Jump to content

சொல்லாடற்களம்


Recommended Posts

சொல்லாடற்களம்
 
 
கள உறவுகளுக்கு புயலின் அன்பான வணக்கம்.
 
எம் தாய்த்தமிழில் ஓர்  ஆடுகளம்.
 
ஆடுகளத்தின் விபரம்.
 
ஒரு சொல் எம்மால் மறைத்து வைக்கப்படும். அச்சொல்லைக் கண்டு பிடிப்பதற்கான தரவுகள் தரப்படும். தரப்படும்
 
சகல தரவுகளுக்கும் பொருந்தக் கூடியவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.
 
அவ்வளவு தான்.
 
உறவுகளே முயற்சித்துத் தான் பார்ப்போமே!
 
எடுத்துக்காட்டு.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் அல்லோகல்லோலம்.
 
தரவுகள்.
 
1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் அமளிதுமளி எனச் சொல்லலாம்.
 
2. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்தும் சேர்ந்தால் விளக்கு என அர்த்தம் வரும்.
 
4. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்கு, ஏழு மற்றும் எட்டாவது எழுத்தும் சேர்ந்தால் கணிதத்தில் பயன்படுத்தப்படும்  அளவு வரும்.
 
5. மூன்றாவது எழுத்தும் ஆறாவது எழுத்தும் ஒரே எழுத்து.
 
6. நான்காவது எழுத்தும் ஏழாவது மற்றும் எட்டாவது எழுத்தும் சேர்ந்தால் பாத்திரம் என அர்த்தம் வரும். 
 
களம் 01.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------
 
தரவுகள்.
 
1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் ஒரு குண இயல்பு எனக் கூறலாம்.
 
2. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. இச்சொல்லின் முதல் எழுத்தும் இரண்டாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் மனம் என அர்த்தம் வரும்
 
4. முதல் எழுத்தும் மூன்றாம், இரண்டாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் தேகம் என அர்த்தம் வரும்.
 
5 இரண்டாம் எழுத்தும் ஐந்தாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் எமது உடலின் ஓர் அங்கத்தின் பெயர் வரும்.
 
6. இறுதி மூன்று எழுத்தும் சேர்ந்தால் அறுசுவைகளில் ஒரு சுவை வரும்.
 
எனவே ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
 
Link to comment
Share on other sites

  • Replies 467
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின்   ஆடுகளத்தில் .  புதிய உத்திகளைபாவித்து  ...பல  போட்டிகளை  நடைமுறைபடுத்தும்  கள உறவு  புயல் அவர்களுக்கு என் மனமார்ந்த  பாராட்டுக்கள்  மென்மேலும்  வளர என் ஆக்கமும் ஊக்கமும் என்றும் இருக்கும். மற்றும் கள உறவுகளும் ஈடுபாட்டுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?அகங்காரம் :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்லாடற்களம்"  போட்டியை ஆரம்பித்து வைத்த புயலுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சொல்லாடற்களம்
 
 
கள உறவுகளுக்கு புயலின் அன்பான வணக்கம்.
 
எம் தாய்த்தமிழில் ஓர்  ஆடுகளம்.
 
ஆடுகளத்தின் விபரம்.
 
ஒரு சொல் எம்மால் மறைத்து வைக்கப்படும். அச்சொல்லைக் கண்டு பிடிப்பதற்கான தரவுகள் தரப்படும். தரப்படும்
 
சகல தரவுகளுக்கும் பொருந்தக் கூடியவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.
 
அவ்வளவு தான்.
 
உறவுகளே முயற்சித்துத் தான் பார்ப்போமே!
 
எடுத்துக்காட்டு.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் அல்லோகல்லோலம்.
 
தரவுகள்.
 
1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் அமளிதுமளி எனச் சொல்லலாம்.
 
2. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்தும் சேர்ந்தால் விளக்கு என அர்த்தம் வரும்.
 
4. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்கு, ஏழு மற்றும் எட்டாவது எழுத்தும் சேர்ந்தால் கணிதத்தில் பயன்படுத்தப்படும்  அளவு வரும்.
 
5. மூன்றாவது எழுத்தும் ஆறாவது எழுத்தும் ஒரே எழுத்து.
 
6. நான்காவது எழுத்தும் ஏழாவது மற்றும் எட்டாவது எழுத்தும் சேர்ந்தால் பாத்திரம் என அர்த்தம் வரும். 
 
களம் 01.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------
 
தரவுகள்.
 
1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் ஒரு குண இயல்பு எனக் கூறலாம்.
 
2. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. இச்சொல்லின் முதல் எழுத்தும் இரண்டாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் மனம் என அர்த்தம் வரும்
 
4. முதல் எழுத்தும் மூன்றாம், இரண்டாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் தேகம் என அர்த்தம் வரும்.
 
5 இரண்டாம் எழுத்தும் ஐந்தாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் எமது உடலின் ஓர் அங்கத்தின் பெயர் வரும்.
 
6. இறுதி மூன்று எழுத்தும் சேர்ந்தால் அறுசுவைகளில் ஒரு சுவை வரும்.
 
எனவே ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?

 

 

நன்றி  புயல்

தொடர்ந்து யாழுக்கான  தங்களது நேரத்துக்கும் முயற்சிக்கும் வாழ்த்தக்களும்  நன்றிகளும்...

 

தொடருங்கள்

 

சிறு சந்தேகம்

அல்லோகல்லோலமா?

அல்லோகல்லோலமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லோல கல்லோலம் என்றுதான் நானும் அறிந்துள்ளேன்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகங்காரம்...! :)

 

ஆத்தா நான் பாஸாயிட்டேன்...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகங்காரம்...! :)

 

ஆத்தா நான் பாஸாயிட்டேன்...! :D :D

 

ஈ அடிச்சா  அண்ணா??? :lol:

அதுக்கு எவ்வளவு  சந்தோசம் :D  :D

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்ச்சி புயல்.  தொடர்ந்து போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு என் வாழ்த்துக்களுடன்  நன்றிகளும் உரித்தாகட்டும்!!!!

Link to comment
Share on other sites

நன்றி  புயல்

தொடர்ந்து யாழுக்கான  தங்களது நேரத்துக்கும் முயற்சிக்கும் வாழ்த்தக்களும்  நன்றிகளும்...

 

தொடருங்கள்

 

சிறு சந்தேகம்

அல்லோகல்லோலமா?

அல்லோகல்லோலமா???

 

 

விசுகுவின் சந்தேகத்திற்கான பதில்கள் இரண்டு என்னிடம் உள்ளது.
 
முதலாவது பதில் எனது தவறுக்கு வருந்துகின்றேன்.
 
இரண்டாவது பதில்: பிழை விடுவது போலப் பிழை விட்டால் எத்தனை நக்கீரர்கள் வந்து போவார்களெனப் பார்க்கலாமெனப் பிழை விட்டேன். இருந்தாலும் இனி மேல் மிகவும் கவனமாக கையாளுகின்றேன்.
 
என்னை மேன்மேலும் ஊக்கப்படுத்துவீர்களென நம்பகின்றேன்.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஆதரவு தந்த நிலாமதி, கறுப்பி, விசுகு, மற்றும் தமிழினி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் தங்கள் அனைவரதும் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

அகங்காரம்...! :)

 

ஆத்தா நான் பாஸாயிட்டேன்...! :D :D

 

 

வாய்யா நான் பெத்த மவராசா
 
என்ரை நஞ்சை புஞ்சை எல்லாம் ஒனக்குத் தான் ராசா
 
ஆதரவிற்கு நன்றி சுவி அண்ணா தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் அகங்காரம்
 
அகங்காரம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த நிலாமதிக்கும் சுவிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 02.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல்: ...........................
 
தரவுகள்.
 
1. இது நாங்கள் அன்றாடம் சமைக்கும் ஓர் மரக்கறியின் தமிழ்ப் பெயர்.
 
2. இச்சொல் ஏழு ஏழுத்துக்கள் கொண்ட சொல்
 
3. முதலாம் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் சேர்ந்தால் மனைவி என அர்த்தம் வரும்.
 
4. ஆறாவது எழுத்தும் மூன்றாம் எழுத்தும் சேர்ந்தால் வருவது சினைப்பெயர்.
 
5. இறுதி இரண்டு எழுத்தும் பழம் என்பதன் எதிர்ச்சொல்லாக வரும்.
 
6. முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் தவறு என்னும் அர்த்தம் வரும். 
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழுதுணங்காய் (கத்தரிக்காய்) :D

Link to comment
Share on other sites

சொல்லாடற்களம் சிறப்பாக உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயமாக எனது பங்களிப்பு உண்டு.
 
தொடருங்கள் உங்களின் முயற்சியை
Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் வழுதுணங்காய்
 
வழுதுணங்காய் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த வாலிக்கும் முமுமதிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
Link to comment
Share on other sites

 
களம் 03.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------ 
 
தரவுகள்.
 
1. இது நாங்கள் தாயகத்தில் கடந்து சென்ற பாதை
 
2. இச்சொல் ஐந்து எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. முதல் இரு எழுத்துக்களும் சேர்ந்தால் வருவது சினைப்பெயர்
 
4. முதலாம் நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் யானையின் ஒத்த சொல் வரும்.
 
5. முதலாம் மூன்றாம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றின் பெயர் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டாயம் :D 

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் கண்டாயம்.
 
கண்டாயம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 04.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------  
 
நேரடி அர்த்தம் ஆந்தை என்பதன் ஒத்தசொல்.
 
தரவுகள்
 
1. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
2. முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் குரங்கின் மறு பெயராக வரும்
 
3. முதலாம் மூன்றாம் நான்காம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் துளசி, தாமரை போன்றவற்றின் ஒத்த சொல்லாகும்.
 
4. இறுதி மூன்று எழுத்தும் சேர்ந்தால் தண்ணீரைக் குறிக்கும்.
 
5. முதலாம் ஐந்தாம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பாத்திரம் என வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

 

களம் 04.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------  
 
நேரடி அர்த்தம் ஆந்தை என்பதன் ஒத்தசொல்.
 
தரவுகள்
 
1. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்ட சொல். 
 
2. முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் குரங்கின் மறு பெயராக வரும் கபி
 
3. முதலாம் மூன்றாம் நான்காம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் துளசி, தாமரை போன்றவற்றின் ஒத்த சொல்லாகும். கஞ்சம்
 
4. இறுதி மூன்று எழுத்தும் சேர்ந்தால் தண்ணீரைக் குறிக்கும். சலம்
 
 
5. முதலாம் ஐந்தாம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பாத்திரம் என வரும். கலம்
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?

 

 

எனவே மறைந்துள்ள சொல் 
                                                                                     கபிஞ்சலம்
Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் கபிஞ்சலம்
 
கபிஞ்சலம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 05.
 
ஒழிக்கப்பட்டுள்ள சொல் --------------------------  
 
நேரடி அர்த்தம் எம் முன்னோர்கள் ஒரு விடயத்தை நம்பவில்லையெனின் கையாண்ட ஒரு சொல்.
 
தரவுகள்.
 
1. இச்சொல் ஐந்து எழுத்துக்கள் கொண்ட சொல்
 
2. முதலாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் இந்திரனின் மனைவி இந்திராணி எனப் பொருள்படும்.
 
3. முதலாம் நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் வெற்றி எனப் பொருள்படும்.
 
4. முதலாம் இரண்டாம் ஐந்தாம் எழுத்துக்கள் இணைந்தால் சேர்ந்தால் ஒன்றுக்கு ஒன்று இணை எனப் பொருள்படும்.
 
5. முதலாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் தானியம் எனப் பொருள்படும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
    • இன்னும் ரெண்டு ஓவர் குடுத்திருந்தால் 50 அடித்திருப்பார்கள் ..... அவ்வளவு வெறியோடு களத்தில் நின்றவர்கள்.......!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.