Jump to content

சென்னை - சிங்காரமா...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2hhooeg.jpg

 

சென்னை...

 

நடு ரோட்டில் எச்சில் துப்பும்

நவ நாகரிக சமூகமும்..

 

சட்டசபைக் குறிப்பிலிருந்து

நீக்கப்பட்ட வார்த்தைகளும்...

 

சேலை கட்டியிருந்தால்

போதுமென உரசிப்பார்க்கும்

பத்தரைமாற்றுத் தங்கங்களும்...

 

பணம் எந்த வழியில்

வந்தால் என்ன

என் கைக்கு வந்தால் போதும்

என நினைக்கும் முதலைகளும்..

நிறைந்த அழகான ஊர்...

 

சிங்காரச் சென்னை...

 

(நன்றி: நிலாமகள்)

 

 

இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? :)

 

.

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை...

-----

சேலை கட்டியிருந்தால்

போதுமென உரசிப்பார்க்கும்

பத்தரைமாற்றுத் தங்கங்களும்...

-----

இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? :)

 

 

சேலை கட்டியிருப்பவரையும், பஞ்சாபி போட்டிருப்பரையும்.... உரசிப் பார்ப்பது சென்னையில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் நடப்பதை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது.

பல பெண் தெய்வங்களை கொண்ட மதத்தை பின் பற்றும் நாட்டில், இதுவும் நடக்க என்ன காரணம் என்று.... யோசிப்பதுண்டு.

-------

 

சென்னையின் மறுபுற சிங்காரத்தையும்....

நீங்கள் கட்டணம் வசூலிக்காமல் காட்டினால்,

நாங்கள் பார்க்க.... ரெடி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் மறுபுற சிங்காரத்தையும்....

நீங்கள் கட்டணம் வசூலிக்காமல் காட்டினால்,

நாங்கள் பார்க்க.... ரெடி. :D

 

நன்றி, தமிழ்சிறி.

 

கட்டணம் ஏதுமில்லை..

பார்த்தால் மனம் வசப்படும்..

இப்படி வசை பாடாது..! :lol:

 

vpd8qp.jpg

Link to comment
Share on other sites

என் சகோதரி சென்னையில் தான் வசிக்கின்றார். தன் அனுபவத்தில் பெண்களுக்கு மரியாதையும், அன்பையும் வழங்கும் இடங்களில் சென்னை தான் உசத்தி என்கின்றார்.  தள்ளுவண்டியில் மரக்கறி விற்கும் சின்ன வியாபாரியில் இருந்து, பெரிய ஆட்கள் வரைக்கும் பெண் என்பதால் மரியாதை கொடுப்பார்களாம்.

 

 


அழகான படங்களை; முக்கியமாக இயற்கை அழகுகளை இணையுங்கள் ராசவன்னியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெரினா கடற்கரையில்...... எனது அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சியுடன் ஒரு மாலைப் பொழுதை கழித்தோம்.
திடீரென்று... கன நேரம் அப்பாவை காணவில்லை.
கொஞ்சம் யோசித்துக்கொண்டிருந்த போது....
அப்பா.... சிரித்துக் கொண்டு, கடுதாசியால் சுற்றிய ஒரு பொட்டலத்தை காட்டினார்.

நாங்கள் அதற்குள்... சுண்டல் மாதிரி, ஏதாவது ஒரு சாப்பாட்டுச் சாமான் என நினைத்தோம்.
ஆனால்....அதற்குள் இருந்தது, ஒரு வலம்புரிச் சங்கு.
அதன் விலையை.. கேட்ட போது அவர் சொல்ல மறுத்து விட்டார்.
அந்தச் சங்கு, பல நாடுகள் போய்... இப்போது, எமது சாமி அறையில் உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

COOUM__5_102969f.jpg


கூவம் நாற்றம் மட்டும் இல்லை என்றால் அருமையான இடம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களை; முக்கியமாக இயற்கை அழகுகளை இணையுங்கள் ராசவன்னியன்!

 

நிச்சயமாக.

 

தகவலுக்கு நன்றி.

 

மெரினா கடற்கரையில்...... எனது அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சியுடன் ஒரு மாலைப் பொழுதை கழித்தோம்..

 

So,சென்னை உங்களுக்கு புதிதல்ல... :)

 

கூவம் நாற்றம் மட்டும் இல்லை என்றால் அருமையான இடம் 

 

ஆங்கிலேயர்கள் ஆண்டவரை கூவம் என்பது அழகான நதி. 

அதை நாறடித்தது திருவாளர் சென்னைவாசிகளும், அரசியல்வியாதிகளுமே!

 

5arrld.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

So,சென்னை உங்களுக்கு புதிதல்ல... :)

 

 

25 வருடத்துக்கு முந்திய சென்னை வேறு. இப்போதிருக்கும் சென்னை வேறு.

எக்மோர் ரயில்வே நிலையத்துக்கு முன் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம். தம்பி.... கோயம்புத்தூரில்  படித்துக் கொண்டிருந்தார்.

விடுமுறைக்கு, ஊருக்கு... வரும் போது, ஸ்ரீலங்கா ராணுவம் உலங்கு வானுர்தியில் இருந்து சுட்டு, நல்லூர் சிவன் கோவில் வாசலில் இறந்து விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...விடுமுறைக்கு, ஊருக்கு... வரும் போது, ஸ்ரீலங்கா ராணுவம் உலங்கு வானுர்தியில் இருந்து சுட்டு, நல்லூர் சிவன் கோவில் வாசலில் இறந்து விட்டார்.

 

ஓ..!  வருந்துகிறேன்.

இங்கே யாழில், பலருக்கும் பின்னால் கனதியான சோகம் பொதிந்துள்ளது போலும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழில்.....
"நைனா... நீ, நாஷ்டா சாப்புட்டியா...?"
என்றால்... என்ன அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழில்.....

"நைனா... நீ, நாஷ்டா சாப்புட்டியா...?"

என்றால்... என்ன அர்த்தம்.

 

தமிழுசிறி நைனா, உன்னோட மெட்ராஸு தமிழு ஷோக்கா கீதுபா.. :)

இப்பால இஸ்கூலுல கத்துக்கினியா?

 

ஐயே.. மெய்யாலுமா 'நாஷ்டா' மீனிங்கு தெராதா ?

இப்போ இன்னா டவுட்டு உனுக்கு?

"ஐயா, நீங்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டீர்களா..?" இதாம்பா மீனிங்கு!

மெட்ராஸு பாஷைல உஷாரா இரு மாமு..! இல்லன்னா

நிஜார உருவிடுவானுங்க..!!

டங்குவார் புட்டுக்கும்..!!!

 

Link to comment
Share on other sites

நான் தமிழ் நாட்டையும் அங்கு வாழும் தமிழில்,தமிழனில் விருப்பு உள்ளவர்களை மதிக்கிறேன். தமிழ் நாட்டுக்கும் வந்துள்ளேன்.அங்கு பிடிக்காத விடையங்களில் ஒன்று இந்த கூவம் ஆறு . இந்த நவீன தொழில்னுட்ப உலகில் ஏன் கூவம் ஆற்றிற்கு ஒரு தீர்வு காணமுடியாது? என்னால் ஒரு சிக்கனமான தீர்வு கொடுக்க முடியுமா? என பலதடவை நினைப்பது உண்டு. அல்லது உலக நிருவனங்களின் உதவிகள் மூலம்( ஐ. நா சுகாதார நிருவனம்) தீர்வு காணலாம் என நினைக்கிறேன்.இது ஒரு சுகாதார பிரச்சனை. எனக்குள் சில தீர்வுகள்,வழிமுறைகள் உண்டு. ஆனால் எப்படி உதவுவது? ராசவன்னியன் அவர்களே..

Link to comment
Share on other sites

லண்டனின் தேம்ஸ் ஆறுகூட முன்பு அசுத்த நீராகத்தான் இருந்ததாம். :huh: (இன்று நிலைமை பரவாயில்லை.. அவ்வளவே.. :lol: ) அரசு முயன்றால் காலப்போக்கில் சீர்செய்யலாம். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கேரளாவாக்கும் ராசவன்னியரே ???

 

ஈஸ்வரா...

 

சென்னைக்கு அருகேயும் 40 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில் கோவளம் என்ற ஊர் இருக்கப்பு.. :)

300px-MTC_white_line_bus.jpg

இந்த கோவளம் கிராமம் வரைக்கும் ஆங்கிலேயர்கள் பக்கிக்ஹாம் கால்வாய் அமைத்து படகுப் போக்குவரத்து நடைபெற்றது ஐயா. இந்த கிராமத்திற்கு சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 19G என்ற மாநகரப் பேருந்தும் செல்கிறது.

Link to comment
Share on other sites

உலகில் என்னை வசிப்பதற்கு ஒரு நகரத்தை தெரிவு செய்ய சொன்னால் சென்னை தான் எனது முதல் தெரிவு .காரணம் எனது வாழ்க்கை முறையை ஒட்டிய பல விடயங்கள் .

 

பிடிக்காத பல விடயங்களும் இல்லை என்று சொல்லவில்லை குறிப்பாக பெண்கள் பற்றிய விடயம் .இந்த விடயத்தில் நிழலியின் கருத்துடன் உடன் பாடில்லை .இந்த விடயத்தில் நாகரீகம் இலங்கையர்களுடன் அவர்களை ஒப்பிடவே முடியாது .

 

எனது மனைவி சொன்னார் தான் இரவு பஸ்சில் தாயாருடன் தஞ்சாவூர் சென்றபோது முன்னிருக்கையில் இருந்தவர் வலிய இருக்கையை பின்னுக்கு சரித்து தொடர்ந்தும் கஷ்டம் கொடுத்துக்கொண்டு வந்தாராம் .டீ குடிக்க பஸ்ஸை நிறுத்தியபோது விசயத்தை தங்களை கூட்டிக்கொண்டு போனவரிடம் சொல்ல அவர் சீட்டின் சாயும் இடத்தையே புடுங்கி எடுத்துவிட்டாராம் .(நம்ம சங்கர் - பாலு மகேந்திராவின் மனைவியின் தம்பி) 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கேரளாவாக்கும் ராசவன்னியரே ???

காரைநகரில் மட்டுமில்லை சென்னையிலும் கோவளம் என்ற பெயர் உண்டு ஈசனாரே.......
Link to comment
Share on other sites

ஈஸ்வரா...

 

சென்னைக்கு அருகேயும் 40 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில் கோவளம் என்ற ஊர் இருக்கப்பு.. :)

300px-MTC_white_line_bus.jpg

இந்த கோவளம் கிராமம் வரைக்கும் ஆங்கிலேயர்கள் பக்கிக்ஹாம் கால்வாய் அமைத்து படகுப் போக்குவரத்து நடைபெற்றது ஐயா. இந்த கிராமத்திற்கு சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 19G என்ற மாநகரப் பேருந்தும் செல்கிறது.

 

 

 

 

நீர்த் தாவரங்களையும் ( ஆகவே நன்னீர் ) படகோட்டி வைத்திருக்கும் குச்சியையும் பார்த்து கேரளாவாக்கும் என்று நினைத்துவிட்டேன். கோவளம் கடற்கரை பற்றி அறிந்திருந்தாலும் நன்னிர் டெல்டா இருப்பது தெரிந்திருக்கவில்லை. (போனதில்லை)
 
கேரள கோவளம் ஏற்கனவே அறிந்தது.
 
 
 

 

காரைநகரில் மட்டுமில்லை சென்னையிலும் கோவளம் என்ற பெயர் உண்டு ஈசனாரே.......

 

 

 

கோவல‌ம் நம்ம தாய்வழிப் பாட்டனார் பூர்வீகம். ( கேரளாக் கோவளம் அல்ல)
 
கோ ‍  - அரசன்
வலம் ‍-  ரவுண்ட்ஸ்  :D
Link to comment
Share on other sites

சென்னை 375: ஒரு முன்கதைச் சுருக்கம்

 

madras_day_2064667h.jpg

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி உருவாவதற்கு 119 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டு திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குக் கட்டுப்பட்டவராக பூந்தமல்லியின் நாயக்கரான வேங்கடகிரி இருந்தார். அவர்களின் பிடியில் இன்றைய சென்னையின் நிலம் இருந்தது.

ஒரு குடியிருப்பைக் கட்ட நிலம் தேடி கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் பிரான்ஸிஸ் டேவும் ஆண்ட்ரூ ஹோகனும் புதுச்சேரி வரை கடற்கரையில் அலைந்தனர். பெரி திம்மப்பா எனும் வணிகரின் சைகை மொழிபெயர்ப்பு உதவியோடு, மனித வாடை இல்லாத சுமார் ஐந்து கி.மீ. தூரமுள்ள கடற்கரையோர நிலம் வேங்கடகிரியிடமிருந்து வாங்கப்பட்டது. ஆங்கிலேயர் குடியிருப்பின் சுற்றுச்சுவருக்கு வெளியே கருப்பர் நகரம் உருவானது. சென்னை நகரின் முதல் குடும்பம் என்ற பெயரை பெரி திம்மப்பாவின் குடும்பம் பெற்றது. ஆக, சென்னையின் ஸ்தாபகர்களாக பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரூ ஹோகன், பெரி திம்மப்பா ஆகிய மூவரும் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டனர். ஆனால், அவர்கள் பெயரில் ஒரு தெருகூட சென்னையில் இன்னமும் இல்லை.

ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்கு உள்ளே இந்தியாவின் முதல் ஆங்கில மருத்துவமனை 1664-ல் உருவானது. பிறகு, கோட்டைக்கு வெளியே வந்தது. அதுதான் இன்றைய அரசு பொது மருத்துவமனை. 1842 முதல் இந்தியர்களுக்கும் அதில் மருத்துவம் செய்யப்பட்டது.

 

மதறாஸ் நகராட்சி

1668-ல் திருவல்லிக்கேணியை உள்வாங்கிக்கொண்ட சென்னை 1688-ல் சென்னை நகராட்சியாக (அதாவது மதறாஸ் நகராட்சி) இங்கிலாந்து அரசரால் அறிவிக்கப்பட்டது. அப்போது ஆசியாவில் எங்கும் அப்படிப்பட்ட உள்ளாட்சி முறை இல்லை. இதற்கிடையே சந்திரகிரி ராஜாவை கோல்கண்டா சுல்தான் தோற்கடித்தார். சுல்தானைப் பேரரசர் அவுரங்கசீப் தோற்கடித்தார். வென்றவர்களிடம் போய் நின்று தங்கள் சென்னை கோட்டைக்குப் பாதுகாப்பு தேடிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள்.

1701-ல் அவுரங்கசீப் படைகள் சென்னைக் கோட்டையை லேசாகத் தட்டிப்பார்த்தன. 1746-ல் பிரான்ஸ் படைகளால் கோட்டை கைப்பற்றப்பட்டது. பிற்காலத்தில் பெரும்புகழ் அடைந்த ராபர்ட் கிளைவ், சென்னை நகருக்கு வெளியே ஓடிப்போய் ஒரு கோட்டையில் ஒளிந்துகொண்டார். வடஅமெரிக்காவில் தங்களிடம் இருந்த ஒரு தீவை பிரான்ஸுக்கு விட்டுக்கொடுத்து, சென்னையை ஆங்கிலேயர்கள் 1748-ல் மீண்டும் வாங்கினார்கள்.

ஆர்க்காடு நவாப் சாந்தோம் பகுதியை ஆங்கிலேயர்களுக்குப் பரிசாக வழங்கினார். மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை போன்றவை ஆங்காங்கே தீவுகள் போன்று தனித்து இருந்த கிராமங்கள். சென்னையின் வளர்ச்சி எனும் கடல் அவற்றை இடைவெளி விடாமல் தழுவிக்கொண்டது.

1711-ல் முதல் அச்சகம் சென்னையில் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவப் பாதிரியார்களைத் தவிர யாரும் அச்சகங்களை வைத்திருக்கக் கூடாது என கிழந்திய கம்பெனியின் தடை 1840 வரை இருந்தாலும், சென்னை மாகாண ஆளுநராக இருந்த எல்லீஸ் உள்ளிட்டோரின் முன்முயற்சியால் தமிழ் நூல்கள் அச்சாகின. சென்னையில் அச்சான நூல்கள்தான் பிற்பாடு எழுந்த தமிழ் மறுமலர்ச்சியின் மையம்.

 

பஞ்சமும் போர்களும்

தென்னிந்தியாவில் 1876 முதல் 78 வரை தாதுவருசப் பஞ்சம். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சென்னையில் பஞ்சத்துக்கான நிவாரண வேலைக் கூலியாக 6 பைசாவும் அரை கிலோ தானியமும் தந்து பக்கிங்காம் கால்வாய் கட்டப்பட்டது.

முதல் உலகப் போரின்போது ஜெர்மன் கப்பல் எம்டன் சென்னையின் மீது குண்டுவீசிவிட்டு மறைந்தது. 1942-ல் இரண்டாம் உலகப் போரின் பீதி சென்னை மக்களை வெளியேற்றியது.1943-ல் ஜப்பான் விமானங்கள் நகரில் குண்டுகளை வீசின.

சென்னை கோட்டையைச் சுற்றி உருவாகியிருந்த கருப்பர் நகரம், பிரான்ஸ் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. கருப்பர் நகரம் இருந்த இடத்தைச் சுற்றி 1708-ல் ஒரு கோட்டை கட்டப்பட்டது. 1911-ல் அந்தக் கோட்டைக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் பெயர் சூட்டப்பட்டது.

சென்னை சாலையின் முதல் காரை பாரி அண்ட் கோவின் இயக்குநர் 1894-ல் ஓட்டினார். அதற்கு அடுத்த ஆண்டு ஆரம்பமான டிராம் சர்வீஸ் 1953-ம் ஆண்டு 'டாட்டா' காட்டியது. 1931-ல் முதல் மின்சார ரயில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை ஓடியது.

1901-ல் சென்னையின் மக்கள்தொகை: 5,40,000. பரப்பளவு: 70 சதுர கிலோமீட்டர். 1914-ல்தான் சென்னையில் கழிவுநீர் அமைப்புகளும் தெருவிளக்குகளும் குடிநீர் அமைப்புகளும் உருவாகின. ஆங்கிலேயர்களின் காலத்திய அந்த அமைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை எடுக்கத்தான் நவீன இயந்திரங்களும் சில நேரங்களில் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி மனிதர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில், 1917-ல் முதல் விமானம் பறந்தது. 1923-ல் 80 சதுர கிலோ மீட்டராக வளர்ந்தது. 1925-ல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ரிப்பன் மாளிகையிலிருந்து வானொலி ஒலிபரப்பு 1930-ல் தொடங்கியது.

1946-ல் சைதாப்பேட்டை நகராட்சி உட்பட வேளச்சேரி முதல் அயனாவரம் வரை பல பகுதிகள் சென்னையுடன் இணைந்தன. 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் எனும் சென்னை தேர்வானது. 1950-ல் 129 சதுர கிலோ மீட்டராக சென்னை விரிந்தது. 1969-ல் மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996-ல் மெட்ராஸ் மாநகரம் சென்னை என பெயர் மாற்றப்பட்டது. 2011-ல் 9 நகரங்கள், 8 பேரூராட்சிகள், 25 பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இன்றைய பெருநகரமாக சென்னை விரிவடைந்துள்ளது.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-375-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6327962.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.