில் ஒலிபெருக்கிப் பாவனையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று ஏ 9 வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்துரையாடலை அடுத்தே விவசாய அமைச்சர் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் வடக்கு மாகாணத்தில் புதிய நடைமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிக்கு உட்பட்ட பகுதியில் ஒலிபெருக்கி பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

அதுபோல வெள்ளி , சனி ஆகிய தினங்களில் இரவு ஒரு மணி வரை பயன்படுத்த முடியும் என்றும் ஞாயிறுக்கிழமை இரவு 12.30 மணி வரை ஒலிபெருக்கியை பயன்படுத்தலாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் அனுமதி வழங்கப்பட்ட நிகழ்வுகளில் குறித்த இடத்திற்கு மாத்திரம் ஒலி பெருக்கிப் பெட்டியை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. 

மேலும் திருவிழா காலங்களில் ஆலய வீதிகளில் ஒலிபெருக்கி அமைப்பிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதத் தடை என தவறான கருத்தைக் கொண்டிருக்க வேண்டாம். இது ஒட்டுமொத்தமானவர்களது உடல் , உளத்திலும் தாக்கம் ஏற்படுத்துகின்றது. எனவே இதனைக் குறைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் ஐஸ்கிறீம் வான், அதிஸ்டலாப சீட்டிலுப்பு வாகனம், விளம்பர வாகனம் தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்பட்டது. அவர்களையும் அழைத்துப் பேசி மெல்லிசைப் பாடல்களை பாடவிடுவதன் மூலம் சத்தத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களுக்கு இன்னும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.  இந்த கலந்துரையாடலில் மதகுருமார், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சின்  செயலாளர், பொலிஸார் , உள்ளூராட்சி திணைக்களத்தினர் , கலாச்சார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


 

கலந்துரையாடலில் மதகுருமார், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சின்  செயலாளர், பொலிஸார் , உள்ளூராட்சி திணைக்களத்தினர் , கலாச்சார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 

DSCF1492%20copy.jpg

 

DSCF1499%20copy.jpg

 

DSCF1512%20copy.jpg

http://www.onlineuthayan.com/News_More.php?id=705773273630882473

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு இரவா ஒப்பாரி  (பாஙுகு) ஒப்பாரி.. போடுறவை என்ன செய்யப்போகினம்....அதுக்கும் புலியைச் சாட்டப்போகினம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒலிபெருக்கி சத்தம் கேட்டால்தானே திருவிழா திருவிழா போல இருக்கும்.
 
ஒலிபெருக்கி வைத்து பிழைப்பு நடத்துபவர்களின் பிழைப்பு என்னவாகும்  ?  :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

கலந்துரையாடலில் மதகுருமார், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சின்  செயலாளர், பொலிஸார் , உள்ளூராட்சி திணைக்களத்தினர் , கலாச்சார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

DSCF1492%20copy.jpg

 

 

 

DSCF1512%20copy.jpg

 

சைவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய.... மதகுருமார்கள் மட்டும் தான் கலந்து கொண்டுள்ளார்கள்.

நாக விகாரையிலிருந்து.... பிரித் ஓதுகின்ற பிக்குமார் ஒருவரையும் காணவில்லை.

அல்லது அவர்களை இந்தச் சட்டம், கட்டுப் படுத்தாது என்று.... ஏற்கெனவே முடிவெடுத்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடந்தால் பாரட்ட வேணும். அதை யார் செய்தாலும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.