Jump to content

கொடியேற்றத்தின் போது சங்கிலி அறுத்தவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பாகிய நிலையில்,  ஆலய உள்வீதியில் நின்றிருந்த வயோபதிப் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த  இளைஞனைக் கைதுசெய்ததாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
பெண்ணின் 4 பவுண் சங்கிலியினை மேற்படி சந்தேகநபர் அறுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அங்கு சிவில் உடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இளைஞனைக் கைதுசெய்தனர்.
 
மேற்படி சந்தேகநபர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 
 
Link to comment
Share on other sites

4 பவுண் சங்கிலியின் பாரத்தை அந்த வயோதிபப் பெண் கழுத்தில் தாங்கமுடியாது தவித்ததைக் கண்ட இளைஞன் பரிதாப்பட்டு அதனை அகற்றி உதவ முற்பட்டிருக்கலாம்.  :icon_idea:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமா சிந்திக்கிறாங்கப்பா ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்ன்னு ஒவ்வொருத்தரும் இப்படி நீக்க முற்பட்டால், கடைசியில் 'ஒன்று'மிருக்காது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் இந்தச் சங்கிலி அறுப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.

நாளை மறுதினம்  ஹம் பிள்ளையார்  ஆலயத் தேர்த்திருவிழா. செல்பவர்கள்  போலி நகையுடன் செல்வது நல்லது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் இந்தச் சங்கிலி அறுப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.

நாளை மறுதினம் ஹம் பிள்ளையார் ஆலயத் தேர்த்திருவிழா. செல்பவர்கள் போலி நகையுடன் செல்வது நல்லது :D

வாத்தியார் வாறார்
Link to comment
Share on other sites

நல்லூரில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் இந்தச் சங்கிலி அறுப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.

நாளை மறுதினம்  ஹம் பிள்ளையார்  ஆலயத் தேர்த்திருவிழா. செல்பவர்கள்  போலி நகையுடன் செல்வது நல்லது :D

போலிநகையை போட்டு கொண்டு போனாலும் பிரச்சனை தான். அடுத்தநாள் வந்து ஏன் போலி போட்டனி என்று அடிப்பானுகள்...  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருடன் தமது கடன்களை திருப்பி கொடுப்பதற்கு எவ்வளவு காலமாக திருவிழாவை நம்பி இருந்திருப்பார் இந்த போலிஸ் ஈன இரக்கம் இல்லாமல் கன்னி திருட்டிலையே பிடித்து நம்பிக்கையில மண்ணைப் போட்டுடாங்கள்  :D  :icon_idea:


திருட்டு தொழில் செய்பவர்களின் கருத்து   

Link to comment
Share on other sites

இவர் புது திருடன்போலை.. :huh:  யாருக்கு கீழயாவது அப்ரண்டிஸ் வேலை பார்த்திருந்தால் இந்தச் சிக்கல் வராது..  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்குப் போகும் போது...  எதற்கு நகை?
கடவுளை தரிசிக்க... புன்னகையுடன் சென்றிருந்தால், சிக்கல் வராது. :)

 

பிற்குறிப்பு: இந்த சங்கிலி அறுப்பு,  ஆரம்பம் தான்....  தெற்கிலுள்ள சிங்களப் பகுதியிலிருந்து... இன்னும் கன கைதேர்ந்த... கள்வர்கள், கள்ளிகள் எல்லாம்.... தமிழனின் சங்கிலிகளைப் பறிக்க, மினி பஸ்ஸில் வந்து கொண்டிருக்கின்றார்கள். :D

Link to comment
Share on other sites

யாழிலுள்ள ஒட்டுக்குழு அங்கத்தவர்கள் தற்போது தெற்கிலுள்ள கைதேர்ந்த... கள்வர்கள், கள்ளிகளையும் விஞ்சி நிற்பதாக செய்திகள் தினமும் வருகிறதே......... தெற்கிலிருந்து வரும் கள்வர்கள், கள்ளிகள் தங்கள் சொந்த நகைகளைப் பாதுகாப்பதற்கே யாழில் அல்லாடுவார்கள் என நினைக்கிறேன். :o  :icon_mrgreen: 
 
ஆனாலும் இவர்களைப் பாதுகாப்பதற்கு தெற்கில் சனாதிபதியும், வடக்கில் அவர் சீடனும் உள்ளனர்.  :lol:
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் 4 பவுனில் தொடங்கியிருக்கு கடைசியில மொத்தக் கணக்கு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை கோயில் திருவிழாக்களிலை சங்கிலியறுப்பு இல்லாட்டி ஒரு சுவாரசியம் இருக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.