Jump to content

சூப்பர் சிங்கர் யூனியர் 4


Recommended Posts

சூப்பர் சிங்கர் யூனியர் -4  ல் என்னை கவர்ந்த சிறுவர்களும் அவர்களது பாடல்களும்

 

https://www.youtube.com/watch?v=OM6n90vEw7I

http://www.youtube.com/watch?v=m3G9Yts6c7I

http://www.youtube.com/watch?v=PIxKKATJjaA

https://www.youtube.com/watch?v=93CWWWS0ppY

http://www.youtube.com/watch?v=WPqYDFwd5I8

 

http://www.youtube.com/watch?v=zDcGNc_VVrc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சிங்கர் யூனியர் -4  ல் என்னை கவர்ந்த சிறுவர்களும் அவர்களது பாடல்களும்

 

http://www.youtube.com/watch?v=m3G9Yts6c7I

 

பிரவஸ்தியை பார்க்க எனக்கு ஒராள் ஞாபகம் வருகுது அக்கா.. :)

Link to comment
Share on other sites

ஒரே விதமான தொடர்கள், மீண்டும் மீண்டும் பார்த்து பழகிப்போன காட்சிகள்,  அழுகைகள், மிகைப்படுத்தல்கள், சொல்லி சொல்லி தேய்ந்து போன பாராட்டுச் சொற்களும் நடுவர்களின் பாவனைகளும், பெற்றோர்களின் பழகிப் போன ஏக்கங்களும் மகிழ்ச்சிகளும் என்று சுப்பர் சிங்கர் நிகழ்வுகள் அனைத்தும் ஒரே மாதிரியே இருக்கின்றன என்பதால் இந்த முறை இதனை பார்க்கவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்ப்பதை நிப்பாட்டலாமா என்று யோசிக்கிறேன்.அலட்டல் தாங்கமுடியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் பார்த்து, அதன் பதிவுகளுக்கேற்ப சிலநேரம் பார்த்ததுண்டு.

இன்னுமா ஜவ்வாக இழுக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

ஒரே விதமான தொடர்கள், மீண்டும் மீண்டும் பார்த்து பழகிப்போன காட்சிகள்,  அழுகைகள், மிகைப்படுத்தல்கள், சொல்லி சொல்லி தேய்ந்து போன பாராட்டுச் சொற்களும் நடுவர்களின் பாவனைகளும், பெற்றோர்களின் பழகிப் போன ஏக்கங்களும் மகிழ்ச்சிகளும் என்று சுப்பர் சிங்கர் நிகழ்வுகள் அனைத்தும் ஒரே மாதிரியே இருக்கின்றன என்பதால் இந்த முறை இதனை பார்க்கவில்லை.

 

நிகழ்ச்சிகளை தயாரிக்கும் நிறுவனங்களின் செயல்கள் வெறுப்பை தந்தாலும் இந்த பிஞ்சுக்குழந்தைகளின் இசைத்திறமையை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. இந்த வயதில் எவ்வளவு அழகாக பாட்டை மனப்பாடம் செய்து இசை ஞானத்தோடு பாடுகின்றார்கள். சிறுவர்களின் இனிமையான  பாடல்களுக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
Thoughts on Airtel Super Singer Junior (SSJ3) Finals
 

 

நான் சிறுவனாக வளர்ந்த ஊரில் கோரக்கன் கோயில் என்றொன்றுண்டு. ஆசையாக வளர்த்த கடாவை அங்கு கொண்டு வந்து கோரக்க சித்தருக்கு காணிக்கையாக வெட்டுவார்கள். பார்க்க பரிதாபமாக இருக்கும். ஏனோ, இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 குழந்தைகளைப் பார்க்கும் போது இது நினைவிற்கு வருகிறது. பாருங்களேன், பிரகதி, சுகன்யா இருவரும் முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர்கள். சுருதி சுத்தமாகப் பாடக்கூடியவர்கள். ஆனால் நேற்று சென்னையின் ஏதோவொரு மாலில் கட்டுக்கடங்காத ஒரு கூட்டத்தின் முன்னிலையில், ‘பாடு’ என்று சொன்னபோது, இத்தனை நாள் கற்ற வித்தையும் காற்றில் பஞ்சாய் பறக்க. ஒருவருக்கு மேல் ஒருவர் என்று இத்தனை நாள் மெருகேற்றி வந்த இசை, ‘இவளுக்கு நான் என்ன குறைச்சல்’ எனும்படி படுமோசமாகப் போனது. நேற்றுப்பாடிய ஐவரில், யாழினி மட்டும்தான் ஏதோ சுமாராகப்பாடினார். ஏன் இந்த பலிகடா விளையாட்டு? பாவம்! இவர்கள் ஒரு contained environmentல் தங்களுக்குள் சிரித்து மகிழ்ந்து கற்றுத்தேறி, தேர்ந்த மூன்று நடுவர்களின் கூர்மையான பார்வையிலும், ஒரு தேர்ந்த குரல் விற்பன்னரின் கண்காணிப்பிலும் பாட்டுப்பாடி திறமை வளர்த்துவிட்டு, இவையெல்லாம் எதற்கு என்றால், இசை ஞானம் அதிகமற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இராகம், பேதமற்ற வெறும் ‘குத்துப்பாட்டு’ பாடத்தான் என்றால், something is terribly wrong! என்று எண்ணத்தோன்றுகிறது. சென்ற பருவத்திலும் இப்படித்தான் சத்ய பிரகாஷ், பூஜா, சந்தோஷ், ஸ்ரீநிவாஸ் இவர்களெல்லாம் படிப்படியாய் முன்னேறி வந்த பின் திடீரென்று பொதுமக்களின் ஓட்டுக்கு மன்றாடு என்று force செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. They miserably failed! 
 
இசையின் நுணுக்கமறிந்த ஒரு சூழலில் உருவாக்கப்பட்ட ஒரு தேர்வை கட்டக்கடைசியில் ஒன்றுமே அறியாத பொதுமக்கள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டிய கட்டாயமென்ன? புரியவே இல்லை!
 
208157_191333644335543_965768616_n.jpg
 
பொதுமக்களுக்கான இசை, எனவே பொதுமக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமென்று சொல்லமுடியாது. ஏனெனில் அந்த மெல்லிசையை அவர்களுக்கு அளிக்கும் composers களுக்கு நல்ல இசை ஞானம் உண்டு. இளையராஜா தன்னை ‘இசை ஞானி’ என்று சொல்லிக்கொள்கிறார். ஏ.ஆர்.ரகுமானுக்கு கர்நாடக, ஹிந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் நன்றாகத்தெரியும். அவர்களோடு பணிபுரியத்தான் இக்குழந்தைகள் தயார்படுத்தப்படுகின்றனர். பொது மக்களுக்கான இசை மேடையில் பாட இவர்கள் தயார்படுத்தப்படவில்லை.
 
மக்கள் ஓட்டுப்போடும் போது ஏர்டெல் கம்பெனிக்கு வருமானம் வருகிறது! என்று சொல்லலாம். உண்மை என்னவெனில், ஒரு வருடமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் ஏர்டெல் இந்த ஒரு நாள் ஓட்டு தரும் வருமானத்தை நம்பி செயல்படவில்லை. 10 லட்சம் ஓட்டு என்றால், அனைத்தும் ஏர்டெல் சம்பாத்யம் என்று கொள்ள முடியாது. இணையம் மற்றும் வேறு, வேறு கம்பெனிகளுக்கு வருமானம் பிரிக்கப்படுகிறது என்பதே உண்மை. மேலும் விஜய் டிவி இவ்வளவு மூலதனம் போட்டு இதை நடத்துவதற்குக்காரணம் இந்நிகழ்ச்சியின் பாப்புலாரிடியை வைத்து வரும் விளம்பர வருமானம் என்பதைக் குறிவைத்தே! எனவே it makes no sense to throw the final performance to public voting!
 
இப்படி பொதுமக்கள் பார்வைக்கு என்று வருவதால் சின்னக்குழந்தைகளுக்கு ’மேக் அப்’ அது இதுவென்று போட்டு, ‘பிஞ்சிலே பழுக்க வைக்க முயல்கிறார்கள். பாவம், கௌதம் எனும் கிராமத்துச் சிறுவனின் அழகே அவனது தமிழ்ப் பண்பாடுதான். அவனது கூச்சம், மரியாதை, வெகுளித்தனம் இவை கூடிய திறமை இதுதான் அவன் முத்திரை. அவனை மாலில் வைத்து அங்குள்ள இளம் பெண்களுக்கு பிளையிங் கிஸ் கொடு என்று பாவனா சொல்லிப்பழக்குவது கொஞ்சம் வக்கிரமாகப்பட்டது! இதே போல்தான், கட்டுபட்டியான முஸ்லிம் குடும்பத்திலிருந்து வரும் ஆஜீத்தை இப்போது காதலிக்கு எப்படி propose செய்வது என்று பழக்கப்படுத்துவது குட்டிக்குழந்தைகளின் மனதில் வக்கிர எண்ணங்களைப் புகுத்துவது போல் படுகிறது. ஆஜீத்தின் அம்மா, கல்யாணம் ஆகும் சில கணங்களுக்கு முன்புவரை தன் கணவன் யாரென்று தெரியாமல்தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். ஒரு தலைமுறையில் இத்தனை மாற்றமா? இது எதற்காக? விஜய் டிவி இதை ஏன் முனைந்து செய்ய வேண்டும்?
 
ஒருவகையில் இந்நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகளின் பாடும் திறம் கண்டுபிடிக்கப்பட்டு சினிமா தொழிலுக்கு நல்ல பாடகர்கள் கிடைக்கிறார்கள் என்பது உண்மை. இந்நிகழ்ச்சி பார்ப்பதன் மூலம் நடுவர்களுடன் சேர்ந்து பொதுமக்களின் இசைத்திறன் வளர்கிறது என்பதும் உண்மை. இவ்வளவிற்கும் ஈடாக மேலே சொன்ன விஷயங்கள் காவு கொடுக்கப்படுக்கின்றன? இங்குதான் கர்நாடக சங்கீத பாரம்பரியத்திற்கும், சினிமாப்பாரம்பரியத்திற்குமுள்ள வித்தியாசம் அப்பட்டமாகத்தெரிகிறது. கர்நாடக இசையின் சாகித்ய கர்த்தாக்கள் இறைவனுக்காகப் பாடினார்கள். ஆன்ம வளர்ச்சியூட்டும் கீதங்களை உருவாக்கினர். அக்கீர்த்தனைகளைப்பாடும் போது மனது சுத்தமாகிறது, ஆன்மநேயம் வளர்கிறது, மனிதன் பூரணமாகிறான். ஆனால் அல்லும் பகலும் கொச்சையான பொருளுள்ள சினிமாப்பாடல்களை இக்குழந்தைகள் பாடும் போது காம இச்சை வளர்கிறது. காமம் உள்ளமெங்கும் குடிபோகிறது. எளிமையே தோற்றமாக இந்நிகழ்ச்சிக்கு வந்து பாடிய சுகன்யா எங்கே? இப்போது அல்ட்ரா மாடர்னாக டிரஸ் செய்து கொண்டு குத்துப்பாட்டு பாடும் சுகன்யா எங்கே? இழந்தது எது? She lost her innocence!
 

நிறைய யோசிக்க விஷயமுள்ளது.

http://emadal.blogspot.in/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.