Jump to content

இறுதி யுத்தத்தின் முடிவில் கிழக்கிலிருந்த தப்பிச்சென்ற இரு பொறுப்புவாய்ந்த போராளிகள் தற்போது எங்கே? இவர்களின் தற்போதைய நிலை என்ன?


Recommended Posts

இறுதி யுத்தத்தின் போது கிழக்கின் நிலை?

இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காளில் முடிவடையும் பொழுது கிழக்கிற்கான தொடர்புகளும், போராளிகளிற்கான அனைத்து வளங்கல்களும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன.

அக் காலகட்டத்தில் கிழக்கில் செயற்பட்டுவந்த புலிகளின் இராணுவச் செயற்பாடுகளிற்கு தலைவர்களாக இருந்த சால்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் கட்டளைத் தளபதி கேணல் நகுலன்;, கேணல் றாம், கேணல் உமாறாம், மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக பதவிவகித்த லெப். கேணல் தரப் போராளி தாயாமோகன், மட்டு அம்பாறை மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக பதவி வகித்த லெப். தரப் போராளி கேணல் ரவிமோகன் மற்றம் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பிரபா ஆகியோரே கிழக்கிலிருந்த இராணுவத்தினருக்கு சிம்மசொற்பனமாக விழங்கிய புலித்தலைவர்களாவார்.

கேபி தன்னைத் தானே தலைமையென அறிவித்தார்

யுத்தம் கட்டம் கட்டமாக முடிவுற்றுக்கொண்டிருந்த வேளையில் புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தலுக்கு பொறுப்பாகவிருந்த கேபி என்று அழைக்கப்படும் திரு. பட்மநாதன் தானே புலிகளின் அடுத்தகட்ட தலைமைப் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட கிழக்கின் புலித்தலைவர்களோடு தொடர்வுகளை பேணியிருந்தார்.

கேபி யின் இப் புதிய தலைமை நிர்வாகத்தை புலிகளின் கிழக்கின் மருத்துவர் ரவிமோகன் மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோரைத் தவிர ஏனைய புலித் தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை.

தாயாமோகன் மற்றும் ரவிமோகன் வெளியேற்றம்

கேபியின் தலைமையை ஏற்றுச் செயற்பட்ட தயாமோகன், ரவிமோகன் ஆகிய இருவரும் கேபியின் ஏற்பாட்டுடன் அடுத்த கட்டத் தயார்ப்படுத்தல் சார்ந்து கேபியுடன் நேரடிக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு சிறீலங்கா கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடக இஸ்லாமியர்கள் போன்று தம்மை தோற்றம் மாற்றிக் கொண்டு வெளியேறிச் சென்றனர்.

கட்டுநாயக்கா விமாணநிலையம் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின்னர் அரச படைகளால் உச்சகட்ட பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருந்ததை அனைவரும் அறிந்தபோதும் எப்படி? யாருடைய? பின்னணியோடு இவர்கள் நாடு கடந்து சென்றார்கள் என்ற விடையம் இன்றுவரை அரச புலனாய்வுப் பிரிவினருக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இது இப்படியிருக்க மலேசியா சென்ற தயாமோகன், ரவிமோகன் ஆகிய இருவரும் கேபியின் நேராடி மேற்பார்வையில் இரகசியமான முறையில் இயக்கிரவப்பட்ட புலிப்பாசறை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தாயாமோகன், ரவிமோகன் குடும்பத்தினர்

போரின் முடிவில் வன்னிப் பகுதியில் வாழ்ந்து வந்த இவ்விருவரின் குடுப்பத்தினரும் மக்களோடு மக்களாக வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த முகாம் ஓன்றில் தஞ்சம் புகுந்தனர். இதை அறிந்த அரச புலநாய்வுப் பிரிவினர் ஒலிபெருக்கி ஊடக பெயர்களை அறிவித்து சரனடையுமாறு பயமுறுத்தினர்.

இச் செய்தியை அறிந்த தயாமோகன் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணாவின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டார். இதன் பின்னர் கருணாவே தயாமோகனின் குடுப்பத்தினருக்கு பாதுகாக்கு வழங்கி வைத்திருந்தார் என்பது பல ஊடகங்களில் பலமுறை வெளிவந்த பலரும் அறிந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தியே.

கேபி பிடிபட்டார் (ரா)??

இத் தருணத்தில் கேபி அவர்கள் இலங்கை அரசபுலனாய்வுத்துறையின் பொறிக்குள் அகப்பட்டு நாடுகடத்தப்பட்டார். இதன் பின்னர் ரவிமோகன் மற்றும் தயாமோகன் ஆகியோர்கள் கைவிடப்பட்ட நிலையில், இலங்கைக்கும் செல்ல முடியாமல் இருந்த காரணத்தால் கேபியின் சகாக்களின் உதவியுடன் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்துக்கு விமாணம் மூலம் சென்று அரசியல் தஞ்சம் கோரினர்.

தயாமோகன் குடும்பம் சுவிஸில்

தற்பொளுது தாயமோகனின் குடும்பத்தினர் கடந்த 26.03.2012 அன்று சிறீலங்கா கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக சுவிட்சர்லாந்துக்கு சென்றடைந்துள்ளனர். புலிகளுடன் சிறிய தொடர்புகளை பேணிவந்த சாதாரன மக்களைளே சிறீலங்கா அரசாங்கம் துன்புறுத்தி, சில சமயத்தில் கொலை செய்து வரும் நிலையில் புலிகளின் அரசியற்துறைப் பதவி வகித்த லெப் கேணல் தயாமோகன் குடும்பத்தினர் பத்திரமாக நாடு கடந்தமை எப்படி? இது தாமோகன் தற்பொளுது அரச புலனாய்வுத் துறையின் பிண்ணனியோடு இயங்கி வருகிறார் என்று ஏற்கனவே இருந்த சந்தேகத்தை மேலும் வலுப்பெற வைத்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் புலிகள் கட்டமைப்பை சிதைக்கப் பொறி

ஐரோப்பிய நாடுகளில் இன்றும் வலுவான முறையில் இயங்கிவரும் புலிகளின் கட்டமைப்பை இலங்கைப் புலனாய்வுத்துறை அடியோடு அழிப்பதற்கு பல திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தி வருகிறது. அதன் ஓர் கட்டமாக தகுதிவாய்ந்த தயோமோகன் போன்ற போராளிகளை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி தற்பொளுது இயங்கிவரும் புலிகளின் கட்டமைப்புகளுக்க நிகராக வெறொரு கட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருகிறது. இதற்கென புலிகளில் நீண்ட காலம் செயற்பட்டுவந்த போராளிகளை ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அனுப்பி வைத்தள்ளது.

முதற்கட்டமாக மாவீரர் தினங்கள் குறிவைப்பு / செயற்படும் நபர்கள்

இவ்வாறான சிலரே இத்தனை காலமும் ஓர் குடையின் கிழ் நாடத்தப்பட்டடுவந்த மாவீரர்நாளை இரண்டாகப் பிளவு படச் செய்தனர். மாவீரர்களை கடவுள்களுக்கு நிகராக பூசித்துவரும் தமிழ் மக்கள் இக்கபட நாடகத்தை விளங்கிக்கொள்ளாமல் உணர்வுபூர்வமான தமது ஆதரவை வழங்கினர்.

இப்படி புலிகளின் கட்டமைப்பை சிதைத்கவென சிறீலங்க அரச புலனாய்வுத் துறையினரால் கட்டமைக்கப்பட்டுள்ள குளுவினர் தாமே உன்மையான விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தாமே தலைமைச் செயலகமென்றும் குறிப்பிட்டுச் செயற்படுகின்றனர். இவர்களின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் சில நாடுவாரியாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

  • சுவிஸ்;: தயாமோகன் (பொறுப்பாளர்), நீலன் ( துணைப் பொறுப்பாளர்) மோகன், றாம்குமார், nஐயம் ( 2009 இற்கு முன் சுவிஸ் சூறிச் மானில புலிகளின் பொறுப்பாளராக இருந்துவிட்டு தற்பொளுது தலைமைச்செயலகம் என செயற்படும் தயாமோகன் அணிலில் தாவிச் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது), வேந்தன் என பலர் கவிஸில் இயங்கி வருகின்றனர்.
  • பிரான்ஸ்: அறிவு, சுரேஸ்
  • லண்டன்: சங்கீதன்

ஒட்டுமொத்த நீர்வாகத்தையும் கட்டுப்படுதஇதம் பொறுப்பில் பாண்டியன் (நியூஸ்லாந்து) சுபன்; சுரேஸ்.

தயாமோகன் பின்னணியில் கருணா மற்றும் இலங்கைப் புலனாய்வு

புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பை சீர்குலைக்கும் பெருமுயற்சியில் பங்குவகிக்கும் சூத்திரதாரிகளில் தயாமோகனும் இடப்பிடித்துள்ளதாக எமக்கு உள்ளகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்கது. தலைமைச்செயலகம் எனும் பெயரில் தாம் அதியுச்ச தமிழீழத் தெசியவாதிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு இக் கும்பல் செயற்படுத்தப்படவேண்டும் என இலங்கையிம் பாதுகாப்புச் செயலரும், அதிபர் றாNஐபக்சேயின் சகோதரருமான கோத்தபாயவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுளதெனவும் உள்ளகத் தகவல்கள் தெருவிக்கின்றன.

ரவிமோகன் பொட்டுவின் ஆளாகச் செயற்பட்டார்

மருத்துவப் போராளியான ரவிமோகன் அவர்கள் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற காலப்பகுதியில் கருணாவின் குகைக்குள் விடுதலைப்புலியாகச் செயற்பட்டவர். கருணா தன் ஆயுத பலத்தையும் ஆளானிப் வளத்தையும் பாவித்து கிழக்கின் தலைமைத்துவத்தை முற்றாக தானே கைப்பற்றச் செயற்பட்டார்.

கருணாவின் இத் திட்டத்தை முறியடிப்பதற்கும், கிழக்கை மீண்டும் கருணாவிடமிருந்து கைப்பற்றுவதற்கும் புலிகள் அமைப்பின் புலநாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி வழிநடத்தலில் ரவிமோகன் அவர்கள முதுகெலும்பாகவிருந்து செயற்பட்டார் என்பது இன்றுவரை வெளிவராத உன்மை.

புலிகள் அமைப்பிலிருக்கும் தனது விசுவாசம் காரணமாக ரவிமோகன் அவர்கள் தலைமைச் செயலகம் எனும் தனித்தியங்கும் செயற்பாட்டை இன்றைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலைமைச்செயலகத்தின் பின்னணியில் கருணாவும் இருப்பதால் ரவிமோகனை வன்னிப்புலி என்று பட்டியலிட்டு அடியோடு ஓரங்கட்டிவிடப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் முற்றுப்பெறவழில்லை எனும் கருத்தை ரவிமோகன் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் இவரின் தற்போதைய உண்மையான நிலைப்பாடு கேள்விக் குறியாகவே உள்ளது.

http://www.thinasari.com/?p=7866

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.