Jump to content

மக்கள் அபிமான வீரராக மீண்டும் சங்கக்கார, அதிசிறந்த வீரராக மெத்தியூஸ்


Recommended Posts

மக்கள் அபிமான வீரராக மீண்டும் சங்கக்கார, அதிசிறந்த வீரராக மெத்தியூஸ்
5rlghtjg.jpg
இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் வரு­டத்தின் அதி சிறந்த வீரர் விருதை ஏஞ்சலோ மெத்தியூஸ் வென்­றெ­டுத்த அதே­வேளை மக்கள் அபி­மான வீரர் விருதை குமார் சங்­கக்­கார மூன்றாவது தட­வை­யாக வென்­றெ­டுத்தார்.
டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நேற்­று இரவு கோலா­க­ல­மாக நடத்­தப்­பட்­டது.
rsx5ir7v.jpg
இதில் மெத்தியூஸ் அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் துடுப்­பாட்ட வீரர் விரு­தையும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் அதி சிறந்த சக­ல­துறை வீர­ருக்­கான விருதையும் வென்றெடுத்தார்.
2h26f44r.jpg

 

 

zzj5dzh9.jpg

 

 

5n6qbkvd.jpg

 

9lnxf32c.jpg

 

 

vb2kljd9.jpg
லசித் மாலிங்க அதி­சி­றந்த சர்­வ­தேச ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் பந்­து­வீச்­சாளருக்கான விரு­களை  வென்­றெ­டுத்­தார்.
yund32uy.jpg
மேலும் அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் விருதை மெத்தியூஸ் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இணைந்து பெற்றனர்.  சர்­வ­தேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அதி­சி­றந்த பந்து வீச்சாளருக்கான விருகை ரங்கன ஹேரத் பெற்றார்.
r3b4qe54.jpg

 

 

zzj5dzh9.jpg

 

nofhcugb.jpg

 

n4n9h8yr.jpg

 

இதேவேளை சர்­வ­தேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து சகலத்துறை வீரர்களான விருதை திசர பெரேரா மற்றும் குசேல் பெரேரா ஆகியோர் வென்றெடுத்தனர். மேலும் வளர்ந்­து­வரும் கிரிக்கெட் வீரர் விருதை நிரோசன் டிக்வெல வென்­றெ­டுத்தார்.



http://www.virakesari.lk/articles/2014/09/04/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D
 

Link to comment
Share on other sites

அதிசிறந்த கிரிக்கெட் வீரர் உட்பட நான்கு விருதுகள் மெத்யூஸுக்கு
 

 

6722angi_zpsd10ac5d1.jpg

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் இவ் வருடம் நடத்தப்பட்ட டயலொக் கிரிக்கட் விருதுவிழாவில்இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் வருடத்தின் அதிசிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை வென்றெடுத்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் அதி சிறந்த சகலதுறை வீரர் விருதுகளையும் வென்றெடுத்த ஏஞ்சலோ மெத்யூஸ், அதி சிறந்த டெஸ்ட் கிரிக்கட் துடுப்பாட்ட வீரருக்கான விருதை குமார் சங்கக்காரவுடன் பதிர்ந்துகொண்டார்.


மக்கள் அபிமான விருதை மூன்றாவது வருடமாகவும் முன்னாள் குமார் சங்கக்கார வென்றெடுத்தார்.இவ் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ்ஜில் புதனன்று நடைபெற்றது.இவ் விழாவில் அதி சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளரக்கான விருதை ரங்கன ஹேரத் வென்றெடுத்தார்.

6722IMG_8665_zps737a389a.jpg
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் அதி சிறந்த பந்துவீச்சாளருக்கான இரண்டு விருதுகளை லசித் மாலிங்க வென்றெடுத்தார்.

6722IMG_8684_zps240790ea.jpg
சர்வதேச இருபது 20 கிரிக்கட் போட்டிகளில் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான விருது திசர பெரேராவுக்கும் அதி சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது குசல் ஜனித் பெரேராவுக்கும் வழங்கப்பட்டது.

6722IMG_8697_zps74e05b13.jpg
வளர்ந்துவரும் வீரருக்கான விருது நிரோஷன் டிக்வெல்லவுக்கு வழங்கப்பட்டது.மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இரண்டு விருதுகளை இலங்கை மகிளிர் கிரக்கட் அணியின் முன்னாள் தலைவி ஷஷிகலா சிறிவர்தன வென்றெடுத்தார்.
அதி சிறந்த பந்துவீச்சாளர் விருதையும் அதி சிறந்த சகலதுறை வீராங்னை விருதையும் ஷஷிகலா வென்றெடுத்தார்.

6722shashi_zps4dac2618.jpg
அதி சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருது சமரி அத்தப்பத்துவுக்கு வழங்கப்பட்டது.சர்வதேச போட்டிகளுக்கான விருதுகளைவிட உள்ள10ர் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

6722chamari_zpsfff5e86c.jpg
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் முதலாம், இரண்டாம் பிரிவுகளுக்கான கிரிக்கட் போட்டிகள், டொனவன் அண்ட்றே கிண்ண கிரிக்கெட் போட்டிகள், சரவணமுத்து கிண்ண கிரிக்கட் போட்டிகள், மகளிர் கிரிக்கெட் போட்டிகள் என்பவற்றுக்கான துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை ஆகியவற்றில் பிரகாசித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


என். சி. சி. வீரர் ஜெஹான் முபாரக், தமிழ் யூனியன் வீரர்களான ஜீவன் மெண்டிஸ், சச்சித் பத்திரன ஆகியோர் உள்ளர் கிரிக்கட் போட்டிகளில் பிரதான விருதுகளை வென்றெடுத்தனர்.

6722IMG_8827_zps07f61a59.jpg
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, டயலொக் ஆசியாட்டா லங்கா பிறைவேட் லிமிட்டட் குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார, தலைமை அதிகாரி ஷியாம் மஜீத், தலைமை செயற்பாட்டு அதிகாரி அஸ்வான் கான் ஆகியோர் பிரதான பரிசில்களை வழங்கினர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6722#sthash.7i8JjjRu.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.